ஞாயிற்றுக்கிழமை, ஜூன் 28
Shadow

Author: Kodanki

இசையமைப்பாளர் சாம் சிஎஸ் தமிழ் சினிமாவின் சிறந்த கண்டுபிடிப்பு: விஜய்

இசையமைப்பாளர் சாம் சிஎஸ் தமிழ் சினிமாவின் சிறந்த கண்டுபிடிப்பு: விஜய்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
இயக்குனர் விஜய் இயக்கிய முதல் படத்திலிருந்து அருமையான பாடல்கள் மற்றும் மறக்கமுடியாத பின்னணி இசைகளை தந்துள்ளதால் அவரது அடுத்த படமான லைகாவின் ‘கரு’ படத்திற்கு எதிர்பார்ப்பு கூடியது. இவர் தற்போது இயக்கியுள்ள ‘கரு’ படத்தில் நாக சௌர்யா, சாய் பல்லவி ஜோடியாக நடித்துள்ளார்கள். இப்படத்திற்கு இசையமைப்பாளர் சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார். இயக்குனர் விஜய் - சாம் கூட்டணியில் உருவாகியுள்ள முதல் படம் இது. சமீபத்தில் வெளியான இந்த படத்தின் பாடல்கள், ரசிகர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்று வருகிறது. இது குறித்து இயக்குனர் விஜய் கூறும்போது, ‘சமீபகாலத்தில் தமிழ் சினிமாவின் சிறந்த கண்டுபிடிப்பு இசையமைப்பாளர் சாம் சிஎஸ். கதையையும், பாடல்களின் சூழ்நிலையையும் சரியாக புரிந்துகொண்டு அசத்துபவர் அவர். இந்த படத்தின் அவரது பாடல்கள் எனது எல்லா படங்களின் மிக சிறந்த பாடல்களில் பட்டியலில் நிச்சயம் இடம் பெறும். படத்...
நேபாளத்தில்  சினிமா பயணத்தை நாளை துவக்குகிறார் துருவ் விக்ரம்

நேபாளத்தில் சினிமா பயணத்தை நாளை துவக்குகிறார் துருவ் விக்ரம்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
சமீபத்தில் தெலுங்கில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்ற `அர்ஜுன் ரெட்டி' படம் தமிழ் மற்றும் மலையாளத்தில் ரீமேக் செய்யப்படுகிறது. இதில் தமிழ் ரீமேக்கில் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நடிக்கிறார்  இந்த படத்திற்கு `வர்மா' என தலைப்பு வைத்துள்ளனர். இந்நிலையில், இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நேபாளத்தில் நாளை துவங்க இருப்பதாக கூறப்படுகிறது. அதற்காக நடிகர் விக்ரமுடன், `வர்மா' படக்குழு நேபாளம் விரைந்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. துருவ் சம்பந்தப்பட்ட காட்சிகளை முதலில் படமாக்கவும், நாயகி தேர்வு செய்யப்பட்ட பின்னர் அடுத்தகட்ட படப்பிடிப்பை நடத்தவும் படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி அர்ஜுன் ரெட்டி படத்தில் நாயகனாக நடித்த விஜய் தேவரகொண்டா, சமீபத்தில் சென்னை வந்ததாகவும், வர்மா படத்தில் அவரது கதாபாத்திரம் குறித்து துருவ்விடம் பேசிவிட்டு சென்றதாகவும் ஒரு தகவல் பரவ...
மாரி-2 படத்தில் கலெக்டராக வரலட்சுமி..!

மாரி-2 படத்தில் கலெக்டராக வரலட்சுமி..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
தனுஷ் தற்போது பாலாஜி மோகன் இயக்கத்தில் `மாரி-2' படத்தில் பிசியாக நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தென்காசியில் துவங்கிய நிலையில், சமீபத்தில் படக்குழு சென்னை விரைந்தது. சமீபத்தில் படப்பிடிப்பில் கலந்து கொண்டதாக வரலட்சுமி அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். பின்னர் வரலட்சுமி இந்த படத்தில் வில்லியாக நடிப்பதாக சில செய்திகள் உலா வந்தன. வரலட்சுமி அதனை மறுத்திருந்த நிலையில், அவர் கலெக்டராக நடிப்பதாக படக்குழுவுக்கு நெருங்கிய வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பாலாஜி மோகன் இயக்கும் இந்த படத்தில் தனுஷ் ஜோடியாக சாய் பல்லவி நடிக்கிறார். மலையாள நடிகர் டோவினோ தாமஸ் வில்லனாக நடிக்கிறார். நடிகர் கிருஷ்ணா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்....
விரைவில் ‘விஸ்வரூபம்-2’ டிரைலர்

விரைவில் ‘விஸ்வரூபம்-2’ டிரைலர்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
கமல்ஹாசன், ஆண்ட்ரியா, பூஜாகுமார் நடிப்பில் வெளியான படம் ‘விஸ்வரூபம்’. இப்படம் வெளியாகி சூப்பர் ஹிட்டானது. இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. ஜிப்ரான் இசையமைத்து வரும் இப்படத்திற்கு சம்தத் சைனுதீன் ஒளிப்பதிவு செய்துள்ளார். கமல்ஹாசனே இப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தை மிக விரைவில் கமல்ஹாசன் வெளியிட இருப்பதாக செய்திகள் வெளியானது. இந்த படத்தின் டிரைலர் எப்போது வெளியாகும் என்று எதிர்பார்த்து கொண்டிருக்கும் நிலையில், புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. கமலின் உதவியாளரும், ‘தூங்காவனம்’ படத்தின் இயக்குனருமான ராஜேஷ் எம்.செல்வா, ‘விஸ்வரூபம்-2’ டிரைலர் ரெடி என்றும் இந்த டிரைலர் மிக விரைவில் வெளியாகும்’ என்றும் அறிவித்துள்ளார்! இது கமலின் ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. ...
ஆர்.கே.நகர் தொகுதியில் கட்சி பெயரை அறிவிப்பேன்: டி.டி.வி.தினகரன்

ஆர்.கே.நகர் தொகுதியில் கட்சி பெயரை அறிவிப்பேன்: டி.டி.வி.தினகரன்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ.வான டி.டி. வி.தினகரன் இன்று தனது தொகுதியில் கொருக்குப்பேட்டை கண்ணகி நகரில் நடந்த ஜெயலலிதா பிறந்த நாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். நலிவுற்ற பிரிவினருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:- ஆர்.கே.நகரில் எனது வெற்றியின் மூலம் 3-வது அத்தியாயத்தை தொடங்கியுள்ளார்கள். அண்ணா தி.மு.க.வை தொடங்கிய போது ராயபுரம் ராபின்சன் பூங்காவில்தான் தனது அத்தியாயத்தை தொடங்கினார். என் மீது நம்பிக்கை வைத்து 3-வது அத்தியாயத்தை ஆர். கே.நகர் மக்கள் தொடங்கி இருக்கிறார்கள். நான் புதிதாக தொடங்க இருக்கும் கட்சிக்கு 3 பெயர்களை பரிசீலிக்க தேர்தல் கமி‌ஷனில் கொடுத்து இருக்கிறோம். இன்று இதில் தேர்தல் கமி‌ஷன் முடிவு எடுப்பதாக இருந்தது. ஆனால் பல்வேறு காரணங்களால் இதில் தடங்கல் ஏற்பட்டுள்ளது. விரைவில் கட்சி பெயர் பற்றி தேர்தல் கமி‌ஷன் முடிவு எடுக்கும். கட்சியின் ப...
மதுரையில் 2 ரவுடிகள் போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக்கொலை

மதுரையில் 2 ரவுடிகள் போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக்கொலை

HOME SLIDER, NEWS, செய்திகள்
மதுரையில் ரவுடிகள் அட்டகாசத்தை ஒழிக்க மாநர போலீசார் பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இன்று சிக்கந்தர் சாவடி பகுதியில் உள்ள ரவுடிகளை பிடிக்க மாநகர போலீசார் சென்றனர். அப்போது போலீசார் - ரவுடிகள் இடையே மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து போலீசார் என்கவுண்டர் நடத்தினர். இதில், மந்திரி மற்றும் சகுனி கார்த்திக் ஆகிய இருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மற்றொரு ரவுடி தப்பி ஓடிவிட்டதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. என்கவுண்டரில் பலியானவர்கள் மீது பல வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த திடீர் என்கவுண்டர் நடவடிக்கை அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை அடுத்து, அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், இது தொடர்பாக போலீஸ் உயரதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்  ...
புதிய படங்களை வெளியிடுவது இன்று முதல் நிறுத்தம் பட அதிபர்கள் சங்கம்

புதிய படங்களை வெளியிடுவது இன்று முதல் நிறுத்தம் பட அதிபர்கள் சங்கம்

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள்
தமிழ்நாடு முழுவதும் உள்ள திரையரங்குகளில் கியூப், யூஎப்ஒ, பிஎக்ஸ்டி உள்ளிட்ட டிஜிட்டல் சேவை அமைப்புகள் மூலம் படங்கள் திரையிடப்பட்டு வருகின்றன. இதற்காக அந்த அமைப்புகள் தயாரிப்பாளர்களிடம் இருந்து குறிப்பிட்ட தொகையை கட்டணமாக வசூலிக்கின்றன. புதிய படங்களை திரையிடுவதற்கு டிஜிட்டல் சேவை அமைப்புகள் ரூ.22 ஆயிரத்தில் இருந்து ரூ.34 ஆயிரம் வரை கட்டணமாக வசூலிப்பதாக தயாரிப்பாளர்கள் தரப்பில் குற்றம் சாட்டப்படுகிறது. இந்த கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று அவர்கள் வற்புறுத்தினர். இதுபோல் மலையாளம், தெலுங்கு, கன்னட  திரைப்பட தயாரிப்பாளர்களும் டிஜிட்டல் சேவை கட்டணத்தை குறைக்க வற்புறுத்தினர். இன்று முதல் நிறுத்தம் இந்த கோரிக்கையை வலியுறுத்தி இன்று (வியாழக்கிழமை) முதல் புதிய படங்களை தமிழ்நாடு, கேரளா, கர்நாடகம், ஆந்திரா, தெலுங்கானா ஆகிய 4 மாநிலங்களிலும் வெளியிட மாட்டோம் என்றும் அறிவித்தனர். இந்த போராட்டத்...
கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் ரஜினிகாந்த் படத்திற்கு அனிருத் இசை

கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் ரஜினிகாந்த் படத்திற்கு அனிருத் இசை

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  ரஜினிகாந்த் அடுத்து நடிக்கும் படத்தை சன் பிக்சர்ஸ் பிரமாண்டமாக தயாரிக்க உள்ளது. இந்த படத்தை பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார். தற்போது விஜய் நடிப்பில் அவரது 62-வது படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது. இந்நிலையில் தனது அடுத்த பட அறிவிப்பை சன் பிக்சர்ஸ் வெளியிட்டது. இந்த படத்தில் ரஜினிகாந்த் நடிக்கிறார். சன் நெட்வொர்க் தலைவர் கலாநிதி மாறன் பிரமாண்டமாக இந்த படத்தை தயாரிக்கிறார். பீட்சா, ஜிகர்தண்டா உள்ளிட்ட படங்களை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார். மற்ற நட்சத்திரங்கள், டெக்னீஷியன்கள் தேர்வு நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார் என்று சன்பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது....
வெளிநாட்டிற்கு ஓட்டம் பிடிப்பவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்யும் சட்டம்

வெளிநாட்டிற்கு ஓட்டம் பிடிப்பவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்யும் சட்டம்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
பொதுத்துறை வங்கிகளில் ரூ.9,000 கோடி மோசடி செய்து இங்கிலாந்துக்கு தப்பியோடிய விஜய் மல்லையா நாடு திரும்ப மறுத்துவிட்டார்.  அவரை இந்தியாவிற்கு கொண்டுவரவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இந்நிலையில் வெளிநாட்டுக்குத் தப்பியோடிய பொருளாதார மோசடி குற்றவாளிகளின் சொத்துகளை பறிமுதல் செய்யும் வகையில் சட்டம் ஒன்றைக் கொண்டுவரவேண்டிய நிர்பந்தம் அரசுக்கு ஏற்பட்டது. 2017-18-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் பொருளாதார மோசடி செய்து வெளிநாட்டுக்கு தப்பி ஒடுபவர்களின் சொத்துகளை பறிமுதல் செய்வது தொடர்பாக சட்டம் கொண்டுவரப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பஞ்சாப் நே‌ஷனல் வங்கியின் மும்பை கிளையில் இருந்து ரூ.12,723 கோடி அளவுக்கு கடன் பெற்று மோசடியில் ஈடுபட்ட வைர வியாபாரி மற்றும் அவரது தொழில் கூட்டாளியும், உறவினருமான மெகுல் சோக்ஷி ஆகியோர் வெளிநாடு தப்பி சென்று விட்டனர். இதுபோன்று டெல்லியை சேர்ந்த தொழி...