புதன்கிழமை, ஜூலை 1
Shadow

Author: Kodanki

தூத்துக்குடி மாவட்டத்திற்கான ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் நியமனம்

தூத்துக்குடி மாவட்டத்திற்கான ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் நியமனம்

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
அரசியல் பிரவேசம் குறித்த அறிவிப்பை வெளியிட்ட நடிகர் ரஜினிகாந்த், தனிக்கட்சி தொடங்குவதற்கான பணிகளை தீவிரப்படுத்தி உள்ளார். ரஜினி மக்கள் மன்றத்திற்கு நிர்வாகிகள் நியமனம் மற்றும் உறுப்பினர்கள் சேர்க்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் நேற்று தூத்துக்குடி மாவட்ட ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில்,  தூத்துக்குடி, திருச்செந்தூர், கருங்குளம், ஒட்டப்பிடாரம், கோவில்பட்டி, புதூர், ஸ்ரீவைகுண்டம், உடன்குடி ஒன்றியங்கள், கோவில்பட்டி, காயல்பட்டினம் நகரங்கள், தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் அதன் மண்டலங்களுக்கான அமைப்பு உருவாக்கப்பட்டு அதன் செயலாளர்கள், இணை செயலாளர்கள், துணை செயலாளர்கள் மறறும் செயற்குழு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கயத்தாறு, ஆழ்வார்திருநகரி, சாத்தான்குளம், விளாத்திகுளம் ஒன்றியங்களுக்கான பொறுப்புகள் ...
டி.டி.வி தரப்பு புதிய கட்சிக்கு அம்மா தி.மு.க உள்பட மூன்று பெயர்கள் பரிந்துரை

டி.டி.வி தரப்பு புதிய கட்சிக்கு அம்மா தி.மு.க உள்பட மூன்று பெயர்கள் பரிந்துரை

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
ஆர்.கே நகரில் வெற்றி பெற்ற குக்கர் சின்னத்தை தனது அணிக்கு வழங்க வேண்டும் என டெல்லி ஐகோர்ட்டில் சட்டமன்ற உறுப்பினர் டி.டி.வி தினகரன் மனுதாக்கல் செய்திருந்தார். ஆனால், தனி நபருக்கு அந்த சின்னம் அளிக்கலாம் என்றும் ஒரே அணியாக உள்ளவர்களுக்கு அளிக்க முடியாது என நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் கூறியிருந்தது. மேலும், உள்ளாட்சி தேர்தலில் சின்னம் ஒதுக்குவது மாநில தேர்தல் ஆணையத்தின் முடிவே என தெரிவிக்கப்பட்டது. இதனால், புது கட்சி தொடங்கி அக்கட்சிக்கு குக்கர் சின்னத்தை பெறும் முயற்சியில் இறங்கியுள்ளார். இந்நிலையில், அனைத்திந்திய அம்மா திராவிட முன்னேற்ற கழகம், எம்.ஜி.ஆர் அம்மா முன்னேற்ற கழகம் மற்றும் அம்மா எம்.ஜி.ஆர் முன்னேற்ற கழகம் ஆகிய மூன்று பெயர்களை தினகரன் தரப்பு இன்று கோர்ட்டில் சமர்பித்துள்ளது. எனினும், புதிய கட்சியை உடனே பதிவு செய்வது சாத்தியமில்லை இதனால் தேர்தல் ஆணையம் இடைக்கால ஏற்பாடு செய...
‘சார்லி சாப்ளின்-2’ பிரமாண்டமாக படமாக்கப்பட்ட  பிரபுதேவா – சமீர் கோச் சூட்கேஸ் சண்டை..!

‘சார்லி சாப்ளின்-2’ பிரமாண்டமாக படமாக்கப்பட்ட பிரபுதேவா – சமீர் கோச் சூட்கேஸ் சண்டை..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
பார்ட்டி' படத்தை தொடர்ந்து அம்மா கிரியேஷன்ஸ் சார்பில் டி.சிவா தயாரித்து வரும் படம் ‘சார்லி சாப்ளின்-2’. கடந்த 2002-ஆம் வெளியாகி வரவேற்பை பெற்ற ‘சார்லி சாப்ளின்’ படத்தின் அடுத்த பாகமாக இந்த படம் உருவாகி வருகிறது. இதில் பிரபுதேவா, பிரபு, நிக்கி கல்ராணி, அடா சர்மா முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ரவிமரியா, செந்தில், ஆகாஷ், விவேக் பிரசன்னா, சாம்ஸ், சாந்தா, காவ்யா, மகதீரா வில்லன் தேவ்கில், மும்பை வில்லன் சமீர் கோச், கோமல் சர்மா, அமீத் உள்ளிட்ட பலரும் நடிக்கும் இந்த படத்தில் வைபவ் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். முதல் பாகத்தை இயக்கிய சக்தி சிதம்பரம் இந்த பாகத்தையும் இயக்குகிறார். படம் குறித்து இயக்குநர் கூறும்போது, முழுக்க முழுக்க கமர்ஷியல் காமெடி படமாக சார்லி சாப்ளின் உருவாகி வருகிறது. இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இதன் படப்பிடிப்பு கும்பகோணத்தில் நடை...
போக்குவரத்து துறை மீது ஸ்டாலினுக்கு திடீர் ஞானோதயம் ஏன்? – துணை முதல்வர் OPS கேள்வி

போக்குவரத்து துறை மீது ஸ்டாலினுக்கு திடீர் ஞானோதயம் ஏன்? – துணை முதல்வர் OPS கேள்வி

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
சென்னையில் உள்ள அ.தி.மு.க. தலைமையகத்தில் இன்று ஜெயலலிதா பேரவைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்குப் பின்னர் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம், தமிழகம் பயங்கரவாதிகளின் கூடாரமாக மாறிவிட்டதாக மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் கூறிய குற்றச்சாட்டு குறித்து கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த ஓ.பன்னீர்செல்வம், ‘தமிழகம் அமைதிப் பூங்காவாகத் திகழ்கிறது. இந்தியாவிலேயே தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு சிறப்பாக உள்ளது. பயங்கரவாதிகளின் கூடாரமாக தமிழகம் மாறிவிட்டதாக மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன் கூறியது ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்’ என்றார். “வளர்ந்த மாநிலம் என்று கூறி தமிழகத்திற்கு தொடர்ந்து நிதி குறைப்பு செய்யப்படுகிறது. தமிழகத்தில் இருந்து வழங்கப்படும்  வரி வருவாயில் உரிய பங்கை மத்திய அரசு வழங்க வேண்டும். தி.மு.க. ஆட்சிக்காலத்தில் போக்குவரத்து துறைக்கு...
அ.தி.மு.க.வில் இருந்து அனிதா குப்புசாமி விலகல்

அ.தி.மு.க.வில் இருந்து அனிதா குப்புசாமி விலகல்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
அ.தி.மு.க. தலைமை கழக பேச்சாளரும், நாட்டுப்புற பாடகியுமான அனிதா குப்புசாமி அ.தி.மு.க.வில் இருந்து விலகியுள்ளார். இது குறித்து அனிதா குப்புசாமி கூறியதாவது:- அ.தி.மு.க.வில் இருந்து நான் விலகி விட்டேன். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பே எனது பேஸ்புக் பக்கத்தில் இது தொடர்பாக அறிவிப்பை வெளியிட்டேன். ஆனாலும் நான் செல்லும் இடங்களில் மக்கள் என்னிடம் வந்து, இன்னுமா அ.தி.மு.க.வில் இருக்கிறீர்கள் என்று கேட்டார்கள். எனவே தான் அதிகாரப்பூர்வமாக என் முடிவை அறிவித்து இருக்கிறேன். தற்போதைய முதல் -அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆட்சி, மக்கள் விரோத அரசாக செயல்படுகிறது. எனவே தான் அ.தி.மு.க.வில் இருந்து விலகுவதற்கு முடிவு செய்தேன். என் கணவருக்கு துணைவேந்தர் பதவியை கொடுக்காததால் தான் நான் அ.தி.மு.க.வில் இருந்து விலகியதாக கூறப்படுவதை முற்றிலும் மறுக்கிறேன். துணைவேந்தர் ஆகுவதற்கான அனைத்து தகுதிகளும் என் கணவருக்கு ...
கோயிலும் குப்பைமேடும் ஒன்னுதான் நாச்சியார் வசனத்தால் மீண்டும் சர்ச்சையில் சிக்கும் ஜோதிகா..!

கோயிலும் குப்பைமேடும் ஒன்னுதான் நாச்சியார் வசனத்தால் மீண்டும் சர்ச்சையில் சிக்கும் ஜோதிகா..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, Trailer, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
தொடர்ந்து இயக்குனர் பாலா சர்ச்சைக்குறிய வசனங்களையே நாச்சியார் படத்தில் வெளியிட்டு வருகிறார். நாச்சியார் நடத்தின் முதல் டீசரில் ஜோதிகா ஆபாசமான வார்த்தை பேசியது பெரும் சர்ச்சையை ஏற்ப்படுத்திய நிலையில் இன்று வெளியான அடுத்த டீசரில் அனைத்து மதங்களையும் கேவலப்படுத்தும் விதத்தில் வசனம் வைத்திருக்கிறார். இதையும் ஜோதிகாவே பேசி சர்ச்சையில் சிக்கியுள்ளார்.   கோயிலாயிருந்தாலும், குப்பை மேடா இருந்தாலும் எங்களுக்கு ஒன்னுதான் என்று போலீஸ் அதிகாரி வேஷத்தில் ஜோதிகா பேசுவது போல காட்சி வைத்திருக்கிறார்.   அனைத்து மத கோயில்களும் குப்பை மேடு என்கிறாரா இயக்குனர் பாலா... அதே போல மத வழிபாட்டுத்த்லங்களையும் கேலியாக சித்தரிக்கிறார். இப்படி சர்ச்சைகளில் படத்தை ஓடவைக்க பாலா முயற்சிக்கிறாரா...     https://youtu.be/5UwA1DkfPA4...
விஸ்வாசம் படம் மூலம் முதல்முறையாக இணைந்த அஜித் – டி.இமான்..!

விஸ்வாசம் படம் மூலம் முதல்முறையாக இணைந்த அஜித் – டி.இமான்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
அஜித்துடன் - சிவா 4-வது முறையாக இணையும் ‘விஸ்வாசம்’ படத்தின் படப்பிடிப்பு வருகிற மார்ச் 15-ந் தேதி தொடங்கும் என்று படக்குழு அறிவித்துள்ளது. ‘விவேகம்’ படத்தை தயாரித்த சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தையும் தயாரிக்கிறது. இதில் அஜித் ஜோடியாவது யார் என்பதில் குழப்பம் நீடித்த நிலையில், நயன்தாரா என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது, அதனைத் தொடர்ந்து படத்தின் இசையமைப்பாளர் யார் என்பது குறித்து பல வதந்திகள் பரவி வந்தன. இந்த படத்திற்கு இசையமைக்க முதலில் யுவன் ஷங்கர் ராஜாவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், பின்னர் அனிருத், சாம்.சி.எஸ் உள்ளிட்ட பெயர்களும் அடிபட்டன. பின்னர் டி.இமான் ‘விஸ்வாசம்’ படத்திற்கு இசையமைக்க இருப்பதாக சமூக வலைதளங்களில் டிரெண்டானது. படக்குழுவுக்கு நெருங்கிய வட்டாரங்களும் அதனை உறுதி செய்த நிலையில், தற்போது இசையமைப்பாளர் யார் என்பது குறித்த...
காலாவிற்காக ரசிகர்களிடம் கருத்து கேட்கும் சந்தோஷ் நாராயணன்

காலாவிற்காக ரசிகர்களிடம் கருத்து கேட்கும் சந்தோஷ் நாராயணன்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் `2.0' படத்தின் கிராபிக்ஸ் பணிகள் முடியாததால் `காலா' படத்தை முன்னதாக வெளியிட படக்குழு திட்டமிட்டு சமீபத்தில் ரிலீஸ் தேதியையும் அறிவித்தது. அதன்படி `காலா' படம் வருகிற ஏப்ரல் 27-ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. `கபாலி’ படத்திற்கு பிறகு ரஜினி - பா.இரஞ்சித் இணைந்திருப்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ‘காலா’ படத்திலும் ரஜினி வயதான தோற்றத்தில் நடித்திருக்கிறார். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார். இப்படத்தில் ரஜினியின் அறிமுகப் பாடல் எப்படி இருக்க வேண்டும் என்பதற்காக தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து கேட்டிருக்கிறார். இது குறித்து அவரது டுவிட்டர் பக்கத்தில், ‘காலா’ இசை உருவாக்கத்தில் உங்கள் எல்லோரையும் பங்கு பெற வைப்பது என்னுடைய கனவு. 'காலா' படத்தின் அறிமுகப் பாடலுக்கான இசை எப்படியானதாக இருக்க வேண்ட...
படக்குழுவினரை ஆச்சரியப்பட வைத்த சன்னிலியோன் குதிரை சவாரி..!

படக்குழுவினரை ஆச்சரியப்பட வைத்த சன்னிலியோன் குதிரை சவாரி..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
பிரபல கவர்ச்சி நடிகை சன்னி லியோன், தற்போது தமிழில் நடிக்கும் வீரமா தேவி படத்தின் படப்பிடிப்பில் படக்குழுவினரை ஆச்சரியப்படுத்தி உள்ளார். வடிவுடையான் அடுத்து இயக்கும் படம் ‘வீரமா தேவி’ இதில் இந்தி கவர்ச்சி நடிகை சன்னி லியோன் கதாநாயகியாக நடிக்கிறார். சரித்திர கதையாக உருவாகும் இது பெரிய பட்ஜெட்டில் தயாராகிறது. இந்த படத்தில் சன்னி லியோன் நடிப்பதற்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இந்த நிலையில், ‘வீரமா தேவி’ படப்பிடிப்பு தொடங்கியது. இதில் சன்னிலியோன் குதிரை சவாரி செய்யும் காட்சி படமாக்கப்பட்டது. அவர் குதிரை மீது சிறிதும் பயமில்லாமல் உட்கார்ந்து வேகமாக வலம் வந்த காட்சி படக்குழுவினரை ஆச்சரியப்பட வைத்தது....
பாரதிராஜா மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டது ஐகோர்ட்

பாரதிராஜா மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டது ஐகோர்ட்

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
இயக்குனர் பாரதிராஜா வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக, இந்து மக்கள் முன்னணி சார்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால் அந்த புகார் மீது விசாரணை நடத்தப்படவில்லை. இதையடுத்து இந்து மக்கள் முன்னணி சார்பில் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரரின் மனுவை பரிசீலனை செய்த ஐகோர்ட், இயக்குனர் பாரதிராஜா மீதான புகார் குறித்து விசாரிக்க காவல்துறைக்கு உத்தரவு பிறப்பித்தது. வன்முறையை தூண்டும் வகையில் பாரதிராஜா பேசியதாக அளித்த புகாரில் முகாந்திரம் இருந்தால் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.  ...