2017 ஆம் ஆண்டில் மட்டும் 700 க்கும் மேற்பட்ட குழந்தைகள் மும்பை பிளாட்பாரங்களில் மீட்கப்பட்டுள்ளனர்
இந்தியாவின் மிகப்பெரிய நகரமான மும்பையில் கடந்த 2017 ஆம் ஆண்டில் மட்டும் 700 க்கும் மேற்பட்ட குழந்தைகள் மும்பை பிளாட்பாரங்களில் மீட்கப்பட்டுள்ளனர்.வீட்டில் பெற்றோர்கள் திட்டிய காரணத்தினாலயே தாங்கள் வீட்டை விட்டு வெளியேறியதாய் பெரும்பாலான குழந்தைகள் தெரிவித்திருந்தனர்.
இது குறித்து ரயில்வே பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கூறுகையில்,
”706 குழந்தைகளில்,பெரும்பாலான குழந்தைகள் பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.அவர்கள் மும்பை நகரின் பல்வேறு ரயில்வே பிளாட்பாரங்களிலும்,புறநகர் பகுதிகளிலும் கண்டெடுக்கப்பட்டுள்ளனர்.இதில் பெரும்பாலானோர் 13 முதல் 18 வயது உடையவர்கள்.மேலும் அவர்கள் உத்திரப்பிரதேசம்,ராஜஸ்தான் மற்றும் குஜராத் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.இதில் மும்பை மத்திய ரயில் நிலையம் பகுதிகளில் மட்டும் அதிகபட்சமாக 129 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளனர்”என தெரிவித்தனர்.
மற்றொரு ரயில்வே அதிகாரி கூறுகையில்,இங்...









