பெப்சி மூலம் 19 ஆயிரம் மூட்டை அரிசி வினியோகம் – நிர்வாகி விளக்கம்
பெப்சி மூலம் 19 ஆயிரம் மூட்டை அரிசி வினியோகம் - நிர்வாகி விளக்கம்
கொரானா பாதிப்பால் வாழ்வாதாரம் இழந்துள்ள திரைத்துறை ஊழியர்களுக்கு உதவி செய்ய திரையுலக பிரபலங்கள் பலரும் பெப்சிக்கு நிதி உதவியும், பொருள் உதவியும் கொடுத்து வருகிறார்கள்.
அதில் இருந்து பெப்சியில் அங்கம் வகிக்கும் சங்க உறுப்பினர்கள் பலருக்கும் அரிசி முட்டைகள் மற்றும் நிவாரண நிதி போன்றவை வழங்கப்பட்டு வருகிறது.
பெப்சியில் இருந்து நீக்கப்பட்ட டெக்னீசியன் அமைப்புக்கு நிவாரண உதவிகள் சரியாக கிடைக்கவில்லை என்றும் , பெப்சி நிர்வாகிகள் பாரபட்சமாக நடந்து கொள்வதாகவும் நீக்கப்பட்ட டெக்னீசியன் யூனியன் பொதுச் செயலாளர் தனபால் குற்றம்சாட்டி இருந்தார்.
இது தொடர்பாக பெப்சி அமைப்பின் பொருளாளர் சுவாமிநாதன் கூறியதாவது: ஊரடங்கு காரணமாக அரிசி மூட்டைகள் வருவதில் பெரும் சிரமம் ஏற்படுகிறது. பெரிய லாரிகள் அனுமதிக்கப்படுவதில்லை
அ...

