சனிக்கிழமை, நவம்பர் 1
Shadow

ukrain war

ரஷிய அதிபர் புதின் மெழுகு சிலை அகற்றம்!

ரஷிய அதிபர் புதின் மெழுகு சிலை அகற்றம்!

HOME SLIDER, politics, ukrain war, World News, உலக செய்திகள்
பிரான்ல் நாட்டில் பாரிஸ் நகரில் கிர்வின் அருங்காட்சியகம் செயல்பட்டு வருகிறது. இந்த அருங்காட்சியகத்தில் உலக அளவில்  முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் சாதனையாளர்களின் உருவத்தினை மெழுகு சிலையாக வடிவமைத்து காட்சிப்படுகின்றனர். இந்த நிலையில் , கிர்வின் அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த ரஷிய அதிபர் விளாடிமீர் புதினின் மெழுகு சிலை தற்போது அகற்றப்பட்டுள்ளது. இது குறித்து கிர்வின் அருங்காட்சியகத்தின் இயக்குநர் யெவஸ் டெல்ஹோமியோவ் பேசுகையில், தற்போது நடந்து கொண்டிருக்கும் உக்ரைன் ரஷிய இடையேயான போர் காரணமாக, ரஷிய அதிபர் விளாடிமீர் புதினின் மொழுகு சிலை அகற்றப்பட்டுள்ளதாக தெரிவித்தார். கிர்வின் அருங்காட்சியக வரலாற்றின் முதன் முறையாக , தலைவர் ஒருவரின் சிலை அகற்றப்பட்டுள்ளதாகவும், கடந்த சில நாள்களுக்கு முன்னர் சிலையை சிலர் சேதப்படுத்த முயற்சி செய்ததாகவும் ...
உக்ரைனிலிருந்து 8.36 லட்சம் பேர் வெளியேற்றம்!

உக்ரைனிலிருந்து 8.36 லட்சம் பேர் வெளியேற்றம்!

HOME SLIDER, ukrain war, World News, உலக செய்திகள்
  உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் தீவிரமடைந்துள்ள நிலையில் அந்நாட்டிலிருந்து சாரை சாரையாக மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு குடிபெயர்ந்து வருகின்றனர். கிழக்கு ஐரோப்பிய நாடான மால்டோவாவுக்கு குழந்தைகளுடன் ஏராளமான உக்ரேனியர்கள் சென்றனர். கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் போலந்தின் மெடிகா எல்லைக்கு சென்ற மக்களை அங்கு காத்திருந்த உறவினர்கள் கட்டி அணைத்து வரவேற்றனர். போருக்கு அஞ்சி லட்சக்கணக்கானோர் வெளியேறி வரும் நிலையில், உக்ரைனில் உள்ள மக்களுக்கும் ராணுவத்தினருக்கும் உதவ ஏராளமானோர் நாடு திரும்பி வருகின்றனர். போலந்தில் வாழ உக்ரேனியர்கள் சிலர் ரயில் மூலம் லீவ் மற்றும் ஒடேசா நகரங்களுக்கு வந்தடைந்தனர். உக்ரைனில் 2.65 லட்சம் கர்ப்பிணிகள் உள்ளதாக கூறியுள்ள ஐக்கிய நாடுகளின் மக்கள் தொகை நிதியம், அதில் 80,000 பேருக்கு 3 மாதங்களில் குழந்தை பிறக்கும் என தெரிவித்துள்ளது. உக்ரைனை வ...
ரயிலில் ஏறி தப்ப முயன்றால் துப்பாக்கியை காட்டி மிரட்டும் உக்ரைன் இராணுவம்’ – இந்திய மாணவர்கள் பகீர் குற்றச்சாட்டு

ரயிலில் ஏறி தப்ப முயன்றால் துப்பாக்கியை காட்டி மிரட்டும் உக்ரைன் இராணுவம்’ – இந்திய மாணவர்கள் பகீர் குற்றச்சாட்டு

HOME SLIDER, NEWS, politics, ukrain war, World News, உக்ரைன் போர், உலக செய்திகள்
  உக்ரைனில் போரின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அந்நாட்டில் சிக்கியுள்ள இந்திய மாணவர்கள் பெரும் சிரமங்களைச் சந்தித்து வருகின்றனர். ரயில்களில் ஏற விடாமல் உக்ரைனிய பாதுகாப்பு படையினரும், மக்களும் தள்ளிவிடுவதாக அங்குகள்ள தமிழர்கள் கண்ணீருடன் தெரிவிக்கின்றனர். உக்ரைனில் ரஷ்யா நடத்தி வரும் தாக்குதல் தீவிரமடைந்து வரும் நிலையில், அங்குள்ள இந்திய மாணவர்கள் நடந்து சென்றாவது எல்லையைக் கடக்குமாறு இந்திய அரசு அறிவுறுத்தியது. இதையடுத்து, கிடைக்கும் வழிகளில் எல்லாம் உக்ரைனை விட்டு வெளியேற, இந்திய மாணவர்கள் முனைந்து வருகின்றனர். ஆனால், அண்டை நாடுகளின் எல்லைகளுக்கு செல்வதற்காக ரயிலில் ஏற முயன்ற தங்களை, உக்ரைன் ராணுவமும் காவல் துறையும் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி தடுப்பதாக இந்திய மாணவர்கள் பதற்றத்துடன் தெரிவித்துள்ளனர். உக்ரைனில் ராணுவ வீரர்கள், காவல்துறையினர் ...