வியாழக்கிழமை, ஆகஸ்ட் 27
Shadow

Tag: russia-ukraine tensions news updates

”ரஷ்யாவை எதிர்ப்பதில் இந்தியாவுக்கு பயம்” – சொல்கிறார் அமெரிக்க அதிபர்

”ரஷ்யாவை எதிர்ப்பதில் இந்தியாவுக்கு பயம்” – சொல்கிறார் அமெரிக்க அதிபர்

HOME SLIDER, ukrain war, World News, உக்ரைன் போர், உலக செய்திகள்
  உக்ரைனுக்கு எதிரான போரை ரஷ்யா தீவிரப்படுத்தி வரும் நிலையில் அந்நாட்டிற்கு எதிரான கூட்டணியில் இந்தியா இல்லை என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் விமர்சித்துள்ளார். அவரது கருத்து சர்வதேச அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. அணிசேராக் கொள்கையை கடைபிடித்து வரும் இந்தியா, உக்ரைன் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுடன் நல்லுறவை தொடர்ந்து பேணி வருகிறது. உக்ரைனை ரஷ்யா கடுமையாக தாக்கி வரும் நிலையில் ரஷ்யாவுக்கு எதிராக ஐநா சபையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அப்போது, வாக்கெடுப்பில் இந்தியா பங்கேற்கவில்லை. குவாட் அமைப்பில் இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகள் உள்ளன. இவற்றில் இந்தியாவை தவிர்த்து மற்ற நாடுகள் அனைத்தும் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தியுள்ளன இவற்றை சுட்டிக் காட்டி அமெரிக்காவில் வணிக தலைவர்களிடையே உரையாற்றிய அதிபர் ஜோ...
உக்ரைனில் இருந்து 2300 குழந்தைகளை கடத்திய ரஷ்யா? – அமெரிக்கா குற்றச்சாட்டு

உக்ரைனில் இருந்து 2300 குழந்தைகளை கடத்திய ரஷ்யா? – அமெரிக்கா குற்றச்சாட்டு

HOME SLIDER, ukrain war, World News, உக்ரைன் போர், உலக செய்திகள்
  உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் 4-வது வாரமாக நீடித்து வருகிறது. பல்வேறு பகுதிகள் மீதும் ஏவுகணைகள் மூலம் ரஷ்யா தாக்கி வருகிறது. இந்நிலையில், டுவிட்டரில் பதிவிட்டுள்ள உக்ரைனில் உள்ள அமெரிக்க தூதரகம், ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள லூகான்ஸ்க் மற்றும் டோனெட்ஸ்க் பகுதிகளிலிருந்து 2 ஆயிரத்து 389 குழந்தைகளை சட்டவிரோதமாக அழைத்துச் சென்றுள்ளதாகவும், இது கடத்தல் என்றும் குற்றம்சாட்டியுள்ளது. மரியுபோல் நகரிலிருந்து படைகள் வெளியேற வேண்டும் என்ற ரஷ்யாவின் அழைப்பை உக்ரைன் நிராகரித்தது. இதையடுத்து, அங்கு தாக்குதல் தீவிரமடைந்துள்ளது. அதேநேரம், மரியுபோல் நகரிலிருந்து ஒரு லட்சம் பேர் வெளியேற விரும்பினாலும், சரியான வழித்தடம் இல்லாததால், வெளியேற முடியவில்லை என்று துணை பிரதமர் இரினா வெரேஸ்சுக் கோரிக்கை விடுத்துள்ளார். கெர்சன் நகரில் உணவு மற்றும் மருத்துவ விநியோகம் கிடைக்காமல் 3 லட்சம...
Russia-Ukraine shokking War – ரஷ்ய வங்கிகளுக்கு உலகத் தடை விதிக்க மேற்கத்திய நாடுகள் முடிவு!

Russia-Ukraine shokking War – ரஷ்ய வங்கிகளுக்கு உலகத் தடை விதிக்க மேற்கத்திய நாடுகள் முடிவு!

HOME SLIDER, World News, உலக செய்திகள்
  மேற்கத்திய உக்ரைனிய நட்பு நாடுகள் ரஷ்யாவிற்கு எதிராக புதிய பொருளாதாரத் தடைகளைத் தயாரித்து வருகின்றன, முக்கிய உலகளாவிய பரிமாற்ற அமைப்பிலிருந்து அதன் முக்கிய வங்கிகளை வெளியேற்றுவது உட்பட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ரஷ்யாவின் இராணுவம் இரவோடு இரவாக பல நகரங்களை ஏவுகணைகளால் தாக்கி, தலைநகர் கீவின் தென்மேற்கே உள்ள வாசில்கிவ் என்ற இடத்தில் எண்ணெய் முனையத்தை எரித்ததாக நகர மேயர் கூறினார். குண்டுவெடிப்புகள் இரவு வானத்தில் தீப்பிழம்புகளையும் புகையையும் அனுப்பியது என்று ஆன்லைன் பதிவுகள் காட்டுகின்றன. வடகிழக்கு நகரமான கார்கிவ் அருகே கடுமையான சண்டை நடந்ததாக செய்திகள் வந்தன, அங்கு ரஷ்ய துருப்புக்கள் இயற்கை எரிவாயு குழாய் ஒன்றை வெடிக்கச் செய்ததாக உக்ரேனிய அரசு தகவல் தொடர்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் வியாழன் அன்று ஒரு சிறப்பு ராணுவ ...