தோல்வி பயத்தால் மேடை நாகரீகம் கூட இல்லாமல் எதிரணி வேட்பாளர்களை “மயிரு… நாய்.,. முண்டம்” என ஏகவசனத்தில் பேசும் ராதாரவி!
தோல்வி பயத்தால் மேடை நாகரீகம் கூட இல்லாமல் எதிரணி வேட்பாளர்களை "மயிரு... நாய்.,. முண்டம்" என ஏகவசனத்தில் பேசும் ராதாரவி!
தென்னிந்திய டப்பிங் யூனியன் சங்கத்தில் பல ஆண்டுகளாக பதவி சுகம் அனுபவித்து வருபவர் ராதாரவி.
இதே போல நடிகர் சங்கத்தில் பல ஆண்டுகளாக தேர்தல் நடத்தாமல் பதவியில் இருந்த ராதாரவியை விஷால் தலைமையிலான அணி மண்ணை கவ்வ வைத்தது.
அதோடு நடிகர் சங்கத்துக்கு இலவசமாக வந்த வேங்கட மங்கலம் நிலத்தை மோசடியாக விற்று ஏமாற்றிய விவகாரமும் வெளிச்சத்துக்கு வந்ததோடு ராதாரவி மீது மோசடி வழக்கு தொடரப்பட்டது.
இந்த நிலையில் அந்த மோசடி வழக்கில் தனக்கு கண்டிப்பாக தண்டனை கிடைக்கும் என தெரிந்ததால் தன்னை பாதுகாத்துக் கொள்ள மத்தியில் ஆளும் பிஜேபியில் போய் சேர்ந்து கொண்டார் ராதாரவி.
இந்த நிலையில் டப்பிங் யூனியன் தேர்தல் அறிவிக்கப்பட்டது. தலைவர் பதவிக்கு மீண்டும் ராதாரவி மனு செய...