வெள்ளிக்கிழமை, ஜூலை 3
Shadow

Author: Kodanki

அடுத்தடுத்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த காலா

அடுத்தடுத்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த காலா

CINI NEWS, HOME SLIDER, MOVIES, Uncategorized, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘காலா’ படம் வருகிற ஜூன் 7-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. பா.ரஞ்சித் இயக்கியுள்ள இப்படத்தை தனுஷ் தனது வுண்டர்பார் நிறுவனம் மூலம் தயாரித்திருக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் பாடல் சூப்பர் ஹிட்டான நிலையில், தற்போது படத்தின் புரமோஷன் வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. சில தினங்களுக்கு முன்பு டுவிட்டரில் காலா எமோஜி வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து காலா படத்தின் புதிய டிரைலர் வெளியிடப்பட்டது. இந்த நிலையில், இன்று காலை மேக்கிங் வீடியோ வெளியிடப்பட்டது. பின்னர் இப்படத்தில் இடம் பெறும் ‘கண்ணம்மா...’ என்ற பாடலின் புரமோ வெளியானது. தற்போது காலா புரமோ ஆகியவை வெளியாகி ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தி இருக்கிறார்கள். இந்த புரமோவில், ‘நான் காலா... எமன், எமராஜ்’ என ரஜினி பேசும் வசனம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. ...
கேரளாவில் பெட்ரோல், டீசல் விலை ஒரு ரூபாய் குறைப்பு

கேரளாவில் பெட்ரோல், டீசல் விலை ஒரு ரூபாய் குறைப்பு

HOME SLIDER, NEWS, Uncategorized, செய்திகள்
இந்தியாவில் நாளுக்கு நாள் பெட்ரோல், டீசல் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து கொண்டே வருகிறது. கடந்த 16 நாட்களுக்கு பிறகு பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு தலா 1 காசு மட்டுமே நேற்று குறைக்கப்பட்டது. இதற்கிடையே, பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறைக்க மத்திய அரசு முயற்சித்து வருகிறது என மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தெரிவித்திருந்தார். இந்நிலையில், தொடர்ந்து அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலையில் இருந்து லிட்டருக்கு ஒரு ரூபாய் குறைத்து கேரள அரசு இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இன்று சட்டசபை கூட்டம் நடைபெற்றது. அதில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து ஆலோசனை நடந்தது. இதில், மாநில அரசு தனது விற்பனை வரியை குறைத்து கொள்வதென முடிவானது. இதுதொடர்பாக கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் கூறுகையில், மாநிலத்தின் விற்பனை வரியை குறைப்பதன் மூலம் பெட்ர...
சென்னை உயர் நீதிமன்றத்திற்கு புதிதாக 7 நீதிபதிகள் நியமனம்

சென்னை உயர் நீதிமன்றத்திற்கு புதிதாக 7 நீதிபதிகள் நியமனம்

HOME SLIDER, NEWS, Uncategorized, செய்திகள்
சென்னை உயர் நீதிமன்றத்தில் தற்போது 56 நீதிபதிகள் பணியில் இருந்து வருகின்றனர். நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்துக்கு புதிதாக ஏழு நீதிபதிகளை நியமனம் செய்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னை உயர் நீதிமன்றத்துக்கு குமாரி பி.டி.ஆஷா, நிர்மல்குமார், சுப்ரமணியம் பிரசாத், ஆனந்த் வெங்கடேஷ், இளந்திரையன், கிருஷ்ணன் ராமசாமி, சரவணன் ஆகியோர் புதிய நீதிபதிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான ஒப்புதலில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று கையெழுத்திட்டுள்ளார் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இன்று புதிதாக நியமனம் செய்யப்பட்ட 7 நீதிபதிகளை தொடர்ந்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கை 63 ஆக உயர்ந்துள்ளது....
காவிரி மேலாண்மை ஆணையம் அறிவிப்பு அரசிதழில் வெளியிடப்பட்டது

காவிரி மேலாண்மை ஆணையம் அறிவிப்பு அரசிதழில் வெளியிடப்பட்டது

HOME SLIDER, NEWS, Uncategorized, செய்திகள்
காவிரி நதிநீர் பங்கீட்டு பிரச்சனையில் மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு இருந்தது. அதன்படி, மத்திய அரசு செயல் திட்டத்தை தாக்கல் செய்தது. இதற்கு, மேலாண்மை வாரியம் என பெயர் வைக்க வேண்டும் என தமிழக அரசு கோரிக்கை விடுத்தது. ஆனால், தமிழகத்தின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து, மத்திய அரசு தாக்கல் செய்த வரைவு திட்டத்தை சுப்ரீம் கோர்ட் ஏற்றுக்கொண்டது. இதனை உடனே அரசிதழில் வெளியிட வேண்டும், பருவமழை தொடங்குவதற்குள் மேலாண்மை ஆணையத்தை அமைக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டது. ஆனாலும், காவிரி மேலாண்மை ஆணையம் அமைப்பது தொடர்பாக மத்திய அரசு அரசிதழில் வெளியிடவில்லை. இந்நிலையில், சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி மத்திய அரசு அமைத்த காவிரி மேலாண்மை ஆணையம் குறித்த அறிவிப்பு இன்று மாலை மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டது. மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் சார்பில் இதுதொடர்பாக மத...
காதலர்களின் மனபோராட்டமும் ஒரு ‘கார்கில்’ போர்..!

காதலர்களின் மனபோராட்டமும் ஒரு ‘கார்கில்’ போர்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
காதலர்களின் மனபோராட்டமும் ஒரு ‘கார்கில்’ போர் தான்..!    தமிழ் சினிமாவில் அவ்வப்போது புது முயற்சிகளாக சில வித்தியாசமான படங்கள் வருவதுண்டு,, அப்படி புதிய முயற்சிகளின் மூலம் தான், புதிய படைப்பாளிகள், ரசிகர்களை தியேட்டர்களுக்கு வரவழைக்க முடியும். அப்படி ஒரு படம் தான், சிவானி செந்தில் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கார்கில்’. ஜிஷ்ணு என்பவர் கதாநாயகனாக நடித்துள்ள இந்தப்படத்தில் என்ன புது முயற்சி என்றால், இந்தப்படத்தில் அவர் ஒரே ஒருத்தர் மட்டும் தான் நடித்துள்ளார்.  கார்கில் என்றதுமே இரு நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட போர் தான் மக்களுக்கு ஞாபகத்தில் வரும். ஆம்.. இதுவும் ஒரு போர் தான்..சென்னையிலிருந்து காரில் பெங்களுர் செல்லும் நாயகனுக்கும் அவன் காதலிக்கும் ஏற்படும் மன போராட்டமே இந்தப்படம். ஒரே ஒருத்தர்தான் நடித்துள்ளார், அப்படியானால் காதலி யார் என கேட்கிறீகளா..? அதுதான் படத்தின் ட்விஸ்ட்டே.  காதலில்...
துப்பாக்கிச்சூட்டில் பலியான எஞ்சிய 6 பேரின் உடல்களை பிரேத பரிசோதனை செய்ய ஐகோர்ட் தடை

துப்பாக்கிச்சூட்டில் பலியான எஞ்சிய 6 பேரின் உடல்களை பிரேத பரிசோதனை செய்ய ஐகோர்ட் தடை

HOME SLIDER, NEWS, Photos, politics, Uncategorized, செய்திகள்
தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் பலியான 13 பேரின் உடல்களை பிரேத பரிசோதனை செய்தாலும் பதப்படுத்தி வைக்க சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டிருந்தது. ஏற்கனவே, 7 பேரின் உடல்கள் பரிசோதனை செய்யப்பட்டிருந்தது. இதனை, அடுத்து மீதமுள்ள 6 பேரின் உடல்களை பிரேத பரிசோதனை செய்ய அரசு அனுமதி கோரியிருந்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், தங்களது தரப்பு மருத்துவர் இல்லாமல் பிரேத பரிசோதனை செய்ய கூடாது என வழக்கறிஞர் சங்கரச்சுப்பு வாதிட்டார். இதனை அடுத்து, மீதமுள்ள 6 பேரின் உடல்களை பிரேத பரிசோதனை செய்ய நீதிபதிகள் தடை விதித்தனர். பிரேத பரிசோதனை செய்யப்பட்ட 7 பேரின் உடல்களை மறு பிரேத பரிசோதனை செய்து உறவினர்களிடம் ஒப்படைக்கலாம் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்....
எதற்கெடுத்தாலும் போராட்டம் என்றால் தமிழ்நாடு சுடுகாடுதான் – ஆவேசத்துடன் கூறிய ரஜினிகாந்த்

எதற்கெடுத்தாலும் போராட்டம் என்றால் தமிழ்நாடு சுடுகாடுதான் – ஆவேசத்துடன் கூறிய ரஜினிகாந்த்

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, Uncategorized, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை சென்று பார்வையிட்டு ரஜினிகாந்த் சென்னை திரும்பினார். அப்போது, தூத்துக்குடி போராட்டத்தில் சமூக விரோதிகள் புகுந்துவிட்டதாக அவர் முன்னர் கூறிய கருத்து குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் கூறியதாவது:- ஜல்லிக்கட்டு போராட்டத்தின் இறுதி நாளில் சமூக விரோதிகள் உள்ளே புகுந்தது போல, தூத்துக்குடி போராட்டத்திலும் சமூக விரோதிகள் புகுந்து விட்டனர். போலீசார், ஆட்சியர் அலுவலகம், குடியிருப்புகளை தாக்கியது உட்பட அனைத்துக்கும் காரணம், சமூக விரோதிகளே. போலீசாரை அவர்கள் முதலில் தாக்கினர். அதன் பிறகே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. காவல்துறை மீது தாக்குதல் நடத்தினால் ஒரு போதும் ஏற்றுகொள்ள மாட்டேன். எதற்கெடுத்தாலும் போராட்டம் என்றால் தமிழகம் சுடுகாடாக மாறிவிடும். என ரஜினிகாந்த் மிகுந்த ஆவேசத்துடன் கூறினார்....
முக்தா சீனிவாசன் மறைவு தமிழ் சினிமாவுக்கு பெரும் இழப்பு TMJA இரங்கல்

முக்தா சீனிவாசன் மறைவு தமிழ் சினிமாவுக்கு பெரும் இழப்பு TMJA இரங்கல்

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள்
இரங்கல் செய்தி தஞ்சை மாவட்டம் பாபநாசத்தை அடுத்த மாளாபுரம் கிராமத்தில் இருந்து திரைத்துறைக்கு உதவி இயக்குநராக வந்து கலைத்துறையில் தனது கடின உழைப்பால் உயர்ந்து திரைப்பட இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும், வசனகர்த்தாவாகவும், எழுத்தாளராகவும் புகழ் பெற்றவர் முக்தா சீனிவாசன். பழம் பெரும் இயக்குநர்கள் கே.ராம்னாத், வீணை எஸ்.பாலசந்தர் ஆகியோரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். 1957-ல் இவர் இயக்கிய முதல் திரைப்படம் ‘முதலாளி’. இந்த முதல் திரைப்படமே இவருக்கு ஜனாதிபதி விருதை பெற்றுத் தந்தது. முக்தா பிலிம்ஸ் மூலம் 41 திரைப்படங்களைத் தயாரித்து உள்ளார். 61 திரைப்படங்களை இயக்கியிருக்கிறார். இவர் தயாரித்து, இயக்கிய ‘தாமரைக்குளம்’ திரைப்படத்தில்தான் ‘நகைச்சுவைத் திலகம்’ நாகேஷ் தமிழ்த் திரையுலகத்திற்கு அறிமுகமானார். நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பில் அந்தமான் காதலி என்றால்...
பார்த்திபன் படத்தில் காமெடியனாகும் ஓட்டல்கார

பார்த்திபன் படத்தில் காமெடியனாகும் ஓட்டல்கார

CINI NEWS, HOME SLIDER, MOVIES, Uncategorized, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
தனது குருநாதர் பாக்யராஜ் மகன் சாந்தனுவை வைத்து `கோடிட்ட இடங்களை நிரப்புக' என்னும் படத்தை இயக்கினார் பார்த்திபன். அடுத்ததாக உள்ளே வெளியே 2 படத்தை இயக்கவிருக்கிறார். முழுநீள காமெடி படமாக உருவாகும் அந்த படத்தில் ஒரு ஓட்டல்காரரை காமெடியனாக்கி இருக்கிறார். சினிமாவில் இருக்கும் நடிகர்கள் முதல் உதவி இயக்குனர்கள் வரை சாப்பிடும் ஓட்டல் ஒன்றை நடத்திவருபவர் கவிஞர் ஜெயம்கொண்டான். உதவி இயக்குனர்களுக்கு சலுகை விலை என்பதால் ஓட்டலில் கூட்டம் நிறையும். சில படங்களுக்கு பாடல்களும் எழுதி இருக்கிறார். இவரது ஓட்டலுக்கு சில நாட்களுக்கு முன்பு வந்த பார்த்திபன் ஜெயம்கொண்டானை தனது அடுத்த படத்தில் முழுநீள காமெடியனாக்குவதாகவும், அதற்காக தாடி வளர்க்க வேண்டும் என்றும் கூறி சென்றிருக்கிறார். இந்த இன்ப அதிர்ச்சியை எதிர்பார்க்காத ஜெயம்கொண்டான் பார்த்திபனுக்காக தாடி வளர்த்து வருகிறார்....
விஸ்வாசம் முதற்கட்ட படப்பிடிப்பு  – இளமை தோற்றத்திற்கு மாறும் அஜித்

விஸ்வாசம் முதற்கட்ட படப்பிடிப்பு – இளமை தோற்றத்திற்கு மாறும் அஜித்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, Uncategorized, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
அஜித் - இயக்குனர் சிவா 4-வது முறையாக இணைந்துள்ள படம் ‘விஸ்வாசம்‘. இந்த படம் பற்றிய அறிவிப்பு வெளியானதும் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என்று கூறப்பட்டது. திட்டமிட்ட தேதியில் படப்பிடிப்பை தொடங்க முடியாமல் போனது. சமீபத்தில் ஐதராபத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் படப்பிடிப்பு துவங்கி நடைபெற்று வந்த நிலையில், முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அடுத்து 2-ம் கட்டமாக மும்பையிலும், அடுத்து சென்னையிலும் படப்பிடிப்பை வேகமாக நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. இரண்டாவது கட்ட படப்பிடிப்பில் அஜித் இளமை தோற்றத்தில் கருப்பு முடியுடன் வருவார் என்றும் கூறப்படுகிறது. மின்னல் வேகத்தில் படப்பிடிப்பை முடித்து தீபாவளிக்கு விஸ்வாசத்தை ரிலீஸ் செய்தே ஆக வேண்டும் என்பதில் சிவா உறுதியாக இருக்கிறாராம். அதன்படி அடுத்தக்கட்ட படப்பிடிப்புக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன என...