கோடிகளை இழந்தாலும் பல கோடி மனங்களில் நிலைத்துவிட்டார் விஜய் ஆண்டனி – தயாரிப்பாளர் பாராட்டு
பிரபல தயாரிப்பாளர் லிப்ரா ரவீந்தர் வெளியிட்ட அறிக்கை:
இன்றைய கஷ்டமான சூழ்நிலையில் குடும்பங்கள் சில நேரம் மகிழ்ந்திருக்க காரணம் சினிமா , அதனால் தான் அனைத்து முன்னணி சேனல்களும் 24 மணி நேர சினிமா சேனல்களாக மாறிவிட்டன , இப்படி மக்களை மகிழ்விக்கும் சினிமாக்களை கோடிகள் வாரி இறைத்து தயாரிக்கும் தயாரிப்பாளரின் நிலை எப்போதுமே கேள்விகுறிதான் , இதோ இந்த நீண்ட லாக்டவுனுக்கு பிறகு அனைத்து துறைகளும் செயல்பட ஆரம்பிக்கும் ஆனால் பைனான்ஸ் வாங்கி இடையில் லாக்டவுனினால் நின்று போயிருக்கும் , ரிலிஸ் நேரத்தில் மாட்டிக்கொண்டு இனி எப்போது ரிலிஸ் தேதி கிடைக்கும் என போராடிக்கொண்டிருக்கும் திரைப்படங்களின் தயாரிப்பாளர்கள் நிலைமை எப்போதும் போல பரிதாபதக்குரியது தான் , நடிகர் , நடிகைகள் , டெக்னிசியன்கள் அனைவருக்கும் வேலை கிடைத்துவிடும் சம்பளமும் கிடைத்துவிடும் ஆனால் முதலீடு செய்யும் முதலாளிகள் நிலைமை ...
இதற்கு ஒரு...


