
தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குநர் பாலாவுக்கும், அவர் மனைவி முத்துமலருக்கும் சென்னை குடும்ப நல நீதிமன்றம் விவாகரத்து வழங்கி உள்ளது.
2004ம் ஆண்டு பாலாவுக்கும், முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ் உறவுக்கார பெண்ணான முத்துமலருக்கும் மதுரையில் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் இருக்கிறது.
இந்த சூழலில் திடீரென பாலாவுக்கும், முத்து மலருக்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதால் இயக்குனர் பாலாவும், முத்துமலரும் தனித்தனியாக பிரிந்து வாழ்ந்தார்கள். இதற்கிடையில் முத்துமலர் யாருக்கும் சொல்லாமல் முக்கியமான அரசியல் பிரபலத்தின் உறவினரோடு சிங்கப்பூர் சொன்றுவிட்டதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னையிலுள்ள டிஜிபி அலுவலகத்தில் இயக்குனர் பாலா புகார் கொடுத்ததாகவும் தகவல்கள் வந்தது. டிஜிபியை ஏன் சந்தித்தீர்கள் என்பதற்கு பாலா பதில் எதுவும் சொல்லாமல் சென்றுவிட்டார்.
![]()
இயக்குனர் பாலாவும், முத்துமலரும் சுமார் 4 வருடங்களாக பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், கடந்த மார்ச் 5-ம் தேதியன்று இருவரும் சட்டபூர்வமாக, சுமூகமான முறையில் விவாகரத்து பெற்றுள்ளார்கள்.
ஆனால் இது பற்றி பாலா எந்தக் கருத்தும் தெரிவிக்காமல் இருந்தார். இந்த நிலையில் இவர்களின் விவாகரத்து செய்தி தற்போது உறுதியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் இப்போது டைவர்ஸ் வாரம் போல தனுஷ் தனது மனைவியை பிரிவதாக அறிவித்தார். இசையமைப்பாளர் டி.இமான் தனது மனைவியை விவாகரத்து செய்தார்.

