உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு… சிறந்த வீரருக்கும், பிடிபடாத காளைக்கும் கார் பரிசு..!
உலக புகழ் பெற்ற தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி அலங்காநல்லூரில் இன்று நடந்தது. உலகம் முழுவதும் இந்த போட்டியை நேரலையில் கோடிக்கணக்கானோர் கண்டு ரசித்தனர். போட்டி நிறைவில் வெற்றி பெற்ற சிறந்த வீரருக்கும், வீரர்களிடம் பிடிபடாமல் சீறிப்பாய்ந்தோடிய காளைக்கும் கார் சிறப்பு பரிசாக வழங்கப்பட்டது.
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுகின்றன. அவனியாபுரம், பாலமேடு பகுதிகளிலும், குறிப்பாக மதுரை மாவட்டத்தில் அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு உலகப் புகழ் பெற்றது. 2019ம் ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடர்பாக அரசாணை வெளியிடப்பட்டதும், ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்றன.
வாடிவாசல், தடுப்பு, கேலரி, மைதானம், அடிப்படை வசதிகள் செய்யப்பட்டன. ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் இளைஞர்களுக்கு மருத்து...









