குடிசை கொளுத்திய சாதி அரசியலுக்கு சங்கு ஊதும் “சைரன்” கோடங்கி விமர்சனம் 4/5
குடிசை கொளுத்திய சாதி அரசியலுக்கு சங்கு ஊதும் “சைரன்” கோடங்கி விமர்சனம் 4/5
ஆயுள் தண்டனைக் கைதியாக 14 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் ஜெயம் ரவி, பல வருட சிறை தண்டனைக்குப் பிறகு சீரியசாக இருக்கும் அப்பாவை பார்க்க இரண்டு வாரம் பரோலில் வெளியே வருகிறார். தாய் இல்லாத அவரது மகள் ஜெயம்ரவி மீது கடும்போகத்தில் இருப்பதோடு, அவரை பார்க்கவே விரும்பாமல் தனது உறவினர் வீட்டுக்கு சென்றுவிடுகிறார்.
அதே நேரம் லாக்கப் டெத் காரணமாக சஸ்பெண்ட் ஆகியிருந்த கீர்த்திசுரேஷ் மீண்டும் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியில் சேருகிறார். அவர் ஸ்டேஷனில் தான் பரோலில் வெளியே வந்திருக்கும் ஜெயம்ரவி தினமும் கையெழுத்து போடுகிறார்.
பரோலில் இருக்கும் அந்த கால கட்டத்தில் ஜெயம் ரவி சந்திக்கும் சில முக்கியஸ்தர்கள் அடுத்தடுத்து மர்மமாக கொல்லப்படுகிறார்கள். அதற்கு அவர் தான் காரணம் என்று போலீஸ் இன்ஸ்பெக்டர் கீர்த...