சனிக்கிழமை, மே 2
Shadow

Tag: alanganallur jallikattu 2022

உலக புகழ்பெற்ற அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது

உலக புகழ்பெற்ற அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது

HOME SLIDER, NEWS, செய்திகள்
    உலக புகழ்பெற்ற அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு உலக புகழ்பெற்ற அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை 7.00 மணிக்கு தொடங்கியது. வாடிவாசலில் இருந்து வெளியே சீறி பாயும் காளைகளை அடக்க காளையர்கள் வீரத்துடன் முயன்று வருகின்றனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுவது தமிழர்களின் பண்பாடு ஆகும். அதன்படி, அவனியாபுரம், பாலமேடு ஆகிய பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று முடிந்தது. அலங்காநல்லூரில் நேற்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற இருந்த் நிலையில், ஊரடங்கு காரணமாக இன்று ஒத்தி வைக்கப்பட்டது. அதன்படி இன்று காலை 7.00 மணிக்கு ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. இதில் 700காளைகளுடன் ,  300மாடுபிடி வீரர்கள் பங்கேற்கின்றனர். கொரோனா பரிசோதனை செய்து நெகடிவ் சான்றிதழ் வைத்துள்ள காளை உரிமையாளர்கள், மாடுபிடி வீரர்கள் மட்டுமே போட்டிகளில் பங்கேற...
24 காளைகளை அடக்கி முதல் பரிசான காரை தட்டிச் சென்ற கார்த்திக்!

24 காளைகளை அடக்கி முதல் பரிசான காரை தட்டிச் சென்ற கார்த்திக்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
24 காளைகளை அடக்கி முதல் பரிசான காரை தட்டிச் சென்ற கார்த்திக்! மதுரை அவனியாபுரத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி வழக்கமான உற்சாகத்துடன் நடத்தப்பட்டது. வாடிவாசல் வழியாக சீறிப்பாய்ந்த காளைகளை மீடுபிடி வீரர்கள் பிடித்து விதவிதமான பரிசுகளை வென்றனர். இதேபோல் வீரர்களின் பிடியில் சிக்காமல் போக்கு காட்டிய காளைகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. மொத்தம் 7 சுற்றுகளாக வீரர்கள் களமிறக்கப்பட்டு, காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. ஒவ்வொரு சுற்றிலும் சிறப்பாக செயல்படும் வீரர்கள் அடுத்தடுத்த  சுற்றுக்கு முன்னேறினர். இதில் மதுரை வலையங்குளத்தைச் சேர்ந்த முருகன் என்ற மாடுபிடி வீரர் களத்தில் நீண்டநேரம் களத்தில் நின்று காளைகளை அடக்கி முதலிடத்தல் இருந்தார். அவரைத் தொடர்ந்து அவனியாபுரம் கார்த்திக் இரண்டாவது இடத்தில் பின்தொடர்ந்தார் பிற்பகலுக்குப் பிறகு முதலிடத்தை ...
ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவது எப்படி? அமைச்சர் ஆலோசனை

ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவது எப்படி? அமைச்சர் ஆலோசனை

Uncategorized
ஜல்லிக்கட்டு போட்டிகளில் பார்வையாளர்களை அனுமதிப்பது, காளைகள், மாடுபிடி வீரர்களுக்கான அனுமதி மற்றும் கொரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. பொங்கல் பண்டிகையையொட்டி மதுரையின் அலங்காநல்லூர், பாலமேடு மற்றும் அவனியாபுரத்தில் தமிழகர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். தற்போது தமிழகத்தில் கொரோனா மற்றும் ஓமைக்ரான் வைரஸ் பரவல் அதிகரித்து வரும் சூழலில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன இந்த சூழலில், மதுரை மாவட்டத்தில் உலகப்புகழ்பெற்ற அலங்காநல்லூர், பாலமேடு மற்றும் அவனியாபுரம் பகுதிகளில் நடைபெறும் ஜல்லிகட்டு போட்டிகளை கொரோனா பரவல் தடுப்பு வழிமுறைகளுடன் நடத்துவது தொடர்பாக, மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வணிகவரித்துறை அமைச்சர் பி.மூர்த்தி, மாவட்ட ஆட்சியர் அனிஷ்சேகர் தலைமையில் ஆலோசனைக்கூட்டம் நடைபெ...