வியாழக்கிழமை, ஏப்ரல் 25
Shadow

Tag: பிரசன்னா

விக்னேஷ் விஜயகுமார் எழுதி இயக்கும் அசத்தலான காமெடி டிராமா!

விக்னேஷ் விஜயகுமார் எழுதி இயக்கும் அசத்தலான காமெடி டிராமா!

HOME SLIDER, TV news, செய்திகள்
    Trend Loud India Digital மற்றும் இயக்குநர்/தயாரிப்பாளர் பாலாஜி மோகனின் Open Window நிறுவனங்கள் இணைந்து தங்களது இரண்டாவது படைப்பை பெருமையுடன் அறிவித்துள்ளன. இந்த புதிய தமிழ் இணைய தொடர் பாலாஜி மோகனின் உதவி இயக்குநராக பணிபுரிந்த, அறிமுக இயக்குநர் விக்னேஷ் விஜயகுமார் எழுதி இயக்குகிறார். அசத்தலான காமெடி டிராமா இணைய தொடராக உருவாகும் இத்தொடரில் பிரசன்னா, SPB சரண், தன்யா பாலகிருஷ்ணா, கனிகா, சுரேஷ் சக்ரவர்த்தி மற்றும் பல பிரபல நட்சத்திரங்கள் இணைந்து நடிக்கின்றனர். சென்னை சுற்றியுள்ள பகுதிகளில் இத்தொடரின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. பிப்ரவரி 2022 இத்தொடரின் படப்பிடிப்பு முடிவடையவுள்ளது. எழுத்து & இயக்கம் விக்னேஷ் விஜயகுமார்     கிரியேட்டிவ் புரடியூசராக பாலாஜிமோகன் பணியாற்ற, ராஜா ராமமூர்த்தி இத்தொடரை தயாரிக்கிறார். சஞ்சய் சுபாஷ் & வித்யா...
அரசு கொள்ளை அடிப்பதாக கூறிய பிரசன்னா திடீரென மன்னிப்பு கேட்டது ஏன்?!

அரசு கொள்ளை அடிப்பதாக கூறிய பிரசன்னா திடீரென மன்னிப்பு கேட்டது ஏன்?!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  மின் கட்டண ரீடிங் விவகாரம் அரசு கொள்ளை அடிப்பதாக கூறிய பிரசன்னா திடீரென மன்னிப்பு கேட்டது ஏன்?! கொரானா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்ததால் கடந்த நான்கு மாதங்களாக மின்வாரிய கணக்கெடுப்பு தமிழகம் முழுவதும் எடுக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. அதே நேரம் கடந்த இரண்டு மாதங்களாக முந்தைய மாத மின்கட்டணத்தையே செலுத்தலாம் என மின்வாரியம் அறிவிப்பு வெளியிட்டது. இந்த நிலையில் தற்போது நான்கு மாதத்திற்கும் மொத்தமாக மின் கணக்கெடுப்பு எடுக்கப்பட்டதால் மிக அதிகமாக மின்கட்டணம் வருவதாக பரவலாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த நிலையில் நடிகர் பிரசன்னா தனது வீட்டிற்கு 70 ஆயிரம் ரூபாய் மின் கட்டணம் வந்திருப்பதாகவும் மின்வாரியம் கொள்ளை அடிப்பதாக எத்தனை பேர் உணர்கிறீர்கள் என்றும் தனது டுவிட்டர் பக்கத்தில் கேட்டிருந்தார் இதனால் மின் வார...
துல்கரிடம் மன்னிப்பு கேட்டு வாண்டடாக சர்ச்சை வண்டியில் ஏறிய பிரசன்னா!

துல்கரிடம் மன்னிப்பு கேட்டு வாண்டடாக சர்ச்சை வண்டியில் ஏறிய பிரசன்னா!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
    நாயின் பேர் சர்ச்சை மன்னிப்பு கேட்ட துல்கரிடம் மன்னிப்பு கேட்டு வாண்டடாக சர்ச்சை வண்டியில் ஏறிய பிரசன்னா! அனுப் சத்யன் இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்து தயாரித்துள்ள ‘வரனே அவஷ்யமுண்டு’ என்ற மலையாள படம் கடந்த பிப்ரவரி மாதம் திரைக்கு வந்து நல்ல வசூல் பார்த்தது. இதில் துல்கர் சல்மானுடன், ஷோபனா, சுரேஷ் கோபி, கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோரும் நடித்து இருந்தனர். இந்த படம் தற்போது இணையதளத்திலும் வந்துள்ளது. இந்த படத்தில் இடம்பெறும் நகைச்சுவை காட்சி ஒன்றில், சுரேஷ் கோபி வளர்க்கும் நாய்க்கு பிரபாகரன் என்று பெயர் வைத்து அழைப்பர். இது சர்ச்சையை கிளப்பி உள்ளது. இதனையடுத்து ரசிகர்கள் துல்கர் சல்மான் உள்ளிட்ட படக்குழுவினரை இணையத்தில் தீட்டித் தீர்த்தனர். போதா குறைக்கு சீமான் ஒருபடி மேலே போய் தனது வழக்கமான அறிக்கை மூலம் துல்கரை காய்ச்சி எடுத்தார். இதனால் மிகுந்த மன உளைச்...
கார்த்தி-விஜய்சேதுபதி உள்ளிட்ட 201 பேருக்கு கலைமாமணி விருது

கார்த்தி-விஜய்சேதுபதி உள்ளிட்ட 201 பேருக்கு கலைமாமணி விருது

CINI NEWS, HOME SLIDER, செய்திகள்
2011ம் ஆண்டு வரை வழங்கப்பட்டு வந்த கலைமாமணி விருதுகள், கடந்த 8 ஆண்டுகளாக வழங்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் மொத்தம் 8 ஆண்டுகளுக்கான கலைமாமணி உள்ளிட்ட கலைத்துறைக்கான உயரிய விருதுகளை பெறும் கலை வித்தகர்கள், திரைக் கலைஞர்கள், நாடகக் கலைஞர்கள் குறித்த விவரங்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, 2011ம் ஆண்டுக்கான கலைமாமணி விருதுகளுக்கு நடிகர்கள் பாண்டு, ஆர். ராஜசேகர், நடிகை குட்டி பத்மினி, பிண்ணனிப் பாடகி பி.எஸ். சசிரேகா, நடன இயக்குநர் புலியூர் சரோஜா உள்ளிட்ட பல்வேறு கலைத்துறை சார்ந்த 30 கலை வித்தகர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து 2012ம் ஆண்டுக்கான விருதுகள் பட்டியலில் நடிகைகள் டி. ராஜஸ்ரீ, பி.ஆர். வரலட்சுமி, இயக்குநர் சித்ரா லட்சுமணன் உள்ளிட்ட, பல்வேறு கலைப்பிரிவுகளை சேர்ந்த 30 பேருக்கு கலைமாமணி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 2013ம் ஆண்டுக்காக, நடிகர்கள் பிரசன்னா, ஆர். பாண்டி...