புதன்கிழமை, ஜூலை 15
Shadow

Author: Kodanki

அருவி விமர்சனம்

அருவி விமர்சனம்

REVIEWS, விமர்சனம்
  அம்மா, அப்பா, தம்பி என குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் அதிதி பாலன், தனது பள்ளி படிப்பை முடித்து கல்லூரிக்கு செல்கிறார். கல்லூரி தோழியுடனான நட்பால் பப், பார்ட்டி என ஜாலியாக இருக்க, ஒருநாள் உடல் நிலை சரியில்லாமல் போகிறது. மருத்துவரிடம் செல்கிறார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் அதிதிக்கு எச்.ஐ.வி. தொற்று இருப்பதாக கூறுகிறார். இதனால் அதிர்ச்சியடையும் அதிதியின் பெற்றோர் அதிதியை வெறுத்து ஒதுக்குகின்றனர். தமது மகள் தவறான வழிக்கு போனதால் தான் அவளுக்கு எச்.ஐ.வி தொற்று ஏற்பட்டதாக நினைத்து ஒரு கட்டத்தில் அதிதியை வீட்டை விட்டே துரத்திவிடுகின்றனர். பின்னர் மேன்சன் ஒன்றில் திருநங்கை ஒருவருடன் தங்குகிறார். பின்னர் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் துப்பாக்கியை வைத்து அனைவரையும் மிரட்ட, போலீசாரால் கைது செய்யப்படுகிறார். பின்னர் மாவோயிஸ்ட் என முத்திரை குத்தப்பட்ட அதிதியிடம் போல...
பிரம்மா டாட் காம் விமர்சனம்

பிரம்மா டாட் காம் விமர்சனம்

Uncategorized
ளம்பர நிறுவனத்தில் நிகழ்ச்சி தயாரிப்பாளராக வேலை பார்த்து வருகிறார் நகுல். இவரின் உறவினரும், இவரை விட திறமை குறைந்தவருமான சித்தார்த் விபின் அந்த நிறுவனத்தின் சி.இ.ஓ-வாக இருக்கிறார். இந்த நிறுவனத்தின் மாடலாக இருக்கும் நாயகி ஆஷ்னாவிற்கும், நகுலுக்கும் இடையே காதல் உருவாகிறது. ஆனால், இருவரும் சொல்லிக் கொல்லாமலே பழகி வருகிறார்கள். இந்நிலையில், தன்னுடைய பிறந்த நாளை முன்னிட்டு கோவிலுக்கு செல்கிறார் நகுல். அங்கு கடவுளிடம், தான் பார்க்க வேண்டிய வேலையை, சித்தார்த் விபின் பார்த்து வருகிறார் என்று தன்னுடைய குறைகளை சொல்லுகிறார். உடனே ஏதோ மாற்றம் ஏற்படுகிறது. அதாவது நகுல் சி.இ.ஓ-வாகவும், சித்தார்த் விபின் நிகழ்ச்சி தயாரிப்பாளராகவும் மாறுகிறார்கள். இதன்பின், நகுலின் வாழ்க்கையில் பல மாற்றங்கள் ஏற்படுகிறது. தான் காதலிக்கும் ஆஷ்னா, இவரை காதலிக்காமல், சித்தார்த் விபினை காதலிக்க ஆரம்பிக்கிறார். மேலும் பல...
சென்னை 2 சிங்கப்பூர்  விமர்சனம்

சென்னை 2 சிங்கப்பூர் விமர்சனம்

REVIEWS, விமர்சனம்
இயக்குநராக வேண்டும் என்று முயற்சி செய்து வருகிறார் நாயகன் கோகுல் ஆனந்த். அவரை தயாரிப்பாளர் ஒருவர் ஏமாற்றி விட, தனது நண்பனின் உதவியால் சிங்கப்பூரில் இருக்கும் தயாரிப்பாளர் ஒருவரை பார்த்து கதை சொல்ல செல்கிறார். அங்கு அந்த தயாரிப்பாளர் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வர செய்வதறியாது விழிக்கும் கோகுல் ஆனந்த், தனது பையுடன் பாஸ்போர்ட், பணத்தையும் பறிகொடுக்கிறார். இவ்வாறாக இக்கட்டான சூழ்நிலையில் சிக்கிக் கொள்ளும் கோகுல் ஆனந்த் சொந்த நாட்டிற்கும் திரும்பி செல்ல முடியாமல் தவிக்கிறார். இந்நிலையில், அங்கு நடக்கும் ஷூட்டிங் ஒன்றை பார்த்து, அங்கு செல்கிறார். அங்கு வீடியோ எடுக்கும் சத்யாவிடம் தான் ஒரு இயக்குநர் என்று கூறி தனது நிலையை கூறி உதவியையும் கோருகிறார். பின்னர் இருவரும் நண்பர்களாகின்றனர். சத்யா தனக்கு தெரிந்த தயாரிப்பாளரிடம் பேசி கோகுல் ஆனந்துக்கு வாய்ப்பு வாங்கி ...
பள்ளிப் பருவத்திலே விமர்சனம்

பள்ளிப் பருவத்திலே விமர்சனம்

REVIEWS, விமர்சனம்
கிராமத்தில் உள்ள பள்ளியின் தலைமை ஆசிரியராக வருகிறார் கே.எஸ்.ரவிக்குமார். அதே பள்ளியில் படிக்கும் அவரது மகன் நந்தன் ராம், நாயகி வெண்பாவை காதலிக்கிறார். ஆனால் நந்தன் ராமின் காதலுக்கு வெண்பா எதிர்ப்பு தெரிவிக்கிறாள். ஒரு கட்டத்தில் நந்தன் ராம், வெண்பாவை காதலிப்பது வெண்பாவின் அப்பாவான பொன்வண்ணனுக்கு தெரிய வருகிறது. கே.எஸ்.ரவிக்குமார் மீதுள்ள மதிப்பினால், நந்தன் ராமை நேரில் அழைத்து காதல் வேண்டாம் என்று அறிவுரை கூறி, எச்சரித்து அனுப்புகிறார். ஆனால் பொன்வண்ணனின் பேச்சை பொறுட்படுத்தாத நந்தன் ராம் தொடர்ந்து வெண்பாவிடம் தனது காதலை வெளிப்படுத்தி வருகிறார். ஒரு கட்டத்தில் வெண்பாவின் கையை பிடித்து பேசுவதை பொன்வண்ணனும், வெண்பாவின் சித்தப்பா ஆர்.கே.சுரேஷும் பார்த்து விடுகின்றனர். இதையடுத்து இருவீட்டாருக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது. அதில் நந்தன் ராமை தான் காதலிக்கவில்லை என்று வெண்பா மற...
அரசியலுக்கு வருகிறாரா அரவிந்த்சாமி… அவரே அளித்த பதில்..!

அரசியலுக்கு வருகிறாரா அரவிந்த்சாமி… அவரே அளித்த பதில்..!

CINI NEWS, HOME SLIDER, நடிகர்கள்
‘தளபதி’ படம் மூலம் தமிழில் நடிகராக அறிமுகமானவர் அரவிந்த் சாமி. மணிரத்னம் இயக்கிய இப்படத்தில் ரஜினிக்கு தம்பியாக அரவிந்த் சாமி நடித்திருந்தார். இப்படத்தில் அரவிந்த் சாமியின் நடிப்பு அனைவராலும் வரவேற்கப்பட்டது. இதையடுத்து ‘ரோஜா’, ‘மறுபடியும்’, ‘பாம்பே’, ‘இந்திரா’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். 1999ம் ஆண்டு வெளியான ‘என் சுவாசக் காற்றே’ என்ற படத்திற்குப் பிறகு சிறிய இடைவெளி விட்டு, ‘சாசனம்’ என்ற படத்தில் நடித்தார். பின்னர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மணி ரத்னம் இயக்கத்தில் வெளியான ‘கடல்’ படம் மூலம் ரீஎன்ட்ரீ ஆனார். ஜெயம் ரவியுடன் நடித்த ‘தனி ஒருவன்’ இவருக்கு சிறந்த வில்லன் நடிகருக்கான பெயரை பெற்றுத் தந்தது. தற்போது இவரது நடிப்பில் ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’, ‘சதுரங்க வேட்டை 2’, ‘வணங்காமுடி’, ‘நரகாசூரன்’ ஆகிய படங்கள் உருவாகி வருகிறது. மேலும் மணிரத்னம் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார...
பலூன் பட புரமோஷனில் அக்கறை காட்டாத ஜெய்… பத்திரிகையாளர் சந்திப்பை தவிர்த்தார்…

பலூன் பட புரமோஷனில் அக்கறை காட்டாத ஜெய்… பத்திரிகையாளர் சந்திப்பை தவிர்த்தார்…

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
சினிஷ் இயக்கத்தில் ஜெய் - அஞ்சலி - ஜனனி ஐயர் இணைந்து நடித்திருக்கும் படம் `பலூன்'. காதல் கலந்த திகில் படமாக உருவாகி உள்ள இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். காமெடி நடிகர் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். கடந்த 2011-ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற ‘எங்கேயும் எப்போதும்’ படத்திற்கு பின்னர் ஜெய் - அஞ்சலி மீண்டும் இணைந்து நடித்திருப்பதால் பலூன் படத்தின் மீதான எதிர்பாரப்பு கூடியிருக்கிறது. இந்த படத்தில் ஜெய் 3 வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகைகள் அஞ்சலி, ஜனனி ஐயர், இயக்குனர் சினிஷ் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துக் கொண்டனர். ஆனால், இப்படத்தின் கதாநாயகன் ஜெய் கலந்துக் கொள்ள வில்லை. இதுகுறித்து சினிஷ் பேசும்போது, ‘நடிகர் ஜெய் புரமோஷனை விரும்பாதவர். எனக்கு புரமோஷன் வேண்டாம். படம் நன்றாக ஓடினால்...
ஜெயிலில் சசிகலாவுக்கு சலுகைகள்: தகவல் உரிமை ஆணையத்தில் டி.ஐ.ஜி. ரூபா புகார்

ஜெயிலில் சசிகலாவுக்கு சலுகைகள்: தகவல் உரிமை ஆணையத்தில் டி.ஐ.ஜி. ரூபா புகார்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
கர்நாடக சிறைத்துறை டி.ஐ.ஜி.யாக இருந்த ரூபா பெங்களூர் ஜெயிலில் சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டதாவும், இதற்காக அவர், டி.ஜி.பி. சத்யநாராயணராவுக்கு ரூ.2 கோடி லஞ்சம் கொடுத்ததாவும் பரபரப்பு புகார் தெரிவித்தார். இது குறித்து ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி வினய்குமார் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்தார். இதில் சசிகலாவுக்கு சிறையில் சொகுசு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டது உண்மை என தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் டி.ஜி.பி.யாக இருந்த சத்ய நாராயனராவ், தன் மீது குற்றச்சாட்டுகள் கூறிய டி.ஐ.ஜி. ரூபா மீது பெங்களூரு சிட்டி சிவில் கோர்ட்டில் ரூ.4 கோடி கேட்டு மான நஷ்டஈடு வழக்கு தொடர்ந்தார். நேற்று இந்த வழக்கு கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது ரூபா தரப்பில் வக்கீல் வாதத்தை எழுத்து பூர்வமாக தாக்கல் செய்திருந்தார். இதையடுத்து நீதிபதி இவ்வழக்கை வருகிற பிப்ரவரி மாதம் 16-ந்தே...
கதைக்காகத் தன் தோற்றத்தை மாற்றிக் கொண்ட’’இமை’’நாயகன்

கதைக்காகத் தன் தோற்றத்தை மாற்றிக் கொண்ட’’இமை’’நாயகன்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
இமை’ படத்துக்காக அதில் நாயகனாக நடிக்கும் சரிஷ் சிரமப்பட்டுத் தன் தோற்றத்தை மாற்றிக் கொண்டுள்ளார். படு கரடு முரடான வாலிபனுக்கும் கனி போன்ற அப்பாவிப் பெண்ணுக்கும் இடையில் மலரும் காதல் பற்றிய கதை தான் ‘இமை’. இப்படத்தில் நாயகனாக நடித்ததுடன் தயாரிப்பிலும் பங்கெடுத்துள்ளவர் சரிஷ். படத்தில் நடித்த சரிஷ் தன் அனுபவம் பற்றிக் கூறும் போது, “இது ஒரு ரவுடி சார்ந்த கதைதான் என்று கேள்விப்பட்டதுமே என் தோற்றத்தை இயக்குநர் கூறியபடி மாற்ற ஆரம்பித்தேன். கொழு கொழு உடம்பை இளைக்க வைத்தேன். தாடி வளர்க்கத் தொடங்கினேன். தலையைச் சரியாக வாராமல் முடியை வளர்த்தேன். என் நிறத்தை மங்கலாக்க வெயிலில் நின்று கறுத்தேன். இவ்வளவும் செய்து மாறிய பின் , என் தோற்றம் இயக்குநருக்குப் பிடித்து ஒரு வழியாகத் திருப்தி வந்த பிறகுதான் படப்பிடிப்புக்கே போனோம். படப்பிடிப்பில் நடித்துப் பார்த்த போது தான் நடிப்பு என்றால் எவ...
விஷால் ஆசைப்பட்ட வில்லன் வேடம்…!

விஷால் ஆசைப்பட்ட வில்லன் வேடம்…!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
விஷால் பிலிம் பேக்டரி சார்பாக விஷால் நடித்து தயாரிக்கும் திரைப்படம் “ இரும்புத்திரை “. இப்படத்தில் கதாநாயகனாக விஷால் , கதாநாயகியாக சமந்தா நடிக்க பவர்புல்லான வில்லன் வேடத்தில் நடிகர் அர்ஜுன் நடிக்கிறார். ஜார்ஜ் C வில்லியம்ஸ் ஒளிப்பதிவில் , ஆண்டனி L ரூபன் படத்தொகுப்பில் உருவாகும் இப்படத்துக்கு இசை யுவன் ஷங்கர் ராஜா. படத்தை இயக்குநர் மித்ரன் கூறியது :- இரும்புத்திரை படத்தின் கதையை முதலில் நான் விஷாலிடம் சொல்லும் போது அவர் இந்த கதை பிடித்திருந்தால் விஷால் பிலிம் பேக்டரியின் மூலம் வேறு யாரையாவது கதாநயாகனாக வைத்து இப்படத்தை தயாரிக்கலாம் என்ற முடிவில் தான் கதையை கேட்டார். நான் கதையை சொல்லி முடித்ததும் இப்படத்தின் கதை அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. இந்த கதையில் நானே நடிக்கிறேன். நானே தயாரிக்கிறேன். நாம இந்த படத்தை பண்றோம். ஆனால் நான் வில்லன் வேடத்தில் தான் நடிப்பேன் என்றார். நான் தான்...
10 ஓவர் ஆட்டங்களாக மாறிய நட்சத்திர கிரிக்கெட் போட்டி..!

10 ஓவர் ஆட்டங்களாக மாறிய நட்சத்திர கிரிக்கெட் போட்டி..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள்
கடந்த சில ஆண்டுகளாக நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது. பிரபல நடிகர்கள் பங்கேற்று விளையாடும் இந்த போட்டி இதுவரை 20 ஓவர் போட்டிகளாக நடந்தன. இந்த ஆண்டு இது 10 ஓவர் நட்சத்திர கிரிக்கெட் போட்டியாக மாற்றப்பட்டுள்ளது. இதற்கு ‘சி.சி.எல். டி10 பிளாஸ்ட்’ என்று பெயர் சூட்டி உள்ளனர். 90 நிமிடம் நடைபெறும் இந்த கிரிக்கெட் போட்டியில் திரைப்பட நடிகர்கள் கலந்து கொண்டு ஆடுகிறார்கள். இந்த ஆண்டு நடைபெறும் சி.சி.சி. டி.10 பிளாஸ்ட் நட்சத்திர கிரிக்கெட் போட்டியில், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, பெங்காலி ஆகிய 6 அணிகள் பங்கேற்கின்றன. நட்சத்திர கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் அணிகளின் அறிமுகவிழா ஐதராபாத்தில் நடந்தன. இதில் சென்னை ரைனோர்ஸ் அணி உரிமையாளர் ஸ்ரீகாந்த், கேரள ஸ்ட்ரைகர்ஸ் அணி உரிமையாளர் ராஜ்குமார், ஸ்ரீபிரியா ராஜ்குமார், மும்பை ஹீரோஸ் அணி உரிமையாளர் போனிகபூர், தெலுங்கு ...