போலிகளின் முகத்திரை கிழிக்கப்பட, சமத்துவம், சமூக நீதி நிலைக்க திமுக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் - அனைத்திந்திய பாட்டாளி முன்னேற்ற கட்சி தலைவர் சி.என்.இராமமூர்த்தி அறிக்கை
வன்னியர் கூட்டமைப்பின் தலைவரும், அனைத்திந்திய பாட்டாளி முன்னேற்ற கட்சியின் நிறுவன தலைவருமான சமூக போராளி சி.என்.இராமமூர்த்தி வெளியிட்ட அறிக்கை விவரம்:
தமிழகத்தில் சமூக நீதியின் பெயரால் பல போலிகள் உலா வருகிறார்கள். தேர்தல் நேரங்களில் மட்டுமே சமூக நீதி பேசுவதும், சமத்துவம் பேசுவதும், சமுதாய மக்களுக்காக வாழ்க்கையையே அர்ப்பணித்ததாக தம்பட்டம் அடித்துக் கொண்டு நீலிக்கண்ணீர் வடிக்கும் அரசியல் வியாபாரிகளின் முகத்திரையை இந்த தேர்தலில் கிழித்து எறிய வேண்டும்.
இதற்கான சரியான தலைமையை தமிழக மக்கள் இனம் கண்டு கொள்ள வேண்டும்.
தமிழக்த்தில் தொடர்ந்து 10 ஆண்டுகளாக அதிமுக அரசுதான் ஆட்சியில் இருந்தது. இப்போது தேர...