சனிக்கிழமை, ஜூன் 27
Shadow

Author: Kodanki

நல்ல தலைமை, ஊழல் இல்லா ஆட்சி, தரமான கல்வி, தடங்கல் இல்லா மின்சாரம்  கமல் கட்சி கொள்கைகள்..!

நல்ல தலைமை, ஊழல் இல்லா ஆட்சி, தரமான கல்வி, தடங்கல் இல்லா மின்சாரம் கமல் கட்சி கொள்கைகள்..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள்
மதுரையில் இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ‘மக்கள் நீதி மய்யம்’ என்ற புதிய கட்சியை கமல் இன்று தொடங்கினார். கட்சி கொடியையும் ஏற்றி வைத்தார். பொதுக்கூட்டத்தில் திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான ஆதரவாளர்கள் மத்தியில் கமல் பேசியதாவது:- எல்லா நல்ல முதல்வர்களுக்கும் இருக்கும் கொள்கைகள்தான் மக்கள் நீதி மய்யத்திற்கும் இருக்கிறது. தரமான கல்வி, எல்லா தரப்பினருக்கும் போய் சேர வேண்டும். நல்ல தலைமை, தரமான கல்வி, தடங்கல் இல்லா மின்சாரம் கிடைக்க வேண்டும். சாதியின் பெயராலும் மதத்தின் பெயராலும் சொல்லிச் சொல்லி விளையாடும் விளையாட்டு நிறுத்தப்பட வேண்டும். எப்படி நடக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக நின்று காட்டுவோம். ஊழலை குறைப்பதில் நமக்கும் பங்கு உள்ளது. இதுநாள் வரை வேடிக்கை பார்த்தோம். இனி அதை செய்யக்கூடாது. உங்கள் வாக்கின் மதிப்பு தெரியாமல் விற்று விட்டீர்கள். உங்களின் எல்லா பற்றாக்குறையும் பேராசையால்...
டெல்லி மக்களைப் போல் தமிழக மக்களும் வரலாற்றை மாற்றி அமைப்பார்கள்- கமல் கட்சி கூட்டத்தில் கெஜ்ரிவால் பேச்சு

டெல்லி மக்களைப் போல் தமிழக மக்களும் வரலாற்றை மாற்றி அமைப்பார்கள்- கமல் கட்சி கூட்டத்தில் கெஜ்ரிவால் பேச்சு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
மதுரையில் இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் என்ற புதிய கட்சியை கமல் இன்று தொடங்கினார். கட்சி கொடியையும் அறிமுகம் செய்து வைத்தார். இந்த பொதுக்கூட்டத்தில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பேசியதாவது:- இதுவரை நான் கமலின் ரசிகனாக இருந்தேன். இப்போது அவர் நிஜ வாழ்க்கையின் நாயகன். நிஜ வாழ்க்கையிலும் அவரது ரசிகனாக ஆனேன். கமல் நேர்மையானவர் மட்டுமல்ல, துணிச்சலானவரும் ஆவார். கடந்த சில மாதங்களாக கமல் காட்டிய துணிச்சலைப் பார்த்து வியந்தேன். ஊழல் கட்சிகளான தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய கட்சிகள் இடையே தமிழக மக்கள் சிக்கி கிடந்தனர்.  இப்போது ஊழலுக்கு எதிராக அனைவரும் இங்கே ஒன்றிணைந்ததை கண்டு மகிழ்ச்சி அடைகிறேன். தமிழகத்தில் தற்போது நேர்மையான கட்சி உருவாகி உள்ளது. மக்கள் நேர்மையான கட்சிக்கு வாக்களிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. டெல்லி மக்களைப் போல தமிழக மக்களும் வரலாற்றை மாற்றி அமைப்பா...
தமிழகத்தின் தலையாய பிரச்சினையைப் பேசும் கேணி

தமிழகத்தின் தலையாய பிரச்சினையைப் பேசும் கேணி

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
தமிழகத்தின் தலையாய பிரச்சினை என்றால் அது “தண்ணீர்” தான். கேரளத்தோடு முல்லை பெரியாறு, ஆந்திராவோடு பாலாறு, கர்நாடகத்தோடு காவிரி என அரை நூற்றாண்டு காலமாய் தண்ணீருக்காக வழக்காடிக் கொண்டிருப்பதே அதற்குச் சான்று. ஏரி குளங்கள் மாயமாவதும்,  நிலத்தடி நீர்மட்டம் குறைந்து கொண்டிருப்பதும் மக்களின் முன்னிற்கும் சவால்களாய் மாறிக் கொண்டிருக்கிறது. இப்படி மக்களின் அடிப்படைத் தேவையாய், அத்தியாவசியமாய் விளங்கக் கூடிய தண்ணீரினை மையமாய் வைத்து உருவாகியிருக்கும் படம் தான் “கேணி”. “காற்று, வானம், நிலம் போல இந்த பூமியில் வாழும் உயிர்கள் அனைத்திற்கும் பொதுவானது தண்ணீர். அந்தத் தண்ணீரை உரிமை கொண்டாட எந்த ஒரு தனி மனிதனுக்கும் உரிமையில்லை” என்ற கருத்தை ஆணித்தரமாக எடுத்துரைத்திருக்கும் “கேணி” திரைப்படம் வருகிற பிப்ரவரி 23-ஆம் தேதி வெளியாகிறது. இப்படம் கூறும் கருத்தின் முக்கியத்துவம் கருதி நடிகை ஜெயப்பிரதா நீ...
மக்கள் நீதி மய்யம் ஆட்சிக்கு வந்தால் இலவச திட்டங்கள் இருக்காது- கமல்

மக்கள் நீதி மய்யம் ஆட்சிக்கு வந்தால் இலவச திட்டங்கள் இருக்காது- கமல்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள்
மதுரை பொதுக்கூட்டத்தில் கட்சி அறிவிப்பை வெளியிட்டு பேசிய கமல்ஹாசன்,  பொதுமக்களின் கேள்விகளுக்கு மேடையிலேயே பதில் அளித்தார். அது வருமாறு:- கேள்வி: அரசியலில் எத்தனை நாட்கள் நீங்கள் தாக்குப் பிடிப்பீர்கள்? பதில்: என் மூச்சு உள்ள வரை தாக்குப்பிடிப்பேன். கேள்வி: உங்களுக்கு ஒரு கஷ்டம் வந்ததால்தான் விஸ்வரூபம் எடுத்தீர்களா? பதில்: மக்களின் நிலையைக் கண்டு இனிமேல்தான் விஸ்வரூபம் எடுக்கவேண்டும். இவர்களுடன் சேர்ந்து(மக்கள்) விஸ்வரூபம் எடுப்பேன். கேள்வி: அரசியலில் உங்கள் வழிகாட்டி யார்? காந்தியா, பெரியாரா, அம்பேத்கரா, காமராஜரா? பதில்: அனைத்து கடவுள்களையும் பிடிக்கும் என்று நாம் சொல்வதை ஏற்றுக்கொள்கிறோம். அதேபோல் எனக்கும் அனைத்து தலைவர்களையும் பிடிக்கும். கேள்வி: ஊழலை ஒழிப்போம் என்கிறீர்கள்? எப்படி ஒழிப்பீர்கள்? பதில்: நான் எப்படி ஒழிப்பேன்? இது நல்ல கதையாக இருக்கிறதே? எல்லாரும் ...
கமல் கட்சியின் பெயர் மக்கள் நீதி மய்யம்- மதுரை பொதுக்கூட்டத்தில் கொடியை ஏற்றி வைத்து அறிவிப்பு

கமல் கட்சியின் பெயர் மக்கள் நீதி மய்யம்- மதுரை பொதுக்கூட்டத்தில் கொடியை ஏற்றி வைத்து அறிவிப்பு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள்
நடிகர் கமல் தனது அரசியல் பயணத்தை முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் வீட்டில் இன்று தொடங்கினார். ராமேஸ்வரத்தில் அப்துல் கலாம் வீட்டில் அவரது சகோதரர் முகம்மது முத்து மீரான் மரைக்காயரை சந்தித்து வாழ்த்துக்களை பெற்றுக்கொண்ட கமல், அப்துல் கலாம் படித்த ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியை வெளியே நின்று பார்த்தார். பின்னர் பேய்க்கரும்பில் உள்ள கலாம் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்திவிட்டு தனது பயணத்தை தொடர்ந்தார். ராமநாதபுரம், பரமக்குடி, மானாமதுரை வழியாக மதுரை வந்தடைந்த கமல், இரவு 7.15 மணியளவில் பொதுக்கூட்டம் நடைபெறும் மதுரை ஒத்தக்கடை மைதானத்தை வந்தடைந்தார். அப்போது தன் காரில், டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலையும் அழைத்து வந்தார். அதன்பின்னர் பொதுக்கூட்டம் தொடங்கியது இயக்குனர் ராசி அழகப்பன், கவிஞர் சினேகன் பேசியதைத் தொடர்ந்து சில நிமிடங்களில் மேடைக்கு வந்த கமல், தனது கட்சியின் கொடியை ஏற்றி வைத்து...
நடிகை சாவித்திரி வாழ்க்கை படத்தில் இணைந்த அனுஷ்கா

நடிகை சாவித்திரி வாழ்க்கை படத்தில் இணைந்த அனுஷ்கா

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
மறைந்த பழம்பெரும் நடிகை சாவித்திரி வாழ்க்கை வரலாறு ‘மகாநதி’ என்ற பெயரில் தமிழ், தெலுங்கில் சினிமா படமாக தயாராகிறது. சாவித்திரியின் சிறுவயது வாழ்க்கை, சினிமாவில் அறிமுகமாகி முன்னணி கதாநாயகியாக உயர்ந்தது, நடிகர் ஜெமினி கணேசனை காதல் திருமணம் செய்து கொண்டது, பின்னர் சொந்த படம் எடுத்து சொத்துக்களை எல்லாம் இழந்து இறுதி காலத்தில் வறுமையில் வாடி இறந்தது உள்ளிட்ட அனைத்து விஷயங்களும் இந்த படத்தில் இடம்பெறுகின்றன. சாவித்திரி குடும்பத்தினர், நண்பர்கள், பழம்பெரும் நடிகர்கள் ஆகியோரிடம் பேசி தகவல்கள் திரட்டி நாக் அஸ்வின் இந்த படத்தை டைரக்டு செய்கிறார். படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து இறுதி கட்டத்தில் உள்ளது. இதில் சாவித்திரி வேடத்தில் தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி கதாநாயகியாக வளர்ந்து வரும் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். சாவித்திரி போன்று தனது தோற்றத்தை மாற்றிக்கொண்டு நடித்து வருகிறார் சமந்...
சுருதிஹாசனுக்கு டிசம்பரில் காதல் திருமணம்..?

சுருதிஹாசனுக்கு டிசம்பரில் காதல் திருமணம்..?

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
சுருதிஹாசன் தமிழ், தெலுங்கு, இந்தி பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். கமல்ஹாசனுடன் சபாஷ் நாயுடு படத்தில் நடிக்கிறார். வேறு படங்களில் நடிக்க அவர் கால்ஷீட் கொடுக்கவில்லை. அவர் சினிமாவை விட்டு ஒதுங்குவதாக தகவல் பரவி உள்ளது. இதற்கு பதில் அளித்த சுருதிஹாசன் சினிமாவை தவிர்த்து வேறு வாழ்க்கையும் இருக்கிறது. பாடல், இசையில் எனக்கு ஆர்வம் இருக்கிறது. அதில் கவனம் செலுத்துகிறேன். நல்ல கதைகள் அமைந்தால் நடிப்பேன் என்றார். சில மாதங்களுக்கு முன்னால் சுருதிஹாசனுக்கும், லண்டன் நடிகர் மைக்கேல் கார்செல்லுக்கும் காதல் மலர்ந்துள்ள தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இருவரும் நெருக்கமாக இருக்கும் படங்கள் இணையதளங்களில் வெளியாகி வந்தன. சுருதிஹாசனின் தாய் சரிகா மும்பையில் வசிக்கிறார். மைக்கேலை அழைத்துச்சென்று சரிகாவிடம் சுருதிஹாசன் அறிமுகம் செய்து வைத்தார். அந்த படங்களும் வெளிவந்தன. பின்னர் சென...
கமல் கட்சியில் சேர்ந்த முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி

கமல் கட்சியில் சேர்ந்த முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள்
கமலின் புதிய கட்சியில் இணைந்து பணியாற்றுவதற்கு ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகள் விருப்பம் தெரிவித்துள்ளனர். அந்த வகையில் முன்னாள் போலீஸ் அதிகாரியான மவுரியா கமல் கட்சியில் சேர்ந்துள்ளார். மயிலாப்பூரில் துணை கமி‌ஷனராக பணியாற்றிய இவர் கடைசியாக சிறைத் துறையில் ஐ.ஜி.யாக இருந்தார். பணிக்காலம் முடியும் முன்னரே, விருப்ப ஓய்வு பெற்று சென்று விட்டார். சென்னை கானாத்தூரில் வசித்து வருகிறார். கமல் கட்சியில் சேர்ந்தது பற்றி போலீஸ் அதிகாரி மவுரியா அளித்த பேட்டி வருமாறு:- கே:- போலீஸ் அதிகாரியாக இருந்த உங்களுக்கு அரசியல் ஆர்வம் ஏற்பட்டது எப்படி? ப:- போலீஸ் அதிகாரியாக பணியாற்றிய காலங்களிலேயே அரசியலை கூர்ந்து கவனித்து வந்துள்ளேன். அரசியலில் இருந்தால் மக்களுக்கு நல்லது செய்வதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதை அப்போது உணர்ந்துள்ளேன். நேரம் வரும் போது அரசியலில் ஈடுபடலாம் என்று நினைத்திருந்...
அ.தி.மு.க.வில் இருந்து நல்லவர்கள் வந்தால் சேர்த்து கொள்வோம் – கமல்ஹாசன்

அ.தி.மு.க.வில் இருந்து நல்லவர்கள் வந்தால் சேர்த்து கொள்வோம் – கமல்ஹாசன்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள்
கமல்ஹாசன் ஒரு வாரப்பத்திரிகைக்கு அளித்த பேட்டி விவரம் வருமாறு:- 37 ஆண்டுகளாக நற்பணி செய்து கொண்டு இருக்கிறோம். ஒவ்வொரு இடத்திலும் எங்களுக்கு ஆட்கள் இருக்கிறார்கள். ஒரு கட்டமைப்புக்கான அஸ்திவாரம் எங்களுக்கும் உள்ளது. அதைப் பலப்படுத்த வேண்டும். ஆனால், இருப்பவர்களை உற்சாகப்படுத்திச் செயலாற்றப் பணிக்கிறோம். பலரைப் புதிதாக இணைக்கிறோம். ஆனால், ‘இன்னும் பள்ளமே தோண்டலையே’ என்று பேசுவது சரியானதல்ல. எங்கள் கோபங்களைச் சொல்ல இது நேரமல்ல. இருந்தாலும், கேட்பதால் சொல்கிறேன். நற்பணி செய்வதற்கான தண்டனைகளை நாங்கள் அனுபவித்திருக்கிறோம். வெள்ளைக்காரன் ஆட்சியில் காந்தியார் நற்பணி செய்ய சிரமப்பட்டார் என்பதில் ஒரு நியாயம் இருக்கிறது. ஆனால், இது என் குடி, என் அரசு. இங்கேயே நாங்கள் நிறைய அனுபவித்துள்ளோம். உதாரணத்துக்கு, ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது, ஓர் அமைச்சரை அவமானப்படுத்தி விட்டார் என்று சொல்ல...
கலாம் பயணம் துவங்கிய இடத்திலேயே எனது பயணத்தை தொடங்கியது பெரும்பேறு – கமல்

கலாம் பயணம் துவங்கிய இடத்திலேயே எனது பயணத்தை தொடங்கியது பெரும்பேறு – கமல்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள்
ராமேஸ்வரத்தில் உள்ள அப்துல் கலாம் இல்லத்தில் இருந்து இன்று தனது அரசியல் பயணத்தை நடிகர் கமல்ஹாசன் தொடங்கியுள்ளார். அப்துல் கலாம் வீட்டில் அவரது சகோதரர் முகம்மது முத்து மீரான் மரைக்காயரை சந்தித்து கமல்ஹாசன் வாழ்த்துக்கள் பெற்றார். இதனை அடுத்து, கலாம் படித்த ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியை வெளியே நின்று பார்த்தார். பின்னர், கமல் மீனவர்களை சந்தித்து பேச உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கலாம் வீட்டுக்குச் சென்றது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் நெகிழ்ச்சியாக அவர் பதிவிட்டுள்ளார். “பிரமிப்பூட்டும் எளிமையைக் கண்டேன், கலாமின் இல்லத்திலும், இல்லத்தாரிடமும். அவர் பயணம் துவங்கிய இடத்திலேயே நானும் என் பயணத்தைத் தொடங்கியதை பெரும்பேறாக நினைக்கிறேன்” என கமல்ஹாசன் பதிவிட்டுள்ளார்...