ஜூன் 1ம் தேதிக்கு பின்பே கொரானா பீதிக்கு விடிவு பிறக்கும் – அமெரிக்க அதிபர் டிரம்ப் கவலை
ஜூன் 1ம் தேதிக்கு பின்பே கொரானா பீதிக்கு விடிவு பிறக்கும் - அமெரிக்க அதிபர் டிரம்ப் கவலை
உலகம் முழுவதும் பீதியை ஏற்படுத்தி உள்ள உயிர்க்கொல்லி வைரசான கொரானாவை கட்டுப்படுத்த முடியாமைல் உலக நாடுகள் திணறி வருகின்றன.
சீனாவில் தொடங்கி பின்னர் படிப்படியாக இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ், ஈரான் ஆகிய நாடுகளைத் தொடர்ந்து வல்லரசு நாடான அமெரிக்காவிலும் கொரானா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.
கொரானா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அமெரிக்காவில்தான் அதிகம். இன்று காலை நிலவரப்படி அமெரிக்காவில் 1 லட்சத்து 42 ஆயிரத்து 70 பேருக்கு கொரானா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 2484 பேர் உயிரிழந்துள்ளனர். 4500க்கும் மேற்பட்டோர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
அமெரிக்காவில் நோய்த் தடுப்பு நடவடிக்கை மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்றபோதிலும், கடந்த சில தினங்களாக...