ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு பயந்து பதுங்கு குழிக்குள் போனாரா டிரம்ப்!?
கருப்பினத்தவர் கொல்லப்பட்ட விவகாரம் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு பயந்து பதுங்கு குழிக்குள் போனாரா டிரம்ப்!?
அமெரிக்காவின் மின்னபொலிஸ் நகரில் கருப்பினத்தவரான ஜார்ஜ் பிளாய்ட் என்பவர் போலீஸ் அதிகாரியால் கொலை செய்யபட்டார். இந்தவிவகாரத்தில் பல்வேறு மாகாணங்களில் ஆர்ப்பாட்டம் மற்றும் கலவரம் வெடித்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை இரவு ஜனாதிபதி டிரம்பின் அதிகாரப்பூர்வ இல்லமான வெள்ளை மாளிகை அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது, மிகவும் கொடூரமான நாய்களை ஏவியிருப்பேன் எனவும், அவர்களை துப்பாக்கி குண்டுகள் பதம் பார்த்திருக்கும் எனவும் டிரம்ப் தெரிவித்திருந்தார்.
ஆனால் வெள்ளை மாளிகையில் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள் அதற்கான வாய்ப்பை ஏற்படுத்தவில்லை எனவும், அவர்கள் மிக சாமர்த்தியமாக ஆர்ப்பாட்டக்காரர்களை எதிர்கொண்டதாகவும் டிரம்ப் பாராட்டி இருந்தார்.
வெள்ளிக்கிழமை ...


