ஊழல் தண்டனையால் ஜெயிலில் தோட்டக்காரர் ஆன லாலு… தினமும் 93 ரூபாய் ஊதியம்
ஊழல் தண்டனையால் ஜெயிலில்
தோட்டக்காரர் ஆன லாலு..!
தினமும் 93 ரூபாய் ஊதியம்
பீகார் முன்னாள் முதல்- மந்திரியும், ராஷ்டீரிய ஜனதா தளம் கட்சித் தலைவருமான லாலு பிரசாத் யாதவ், கால்நடை தீவனம் வாங்கியதில் ஊழல் செய்ததாக 6 வழக்குகளில் சிக்கினார்.
முதல் வழக்கில் 2013-ல் தீர்ப்பு வெளியிடப்பட்டது. அதில் லாலுபிரசாத் 5 ஆண்டுகள் ஜெயில் தண்டனை பெற்றதால் எம்.பி. பதவியை இழந்தார். அதோடு தேர்தலில் போட்டியிடும் தகுதியையும் பறி கொடுத்தார்.
சுமார் ஓராண்டு ஜெயிலில் இருந்த அவர் பிறகு ஜாமீன் பெற்று விடுதலையானார். இந்த நிலையில் கால்நடை தீவன ஊழலில் இரண்டாவது வழக்கிலும் லாலுவுக்கு ரூ.3.5 ஆண்டுகள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
இதையடுத்து அவர் ராஞ்சியில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு அளிக்கப்பட்டுள்ள தண்டனையை எதிர்த்து ராஞ்சி கோர்ட்டில் ‘அப்பீல்’ செய்ய ஏற்பாடு செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில...








