புதன்கிழமை, ஏப்ரல் 29
Shadow

Tag: பிரதமர்

சிவப்பு, ஆரஞ்சு, பச்சை வண்ணங்களில் மாநிலங்கள்… மத்திய அரசின் ஊரடங்கு திட்டம்!?

சிவப்பு, ஆரஞ்சு, பச்சை வண்ணங்களில் மாநிலங்கள்… மத்திய அரசின் ஊரடங்கு திட்டம்!?

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    சிவப்பு, ஆரஞ்சு, பச்சை வண்ணங்களில் மாநிலங்கள்... மத்திய அரசின் ஊரடங்கு திட்டம்!? கொரானா பரவலை தடுக்க நாடு முழுதும் வரும் 14ம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளது. ஊரடங்கால் ஒட்டுமொத்த தொழிலும் முடங்கிப் போய் பலகோடி மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு பெரும் சிரமத்தில் இருக்கிறார்கள். எப்படியும் இன்னும் சில நாட்களில் ஊரடங்கு தளர்த்தப்படும் என எதிர்பார்த்தவர்களுக்கு கொரானா வைரஸ் பரவல் தொடர்ந்து பரவி வருவதால் பல மாநிலத்தில் ஏப்ரல் 30 வரை ஊரடங்கு நீடித்து அம்மாநில அரசுகள் அறிவித்து விட்டது. அதே நேரம் தொடர் ஊரடங்கால் ஒட்டுமொத்த தொழில்களும் முடங்கிப் போனதால் பல்லாயிரக்கணக்கான மக்கள் அடுத்த வேலை உணவுக்கே வழி இல்லாமல் மாநிலம் விட்டு மாநிலம் இடம் பெயர்ந்தார்கள். அதே போல பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு நிவாரண நிதி உதவி அளிக்க வேண்டும் என எதிர்க் கட்சித் தலைவர்கள் பலரும் க...
விவசாயிகளுக்கு ரூ.6000… திட்டத்தை இன்று துவக்கி வைக்கிறார் பிரதமர்!

விவசாயிகளுக்கு ரூ.6000… திட்டத்தை இன்று துவக்கி வைக்கிறார் பிரதமர்!

politics, செய்திகள்
2019 நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் ரூ.75,000 கோடி செலவில் 12 கோடி சிறு, குறு விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.6,000 உதவித் தொகை அளிக்கும் திட்டம் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. அந்த அறிவிப்பில், நிகழாண்டில் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் தலா ரூ.2,000 விதம், 3 தவணைகளாக ரூ.6,000 வரவு வைக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில், இதுகுறித்து தனது டிவிட்டரில் கருத்து தெரிவித்த பிரதமர் மோடி, இன்று வரலாற்றில் முக்கியமான நாள். பிரதான் மந்திரி கிசான் திட்டம் கோராக்பூரில் துவங்கி வைக்கப்படுகிறது. இந்த திட்டம் கடினமாக உழைத்து, இந்தியாவுக்கு உணவளிக்கும் கோடிக்கணக்கான விவசாயிகளுக்கு நம்பிக்கை அளிக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும், பிப்.1ஆம் தேதி திட்டம் குறித்து அறிவிக்கப்பட்டது. திட்டம் அறிவிக்கப்பட்ட சில நாட்களிலே இது நடைமுறைக்கு வந்தது. இதுவே புதிய இந்தியாவின், புதி...
தீவிரவாதிகள் தாக்குதல் நேரத்தில் போட்டோ ஷூட்டிங்கில் பிசியாக இருந்த பிரதமர் மோடி – காங்கிரஸ் குற்றச்சாட்டு

தீவிரவாதிகள் தாக்குதல் நேரத்தில் போட்டோ ஷூட்டிங்கில் பிசியாக இருந்த பிரதமர் மோடி – காங்கிரஸ் குற்றச்சாட்டு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
தீவிரவாதிகள் தாக்குதல் நேரத்தில் போட்டோ ஷூட்டிங்கில் பிசியாக இருந்த பிரதமர் மோடி - காங்கிரஸ் குற்றச்சாட்டு புல்வாமா தீவிரவாத தாக்குதலில் சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழந்ததற்கு தேசமே கண்ணீர் விட்டு கதறிய வேளையில், பிரதமர் மோடி போட்டோஷூட்டில் பிஸியாக இருந்தார் என எதிர்கட்சி குற்றம் சாட்டியுள்ளது. காஷ்மீர், புல்வாமா மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி 14-ஆம் தேதி தீவிரவாதிகளால் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 40-க்கும் அதிகமான சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழந்தனர், நாடே இந்தத் துயர சம்பவத்தை நினைத்து வருந்தியது. இந்நிலையில் வீரர்கள் உயிரிழந்த வேளையில், பிரதமர் மோடி போட்டோஷூட்டில் பிஸியாக இருந்தார் என காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. சிஆர்பிஎப் வீரர்கள் இறந்த செய்தி அறிந்தும், கார்பெட் தேசிய பூங்காவில் மாலை 6.30 மணி வரை போட்டோஷூட்டில் இருந்திருக்கிறார் மோடி. தேசத்துக்காக உயிரிழந்தவர்களை விட ...
இலங்கை அரசில் மற்றொரு அதிரடி ராஜபக்சே பிரதமர் அலுவலக செலவுகளை செய்வதற்கு தடை

இலங்கை அரசில் மற்றொரு அதிரடி ராஜபக்சே பிரதமர் அலுவலக செலவுகளை செய்வதற்கு தடை

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  இலங்கை அதிபர் சிறிசேனா கடந்த அக்டோபர் மாதம் 26-ந்தேதி பிரதமர் விக்ரமசிங்கேவை அதிரடியாக நீக்கிவிட்டு, முன்னாள் அதிபர் ராஜபக்சேவை பிரதமராக நியமித்தார். அன்று முதல் இலங்கையில் அரசியல் நெருக்கடி உருவானது. பின்னர் சிறிசேனா, சுமார் 20 மாதங்கள் முன்னதாகவே நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு, உடனே தேர்தல் நடத்த உத்தரவிட்டார். ஆனால் சுப்ரீம் கோர்ட்டு அதிபரின் முடிவை ஏற்கமறுத்து, தேர்தல் நடவடிக்கைகளை நிறுத்திவைத்தது. விக்ரமசிங்கே, ராஜபக்சே இருவரும் தாங்கள் தான் பிரதமர் என்று அறிவித்தனர். விக்ரமசிங்கே தன்னை நீக்கியது செல்லாது, தனக்கே நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை உள்ளது என்று கூறிவந்தார். சபாநாயகர் கரு ஜெயசூரியா, ராஜபக்சே தனது பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை அவரை சட்டப்படி பிரதமராக இந்த அவை ஏற்றுக்கொள்ளாது என்று அறிவித்தார். விக்ரமசிங்கேவின் ஐக்கிய தேசிய முன்னணி ராஜபக்சே மீது 3 நம்பிக்கையி...
ஓட்டுக்காக பொய் பேசாதீர்கள் – மோடிக்கு சந்திரசேகரராவ் அட்வைஸ்

ஓட்டுக்காக பொய் பேசாதீர்கள் – மோடிக்கு சந்திரசேகரராவ் அட்வைஸ்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  119 இடங்களை கொண்ட தெலுங்கானா மாநில சட்டசபைக்கு டிசம்பர் 7-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் பா.ஜ.க., தெலுங்கானா ராஷ்டரிய சமிதி, காங்கிரஸ், தெலுங்கு தேசம், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன. சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து இந்த தேர்தலை சந்திக்கிறது. பா.ஜ.க. தனித்து போட்டியிடுகிறது. வாக்குப்பதிவுக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் இங்கு தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. பா.ஜ.க. தலைவர் அமித் ஷா  4  பிரசார கூட்டங்களில் பேசிச் சென்றுள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இரண்டாவது கட்டமாக இன்று பிரசார கூட்டங்களில் பேசி பா.ஜ.க. வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி வருகிறார். சில நாட்களுக்கு முன்னர் இங்கு முதல்கட்ட பிரசாரத்துக்கு வந்த பிரதமர் மோடி,  நிஜாமாபாத் நகரை லண்டன் நகர...