செவ்வாய்க்கிழமை, ஜூலை 7
Shadow

Author: Kodanki

ராஜஸ்தான், தெலுங்கானாவில் பிரசாரம் ஓய்ந்தது…  நாளை ஓட்டுப்பதிவு

ராஜஸ்தான், தெலுங்கானாவில் பிரசாரம் ஓய்ந்தது… நாளை ஓட்டுப்பதிவு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  2019 ஆண்டு நாடாளுமன்ற மக்களவைக்கு தேர்தல் நடக்க உள்ள நிலையில், மத்திய பிரதேசம், சத்தீஷ்கார், மிசோரம், ராஜஸ்தான், தெலுங்கானா ஆகிய 5 மாநில சட்டசபை தேர்தல்கள் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. மத்திய பிரதேசம், சத்தீஷ்கார், மிசோரம் ஆகிய 3 மாநிலங்களில் ஓட்டுப்பதிவு ஏற்கனவே முடிந்து விட்டது. ராஜஸ்தான், தெலுங்கானா ஆகிய 2 மாநிலங்களிலும் நாளை (7-ந் தேதி) ஓட்டுப்பதிவு நடக்கிறது. 200 இடங்களை கொண்ட ராஜஸ்தான் சட்டசபை தேர்தல், பாரதீய ஜனதா, காங்கிரஸ் ஆகிய 2 கட்சிகளுக்கும் முக்கியமானது. கடந்த 25 ஆண்டுகளாக அங்கு ஒவ்வொரு தேர்தலிலும் ஆட்சி மாற்றம் ஏற்படுவதால், ஆட்சியை தக்க வைக்க பாரதீய ஜனதாவும், கைப்பற்றுவதற்கு காங்கிரசும் வரிந்து கட்டுகின்றன. இங்கு ராம்கார் தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் மரணம் அடைந்து விட்டதால் தேர்தல் ஒத்தி போடப்பட்டுள்ளது. 199 தொகுதிகளில் மட்டுமே நாளை ஓட...
குட்கா ஊழல் – அமைச்சர் விஜயபாஸ்கர், உதவியாளருக்கு சிபிஐ சம்மன்

குட்கா ஊழல் – அமைச்சர் விஜயபாஸ்கர், உதவியாளருக்கு சிபிஐ சம்மன்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா, போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. செங்குன்றம் குட்கா குடோனில் வருமான வரி துறையினர் நடத்திய சோதனையின் எதிரொலியாக அங்கு கைப்பற்றபட்ட டைரியே குட்கா விவகாரத்தின் பின்னணியில் இருந்தவர்களை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தது அந்த டைரியில் அமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன், முன்னாள் போலீஸ் கமி‌ஷனர் ஜார்ஜ் ஆகியோரது பெயர்கள் இடம் பெற்றிருந்தன. அதோடு போலீஸ் அதிகாரிகள், சுகாதாரத்துறை, உணவு பாதுகாப்புத்துறை, கலால் துறை அதிகாரிகளின் பெயர்களும் இடம் பெற்றிருந்தன. அதன்பின்னர் சிபிஐ தீவிர விசாரணை நடத்தி குட்கா வியாபாரி மாதவராவ், அவரது பங்குதாரர்கள், அரசு அதிகாரிகள் என 6 பேர் கைது செய்யப்பட்டனர்.  அதன்பின்னர் சிபிஐ தனது முதல் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. அதில் மாதவராவ் உள்ளிட்ட 6 பேர் மீது குற்றம்...
சீனாவில் மே 2019ல் பிரம்மாண்டமாக ரிலீசாகும் ரஜினியின் 2.0

சீனாவில் மே 2019ல் பிரம்மாண்டமாக ரிலீசாகும் ரஜினியின் 2.0

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  ஷங்கர் - ரஜினிகாந்த் - அக்‌ஷய் குமார் கூட்டணியில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த வாரம் வெளியான 2.0 படத்திற்கு நல்ல வரவேற்பை கிடைத்துள்ளது. ரிலீசான 4 நாட்களில் படம் ரூ.400 கோடியை வசூலித்து சாதனை படைத்தது. 6 நாட்களில் படத்தின் வசூல் ரூ.500 கோடியை தாண்டியுள்ளதாக கூறப்படுகிறது. படத்துக்கு தொடர்ந்து வரவேற்பு கிடைத்த வண்ணமாகவே உள்ளது. இந்த நிலையில், 2.0 படம் வருகிற மே 2019ல் சீனாவில் பிரம்மாண்டமாக வெளியாக இருப்பதாக லைகா புரொடக்‌ஷன்ஸ் அறிவித்துள்ளது. 2.0 படத்தின் சீன ரிலீஸ் உரிமையை எச்.ஒய் மீடியோ கைப்பற்றியிருக்கிறது. சீன மொழில் டப்பிங் செய்யப்பட்டுள்ள இந்த படத்தை மொத்தமாக 10,000 திரையரங்குகளில், 57,000 திரைகளில் (47,000 3டி திரைகள்) வெளியிட இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. இதன்மூலம் 3டி-யில் அதிக திரைகளில் வெளியாகும் வெளிநாட்டு படங்களின் பட்டியலில் 2.0 இடம்ப...
கர்ணன் வேடத்துக்காக பயிற்சி எடுக்கும் விக்ரம்

கர்ணன் வேடத்துக்காக பயிற்சி எடுக்கும் விக்ரம்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
    மலையாளத்தில், ‘என்னு நிண்டே மொய்தீன்’ எனும் படத்தை இயக்கிய ஆர்.எஸ்.விமல் 300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரமாண்டமாக இயக்கும் படம் ‘மகாவீர் கர்ணா’. மகாபாரதத்தில் இடம் பெற்றுள்ள கர்ணன் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு உருவாகும் இந்தப் படத்தில் விக்ரம் கர்ணனாக நடிக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்புக்காக கேரளாவில் உள்ள ஸ்ரீ பத்மநாபர் கோயிலில் உள்ள மணி ஒன்றைப் படக்குழுவினர் பெற்றுள்ளனர். படத்துக்காக உருவாக்கப்பட உள்ள 30 அடி உயரமுள்ள கர்ணனின் ரதத்தில் இந்தக் கோயில் மணி இடம்பெற உள்ளது. ஐதராபாத், ஜெய்ப்பூர் மற்றும் கனடாவில் இந்தப் படத்தின் முக்கியக் காட்சிகள் படமாக்கப்பட உள்ளன. தமிழ், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் ரிலீசாக இருக்கும் இந்தப் படம் 32 மொழிகளில் டப் செய்யப்படுகிறது. இந்த படத்துக்காக தனது உடல் எடையை ஏற்றி ஆஜானு பாகுவான தோற்றத்துக்கு மாறி இருக்கும் விக்ரம், குதிரையே...
மேகதாது அணை கட்ட அனுமதி – மத்திய நீர்வள ஆணைய தலைவர் மீது தமிழக அரசு வழக்கு

மேகதாது அணை கட்ட அனுமதி – மத்திய நீர்வள ஆணைய தலைவர் மீது தமிழக அரசு வழக்கு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் ரூ.5,912 கோடி செலவில் புதிய அணை கட்டுவதற்கான சாத்திய கூறு அறிக்கையை மத்திய நீர்வள ஆணையத்தில் தாக்கல் செய்திருந்தது. இந்த அறிக்கையை ஏற்றுக் கொண்ட நீர்வள ஆணையம் விரிவான திட்ட அறிக்கையை தயாரித்து அளிக்குமாறு கர்நாடக நீர்ப்பாசனைத்துறைக்கு உத்தரவிட்டது. இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. அனைத்து கட்சியினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் 2-வது கூட்டம் டெல்லியில் நேற்று முன்தினம் நடை பெற்றது. கூட்டத்துக்கு மத்திய நீர்வள ஆணையத்தின் தலைவரும், காவிரி மேலாண்மை ஆணைய தலைவருமான மசூத் உசேன் தலைமை தாங்கினார் இதில் தமிழக அரசு சார்பிலும், கர்நாடக அரசு சார்பிலும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். அப்போது தமிழக பொதுப் பணித்துறை முதன்மை செயலாளர் எஸ்.கே.பிரபாகர் தனது எதிர்ப்புகளை பதிவு செய்தார்...
மீண்டும் பாட வந்த எஸ்.ஜானகி… ரசிகர்கள் உற்சாகம்..!

மீண்டும் பாட வந்த எஸ்.ஜானகி… ரசிகர்கள் உற்சாகம்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள்
    பழம்பெரும் பாடகி எஸ்.ஜானகி மீண்டும் ஒரு தமிழ் படத்தில் பாடல் பாடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தென்னிந்தியாவின் 'நைட்டிங்கேல்' என்று புகழாரம் சூட்டப்படும் எஸ்.ஜானகி, கடந்த 1957ஆம் ஆண்டு 'விதியின் விளையாட்டு' படத்தின் மூலம் அறிமுகமாகி, தனது இனிமையான தனித்துவம் மிக்க குரலால் எண்ணற்ற தென்னிந்திய திரைப்பட பாடல்களை பாடியுள்ளார். இந்நிலையில் கடந்த 2016ம் ஆண்டு ஒரு மலையாள படத்தில் ‘தாலாட்டு’ பாடல் பாடி, இனி பாடப்போவதில்லை ஓய்வு எடுக்கப்போகிறேன் என அதிரடியாக அறிவித்தார். சுமார் 48,000 பாடகளை பாடியுள்ள எஸ்.ஜானகி, 4 தேசிய விருதுகள், 32 மாநில விருதுகளை வென்றுளார். தமிழ், மலையாளம், தெலுங்கு, ஒரியா உள்ளிட்ட மொழிகளில் பாடியுள்ள எஸ்.ஜானகிக்கு கடந்த 2013 ஆம் ஆண்டு 'பத்ம பூஷன்' விருதினை பெற்றார். பாடி அலுத்துவிட்டதாக கூறி, குரலுக்கு ஓய்வு கொடுக்க விரும்புகிறேன். இனி யாரும் தன...
வசூல் மந்தம்… டிவிட்டரில் முதலிடம்… தீராத சர்கார் சலசலப்பு…!

வசூல் மந்தம்… டிவிட்டரில் முதலிடம்… தீராத சர்கார் சலசலப்பு…!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  அரசியல் மற்றும் சினிமாத்துறையில் சமூக வலைத்தளங்களின் பங்கு அலப்பறியது. அரசியல் ரீதியான கருத்துக்களை நேரடியாக மக்களிடத்தில் சேர்க்கவும், படத்தின் புரொமோஷன்களுக்காக ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவது அதிகரித்துவிட்டது. இந்நிலையில், இந்த ஆண்டு ட்விட்டர் ட்ரெண்ட்ஸ் டாப் 10 பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் தென்னிந்திய திரைப்படங்கள் மற்றும் நடிகர்கள் தொடர்பான ட்வீட்களே ஆதிக்கம் செலுத்தியுள்ளன. இதில் இந்தியளவில் முதல் 10 இடங்களில் 7 இடங்களை தென்னிந்திய சினிமா கைப்பற்றியுள்ளது. தளபதி விஜய் நடித்த ‘சர்கார்’ #Sarkar படத்தின் ஹேஷ்டேக் முதலிடத்தையும், அதைத் தொடர்ந்து ‘விஸ்வாசம்’ #Viswasam ஹேஷ்டேக் இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளது. டிவிட்டரில் விஜய்யின் சர்கார் முதலிடம் பிடித்தாலும் வசூல் கணக்கில் தயாரிப்பாளரை குப்புறத்தான் தள்ளி உள்ளது என்றே சொல்லலாம். வி...
ஜெ., மறைந்தாலும் நீங்காத நினைவுகள்..!

ஜெ., மறைந்தாலும் நீங்காத நினைவுகள்..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
ஜெயலலிதாவின் இரண்டாமாண்டு நினைவுதினத்தை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் முதல்வர் பழனிசாமி மலர் வளையம் அஞ்சலி செலுத்தினார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இரண்டாமாண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனால் தமிழகமெங்கும் இருக்கும் அதிமுக தொண்டர்கள் ஜெயலலிதாவிற்கு அஞ்சலி செலுத்தி வருகின்றன. சென்னை மெரினாவில் இருக்கும் ஜெயலலிதாவின் நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டது. இந்நிலையில், ஜெயலலிதாவின் நினைவுதினத்தை முன்னிட்டு அதிமுக சார்பில் அண்ணாசாலையில் இருக்கும் அண்ணா சிலையில் இருந்து அமைதி பேரணி நடைபெற்றது. இதில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ், அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், கட்சி நிர்வாகிகள், ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டனர். வாலாஜா சாலை, கலைவாணர் அரங்கம் வழியாக கறுப்பு சட்டை அணிந்தபடிபேரணியாக சென்ற முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ் ஆகியோர் மெரினாவில் ...
டிச.28ம் தேதி ஆண்டின் கடைசியில் ரசிகர்களை வளைக்க வரும் அதர்வாவின் பூமரங்..!

டிச.28ம் தேதி ஆண்டின் கடைசியில் ரசிகர்களை வளைக்க வரும் அதர்வாவின் பூமரங்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
    இயக்குனர் கண்ணன் மற்றும் அவரது ஒட்டுமொத்த குழுவும் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். அதற்கு காரணம் 'பூமராங்' படம் டிசம்பர் 28ஆம் தேதி வெளியாக இருக்கிறது என்ற அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்துதல் தான் மொத்த குழுவையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. இயக்குனர் கண்ணன் கூறுகையில், "டிசம்பர் 28ஆம் தேதி பூமராங் படம் வெளியாக இருப்பதால் ஒட்டு மொத்த குழுவும் மகிழ்ச்சியாக இருக்கிறோம். கடந்த ஒரு ஆண்டாகவே குழுவில் அனைவருக்கும் சவாலாக இருந்தது, குறிப்பாக இந்த படத்தில் மூன்று வித்தியாசமான தோற்றங்களில் நடிக்க மிகவும் துல்லியமான முயற்சிகள் எடுத்த அதர்வா முரளிக்கு. இந்த படம் மிகச்சிறப்பாக உருவாக எனக்கு மொத்த குழுவும் பக்க பலமாக இருந்தது ஒரு திரைப்பட தயாரிப்பாளராகவும், இயக்குனராகவும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. எங்கள் முடிவில்லாத கடின உழைப்புக்கு இது புத்தாண்டு பரிசாக இரு...