பசித்திருக்கும் மக்கள் பற்றி ப.சிதம்பரம் கேட்கும் கேள்வியின் நியாயம் புரியவில்லையா உங்களுக்கு – பிரதமர் மோடியை கேள்வி கேட்கும் ஸ்டாலின்
பசித்த மக்கள் பற்றி
சிதம்பரம் கேட்கும் கேள்வியின் நியாயம் புரியவில்லையா உங்களுக்கு - பிரதமர் மோடியை கேள்வி கேட்கும் ஸ்டாலின்
மக்கள் மனதில் உள்ள கேள்விகளுக்கு, ஆறுதல் தரும் வகையிலான பதில் சொல்லும் உரையை எப்போது ஆற்றப் போகிறீர்கள் என, பிரதமர் மோடிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
ப.சிதம்பரம் கேட்கும் கேள்வியில் உள்ள நியாயம், தர்மம் பிரதமருக்குப் புரியவில்லையா? என்றும் அவர் கேட்டுள்ளார்.
இது தொடர்பாக, மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், "கரோனா நோய்த் தொற்று இந்தியாவில் மிக மோசமான தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், இன்று காலை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் நாடு முழுவதும் அமலில் இருக்கும் ஊரடங்கை, இரண்டாவது கட்டமாக, மே 3-ம் நாள் வரை மேலும் 19 நாட்களுக்கு நீட்டிப்பதாக அறிவித்துள்ளார்.
நோய்த் தொற்று உள்...