புதன்கிழமை, ஜூலை 1
Shadow

Author: Kodanki

அவனியாபுர ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகள்..!

அவனியாபுர ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகள்..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
அவனியாபுரத்தில் சீறிப் பாய்ந்த ஜல்லிக்கட்டு காளைகள்..! ஜல்லிக்கட்டு புரட்சியின் மூலம் தமிழர் பண்பாட்டு அடையாளம் மீட்கப்பட்டது. இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் தடையின்றி நடைபெறுகின்றன. பொங்கல் விழாவையொட்டி மதுரை அவனியாபுரத்தில் இன்று ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி வெகுவிமரிசையாக நடைபெற்றது. வாடிவாசலில் இருந்து சீறிப் பாய்ந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் ஆவேசத்துடன் அடக்கினர். மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் இன்று ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை அமைச்சர்கள் உதயகுமார், செல்லூர் ராஜூ தொடங்கி வைத்தனர். மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராக ராவ் தலைமையில் மாடுபிடி வீரர்கள் காளைகளைப் பாதுகாக்கும் உறுதிமொழி எடுத்தனர். இதனைத் தொடர்ந்து ஊர் மரியாதைக்குரிய காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. இதன் பின்னர் வாடிவாசலில் இருந்து காளைகள் தொடர்ந்து சீறி பாய்ந்தன. மாடுபிடி வீரர்களும் இந்த காளைகளை ஆவேசத்துடன் அ...
பொங்கல் நாளில் விருந்தாக ரிலீஸ் ஆன  அருண் விஜய்யின்  ‘தடம்’ பட டீஸர்..!

பொங்கல் நாளில் விருந்தாக ரிலீஸ் ஆன அருண் விஜய்யின் ‘தடம்’ பட டீஸர்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, Trailer, சினி நிகழ்வுகள், செய்திகள், டிரைலர்கள், திரைப்படங்கள், நடிகர்கள்
அருண் விஜய் நடித்துவரும் ‘தடம்’ பட டீஸர்..! ‘தடையறத் தாக்க’ படத்துக்குப் பிறகு மகிழ் திருமேனி இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் இரண்டாவது படம் ‘தடம்’. ஆக்‌ஷன் எண்டெர்டெயினராக உருவாகிவரும் இந்தப் படத்தில், முதன்முறையாக இரண்டு வேடங்களில் நடிக்கிறார் அருண் விஜய். இந்தர் குமார் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். https://youtu.be/I4gIzCPYupk தன்யா ஹோப், வித்யா பிரதீப், ஸ்ம்ருதி வெங்கட் ஆகிய மூன்று பேரும் ஹீரோயின்களாக நடித்துள்ளனர். பெப்சி விஜயன், மீரா கிருஷ்ணன் இருவரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கோபிநாத் ஒளிப்பதிவு செய்ய, அருண் ராஜா இசையமைக்கிறார். இந்தப் படத்தின் டீஸர் தற்போது வெளியாகியுள்ளது  ...
நரகாசுரனை காக்க வைக்கும் அரவிந்த்சாமி..!

நரகாசுரனை காக்க வைக்கும் அரவிந்த்சாமி..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
‘துருவங்கள் 16’ என்ற தன்னுடைய முதல் படத்திலேயே அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தவர் கார்த்திக் நரேன். இவர் இரண்டாவதாக இயக்கியுள்ள படம் ‘நரகாசூரன்’. இந்தப் படத்தில் அரவிந்த் சாமி, ஸ்ரேயா சரண், சந்தீப் கிஷண், ஆத்மிகா, இந்திரஜித் ஆகியோர் நடித்துள்ளனர். ரான் யேதான் யோகன் இசையமைக்க, சுஜித் சாரங் ஒளிப்பதிவு செய்துள்ளார். ‘துருவங்கள் 16’ ஷூட்டிங் நடைபெற்ற ஊட்டியில்தான் இந்தப் படத்தின் ஷூட்டிங்கும் நடைபெற்றுள்ளது. மொத்தம் 41 நாட்கள் படப்பிடிப்பைத் திட்டமிட்டு, அதன்படியே 41 நாட்களில் ஷூட்டிங்கை முடித்துவிட்டார் கார்த்திக் நரேன். இயக்குநர் கெளதம் மேனனுன், கார்த்திக் நரேனுடன் சேர்ந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார். இந்தப் படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் அனைத்தும் முடிந்துவிட்ட நிலையில், அரவிந்த் சாமி டப்பிங் பேச வேண்டியது மட்டுமே பாக்கி. அதுவும் முடிந்துவிட்டால் சென்சாருக்கு அப்ளை செய்து...
அமீத்ஷா மீதான போலி எண்கவுண்டர் வழக்கின் நீதிபதி மர்ம மரணம் வழக்கு நாளை மீண்டும் விசாரணை..!

அமீத்ஷா மீதான போலி எண்கவுண்டர் வழக்கின் நீதிபதி மர்ம மரணம் வழக்கு நாளை மீண்டும் விசாரணை..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
அமீத்ஷா மீதான போலி எண்கவுண்டர் வழக்கின் நீதிபதி மர்ம மரணம் வழக்கு நாளை மீண்டும் விசாரணை..! குஜராத் மாநிலத்தில், 2005–ம் ஆண்டு, சொராபுதின் ஷேக் உள்பட 3 பேர் போலி என்கவுண்ட்டர் மூலம் சுட்டுக்கொல்லப்பட்டதாக, தற்போதைய பா.ஜனதா தலைவர் அமித் ஷா மற்றும் போலீஸ் அதிகாரிகள் மீது வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கு விசாரணை, மும்பை சி.பி.ஐ. கோர்ட்டில் நடந்தது. வழக்கை விசாரித்து வந்த நீதிபதி பி.எச்.லோயா, கடந்த 2014–ம் ஆண்டு டிசம்பர் 1–ந் தேதி, மராட்டிய மாநிலம் நாக்பூரில் ஒரு திருமணத்துக்கு சென்றிருந்தபோது, மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவரது மரணத்துக்கும், சொராபுதின் வழக்குக்கும் தொடர்பு இருக்கலாம் என்று அவருடைய சகோதரி, 2 மாதங்களுக்கு முன்பு சந்தேகம் எழுப்பி இருந்தார். இந்நிலையில், நீதிபதி லோயா மரணம் குறித்து சுதந்திரமான விசாரணைக்கு உத்தரவிடக்கோரி, காங்கிரஸ் பிரமுகர் தெசீன் பூனவாலா, பத்திரிகையாளர் பி.ஆர்...
தை பிறந்தால் வழி பிறக்கும்… ஆட்சி கலையும்- டிடிவி தினகரன்

தை பிறந்தால் வழி பிறக்கும்… ஆட்சி கலையும்- டிடிவி தினகரன்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  தை பிறந்தால் வழி பிறக்கும் ஆட்சி கலையும் என்று திருக்குறுங்குடி ஆலயத்தில் வைத்து சொல்வது கடவுள் பெருமாள் சொல்வது போன்றது என்று கடந்த அக்டோபர் மாதம் சொன்ன தினகரன் அதை நினைவூட்டும் வகையில் அடுத்த கட்ட செயல்களை செய்து வருகிறார். பொங்கல் வாழ்த்து கூறும் போதே கிலி ஏற்படுத்துகின்றனர் அரசியல் கட்சியினர். தை பிறந்தால் தமிழகத்தை பிடித்துள்ள சனி ஒழியும் என்கிறார் திமுக செயல் தலைவர் ஸ்டாலின். அதே போல வாழ்த்து கூறியுள்ள டிடிவி தினகரனோ, பதரைப் போல ஒரு களையை போல இன்றைய ஆட்சி அதிகாரத்தில் முளைத்துள்ளவர்களை நீக்கிட இந்த நாளில் உறுதி ஏற்போம் என்று கூறியுள்ளார். ஆர்.கே. நகர் இடைத்தேர்தலிலும் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். சட்டசபையில் எம்எல்ஏவாக தனது செயல்பாடுகளை காட்டிய தினகரன், நேற்று சசிகலாவை சந்தித்து அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று ஆலோசித்து வந்திருக்கிறார். கட்சி மற்...