மலையக தமிழர்களால் மறக்க முடியாத மாபெரும் தலைவர் நூற்றாண்டு விழாவில் எம்ஜிஆருக்கு இலங்கை கல்வி அமைச்சர் புகழாரம்..!
மக்கள் திலகம், புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் நூற்றாண்டு விழாவை தமிழகம் முழுவதும் நேற்று முதல் கொண்டாடி வருகிறார்கள். எம்ஜிஆர் தமிழகத்தை ஆட்சி செய்து மக்களின் மனசில் நீங்காத இடத்தை பிடித்தவர் என்றாலும் அவர் பிறந்த இடம் இலங்கை என்பதால் இலங்கையிலும் எம்ஜிஆரின் நூற்றாண்டு விழா மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இலங்கை கல்வி அமைச்சர் ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் எம்ஜிஆரின் திருவுருவ படத்தை அமைச்சர் ராதாகிருஷ்ணன் திறந்து வைத்து பேசினார். எம்ஜிஆரின் வாழ்க்கை வரலாற்று வீடியோ திரையிடப்பட்டது. எம்ஜிஆரின் சாதனைகள் குறித்து பலர் பேசினார்கள்.
தமிழக அரசியல் தலைவர் ஒருவரின் நூற்றாண்டு விழா கொண்டாட்டம் அந்நிய தேசத்தில் ஒரு அமைச்சர் முன்னிலையில் நடப்பது எம்ஜிஆர் அவர்களுக்கு மட்டும்தான் என்பது குறிப்பிடித்தக்கது. மேலும், தமிழ் விடுதலை போராட்டத்தில் ஈடுபட்ட பிரபாகரனுக்கு பல்வேறு வகையில் கோடிக்கணக...
