நல்ல தலைமை, ஊழல் இல்லா ஆட்சி, தரமான கல்வி, தடங்கல் இல்லா மின்சாரம் கமல் கட்சி கொள்கைகள்..!
மதுரையில் இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ‘மக்கள் நீதி மய்யம்’ என்ற புதிய கட்சியை கமல் இன்று தொடங்கினார். கட்சி கொடியையும் ஏற்றி வைத்தார். பொதுக்கூட்டத்தில் திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான ஆதரவாளர்கள் மத்தியில் கமல் பேசியதாவது:-
எல்லா நல்ல முதல்வர்களுக்கும் இருக்கும் கொள்கைகள்தான் மக்கள் நீதி மய்யத்திற்கும் இருக்கிறது. தரமான கல்வி, எல்லா தரப்பினருக்கும் போய் சேர வேண்டும். நல்ல தலைமை, தரமான கல்வி, தடங்கல் இல்லா மின்சாரம் கிடைக்க வேண்டும்.
சாதியின் பெயராலும் மதத்தின் பெயராலும் சொல்லிச் சொல்லி விளையாடும் விளையாட்டு நிறுத்தப்பட வேண்டும். எப்படி நடக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக நின்று காட்டுவோம்.
ஊழலை குறைப்பதில் நமக்கும் பங்கு உள்ளது. இதுநாள் வரை வேடிக்கை பார்த்தோம். இனி அதை செய்யக்கூடாது. உங்கள் வாக்கின் மதிப்பு தெரியாமல் விற்று விட்டீர்கள். உங்களின் எல்லா பற்றாக்குறையும் பேராசையால்...









