Author: Kodanki
“எங் மங் சங்” படம் மூலம் குழந்தைகளை கவர களமிறங்கிய பிரபுதேவா..!
வாசன் விஷுவல் வென்ச்சர்ஸ் பட நிறுவனம் சார்பாக கே.எஸ்.சீனிவாசன், கே.எஸ்.சிவராமன் அதிக பொருட்செலவில் தயாரிக்கும் படம் "எங் மங் சங்".
இந்த படத்தில் பிரபுதேவா கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக லட்சுமி மேனன் நடிக்கிறார். மற்றும் தங்கர்பச்சான், ஆர்.ஜே.பாலாஜி, சித்திராலட்சுமனன், கும்கி அஸ்வின், காளிவெங்கட், முனீஸ்காந்த், மாரிமுத்து, வித்யா இவர்களுடன் பாகுபலி வில்லன் பிரபாகர் இந்த படத்திலும் வில்லன் வேடம் ஏற்கிறார்.
கதை, திரைக்கதை, வசனம், எழுதி அர்ஜுன்.எம்.எஸ். இயக்குகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பெருமளவு முடிவடைந்தது. சமீபத்தில் இந்த படத்திற்காக பிரபுதேவா, பாகுபலி வில்லன் பிரபாகருடன் மோதும் சண்டை காட்சிகள் சென்னை அருகே பொழிச்சலூர் காட்டு பகுதியில் ஏழு நாட்கள் படமாக்கப்பட்டது.
படப்பிடிப்பில் ஆயிரக்கணக்கான நடிகர் நடிகைகள் பங்கெடுக்க மிகப் பிரமாண்டமான முறையில் படமாக்கப்பட...
ரஞ்சித் தயாரித்த பரியேறும் பெருமாள் படத்துக்கு அரசியல் தலைவர்கள் பாராட்டு!
இந்திய சமூகத்தில் புரையோடிப் போயிருக்கிற சாதியம் குறித்து உலக அளவிலான விவாதங்களைத் தொடங்கி வைத்திருக்கிறது “பரியேறும் பெருமாள்” திரைப்படம். “நீலம் புரொடக்சன்ஸ்” சார்பில் இயக்குநர் பா.இரஞ்சித் தயாரிப்பில், மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இப்படம் அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் சமூக செயல்பாட்டாளர்களுக்காக சென்னையில் பிரத்யேகமாக திரையிட்டுக் காண்பிக்கப்பட்டது.
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் மற்றும் வன்னி அரசு, “நாம் தமிழர் கட்சி” தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சி.மகேந்திரன், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் முன்னாள் மேயர் மா. சுப்பிரமணியன் மற்றும் தமிழன் பிரசன்னா, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், திராவிடர் வ...
சைக்கோ கதை சிக்கல்… நம்ப வைத்து ஏமாற்றிய மிஷ்கின்… குற்றம்சாட்டும் நடிகர்
சைக்கோ கதை எனக்காக உருவாக்கப்பட்டது - மிஷ்கின் என்னை நம்ப வைத்து ஏமாற்றி விட்டார் - புதுமுக நடிகர் மைத்ரேயா குமுறல்
பிரபல இயக்குனர் மிஷ்கின், தற்போது ‘சைக்கோ’ என்ற படத்தை இயக்கவுள்ளார். இப்படத்திற்கான முன்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் ‘சைக்கோ’ படத்தின் டைட்டில் லுக் போஸ்டரும் வெளியானது.
இந்நிலையில், புதுமுக நடிகர் மைத்ரேயா, ‘சைக்கோ’ திரைப்படம் எனக்காக உருவாக்கப்பட்ட கதை என்றும், இயக்குனர் மிஷ்கின் என்னிடம் பணம் பெற்றுக் கொண்டு ஏமாற்றி விட்டதாகவும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
வீடியோ லிங்க்...
https://www.youtube.com/watch?v=-1F4PmrCv6Y...
96 திரை விமர்சனம்
தமிழ் சினிமாவில் எப்போதாவதுதான் இப்படி ஒரு படங்கள் தலைகாட்டும்... அந்த படங்களை பார்க்கிற அத்தனை தலைகளும் தங்கள் கடந்த கால வாழ்க்கையை திரும்பி பார்க்க வைக்கும்... அப்படி ஒரு படம்தான் விஜய்சேதுபதி&த்ரிஷா நடித்திருக்கிற 96
பள்ளிப்பருவ காதல் கதையை அதுவும் நிறைவேறாத காதலை இத்தனை நீளமாக... அத்தனை அழகாக... கவிதையாக... படத்திலும், படம் பார்க்கிறவர்களையும் வெட்கப்பட வைத்து... யப்பா இயக்குனரே... இவ்ளோ நாளா எங்கய்யா இருந்த... என்று கேட்க வைத்திருக்கிறார் இயக்குனர் பிரேம்குமார்.
பள்ளிக்காதல் முடிந்து திடீரென காணாமல் போன ராமச்சந்திரன் தன் முன்பு 22 வருஷங்களுக்கு பிறகு தாடி மீசையுடன் 40ஐ தாண்டிய முதிர்ந்த வயசுடன் வந்து நிற்கும்போது... எதிரில் நிற்பது பள்ளியில் உருகி உருகி ஆசைப்பட்ட ஜானு என்பதை அறிந்து வெட்கப்படும் விஜய் சேதுபதி... அதை பார்த்து வயசை மறந்து படம் பார்க்கும் எல்லாருமே வெ...
எஸ் ஜே சூர்யாவோடு கைகோர்க்கும் ப்ரியா ப்வானி சங்கர்!
மாயா , மாநகரம் போன்ற தரமான வெற்றி படங்களை தயாரித்த பொடென்ஷியல் ஸ்டுடியோஸ் SJ சூர்யாவை நடிப்பில் , நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் “மான்ஸ்டர் ” திரைப்படத்தை தயாரிக்கிறது. இது பொடென்ஷியல் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் மூன்றாவது திரைப்படம். SJ சூர்யா கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் ப்ரியா பவனி ஷங்கர் கதாநாயகியாக நடிக்கிறார். “ ஒரு நாள் கூத்து“ திரைப்படத்தை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் இப்படத்தை இயக்கியுள்ளார்.
மான்ஸ்டர் குழந்தைகளுக்கான திரைப்படம் இதில் SJ சூர்யா இதுவரை நடித்திராத புதுமையான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
படத்துக்கு இசை ஜஸ்டின் பிரபாகரன் , ஒளிப்பதிவு கோகுல் பினாய் , படத்தொகுப்பு சாபு ஜோசப் , கலை ஷங்கர் சிவா.
படத்தின் போஸ்ட் புரொடெக்ஷன் வேலைகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இசை வெளியீடு மற்றும் பட ரிலீஸ் தேதி பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும்....
அல்சபி ஆம்பூர் பிரியாணி இப்போது நுங்கம்பாக்கத்திலும்…!
அல்சபி ஆம்பூர் பிரியாணி உணவகத்தின் 2 வது கிளை! - சென்னை நுங்கம்பாக்கத்தில் திறப்பு
சுமார் 25 ஆண்டுகள் பாரம்பரியம் மிக்க, ஆம்பூரின் புகழ் பெற்ற பிரியாணி உணவகமான அல்சபி ஆம்பூர்
பிரியாணி, கடந்த மாதம் சென்னை வளசரவாக்கத்தில் தொடங்கப்பட்ட நிலையில், ஒரே மாதத்தில் அதன் 2
வது கிளை சென்னை நுங்கம்பாக்கத்தில் திறக்கப்பட்டுள்ளது.
சுவை மற்றும் தரம் இரண்டுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் அல்சபி ஆம்பூர் பிரியாணி உணவகங்களின்
20 கிளைகள் சென்னையில் திறக்கப்பட உள்ளது. கடந்த மாதம் இதன் முதல் கிளை சென்னை
வளசரவாக்கம் திறக்கப்பட்டு வாடிக்கையாளர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றதை தொடர்ந்து, உடனடியாக
இரண்டாவது கிளை திறக்கும் பணியில் ஈடுபட்ட அல்சபி ஆம்பூர் பிரியாணி உணவகத்தின் உரிமையாளர்
கமல், தங்களது இரண்டாவது கிளையை நுங்கம்பாக்கத்தில் உள்ள, உத்தமர் காந்தி சாலையில், காவேரி
காம்பிளக்ஸ் பக்கத்தில்...




