முதலமைச்சர் நிவாரண நிதி கொடுங்கள்- திரைப்பிரபலங்களுக்கு பிரபல தயாரிப்பாளர் வேண்டுகோள்
கொரானா வைரஸ் பரவலை தடுக்க அரசு எடுக்கும் நடவடிக்கைகளை மேம்படுத்த நிதி அளிக்க வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வேண்டுகோள் விடுத்தார்.
இதையடுத்து பிரபல தயாரிப்பாளரும் நடிகருமான JSK சதீஷ் குமார் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.2 லட்சம் கொடுத்தார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:
தமிழ் திரைத்துறையினருக்கு அன்பான வேண்டுகோள்.
அன்புடையீர் வணக்கம்.
உலகெங்கும் கொரோனா வைரஸ் தொற்று நோய் வேகமாகப் பரவி, மனித இனத்தை அழித்துக் கொண்டிருக்கிறது. இந்த வைரஸ் பரவலை தடுத்து மக்களை காப்பாற்றும் துரித நடவடிக்கைகளில் மத்திய, மாநில அரசுகள் திறம்பட பணியாற்றி வருகின்றன. இந்த போர்க்கால நடவடிக்கைக்கு, பொதுமக்களின் அடிப்படை தேவைகளுக்கும், மருத்துவ உபகரணங்கள் வாங்குவதற்கும் மாநில அரசுக்கு பெரும் நிதி தேவைப்படுகிறது.
இதற்கு பொதுமக்கள் அரசுக்கு கரம் கொடுத்து தங்களால் இயன்ற நிவா...