“பொறுக்கி” வாய்சுக்குத்தான் லாயக்கு… விஜய் சேதுபதியை வம்புக்கு இழுக்கும் ராதாரவி டீம்..!
பொது வெளியில் அவதூறாக கருத்திட்டு விஜய் சேதுபதியை வம்புக்கு இழுக்கும் டப்பிங் யூனியன்..!
ராதாரவி தலைமையிலான டப்பிங் யூனியன் நிர்வாகிகள் அத்தனை சீக்கிரம் பொது வெளியில் கருத்து பதிவிடுவதில்லை. இதற்கு காரணம் ராதாரவி என்கிற ஒரு நபரின் முழு கட்டுப்பாட்டில் தான் டப்பிங் யூனியன் செயல்படுகிறது.
நிர்வாகத்தை எதிர்த்து கருத்து பதிவிடுபவர்களை சங்கத்தை விட்டு வெளியேற்றி விட்டு அவர்கள் தொடர்ந்து தொழில் செய்ய முடியாத படி செய்து விடுவார்கள்.
இதற்கு சமீபத்திய உதாரணம் பாடகி சின்மயி.
இப்போது நடிகர் விஜய் சேதுபதி மீது டப்பிங் சங்கம் திடீரென பாய்ந்திருக்கிறது. அந்த சங்கத்தின் செயலாளர் கதிரவன் பாலு சமூக வலைதளங்களில் விஜய் சேதுபதியை மிக அவதூறான வார்த்தைகளில் வசை பாடி கமெண்ட் போட்டிருக்கிறார்.
ராதாரவிக்கு தெரியாமல் இப்படி கருத்து வர சாத்தியமில்லை.
விஜய் சேதுபதியிடம் தங்க காசெல்லாம் வாங்கிக் கொண்ட ராதாரவி திடீரென விஜய் சேதுபதி மீது கோவப்பட என்ன காரணம் என தெரியவில்லை.
டப்பிங் சங்கத்தின் செயலாளர் கதிரவன் பாலு என்பவர், திடீர் என்று நேற்று பொது தளத்தில் விஜய்சேதுபதியை தரக்குறைவாக விமர்சித்திருக்கிறார்.
நடிகர் விஜய்சேதிபதியை குறிப்பிட்டு அவர் : “இந்த டிஸ்னியில இருக்குறவங்களுக்கு அறிவே இல்ல போலருக்கு. எதுக்கு யார போடறதுன்னே தெரியாம கண்டமேனிக்கு அலையுறானுங்க.
சேதுபதி ஒரு டீக்கடை பொருக்கி வாய்சுக்கு நல்லா இருக்கும். அவன போய் ஒரு பில்லினருக்கு போட்டா??? கர்மம்டா சாமி”
என்று மிகக்கேவலமாக பேசியிருக்கிறார்.
இவர் பதிவிற்கு டப்பிங் கலைஞரான நாகினி புகழ் சக்தி ரூடி போன்ற போன்றோர் சேர்ந்து ஒரு குழுவாக ஆதரவு தெரிவித்திருப்பது ஆச்சர்யமாக இருக்கிறது.
அப்படியென்றல், டப்பிங் சங்கத்திற்கும் நடிகர் விஜய்சேதுபதிக்கும் நடுவில் அப்படி என்ன கருத்து மோதல் அல்லது பிரச்சனை ? என்று சினிமா வட்டாரத்தில் புகைய ஆரம்பித்திருக்கிறது.
இன்று மக்கள் செல்வன் என்கிற பட்டம் வாங்கி, கோடானுகோடி மக்கள் மனதில் இடம் பிடித்திருக்கும் பிரபலமான கதாநாயகன் விஜய்சேதுபதி,
அவர் குரல் இதற்கு தான் பொருந்தும் என்று சொன்னால்,
அவர் எத்தனையோ கதாப்பாத்திரங்களை ஏற்று நடித்திருக்கிறார். அந்த கதாப்பாத்திரங்களுக்கு பொருந்தாத குரலோடு தான் அவர் இத்தனை நாளாக நடித்தார் என்று இவர் சொல்கிறாரா ?
இந்த அளவிற்கு, அதுவும் டப்பிங் சங்க நிர்வாக பொறுப்பில் இருப்பவர் பொது வெளியில் விமர்சிக்கிறார் என்றால், விஜய்சேதுபதிக்கும் டப்பிங் சங்கத்திற்கும் அப்படி என்ன சிக்கல் ?
என்ன மோதல் ?
விஜய்சேதுபதி அடுத்த சின்மயி ஆகப்போகிறாரா டப்பிங் சங்கத்தில் ?
தொடர்ந்து ஏன் டப்பிங் சங்க நிர்வாகம் பிரபலங்களை குறிவைத்து வருகிறது ?
தற்போது டப்பிங் சங்க தலைவராக இருக்கும் நடிகர் ராதாரவி அல்லது நடிகர் விஜய்சேதுபதி இது குறித்து விளக்கம் அளித்தால் தான் இவர்களுக்குள் நடந்த பூசல் என்ன என்பது புரியும்.
இது ஒரு நடிகருக்கு ஏற்பட்ட பிரச்சனை என்பதால், நடிகர் சங்கம் இந்த விவகாரத்தில் தலையிடுமா ? அல்லது திரைத்துறை வேடிக்கை பார்க்குமா ?