சனிக்கிழமை, ஜூலை 4
Shadow

Author: Kodanki

காட்டுக்கோயில் ஷூட்டிங்கில் சாமி ஆடிய நடிகை..!

காட்டுக்கோயில் ஷூட்டிங்கில் சாமி ஆடிய நடிகை..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகைகள்
  தனுஷ் நடித்த துள்ளுவதோ இளமை காதல் கொண்டேன் யாரடி நீ மோகினி திருவிளையாடல் ஆரம்பம் 3ஆகிய படங்களைத் தயாரித்த ஆர்.கே.புரொடக்‌ஷன்ஸ் பட நிறுவனம் தற்போது தயாரிக்கும் படமான பாண்டிமுனி படத்தின் படப்பிடிப்பு கோத்தகிரி ஊட்டி பகுதிகளில் 25 நாட்கள் நடை பெற்றது. இந்தப்படத்தில் ஜாக்கி ஷெராப் அகோரி வேடத்தில் நடிக்கின்றார். கதா நாயகனாக ஆசிப் என்ற மாடல் அறிமுகமாகிறார். நாயகிகளாக மேகாலி ,ஜோதி, வைஷ்ணவி, யாஷிகா அறிமுகமாகிறார்கள்.முக்கிய வேடத்தில் ஷாயாஜி ஷிண்டே நடிக்கிறார். கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் கஸ்தூரி ராஜா. படம் பற்றியும் படப்பிடிப்பு பற்றியும் அவரிடம் கேட்டோம்.. பயங்கரமான ஹாரர் படம் இது. சுமார் 70 வருடங்களுக்கு முன்னால் காட்டுப் பகுதி அரண்மனையில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படை யாக வைத்து இந்த கதை உருவாக்கப் பட்டுள்ளது. படப்பிடிப்பு கோத்தகிரியில் நடைபெற்ற போது ஆச்சர்யமான ஒரு சம...
21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் கலைஞர் உடல் நல்லடக்கம்..!

21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் கலைஞர் உடல் நல்லடக்கம்..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
திமுக தலைவர் டாக்டர் கலைஞர் கருணாநிதி வயோதிகம் சார்ந்த உடல்நலக்குறைவால் நேற்று மாலை 6.10 மணிக்கு காலமானார். அவரது உடல் 8 மணியளவில் கோபாலபுரம் இல்லம் கொண்டு செல்லப்பட்டு குடும்ப உறுப்பினர்கள், பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பின்னர், இன்று அதிகாலை 1 மணிக்கு சிஐடி காலனி வீட்டுக்கு அவரது உடல் கொண்டு செல்லப்பட்டது. அங்கும் குடும்ப உறுப்பினர்கள், தொண்டர்கள் அஞ்சலி செலுத்தினர். பின்னர், அதிகாலை 4 மணிக்கு அரசினர் தோட்டத்தில் உள்ள ராஜாஜி அரங்கில் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அதிகாலை முதல் தற்போது வரை லட்சக்கணக்கான தொண்டர்கள் அவருக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். பிரதமர் மோடி, மத்திய மந்திரிகள், பல மாநில முதல்வர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், திரையுலகினர் அவருக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தி கருணாநிதியின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர். இந்நில...
உடல் மறைந்தாலும் கலைஞர் சாதனைகள் நிலைத்து நிற்கும் – பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர் புகழஞ்சலி

உடல் மறைந்தாலும் கலைஞர் சாதனைகள் நிலைத்து நிற்கும் – பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர் புகழஞ்சலி

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  கருணாநிதியின் உடல் மறைந்தாலும் அவரது சாதனைகள் நிலைத்து நிற்கும் - பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர் புகழஞ்சலி பாரத தேசத்தின் கடைகோடி மாநிலமான தமிழகத்தின் சமூகத்தில் ஒடுக்கப்பட்ட ஒரு எளிய குடும்பத்தில் பிறந்த திரு. கருணாநிதி தனது 14 வயது முதல் தனது சளைக்காத உழைப்பால் ஒரு போராளியாய், ஒரு இலக்கியவாதியாய், கவிஞனாய், எழுத்தாளனாய், பத்திரிக்கை ஆசிரியராய், திரைப்பட வசனகர்த்தாளராய், நாடக ஆசிரியராய், மாநிலத்தின் முதலமைச்சராய், எதிர்க்கட்சி தலைவராய், ஒரு அரசியல் கட்சியின் தனிப் பெரும் தலைவனாய் ஐம்பது ஆண்டுகால அடையாளமாய் நேரு முதல் மோடி வரை பதினைந்து பிரதமர்களையும், ராஜேந்திரபிரசாத் முதல் ராம்நாத்கோவிந்த்வரை பதினாலு குடியரசுத் தலைவர்களையும் கண்ட முதுபெரும் மற்றும் முப்பெறும் கலைஞர் கருணாநிதி காலமாகி விட்டார் என்ற செய்தி கேட்டு கலங்கி போனேன். கிட்டத்தட்ட மத்திய அரசால் சவலைப் பிள்ளை போல் ...
மெரீனாவில் கலைஞருக்கு இடம் ஒதுக்கியது நீதிமன்றம்..!

மெரீனாவில் கலைஞருக்கு இடம் ஒதுக்கியது நீதிமன்றம்..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதி மரணம் அடைந்ததை தொடர்ந்து அவரது உடல் அடக்கம் செய்ய மெரீனாவில் அண்ணா நினைவிடத்தில் இடம் ஒதுக்கி தரும்படி அரசுக்கு ஸ்டாலின் கடிதம எழுதினார். ஆனால் நீதிமன்றத்தில் பல  வழக்குகள் நிலுவையில் இருப்பதால் மெரீனாவில் உள்ள அண்ணா நினைவிடத்தில் இடம் அளிக்க தமிழக அரசு மறுத்து விட்டது. மேலும், காந்தி மண்டபம் அருகே 2 ஏக்கர நிலம் ஒதுக்க அரசு தயாராக இருப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். ஆனால் அதை ஏற்க மறுத்து திமுக தரப்பில் நீதிமன்றத்தில் அவசர வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. நள்ளிரவில் விசாரணை நடைபெற்றது. நீதிமன்றத்தில் உள்ள வழக்குகளை காரணம் காட்டி இடம் அளிக்க முடியாது என அதிமுக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வாதம் செய்தது. இந்த நிலையில் மெரீனாவில் நினைவிடம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள அனைத்தும் திரும்ப...
இப்போதாவது ‘அப்பா’ என அழைத்து கொள்ளட்டுமா ‘தலைவரே’ – ஸ்டாலின்

இப்போதாவது ‘அப்பா’ என அழைத்து கொள்ளட்டுமா ‘தலைவரே’ – ஸ்டாலின்

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  ஒரே ஒருமுறை இப்போதாவது ‘அப்பா’ என அழைத்து கொள்ளட்டுமா ‘தலைவரே’! எங்கு சென்றாலும் சொல்லிவிட்டுச் செல்லும் எனது ஆருயிர்த் தலைவரே, இம்முறை ஏன் சொல்லாமல் சென்றீர்கள்? என் உணர்வில்,உடலில், ரத்தத்தில், சிந்தனையில்,இதயத்தில் இரண்டறக் கலந்து விட்ட தலைவா! எங்களையெல்லாம் இங்கேயே ஏங்கவிட்டு எங்கே சென்றீர்கள்? "ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வு கொண்டிருக்கிறான்" என்று உங்கள் நினைவிடத்தில் எழுத வேண்டும் என்று 33 ஆண்டுகளுக்கு முன்பே எழுதினீர்கள். இந்தத் தமிழ்ச் சமூகத்துக்காக இடையறாது உழைத்தது போதும் என்ற மனநிறைவுடன் புறப்பட்டு விட்டீர்களா? 95 வயதில்,80 ஆண்டு பொதுவாழ்வுடன் சளைக்காமல் ஓடி, ’நாம் தாண்டிய உயரத்தை யார் தாண்டுவார்கள் பார்ப்போம்’ என்று போட்டி வைத்து விட்டு மறைந்து காத்திருக்கிறீர்களா? திருவாரூர் மண்ணில் உங்கள் 95வது பிறந்த நாளாம் சூன் 3 ஆம் நாள் பேசும் போது, ‘ உ...
கலைஞர் கருணாநிதி மறைந்தார்… 7 நாள் அரசுமுறை துக்கம் அறிவிப்பு

கலைஞர் கருணாநிதி மறைந்தார்… 7 நாள் அரசுமுறை துக்கம் அறிவிப்பு

CINI NEWS, HOME SLIDER
திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான கலைஞர் கருணாநிதி உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவ சிகிச்சையில் இருந்தார். இன்று மாலை 6.10 மணிக்கு சிகிச்சை பலனின்றி மறைந்தார் என காவேரி மருத்துவமனை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டது. கலைஞர் மறைவு காரணமாக தமிழக அரசு 7 நாள் அரசுமுறை துக்கம் அனுசரிக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.     கலைஞர் கருணாநிதி: 95 சுவாரஸ்ய தகவல்கள் நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருவாரூருக்கு அருகில் உள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் 1924 ம் வருடம் ஜூன் 3 ம் தேதி அன்று, முத்துவேலருக்கும் அஞ்சுகம் அம்மையாருக்கும் மகனாக பிறந்தார். இவரது இயற்பெயர் தட்சிணாமூர்த்தி ஆகும். கருணாநிதி தம் பெற்றோருக்கு மூன்றாவது குழந்தை. அவருக்கு முன்பாக பெரியநாயகம், சண்முகசுந்தரம் என இரு சகோதரிகள் உண்டு. சண்முகசுந்தரம் அம்மாளின் மகன்கள்தான் முரசொலி மாறனும் முரசொலி செல்வமும். ...
குணச்சித்திர வேடங்களில் நடிக்க ரெடி – லதாராவ்

குணச்சித்திர வேடங்களில் நடிக்க ரெடி – லதாராவ்

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
    நடிகை லதா ராவ் சின்னத்திரையில் நடிகையாக அறிமுகமாகி 4 மொழிகளில் நடித்தும், வெள்ளித்திரையில் கால் பதிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் சின்னத்திரையில் இருந்து ஒதுங்கி, வெள்ளித்திரையில் முயற்சிகளை தொடர்ந்தேன். முதலில் வடிவேலுக்கு ஜோடியாக தில்லாலங்கடி என்ற படத்தில் காமெடியான கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானேன். அதைத் தொடர்ந்து நடிகர் சசிகுமார் இயக்கத்தில் ஈசன், சமுத்திரக்கனி அவர்களின் இயக்கத்தில் நிமிர்ந்து நில், கே.எஸ். ரவிக்குமார் அவர்களின் இயக்கத்தில் முடிஞ்சா இவன புடி போல பல படங்களில் நடித்தேன். இப்பொழுது வெளியான கடிகார மனிதர்கள் என்ற படத்தில் கதையின் நாயகியாக அழுத்தமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். அடுத்து வெளிவர இருக்கும் பரத் நடிக்கும் 8,விவேக் & தேவயானி அவர்கள் நடிக்கும் எழுமின் படங்களில் நடித்திருக்கிறேன். தொடர்ந்து சினிமாவில் எந்த விதம...
டப்பிங் யூனியன் கலாட்டா…தொழில் முடக்கம்! வன்கொடுமை!! கமிஷன்!!!

டப்பிங் யூனியன் கலாட்டா…தொழில் முடக்கம்! வன்கொடுமை!! கமிஷன்!!!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள், வீடியோ
  டப்பிங் யூனியன் கலாட்டா...தொழில் முடக்கம்! வன்கொடுமை!! கமிஷன்!!! https://youtu.be/0F6PxeJHzvQ
மதுரையை அதிர வைத்த சீமராஜா இசை விழா..!

மதுரையை அதிர வைத்த சீமராஜா இசை விழா..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  மதுரை மாநகரை தெறிக்க விட்ட, "சீமராஜா" இசைத்திருவிழா! மதுரை வேலம்மாள் மருத்துவக் கல்லூரி மைதானத்தில் நடந்த, 'சீமராஜா' இசை வெளியீடு பாக்ஸ் ஆபிஸ் இளவரசன் சிவகார்த்திகேயனின் பிரபலத்தை பரவலாகக் காட்டியது. சிவகார்த்திகேயனின் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் பெரும் எண்ணிக்கையில் இந்த இசை விழாவில் குவிந்திருந்தனர். சிவகார்த்திகேயன் பெரிய அளவில் ரசிகர்களை ஈர்க்கும் நட்சத்திரமாக மாறியிருப்பதை அங்கு போடப்பட்ட கோஷங்களே பறை சாற்றின. விழா நடந்த இடம் வண்ண விளக்குகளால் மின்னியது. பெரிய அளவில் நட்சத்திரங்கள் கூடிய ஒரு விண்மீனைப் போலவே ஒரு நாள் முழுக்க மதுரை இருந்தது. நாட்டுப்புற நடனங்கள் மற்றும் பழமையான கிராமிய நாட்டுப்புற கலைகள் பார்வையாளர்களை வரவேற்றன, அந்த பகுதியே திருவிழாக்கோலம் பூண்டிருந்தது. "இசையமைப்பாளர் இமான், ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியம், பாடலாசிரியர் யுகபாரதி, ஹீரோ சிவ...