திங்கட்கிழமை, ஜூன் 22
Shadow

Author: Kodanki

என்னோடு விளையாடு விமர்சனம்

என்னோடு விளையாடு விமர்சனம்

விமர்சனம்
என்னோடு விளையாடு அக்கவுண்டன்டாக இருக்கும் பரத்துக்கு குதிரைப் பந்தயத்தில் மிகவும் ஆர்வம். பந்தயத்தில் எந்த குதிரை தோற்கும், எந்த குதிரை ஜெயிக்கும் என்பதை தனது கணக்கு மூளையால் கணிப்பதில் வல்லவர். இருப்பினும், இந்த குதிரை பந்தயத்தில் லட்சக்கணக்கான பணத்தை இழந்திருப்பார். இதற்கான காரணத்தை யோசிக்கும்போது, குதிரை பந்தயத்தில் மேட்ச் பிக்சிங் நடப்பதை கண்டுபிடிக்கிறார். ஒருகாலத்தில் குதிரை பந்தயத்தில் கொடிகட்டிப் பறந்த ராதாரவி, ஒரு தோல்வியால் போட்டியில் இருந்து விலகி இருக்கிறார். பின்னர் நம்பர் 1 இடத்தை பிடிப்பதற்காக மீண்டும் போட்டியில் கலந்துகொள்ள வரும் ராதாரவி, தொடர்ந்து ஜெயித்துக் கொண்டிருக்கும் யோக் ஜேப்பியிடம் பேரம் பேசுகிறார். இதை அறியும் பரத், அந்த பணத்தை கைப்பற்ற நினைக்கிறார். இது ஒருபுறம் நடந்துகொண்டிருக்க, மற்றொரு முனையில் பெண்களே பிடிக்காத கதிர், வேலை விஷயமாக சென்னை வரும்போது, கட்டாயத்...
பகடி ஆட்டம் விமர்சனம்

பகடி ஆட்டம் விமர்சனம்

விமர்சனம்
பகடி ஆட்டம் நாயகன் சுரேந்தர் பெண்கள் விஷயத்தில் ரோமியோ. பார்க்கிற பெண்களையெல்லாம் அடையவேண்டும் என்ற எண்ணத்திலேயே சுற்றுபவர். இவருடைய அப்பா நிழல்கள் ரவி பெரிய செல்வந்தர், அம்மா ராஜஸ்ரீ பொறுப்பான குடும்பத் தலைவி. மகன் மீது அதிக பாசத்தை பொழிபவர். இந்நிலையில், சுரேந்தர் ஒருநாள் மோனிகாவை பார்த்ததும் அவள்மீது ஆசைப்படுகிறார். மோனிகாவின் குடும்பம் அவளுடைய அக்கா கௌரி நந்தா ஆட்டோ ஓட்டி கொண்டுவரும் பணத்தில்தான் பிழைப்பு நடத்தி வருகிறது. தனது குடும்ப சூழ்நிலையை மறந்த மோனிகா தன் மீது சுரேந்தர் காட்டும் அக்கறையை காதல் என்று நம்பி அவனது வலையில் விழுகிறாள். இதை அறிந்த கௌரி நந்தா, தனது தங்கையை அழைத்து கண்டிக்கிறாள். அக்காவின் கண்டிப்பில் மனம் திருந்திய மோனிகாவை தனது வழிக்கு கொண்டுவர சுரேந்தர் முயற்சி செய்கிறான். தனது அம்மாவிடம் அவளைப் பற்றிய அனைத்து விஷயங்களையும் கூறிவிட்டதாகவும், அம்மாவிடம் வந்து உறுதி...
‘என்னோடு விளையாடு’ என் வாழ்வில் திருப்புமுனை படமாக இருக்கும்: பரத்

‘என்னோடு விளையாடு’ என் வாழ்வில் திருப்புமுனை படமாக இருக்கும்: பரத்

செய்திகள்
பரத், கதிர் இணைந்து நடித்துள்ள படம் ‘என்னோடு விளையாடு’. டொரண்டோ ரீல்ஸ், ரேயான் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தை அருண் கிருஷ்ணசாமி இயக்கியுள்ளார். இதன் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடந்தது. இதில் பேசிய பரத்... “ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு நான் நடிக்க ஒப்புக்கொண்டபடம் இது. கதையை இயக்குநர் என்னிடம் விவரித்தபோது இன்ட்ரஸ்டிங்காக இருந்தது. என்னுடைய பதினான்கு ஆண்டு கால திரையுலகில் குதிரை பந்தயம், குதிரை பந்தய சூதாட்டம் என்ற பின்னணியை வைத்து ஒரு முழுத்திரைக்கதையை நான் தமிழ் சினிமாவில் பார்த்ததில்லை. அந்த வகையில் இந்த திரில்லர் படம் புதிதாக இருக்கும். இப்படம் என்னுடைய திரையுலக வாழ்க்கையில் திருப்புமுனையாக அமையும் என்று எதிர்பார்க்கிறேன். ஒரு படத்தின் வெற்றியை ரசிகர்கள் தான் தீர்மானிக்கிறார்கள். அவர்களுக்கு இந்த ரொமாண்டிக் திரில்லர் படம் புதிய அனுபவத்தைக் கொடுக்கும்....
கல்யாணத்தில் முடிந்த காதல்  கார்த்திக் – சாட்னா டைட்டஸ் திருமணம்

கல்யாணத்தில் முடிந்த காதல் கார்த்திக் – சாட்னா டைட்டஸ் திருமணம்

சினி நிகழ்வுகள், செய்திகள்
கல்யாணத்தில் முடிந்த காதல் கார்த்திக் – சாட்னா டைட்டஸ் திருமணம் ரிஸி பிலிம்ஸ் பங்குதாரரான கார்த்திக் - நடிகை சாட்னா டைட்டஸ் திருமணம் பிப்ரவரி மாதம் 6ம் தேதி காலை சேலத்தில் இரு வீட்டாரது உறவினர்களும் நண்பர்களும் சூழ இனிதே நடைபெற்றது. நடிகை சாட்னா டைட்டஸ் நடித்த பிச்சைக்காரன் திரைப்படத்தை ரிஸி பிலிம்ஸ் விநியோகம் செய்தது குறிப்பிடத்தக்கது. கார்த்திக் - சாட்னா டைட்டஸ் திருமண வரவேற்பு நிகழ்ச்சி பிப்ரவரி 10ம் நாள் சென்னையில் விமர்சையாக நடைபெறவுள்ளது. இந்த ஆண்டில் காதல் திருமணம் செய்து கொண்ட முதல் நட்சத்திர ஜோடி என்ற பெயரை கார்த்திக், சாட்னா ஜோடி பெற்றிருக்கிறது....
அதே கண்கள்… விளம்பரமில்லா வெற்றி..!

அதே கண்கள்… விளம்பரமில்லா வெற்றி..!

செய்திகள்
அதே கண்கள்... விளம்பரமில்லா வெற்றி..! கலையரசன் நடிப்பில் சிவி.குமார் தயாரிப்பில் சமீபத்திய வெளியான படம் ‘அதேகண்கள்’. தமிழ் சினிமாவில் சமீபகாலமாக படங்கள் தயாரிப்பதை விட ரிலீஸ் செய்ய செலவிடும் தொகை ஒரு பட தயாரிப்பை மிஞ்சும் அளவுக்கு மாறியுள்ளது. அந்த அளவுக்கு செலவு செய்தாலும் ரசிகர்களுக்கு ஏற்ற கதையில்லாமல் போனால் கோடிகளில் விளம்பரம் செய்தாலும் பட ரிசல்ட் படுத்துக் கொள்ளும். சூப்பர் ஸ்டார் படம் தொடங்கி அறிமுக நடிகர்கள் படம்வரை இதுதான் இன்றைய கோலிவுட் நிலை. அதிலும் குறிப்பாக பட ரிலீஸ் நேரத்தில் டிவி விளம்பரம், ரேடியோ விளம்பரம், பேப்பர் விளம்பரம், இணையதள விளம்பரம் இவை தவிர ‘மிரட்டல் விளம்பரம்’(இதுதனி ரகம்). இப்படி பல முனைகளில் படத்தை விளம்பரப்படுத்தி அதற்காக பல கோடிகளை செலவு செய்தால் மட்டுமே படத்தை ரிலீஸ் செய்ய முடிகிறது. தமிழ் சினிமாவில் சமீபத்திய தயாரிப்பாளர்கள் எல்லாம் படம் தொடங்கும்போத...
கூடு விட்டு கூடு பாயும் வித்தைக்காரன் ‘போகன்’ விமர்சனம்

கூடு விட்டு கூடு பாயும் வித்தைக்காரன் ‘போகன்’ விமர்சனம்

விமர்சனம்
கூடு விட்டு கூடு பாயும் வித்தைக்காரன் ‘போகன்’ விமர்சனம் ஜெயம் ரவி அசிஸ்டெண்ட் கமிஷனராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய அப்பா நரேன் வங்கியில் மேனேஜராக பணியாற்றி வருகிறார். இதே ஊரில், ராஜ பரம்பரையில் இருந்து வந்த வாரிசான அரவிந்த்சாமி, வாழும் வரை ஜாலியாகவும், ஆடம்பரமாகவும் வாழவேண்டும் என்ற குறிக்கோளோடு சொர்க்கலோக வாழ்க்கை வாழ்கிறார். இந்நிலையில், ஒருநாள் அரவிந்த்சாமி ஒரு நகைக்கடையின் முன் தனது காரை நிறுத்துகிறார். காரில் இருந்தபடியே நகைக்கடையின் உள்ளே இருக்கும் பையனை உற்றுப் பார்க்கிறார். அப்போது, அந்த பையன் நகைக்கடைக்குள் இருந்து பணத்தை கொண்டு வந்து இவரது காரில் எதுவும் சொல்லாமல் வைத்துவிட்டு, உடனே மயங்கி விழுகிறான். இதற்கிடையில், ஜெயம் ரவிக்கும் ஹன்சிகாவுக்கும் பெற்றோர்களால் திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. திருமண தேதி நெருங்கும் சமயத்தில், வழக்கம்போல், அரவிந்த்சாமி தன...
‘பகடி ஆட்டம்’ படத்தின் பாடல்களை ஆர்யா வெளியிட்டார்

‘பகடி ஆட்டம்’ படத்தின் பாடல்களை ஆர்யா வெளியிட்டார்

செய்திகள்
ரகுமான் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பகடி ஆட்டம்’ படத்தின் பாடல்களை ஆர்யா வெளியிட்டார். மரம் மூவீஸ் பட நிறுவனம் சார்பாக T.S.குமார், கே.காமராஜ், பரணி மூவீஸ் சார்பாக A.குணசேகர், D.சுபாசந்திரபோஸ் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் படத்திற்கு “ பகடி ஆட்டம் “ என்று பெயரிட்டுள்ளனர். இந்த படத்தில் ரகுமான் சைபர் கிரைம் போலீஸ் உயர் அதிகாரி வேடத்தில் நடிக்கிறார். சமுத்திரகனி இயக்கத்தில் ஜெயம்ரவி நடித்த படத்தில் போலி சான்றிதழ் தயாரிக்கும் அதிரடி வேடத்தில் நடித்த கௌரி நந்தா இந்த படத்தில் கதையின் நாயகி வேடத்தில் நடிக்கிறார். ஒரு பெண் நினைத்தால் எதை வேண்டுமானாலும் சாதிக்க முடியும் என்ற உயரிய கொள்கையுடைய வீர மங்கையாக ஆட்டோ ஓட்டும் வேடத்தில் கௌரி நந்தா நடிக்கிறார். மற்றும் நிழல்கள் ரவி, சுதா, சிசர் மனோகர், கருத்தம்மா ராஜஸ்ரீ, சுப்புராஜ், சாட்டை ரவி, மற்றும் சுரேந்தர், மோனிகா, சஹானா, திவ்யஸ்ரீ, கமலி, அஸ்வதி நாயர...
அதிரடி ஆக்ஷனில் ‘சி3’

அதிரடி ஆக்ஷனில் ‘சி3’

செய்திகள்
அதிரடி ஆக்ஷனில் ‘சி3’ சூர்யா நடிப்பில் ஏற்கனவே சிங்கம், சிங்கம்2 படங்கள் ரிலீஸ் ஆகி வினியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள், ரசிகர்கள், தயாரிப்பாளர் என எல்லா தரப்பு மக்களையும் ஏமாற்றாமல் வசூல் தந்து வரவேற்பை பெற்றிருந்தது. ஹரி இயக்கத்தில் மீண்டும் சி3 என சிங்கம் படத்தின் அடுத்த பாகமாக சூர்யா நடிப்பில் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு ரெடியாகியுள்ளது. ஜல்லிக்கட்டு வேண்டும் என மாணவர் போராட்டம் காரணமாக ஏற்கனவே அறிவிக்கப்பட்ட பட ரிலீஸ் தள்ளிப்போனது. இப்போது பிப்ரவரி முதல்வாரத்தில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு அதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. முந்தைய சிங்கம், சிங்கம்2 படங்களை மிஞ்சும் வகையில் ஆக்ஷனிலும், அதிரடி காட்சிகளிலும் சி3 பிரமாண்டமாக இருக்கும் என்கிறது தயாரிப்பு தரப்பு. உலகம் முழுவதும் மிக அதிக திரையரங்குளில் ஒரே நாளில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருக்கிறார்கள். ஏற்கனவே, ஜல்லி...