வெள்ளிக்கிழமை, ஜூலை 17
Shadow

Author: Kodanki

“டிராமா” ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிப்பு சொல்லிக் கொடுத்த கிஷோர்!

“டிராமா” ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிப்பு சொல்லிக் கொடுத்த கிஷோர்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  *வைப் 3 ப்ரொடக்‌ஷன் தயாரிக்க சசிகலா ப்ரொடக்‌ஷன்ஸ் வெளியிடும் "டிராமா"... படக்குழுவினரை ஆச்சர்யத்தில் ஆழ்த்திய கிஷோர்!!** *180 நாட்கள் ரிகர்சலை ஏழே நாட்களில் முடித்த கிஷோர்... அசந்து போன “டிராமா” படக்குழு!!* மலையாள இயக்குனர் அஜு குளுமலா இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் தான் “டிராமா”. இந்த படத்தில் கிஷோர் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் ஜெய்பாலா நாயகனாகவும் காவ்யா பெல்லு நாயகியாகவும் நடித்திருக்கிறார்கள். இந்த படமானது ஒரே ஷாட்டில் படமாக்கப்பட்டிருக்கிறது. இதற்காக படக்குழு படத்தில் நடிக்கும் நடிகர்களை வைத்து சுமார் 180 நாட்கள் ரிகர்சல் நடத்த திட்டமிட்டிருந்தது. நடிகர் கிஷோர் இந்த ரிகர்சலை வெறும் 7 நாட்களில் முடித்து, படக்குழுவினர் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியிருக்கிறார். அதுமட்டுமல்லாமல், இரவு இரண்டு மணிக்கெல்லாம் அடுத்த ...
நடிகர் ராணா டகுபதி வெளியிட்ட ‘கப்ஜா’ பட டீசர்

நடிகர் ராணா டகுபதி வெளியிட்ட ‘கப்ஜா’ பட டீசர்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  நடிகர் ராணா டகுபதி வெளியிட்ட ‘கப்ஜா’ பட டீசர் ரியல் ஸ்டார் உபேந்திராவின் பிறந்த நாள் பரிசாக வெளியாகியிருக்கும் ‘கப்ஜா’ பட டீசர் கன்னட திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர்களான உபேந்திரா மற்றும் கிச்சா சுதீப் கதையின் நாயகர்களாக நடித்திருக்கும் 'கப்ஜா' படத்தின் டீசர் வெளியாகி இருக்கிறது. ரியல் ஸ்டார் உபேந்திராவின் பிறந்த நாளை முன்னிட்டு, இப்படத்தின் டீசரை ‘பாகுபலி’ படப் புகழ் நடிகர் ராணா டகுபதி வெளியிட்டிருக்கிறார். வெளியான குறுகிய கால அவகாசத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. கன்னட திரையுலகிலிருந்து 'கே ஜி எஃப் 1 & 2 ', '777 சார்லி', 'விக்ராந்த் ரோணா' என பிரம்மாண்டமான பட்ஜெட்டில் தயாரான படைப்புகள் வெளியாகி, கோடிக்கணக்கிலான வசூலை குவித்து வருவதால் ஒட்டுமொத்த இந்திய திரையலகின் கவனமும் தற்போது கன்னட திரையுலகின் மீது திரும்பி இருக்கிறது. இங்கு நட்சத்திர நடிகர்கள...
ராணி எலிசபெத் இறுதிச்சடங்கு: உலக தலைவர்கள் 500 பேர் அஞ்சலி !

ராணி எலிசபெத் இறுதிச்சடங்கு: உலக தலைவர்கள் 500 பேர் அஞ்சலி !

HOME SLIDER, NEWS, செய்திகள்
இங்கிலாந்து மகாராணியாக கடந்த 70 ஆண்டுகள் 214 நாட்கள் இருந்து வைர விழா கொண்டாடி சாதனை படைத்த ராணி எலிசபெத் (வயது 97) உடல் நலக்குறைவு காரணமாகவும், வயது மூப்பினாலும் கடந்த 8-ந் தேதி மரணம் அடைந்தார். அவரது உடல் லண்டன் பாராளுமன்ற வளாகத்தில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அரங்கத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. கடந்த 5 நாட்களாக லட்சக்கணக்கான பொதுமக்கள் சுமார் 17 மணி நேரத்துக்கும் மேலாக கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் ராணி மேல் வைத்திருந்த அன்பால் நீண்ட வரிசையில் காத்திருந்து அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வந்தனர். ஏராளமானோர் குடும்பம் குடும்பமாக வந்து அஞ்சலி செலுத்தினர். இறுதிச்சடங்கில் பங்கேற்க இந்தியா, அமெரிக்கா, பிரான்ஸ், ஜப்பான், பாகிஸ்தான், உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த 500 தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. ரஷியா, ஆப்கானிஸ்தான், மியான்மர், சிரியா, வட கொரியா ஆகிய நா...
சண்டை காட்சி படப்பிடிப்பை நிறைவு செய்த வெற்றிமாறன் !

சண்டை காட்சி படப்பிடிப்பை நிறைவு செய்த வெற்றிமாறன் !

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
கடந்த ஆண்டு வெளியான இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நல்ல வரவேற்பை பெற்றது. விடுதலை படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது. விடுதலை திரைப்படம் இரண்டு பாகங்களாக தயாராவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியானது. இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் ஆக்‌ஷன் சண்டை காட்சிகளை நிறைவு செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. அதில், ஒரு தீவிரமான ஆக்‌ஷன் காட்சிகளை சண்டை இயக்குனர் பீட்டர் ஹெயின் வடிமைத்துள்ளார். வெற்றிமாறனின் விடுதலை படத்திற்கான ஒருகட்ட படப்படிப்பு நிறைவு என்று குறிப்பிடப்பட்டு சில புகைப்படங்களையும் படக்குழு இணைத்துள்ளது....
வெந்து தணிந்தது காடு படம் இவ்ளோ வசூலிக்கும்னு நானே நினைக்கல – சிம்பு

வெந்து தணிந்தது காடு படம் இவ்ளோ வசூலிக்கும்னு நானே நினைக்கல – சிம்பு

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  வெந்து தணிந்தது காடு” திரைப்பட நன்றி அறிவிப்பு விழா சென்னையில் நடந்தது. Vels Film International தயாரிப்பாளர் Dr.ஐசரி K கணேஷ் தயாரிப்பில், கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், AR ரஹ்மான் இசையில், சிலம்பரசன் TR நடித்து வெளியான “வெந்து தணிந்தது காடு” திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வெற்றி பெற்றுள்ளது. விமர்சகர்களிடமும் பெரும் பாராட்டுக்களை குவித்து வரும் நிலையில், படக்குழுவினர் நேற்று பத்திரிக்கை ஊடக நண்பர்களை சந்தித்து நன்றி தெரிவித்தனர். இவ்விழாவினில் எடிட்டர் ஆண்டனி பேசியதாவது … “ இந்த படத்தை வெற்றியடைய வைத்த பத்திரிக்கையாளர்களுக்கு நன்றி. இந்த படத்தில் பணிபுரிந்த அனுபவம் மகிழ்ச்சியாக இருந்தது. நன்றி. ஒளிப்பதிவாளர் சித்தார்த் கூறியதாவது.., “ இந்த படத்தில் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தது எனக்கு மகிழ்ச்சி. சிலம்பரசன், கௌதம் மேனன், ஏ ஆர் ரகுமான் உடன் இணைந்து...
இரு மொழிகளில் முதல் படத்தை தொடங்கிய மஹிந்திரா பிக்சர்ஸ்!

இரு மொழிகளில் முதல் படத்தை தொடங்கிய மஹிந்திரா பிக்சர்ஸ்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
    *மஹிந்திரா பிக்சர்ஸ் முதல் படம் ஆரம்பமானது!* சினிமா ரசிகர்களுக்கு பொழுதுபோக்கை வழங்குவதை முக்கிய நோக்கமாகக் கொண்டு மஹிந்திரா பிக்சர்ஸ் எனும் புதிய தயாரிப்பு நிறுவனம் புதிய நம்பிக்கையுடன் திரைப்படத் துறையில் நுழைந்தது. இந்த நிறுவனத்தின் அலுவலகம் திறப்பு விழா ஹைதராபாத்தில் கோலாகலமாக நடைபெற்றது. முதல் முயற்சியாக வித்தியாசமான சஸ்பென்ஸ் மற்றும் திரில்லர் கதையை தேர்வு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. வல்லூரி ஸ்ரீனிவாச ராவ் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். சின்னா வெங்கடேஷ் இயக்குகிறார். சாய் கார்த்திக் ஜாடி தமிழில் வழங்குகிறார். படம் பற்றி தயாரிப்பாளர் வல்லூரி சீனிவாச ராவ் கூறியதாவது.. 'வழக்கமான படங்களில் இருந்து மாறுபட்டு சஸ்பென்ஸ் மற்றும் திரில்லர் கதையை தேர்வு செய்துள்ளோம். மேலும்.. இது ஒரு அழகான காதல் படமும் கூட. தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒரே நேரத்தில் தயார...
தேனி மாவட்டத்தில் 2633 மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டம் கலெக்டர் தொடங்கி வைத்தார்!

தேனி மாவட்டத்தில் 2633 மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டம் கலெக்டர் தொடங்கி வைத்தார்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரையில் 15-ந் தேதி முதல்-அமைச்சரின் காலை உணவுத்திட்டத்தினை தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து நேற்று தேனி மாவட்ட கலெக்டர் முரளிதரன் கடமலை-மயிலை ஊராட்சி ஒன்றியம், ஆத்தாங்கரைப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட இராஜேந்திரா நகர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் காலை உணவுத் திட்டத்தினை மாணவ- மாணவிகளுக்கு வழங்கி தொடங்கி வைத்து அவர்களுடன் உணவு அருந்தினார். அப்போது கலெக்டர் தெரிவித்ததாவது:- சத்துணவுத் திட்டம் குழந்தைகளைத் தவறாமல் பள்ளிக்குச் செல்லத் தூண்டுவது மட்டுமல்லாமல் வகுப்பறையில் பசியின்றிப் படிக்கவும் உதவுகிறது. மேலும், குழந்தைகளின் ஆரோக்கியத்தினை உறுதிப்படுத்தி, கற்றல் ஆர்வத்தினை அதிக்கப்படுத்துகிறது. ஒவ்வொரு நாளும் சத்தாண உணவினை வழங்குவது குழந்தைகளிடையே ஊட்டச்சத்து குறைபாட்டினை நிவர்த்தி செய்து அதன் மூலம் மனித வளர்ச்சியை மேம்படுத்திடும் வகையில் ச...
நடிக்க தெரியவில்லை என்று என்னை கேலி செய்தனர்- துல்கர் சல்மான்!

நடிக்க தெரியவில்லை என்று என்னை கேலி செய்தனர்- துல்கர் சல்மான்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
மலையாள நடிகர் மம்முட்டி மகனான துல்கர் சல்மான், தமிழில் மணிரத்னம் இயக்கிய ஓ காதல் கண்மணி படத்தில் நடித்து பிரபலமானார். கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், ஹெய் சினாமிகா படங்களின் வெற்றி அவருக்கு திருப்பு முனையை கொடுத்தது. தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் சமீபத்தில் திரைக்கு வந்த சீதாராமம் படம் மூலம் திறமையான நடிகர் என்ற பெயர் பெற்றார். ஆனாலும் துல்கர் சல்மான் சினிமாவுக்கு வந்த புதிதில் நடித்த சில மலையாள படங்கள் சரியாக போகாததால் கேலி மற்றும் அவமதிப்புகளை சந்தித்ததாக தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், ''நான் சினிமாவில் நடிக்க வந்த புதிதில் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டேன். எனக்கு நடிக்க தெரியவில்லை என்றும், சினிமாவை விட்டு வெளியேறும்படியும் விமர்சித்தனர். எனது தந்தை மம்முட்டியை போன்று என்னால் சினிமாவில் நிலைக்க முடியாது என்றும் பேசினர். அதை பொருட்பட...
கடற்கரையில் அமலாபாலின் கவர்ச்சி புகைப்படம்!

கடற்கரையில் அமலாபாலின் கவர்ச்சி புகைப்படம்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
தமிழ் திரையுலகிற்கு சிந்து சமவெளி படத்தின் மூலம் அறிமுகமானவர் அமலாபால். அதன்பின்னர் மைனா, தெய்வதிருமகள், தலைவா, ராட்சசன் போன்ற பல வெற்றி படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான கடாவர் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்நிலையில் அமலாபால் தனது கவர்ச்சி புதிய புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், கடற்கரை என் சிகிச்சையாளர் என்று குறிப்பிட்டுள்ளார். கடற்கரையில் கவர்ச்சி காட்டும் அமலாபாலின் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்....
உத்தர பிரதேசத்தில் கனமழையால் சுவர் இடிந்து விழுந்து 9 பேர் உயிரிழப்பு!

உத்தர பிரதேசத்தில் கனமழையால் சுவர் இடிந்து விழுந்து 9 பேர் உயிரிழப்பு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
உத்தர பிரதேச மாநில தலைநகர் லக்னோவில் உள்ள தில்குஷா பகுதியில் அமைந்தள்ள ராணுவ வளாகத்திற்கு வெளியே ஏராமானோர் குடிசைகளில் வசித்து வந்தனர். நேற்றிரவு தொடர் கன மழை காரணமாக ராணுவ வளாக சுவர் இடிந்து விழுந்தது. இதில் இடிபாடுகளில் சிக்கி 9 பேர் உயிரிழந்ததாகவும் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டதாக, காவல்துறை இணை ஆணையர் பியூஷ் மோர்டியா தெரிவித்தார். அதிகாலை 3 மணியளவில் ஒன்பது உடல்கள் இடிபாடுகளில் இருந்து வெளியே எடுக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், இரங்கல் தெரிவித்துள்ளார். இதேபோல் துணை முதல்வர்கள் கேசவ் பிரசாத் மவுரியா மற்றும் பிரஜேஷ் பதக் ஆகியோரும் இரங்கல் தெரிவித்தனர். மேலும் உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பத்திற்கும் தலா ரூ.4 லட்சம் நிதியுதவி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளதாக முதலமைச்சர் அலுவலக டுவிட்டர் பதிவில் கூ...