புதன்கிழமை, ஜூலை 1
Shadow

Author: Kodanki

தந்தையுடன் இணைந்து நடிக்கும் வரலட்சுமி

தந்தையுடன் இணைந்து நடிக்கும் வரலட்சுமி

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
‘மகாபிரபு, ஏய், சாணக்யா, சண்டமாருதம்’ போன்ற படங்களில் இணைந்து பணியாற்றிய சரத்குமார் – இயக்குனர் ஏ.வெங்கடேஷ், மீண்டும் ‘பாம்பன்’ என்ற படத்திற்காக கூட்டணி அமைத்துள்ளனர். இதில் சரத்குமார் வித்தியாசமான வேடத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்த போஸ்டர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி இருக்கிறது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரிக்கச் செய்துள்ளது. இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கும் நிலையில், இந்த கூட்டணியில் வரலட்சுமி சரத்குமார் இணைந்திருக்கிறார். அப்பாவுடன் இணைந்து நடிப்பது மிகவும் உற்சாகமாவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது என்றும், படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள் என்றும் வரலட்சுமி சரத்குமார் கூறியிருக்கிறார். எஸ்.எஸ்.கே.புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் எஸ்.எஸ்.கே.சங்கரலிங்கம் ‘பா...
சினிமாவைப் போல அரசியலில் என் பாணி வேறு, கமல் பாணி வேறு – ரஜினி

சினிமாவைப் போல அரசியலில் என் பாணி வேறு, கமல் பாணி வேறு – ரஜினி

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
நடிகர் கமல் வருகிற 21-ந்தேதி ராமேசுவரத்தில் உள்ள மறைந்த அப்துல்காம் வீட்டில் இருந்து கமல் தனது அரசியல் பயணத்தை தொடங்குகிறார். அதன்பின் மதுரை கூட்டத்தில் பங்கேற்க இருக்கிறார். இந்த கூட்டத்திற்கு அழைப்பு விடுப்பதற்காக ரஜினியை, அவரது இல்லத்தில் சந்தித்திருக்கிறார் கமல். கமல் அழைப்பு குறித்து ரஜினி கூறும்போது, ‘என்னுடைய நண்பர் கமல் அரசியல் பயணத்தை தொடங்க இருக்கிறார். அவருக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். நண்பர் கமல், பணம், புகழ், பெயர் சம்பாதிக்க அரசியலுக்கு வரவில்லை. தமிழ் நாட்டு மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் எண்ணத்தில் வந்திருக்கிறார். ஆண்டவனின் ஆசிர்வாதம் அவருக்கு கிடைக்க வேண்டும். எல்லா பயணத்திலும் கமல் வெற்றியடைய வேண்டும். சினிமாவில் அவருடைய பாணி வேறு,  என்னுடைய பாணி வேறு. அதுபோல் அரசியலிலும் அவருடைய பாணி வேறு. என்னுடைய பாணி வேறு. ஆனால் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பத...
திமுகவின் அனைத்துக் கட்சி கூட்டத்தில் கலந்து கொள்ள கமலுக்கு அழைப்பு ரஜினிக்கு இல்லை..!

திமுகவின் அனைத்துக் கட்சி கூட்டத்தில் கலந்து கொள்ள கமலுக்கு அழைப்பு ரஜினிக்கு இல்லை..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
தி.மு.க. தலைவர் கருணாநிதியை நடிகர் கமல்ஹாசன் நேற்று இரவு சந்தித்து பேசினார். கருணாநிதியை நடிகர் கமல்ஹாசன் சந்தித்து விட்டு சென்ற பிறகு தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- நடிகர் கமல்ஹாசன், கருணாநிதியை சந்தித்து பேச வேண்டும் என்று என்னிடம் கேட்டார். வாருங்கள் என்று அழைத்தேன், வந்தார், சந்தித்து இருக்கிறார். புதிய கட்சியை தொடங்க இருக்கும் அவருக்கு நானும், கருணாநிதியும் வாழ்த்து தெரிவித்து இருக்கிறோம். கருணாநிதியை நடிகர் ரஜினிகாந்த் சந்தித்து வாழ்த்து பெற்றபோதும் நான் அவருக்கு வாழ்த்து தெரிவித்தேன். காவிரி பிரச்சினையில் தமிழகத்திற்கு இழைக்கப்பட்டுள்ள அநீதியை கண்டிக்கும் வகையில் தமிழக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தேன். ஆனால் இதுவரையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதில் அளிக்கவில்லை....
அரசியலில் குதிக்கும் நடிகர்கள் கொள்கை, திட்டத்தை அறிவிக்க வேண்டும் -கமலை சீண்டுகிறாரா கவுதமி..!

அரசியலில் குதிக்கும் நடிகர்கள் கொள்கை, திட்டத்தை அறிவிக்க வேண்டும் -கமலை சீண்டுகிறாரா கவுதமி..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகைகள்
ஆண்டாள் கோவிலுக்கு நடிகை கவுதமி  வந்தார். அங்கு திருப்பாவை பாடல்களைப்பாடி ஆண்டாளை தரிசனம் செய்தார். பின்னர் அவர்  கூறியதாவது:- ஆண்டாளின் பக்தையான நான் அவரை தரிசிக்க இங்கு வந்தேன். புற்றுநோயைக் கண்டு யாரும் பயப்படத் தேவையில்லை. இதனை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து முறையான சிகிச்சை பெற்றால் உயிர் வாழ இயலும். மன தைரியம் மிகவும் அவசியம். இதற்கு நான்தான் சாட்சி. புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு பொதுமக்களிடம் அதிகம் வர வேண்டும். அரசுகள் கல்வி, மருத்துவம் மற்றும் சமூக நலன் சார்ந்த திட்டங்களை முனைப்புடன் செயல்படுத்த வேண்டும். நடிகர்கள் முதலில் அவர்களது கட்சியின் பெயர், கொள்கைகள், திட்டங்களை அறிவிக்கட்டும். அப்போதுதான் மக்கள் மத்தியில் நம்பிக்கை வரும். ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை கமிஷன் முழுமையான விசாரணை நடத்தி அறிக்கை தாக...
3வது திருமணம் செய்தார் இம்ரான்கான்..!

3வது திருமணம் செய்தார் இம்ரான்கான்..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான். இவர் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் என கட்சி தொடங்கியுள்ளார். பாகிஸ்தான் அரசியலில் அது எதிர்க்கட்சியாக உள்ளது. இவர் கடந்த 1995-ம் ஆண்டு மே 16-ந்தேதி லண்டனை சேர்ந்த ஜெமிமா கோஸ்டுஸ்மித் என்ற பெண்ணை திருமணம் செய்தார். இவர் மூலம் அவருக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் திருமணம் ஆன 9 ஆண்டுகளில் 2004-ம் ஆண்டில் இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர். அதன் பின்னர் 2015-ம் ஆண்டில் ஜனவரி 8-ந்தேதி டி.வி.தொகுப்பாளினி ரீசும் கான் என்பவரை 2-வது திருமணம் செய்தார். இவர்களது திருமண வாழ்வு 10 மாதங்கள் மட்டுமே நிலைத்தது. அதன் பின்னர் இவரையும் இம்ரான் கான் விவாகரத்து செய்தார். அதன்பின்னர் இம்ரான் கான் புஷ்ரா பிபி மேனகா என்ற ஆன்மீக ஆலோசகரை கடந்த ஜனவரி மாதம் ரகசியமாக திருமணம் செய்துகொண்டதாக பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால் அப்போது இம்ரான் கான் அந்த செய்தியை...
புதிய கட்சி தொடக்க விழாவை எளிமையாக நடத்த விரும்பும் கமல்

புதிய கட்சி தொடக்க விழாவை எளிமையாக நடத்த விரும்பும் கமல்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள்
தமிழக அரசியல் களத்திற்கு வந்துள்ள நடிகர் கமல்ஹாசன் வருகிற 21-ந்தேதி தனது புதிய கட்சியை அதிகாரப்பூர்வமாக தொடங்குகிறார். அன்றைய தினமே அவர் தனது கட்சியின் கொடியையும் அறிமுகம் செய்ய உள்ளார். 21-ந்தேதி (புதன்கிழமை) காலை ராமேஸ்வரத்தில் தனது பயணத்தை தொடங்கும் கமல்ஹாசன் ராமநாதபுரம், பரமக்குடி, மானாமதுரை மற்றும் மதுரையில் 4 பொதுக்கூட்டங்களில் பேச உள்ளார். இதில் மதுரையில் 21-ந்தேதி மாலை நடைபெற உள்ள பொதுக் கூட்டம் தமிழகம் முழுவதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. எனவே இந்த கூட்டத்தை அரசியல் கட்சி தொடக்க விழா மாநாடு போல நடத்த கமல்ஹாசனின் ரசிகர்கள் விரும்புகிறார்கள். இதற்காக தமிழகம் முழுவதும் இருந்து மதுரை நோக்கி தொண்டர்களை திரட்டும் ஏற்பாடுகளையும் அவர்கள் ஓசையின்றி செய்து வருகிறார்கள். கமல்ஹாசனுக்கு ஏற்கனவே தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் நற்பணி மன்ற ரசிகர்கள் உள்ளனர். சமீப காலமாக ...
திபெத்தில் 1,300 ஆண்டுகள் பழமையான புத்தர் கோவிலில் பயங்கர தீ விபத்து

திபெத்தில் 1,300 ஆண்டுகள் பழமையான புத்தர் கோவிலில் பயங்கர தீ விபத்து

HOME SLIDER, NEWS, செய்திகள்
சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள திபெத் நாட்டின் தலைநகர் லாசாவில் மிகவும் பழமைவாய்ந்த புத்தவிகார் உள்ளது. 1,300 ஆண்டுகள் பழமையான இந்த ஜோஹாங் கோயில் கடந்த 2000-ம் ஆண்டில் புராதன சின்னமாக யுனெஸ்கோ அறிவித்தது. இந்நிலையில், நேற்று மாலை இந்த கோவிலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்கும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளதாக சீன ஊடகங்கள் தெரிவித்துள்ளன. கவுதம புத்தர் தனது 12 வயதில் இருப்பது போன்ற சிலை இங்கு உள்ளது. மேலும், பல விலைமதிப்பு மிக்க அரிய பொருட்கள் இங்குள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் தெரியவில்லை....
கோகுலம் சென்னை ராக்கர்ஸ் அணியின் லோகோ வெளியீட்டு விழா

கோகுலம் சென்னை ராக்கர்ஸ் அணியின் லோகோ வெளியீட்டு விழா

CINI NEWS, HOME SLIDER, செய்திகள்
செலிபிரிட்டி பேட்மிண்டன் லீக்கின் இரண்டாவது சீசனில் கலந்து கொள்ளும் கோகுலம் சென்னை ராக்கர்ஸ் அணியின் லோகோ வெளியீட்டு விழா மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. விழாவில் கோகுலம் குழும தலைவர் கோபாலன் கலந்து கொண்டு லோகோவை வெளியிட்டார். விழாவில் எடிட்டர் ரூபன் உதவியாளர் சரத்குமார் எடிட்டிங்கில், ஏ ஆர் ரகுமான் பள்ளியில் இருந்து வந்த தேஜூ இசையில் உருவான கோகுலம் சென்னை ராக்கர்ஸ் அணியின் தீம் பாடல் ஒளிபரப்பப்பட்டது. சென்னை ராக்கர்ஸ் அணிக்கு பயிற்சியாளராக இருப்பதில் பெருமைப்படுகிறேன். வீரர்கள் அனைவருமே பயிற்சியில் சிறப்பாக விளையாடி வருகிறார்கள். கண்டிப்பாக சென்னை ராக்கர்ஸ் வெற்றி பெறும் என்றார் அணியின் பயிற்சியாளர் ஜெர்ரி. கோகுலம் குழுமத்தின் 50வது ஆண்டில், அவர்களின் கால்பந்து அணியும் சிறப்பாக விளையஅடி கோப்பைகளையும் வென்று வருகிறது. கைப்பந்து போட்டியை இந்திய அளவில் புரமோட் ச...
விநாயகர் சதுர்த்தியில் ரிலீஸ் ஆகும்  சிவகார்த்திகேயனின் சீமராஜா..!

விநாயகர் சதுர்த்தியில் ரிலீஸ் ஆகும் சிவகார்த்திகேயனின் சீமராஜா..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
‘வேலைக்காரன்’ படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் தற்போது பொன்ராம் இயக்கத்தில் நடித்து வருகிறார். சிவகார்த்திகேயனின் பிறந்தநாளுக்கு சர்ப்ரைஸ் அளிக்கும் விதமாக இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு இன்று வெளியிட்டது. `சீமராஜா' என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. துள்ளும் குதிரையில் உட்கார்ந்தபடி சிவகார்த்திகேயன் தனது கையில் ஒரு கொடியுடன் இருப்பது போல அந்த போஸ்டர் இருக்கிறது. இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக சமந்தா நடிக்கிறார். சிவகார்த்திகேயனின் தந்தையாக நெப்போலியனும், முதல்முறையாக வில்லியாக சிம்ரனும் நடிக்கிறார்கள். சூரி, லால், மொட்டை ராஜேந்திரன், யோகி பாபு, மனோபாலா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். 24 ஏ.எம். ஸ்டூடியோஸ் சார்பில் ஆர்.டி.ராஜா தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்ப...
அங்கம் தெரியும் கவர்ச்சி போஸ் கொடுத்தது ஏன் ரகுல் பிரீத்திசிங்

அங்கம் தெரியும் கவர்ச்சி போஸ் கொடுத்தது ஏன் ரகுல் பிரீத்திசிங்

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருப்பவர் ரகுல் பிரீத்திசிங். சமீபத்தில் இவருடைய கவர்ச்சி படம் ‘மேக்ஸிம்’ ஆங்கில பத்திரிகை அட்டையில் வெளியானது. இது தென்இந்திய படஉலகில் பரபரப்பாக பேசப்பட்டது. இதுகுறித்து ரகுல்பிரீத்திசிங் அளித்த பேட்டி... “மேக்ஸிம் ஆங்கில புத்தக அட்டை படத்தில் இடம் பெறும் வாய்ப்பு யாருக்கும் எளிதாக கிடைத்து விடாது. அந்த இதழுக்கு நான் கவர்ச்சி போஸ் கொடுத்துவிட்டதாக தென்இந்தியாவில் தான் பரபரப்பாக பேசிக்கொள்கிறார்கள். ஆனால் இந்தி படஉலகில் இது பெரிய வி‌ஷயமே இல்லை. ‘அய்யாரி’ இந்தி படத்தில் நான் நடித்திருப்பதால் தான் இந்த வாய்ப்பு தேடி வந்தது. இந்தி சினிமாவில் நடித்து வரும் தீபிகா படுகோனே, ராதிகா ஆப்தே, பிரியங்கா சோப்ரா உள்பட பல நடிகைகள் இந்த பத்திரிகைக்கு கவர்ச்சி போஸ் கொடுத்து இருக்கிறார்கள். நடிகைகள் தங்கள் உடலை நேர்த்தியாக வைத்து இருக்கிறார்கள் என்பதை வெளிப்படுத்த இ...