தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குநர் பாலாவுக்கும், அவர் மனைவி முத்துமலருக்கும் சென்னை குடும்ப நல நீதிமன்றம் விவாகரத்து வழங்கி உள்ளது.
2004ம் ஆண்டு பாலாவுக்கும், முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ் உறவுக்கார பெண்ணான முத்துமலருக்கும் மதுரையில் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் இருக்கிறது.
இந்த சூழலில் திடீரென பாலாவுக்கும், முத்து மலருக்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதால் இயக்குனர் பாலாவும், முத்துமலரும் தனித்தனியாக பிரிந்து வாழ்ந்தார்கள். இதற்கிடையில் முத்துமலர் யாருக்கும் சொல்லாமல் முக்கியமான அரசியல் பிரபலத்தின் உறவினரோடு சிங்கப்பூர் சொன்றுவிட்டதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னையிலுள்ள டிஜிபி அலுவலகத்தில் இயக்குனர் பாலா புகார் கொடுத்ததாகவும் தகவல்கள் வந்தது. டிஜிபியை ஏன் சந்தித்தீர்கள் என்பதற்கு பாலா பதில் எதுவும் சொல்லாமல் சென்றுவி...
வீரம், அண்ணாத்த பட நடிகர் பாலா 2-வது திருமணம் செய்து கொண்டார்!
தமிழில் அன்பு, காதல் கிசுகிசு, மஞ்சள் வெயில், அம்மா அப்பா செல்லம், அஜித்தின் வீரம், கார்த்தியுடன் தம்பி ஆகிய படங்களில் நடித்தவர் நடிகர் பாலா. இயக்குனர் சிறுத்தை சிவாவின் தம்பியான இவர், மலையாள திரையுலகிலும் பிசியான நடிகராக இருந்து வருகிறார். தற்போது சிவா இயக்கத்தில் ரஜினி நடிக்கும் அண்ணாத்த படத்திலும் நடிகர் பாலா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
கடந்த 2010-ம் ஆண்டு அம்ருதா சுரேஷ் என்பரை திருமணம் செய்துகொண்ட பாலா, அவருடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக 2019-ம் ஆண்டு அவரை விவாகரத்து செய்து பிரிந்தார். இவர்களுக்கு அவந்திகா என்ற மகள் உள்ளார்.
இதனிடையே கேரளாவை சேர்ந்த எலிசபெத் என்ற மருத்துவரை நடிகர் பாலா, ரகசியமாக 2-வது திருமணம் செய்துகொண்டதாக கடந்த மாதம் செய்திகள் வெளியாகின. இருப்பினும் இதுகுறித்து எந்தவித தகவலையும் வெ...