புதன்கிழமை, ஜூலை 1
Shadow

Author: Kodanki

ஏப்ரல் 5-ம் தேதி தமிழகத்தில் முழு அடைப்பு: மு.க. ஸ்டாலின் அறிவிப்பு

ஏப்ரல் 5-ம் தேதி தமிழகத்தில் முழு அடைப்பு: மு.க. ஸ்டாலின் அறிவிப்பு

HOME SLIDER, NEWS, செய்திகள்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி ஏப்ரல் 5ம் தேதி தமிழகத்தில் அனைத்துக் கட்சிசார்பில்  முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என திமுக செயல் தலைவர் மு.க .ஸ்டாலின் தெரிவித்துள்ளார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு காலம் தாழ்த்தி வரும் நிலையில், பல்வேறு கட்சியினர், பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், சட்டமன்ற எதிர்க்கட்சியான திமுக சார்பில், அதன் செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் சென்னை அறிவாலயத்தில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது.. இந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில், காவிரி விவகாரம், நியூட்ரினோ ஆய்வு மற்றும் மீத்தேன் உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதில், காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க., கம்யூனிஸ்டு மற்றும் தி.க. மனித நேய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்றன. தே.மு.தி.க.விற்கு தி.மு.க. சார்பில் கூ...
ஈஸ்ட்ர் திருநாள் ; தலைவர்கள் வாழ்த்து!

ஈஸ்ட்ர் திருநாள் ; தலைவர்கள் வாழ்த்து!

HOME SLIDER, NEWS, செய்திகள்
உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்துவ மக்கள் ஈஸ்டர் திருநாளை இன்று கொண்டாடிவருகின்றனர். இந்நிலையில், குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், துணை குடியரசு தலைவர் வெங்கைய்யா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். ஈஸ்டர் கிறித்தவர்களின் முக்கியமான பண்டிகையாகும். இயேசு சிலுவையில் அறையப்பட்டு, அடக்கம் செய்யபட்டார். சிலுவையில் அறைந்த நாள் புனித வெள்ளியாக என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. அடக்கம் செயததில் இருந்து 3 ஆம் நாள் இயேசு உயிர்த்தெழுந்தார். அவர் உயிர்த்தெழுந்த நாளே ஈஸ்டர் திருநாளாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளில் இந்திய குடியரசு தலைவர், துணை குடியாரசு தலைவர், பிரதமர் ஆகியோர் மக்களுக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். குடியரசு தலைவர் வாழ்த்து குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் டுவிட்டரில், ”ஈஸ்டர் திருநாளான இன்று, குடிமக்...
திரைத்துறையின் வேலை நிறுத்தம் தொடரும்: நடிகர் விஷால்

திரைத்துறையின் வேலை நிறுத்தம் தொடரும்: நடிகர் விஷால்

CINI NEWS, சினி நிகழ்வுகள்
தயாரிப்பாளர்கள் சங்கத்தின் வேலை நிறுத்தம் தொடரும் என தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் நடிகர் விஷால் அறிவித்துள்ளார். திரையரங்குளில் டிஜிட்டல் ஒளிபரப்புக்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதற்கு எதிராக கடந்த மார்ச் 1-ம் தேதியில் இருந்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் வேலை நிறுத்தத்தில் ஈடுப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் புதிய படங்கள் ஏதும் வெளியாகமால் இருந்து வருகிறது.வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர தயாரிப்பாளர்கள் சங்கம் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது. இது தொடர்பாக நேற்று தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள், திரையரங்க உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் சங்க நிர்வாகிகள் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து நேற்று செய்தியாளர்களிடம் பேசிய விஷால்  பேச்சு வார்த்தை சரியான முறையில் நடக்கிறது. இன்னு 2-3 நாட்களில் வேலை நிறுத்தம் முடிவுக்கு வரும் அறிவித்து இருந்தார்...
புனித வெள்ளி: தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு!

புனித வெள்ளி: தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
புனித வெள்ளியை முன்னிட்டு உலகம் முழுவதும் உள்ள தேவாலயங்களில் கிறிஸ்தவர்கள் சிறப்பு வழிபாடு நடத்திவருகின்றனர். இயேசு கிறிஸ்த்து சிலுவையில் அறையப்பட்டு அனுபவித்த துன்பங்களையும் அவருடைய மரணத்தையும் நினைவுகூர்ந்து ஒவ்வொரு ஆண்டும் புனித வெள்ளி அனுசரிக்கப்படுகிறது. கிறிஸ்த்தவ வழிபாட்டு ஆண்டில் முக்கியமான இந்த நாள் இயேசு கிறிஸ்த்து உயிர்பெற்றெழுந்த ஞாயிறு கொண்டாட்டத்திற்கு முந்திய வெள்ளிக்கிழமை நிகழும். பிப்ரவரி 14ஆம் தேதி சாம்பல் தினம் கடைப்பிடிக்கப்பட்டது. அன்று முதல் 40 நாட்கள் கிறிஸ்தவர்கள் நோன்பு அனுசரித்துவருகிறார்கள். கிறிஸ்தவ தேவாலயங்களில் நீண்ட நேரம் திருப்பலி, ஆராதனைகள் நடைபெறும். கிறிஸ்தவர்கள் இன்று முழு நோன்பு இருந்து சிறப்புப் பிரார்த்தனையில் ஈடுபடுகின்றனர். சென்னை சாந்தோம், பெரம்பூர், பெசன்ட்நகர், எழும்பூர் கதிட்ரல் சாலை, ராயப்பேட்டை வெஸ்லி உள்ளிட்ட ஆலயங்களில் சிறப்பு வழி...
காவிரி மேலாண்மை விவகாரம்: அதிமுக உண்ணாவிரத அறிவிப்பு!

காவிரி மேலாண்மை விவகாரம்: அதிமுக உண்ணாவிரத அறிவிப்பு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி வரும் ஏப்ரல் 2ஆம் தேதி அனைத்து மாவட்டங்களிலும் அதிமுக சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான காலக்கெடு நேற்றுடன் முடிந்தது. காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு நிச்சயம் அமைக்கும் என்று முதலமைச்சரும், அமைச்சர்களும் நம்பிக்கைத் தெரிவித்து வந்தனர். ஆனால் காவிரி மேலாண்மை வாரியம் குறித்து எவ்வித அறிவிப்பையோ அல்லது பணிகளையோ மத்திய அரசு மேற்கொள்ளவில்லை. இதனால் சட்ட நடவடிக்கை எடுக்கத் தமிழக அரசு முடிவு செய்துள்ளது. மேலும் இதற்காக 3 அதிமுக எம்.பி.க்கள் வரை ராஜினாமா செய்யத் தயார் என்று முதல்வரிடம் தெரிவித்துள்ளனர். மதுரையில் இன்று நடைபெற்ற திருமண விழாவில் காவிரி விவகாரம் குறித்துப் பேசிய அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், "காவிரி மேலாண்மை...
ஸ்டெர்லைட் ஆலை மூடப்படுகிறது! –

ஸ்டெர்லைட் ஆலை மூடப்படுகிறது! –

NEWS, செய்திகள்
பராமரிப்புப் பணி காரணமாக 15 நாட்கள் ஆலை மூடப்படுவதாக ஸ்டெர்லைட் நிர்வாகம் இன்று (மார்ச் 29) அறிவித்துள்ளது. தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் அமைந்துள்ள ஆலையால் சுற்றுச்சூழல் மாசுபடுவதாகவும் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறி அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், ஸ்டெர்லைட் நிறுவனம் தனது இரண்டாவது ஆலையை நிறுவ நடவடிக்கை எடுத்துவருகிறது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தியும் பொதுமக்கள், மாணவர்கள் என அனைவரும் ஒன்றிணைந்து போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். கடந்த ஒரு வாரமாகப் போராட்டம் தீவிரமடைந்துவருகிறது. குமரெட்டியாபுரம் கிராமத்தில் பொதுமக்களின் தொடர் போராட்டம் இன்று 46ஆவது நாளாக நீடிக்கிறது. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகக் கண்டன கோ‌ஷங்கள் எழுப்பியும், கோரிக்கைகள் அடங்கிய பதாகைகள் ஏந்தியும் தங்கள் எதிர்ப்பைக் காட்டிவருக...
நரகாசூரன் படத்தில் லாபம் கேட்டேனா? – கெளதம் மேனன் விளக்கம்

நரகாசூரன் படத்தில் லாபம் கேட்டேனா? – கெளதம் மேனன் விளக்கம்

CINI NEWS, சினி நிகழ்வுகள்
துருவங்கள் 16 திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான கார்த்திக் நரேன், தற்போது நரகாசூரன் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இத்திரைப்படத்தில், அரவிந்த் சாமி, ஸ்ரேயா சரண் ஆகியோர் நடிக்கின்றனர். இத்திரைப்படத்தின் தயாரிப்பாளர்களுள் இயக்குநர் கௌதம் மேனனும் ஒருவர். இந்நிலையில், நரகாசூரன் திரைப்படத்தின் தயாரிப்பு விவகாரம் தொடர்பாக கார்த்திக் நரேனுக்கும், கௌதம் மேனனுக்கும் மோதல் உருவாகியுள்ளது. கார்த்திக் நரேன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கடந்த செவ்வாய் கிழமை பதிவிட்ட பதிவொன்றில், “சில நேரங்களில் தவறான நம்பிக்கை உங்களைக் கொன்றுவிடும். ஒருவர் மீது நம்பிக்கை வைப்பதற்கு முன், ஒன்றுக்கு இரண்டு முறை சிந்தியுங்கள். அப்படி தவறான நம்பிக்கை வைத்தால், உங்கள் கனவு எல்லாத் திசைகளில் இருந்தும் சிதைந்து போவதை நீங்கள் கண்ணால் காண நேரிடும்” என பதிவிட்டார். இது கௌதம் மேனனை குறிப்பிட்டு சொன்னதுபோல் இருந்த...
அதர்வாவின் புதிய பரிமாணத்தை வெளிக் கொண்டு வரும் பூமராங்!

அதர்வாவின் புதிய பரிமாணத்தை வெளிக் கொண்டு வரும் பூமராங்!

CINI NEWS, திரைப்படங்கள்
உச்சத்தை தொடும் விஷயங்கள் மிக எளிதில் அடையக்கூடியவை அல்ல, அதற்கு கடின உழைப்பும், பரீட்சார்த்த முயற்சிகளில் இறங்கும் பேரார்வமும், தைரியமும் வேண்டும். குறிப்பாக நடிகர்களுக்கு தங்களது சாதகமான எல்லையை விட்டு புதிய விஷயங்களில் இறங்க நிறைய தைரியம் வேண்டும். அதர்வா முரளி போன்ற நிறைய பொறுப்புகளை கொண்டிருக்கும் நடிகர்கள் நல்ல திறமையான இயக்குனர்களுடன் வேலை செய்யும் போது அந்த சூழல் இன்னும் மாறி விடுகிறது. இயக்குனர் கண்ணனனுடன் அதர்வா இணையும் பூமராங் படம் அப்படி ஒரு விஷயம் தான்.    இந்த படத்தில் மூன்று வெவ்வேறு விதமான தோற்றங்களில் நடிக்கிறார் அதர்வா. அதற்காக பல மணி நேரம் கஷ்டப்பட்டு ப்ரோஸ்தடிக் மேக்கப் செய்து கொள்கிறார். அதை பற்றி இயக்குனர் கண்ணன் கொஞ்சம் விளக்கமாக கூறும்போது, "இந்த கதையும், அதர்வாவின் கதாபாத்திரமும் உருவான போது அதற்கு மூன்று வெவ்வேறு தோற்றங்கள் தேவைப்பட்டது. எனவே விருது பெற்ற மேக்...
கூட்டுறவு சங்கத் தேர்தல் விவகாரம்: காங்கிரஸ், திமுக எம்.எல்.ஏக்கள் மீது வழக்குப்பதிவு!

கூட்டுறவு சங்கத் தேர்தல் விவகாரம்: காங்கிரஸ், திமுக எம்.எல்.ஏக்கள் மீது வழக்குப்பதிவு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
 கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகத்தில், பெண் அதிகாரியைத் மிரட்டியதாக திமுக எம்.எல்.ஏ-க்கள் சுரேஷ்ராஜன், மனோதங்கராஜ், காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் பிரின்ஸ், ராஜேஷ்குமார் உட்பட 10 பேர் மீது பெண்கள் வன்கொடுமைச்  சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் 114 கூட்டுறவுச் சங்கங்களுக்கான வேட்பு மனுக்கள் கடந்த 26-ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. வேட்புமனு பரிசீலனை செய்து அனைத்துக் கூட்டுறவுச் சங்கங்களிலும் இறுதி வேட்பாளர் பட்டியல் நேற்று மாலை 5 மணிக்கு ஒட்டியிருக்க வேண்டும் எனவும்  ஆனால், ஆளுங்கட்சி தூண்டுதலின் பேரில் பல கூட்டுறவுச் சங்கங்களில் வேட்பாளர் பட்டியல் ஒட்டப்படவில்லை எனவும் கூறி திமுக மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூறி வந்தனர். அதனையடுத்து வேட்பாளர் பட்டியல் ஒட்டாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். முதற்கட்ட தேர்தலில் முறைகேடு ந...