சனிக்கிழமை, ஜூலை 25
Shadow

politics

மின்வாரிய ஊழியர்களின் முத்தரப்பு பேச்சு வார்த்தை தோல்வி..!

மின்வாரிய ஊழியர்களின் முத்தரப்பு பேச்சு வார்த்தை தோல்வி..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
மின்வாரிய ஊழியர்களின் கோரிக்கை தொடர்பாக முத்தரப்பு பேச்சு வார்த்தை தோல்வியடைந்தது. மீண்டும் பிப்ரவரி 15-ம் தேதி மீண்டும் அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் என்று கூறியுள்ளனர். மின்வாரிய ஊழியர்களுக்கு 1.1.2015 முதல் ஊதிய உயர்வு வழங்கி இருக்க வேண்டும். ஊதிய உயர்வு ஒப்பந்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை குழுவுடன் தொழிற்சங்கங்கள் 4 கட்டமாக ஏற்கெனவே பேச்சு நடத்தின. தமிழ்நாடு மின்சார வாரியம், அதில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு 2.57 காரணி ஊதிய உயர்வு வழங்குவது தொடர்பான முத்தரப்புப் பேச்சுவார்த்தை கடந்த ஜன.22-ஆம் தேதி, தொழிற்சங்கப் பிரதிநிதிகள், மின்வாரிய அதிகாரிகள், தொழிலாளர் நலத் துறை ஆணையர் பங்கேற்புடன் நடைபெற்றது. இவற்றை நிர்வாகம் ஏற்க மறுத்ததால் உடன்பாடு எட்டப்படவில்லை. இந்நிலையில், கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம், பெருந்திரள் தர்ணா, காத்திருப்ப...
‘ஜல்லிக்கட்டு 5-23 ஜனவரி 2017’ பட ஒரு நாள் வசூலின் ஒரு பகுதி தமிழ் இருக்கைக்கு வழங்க ஒப்பந்தம்..!

‘ஜல்லிக்கட்டு 5-23 ஜனவரி 2017’ பட ஒரு நாள் வசூலின் ஒரு பகுதி தமிழ் இருக்கைக்கு வழங்க ஒப்பந்தம்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள்
நிஜம்தான். தமிழர்களது வீரத்தின் அடையாளமாக, தொன்றுதொட்டு குறிப்பிடப்படுவதில் ஜல்லிக்கட்டும் ஒன்று. தமிழ் மண்ணான இம்மாநிலத்தில், பொங்கல் திருநாளையொட்டி ஆண்டுதோறும் இந்த வீர விளையாட்டு நடப்பதைத் தடுக்கும் முயற்சிக்கு எதிராக, தமிழ் இளைஞர்களிடம் கடந்த ஆண்டு ஏற்பட்ட எழுச்சியைப் பின்னணியாகக் கொண்டு, 'ஜல்லிக்கட்டு 5-23 ஜனவரி 2017' என்ற பெயரிலேயே திரைப்படமாக்கியது - அஹிம்சா புரொடக்ஷன்ஸ் என்ற திரைப்பட தயாரிப்புக் குழு. அதேபோல, இன்று விவேகம் என, சொல்லப்படும் அறிவின் அடையாளமாக நிற்கும் பல்கலைக்கழகங்களில் - உலகப் புகழ் பெற்றது ஹார்ட்வேர்ட்! அதில் தமிழ் மொழி தொடர்பான ஆராய்ச்சிக்கும், அதன் வளர்ச்சிக்கும் துணை நிற்க தனி இருக்கை அமைக்கும் முயற்சியில் ஒரு குழு ஈடுபட்டுள்ளது. தமிழோடு தொடர்பு என்பதால் மட்டுமின்றி, தமிழின் சிறப்பு, தமிழர்களின் வீரம் உள்ளிட்ட பலவற்றையும் உலக அளவில் பறைசாற்றத் துடிக்கும் இ...
‘வெற்றியாளர் பட்டறை’ கண்காட்சியையும், ஒவிய போட்டியையும் அமைச்சர்  மாஃபா பாண்டியராஜன் துவக்கி வைத்தார்..!

‘வெற்றியாளர் பட்டறை’ கண்காட்சியையும், ஒவிய போட்டியையும் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் துவக்கி வைத்தார்..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
சென்னை பட்டாபிராம் அடுத்த அணைக்கட்டுச்சேரி கிராமத்தில் நடந்து வரும் ‘வெற்றியாளர் பட்டறை’ வகுப்புகள், நமது நாட்டின் அடுத்த தலைமுறையை ‘ஆரோக்கியமாகவும் ஆனந்தமாகவும்’ வளர்க்கும் முயற்சி. இதில் கடந்த சில வருடங்களாக நடக்கும் ‘ஒவிய வகுப்பின்’ மாணவர் படைப்புகளை ஞாயிறன்று  காட்சிப்படுத்தினர். இந்த கண்காட்சியையும், கிராம மாணவர்களுக்காக நடைபெறும் ஒவிய போட்டியையும் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்  துவக்கி வைத்தார். மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் முகுந்தன், தன் இதர நேரங்களில் தன் கிராமத்தின் எதிர்கால முன்னேற்றத்திற்கு தன்னலமற்ற பணியாற்றி வருகிறார். இந்த பட்டறையிலிருந்து பல்வேறு கலைகளை கற்று மாணவர்கள் வெகுவாக பயனடைகிறார்கள்....
தமிழக அரசின் மானிய ஸ்கூட்டர் திட்டம்.. 3 லட்சம் பெண்கள் விண்ணப்பம்..!

தமிழக அரசின் மானிய ஸ்கூட்டர் திட்டம்.. 3 லட்சம் பெண்கள் விண்ணப்பம்..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
ஸ்கூட்டர் வாங்க மகளிருக்கு 50% மானியம் வழங்கும் திட்டத்திற்கு தமிழ்நாடு முழுவதிலும் இருந்து 3,36,103 விண்ணப்பங்கள் வந்து இருக்கின்றன. இதில் இருந்து தகுதியானவர்களை தேர்ந்தெடுக்கும் பணி நடந்து வருகிறது. வேலைக்குச் மகளிர் செல்லும் பயனுறும் வகையில் இரு சக்கர வாகனம் வாங்கிட ரூ.25 ஆயிரம் மானியம் அரசு சார்பில் வழங்கப்படும் என கடந்த 2016 சட்டசபைக்கான தேர்தல் அறிக்கையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். இந்தத் திட்டத்தை தற்போதைய எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு செயல்படுத்த நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. அதன்படி முதற்கட்டமாக ஜெயலலிதாவின் பிறந்தநாளான பிப்ரவரி 24ம் தேதி இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும், அதற்கான விண்ணப்பம் ஊராட்சி, பேரூராட்சி அலுவலகங்களில் வழங்கப்படும் என்றும் கடந்த ஜனவரி 22ம் தேதி அறிவிக்கப்பட்டது. ...
கார்த்தி சிதம்பரத்திற்கு சுப்ரீம் கோர்ட் வழங்கிய லுக்அவுட் நோட்டீஸ் ரத்தாகுமா வரும் 16ல் தீர்ப்பு..!

கார்த்தி சிதம்பரத்திற்கு சுப்ரீம் கோர்ட் வழங்கிய லுக்அவுட் நோட்டீஸ் ரத்தாகுமா வரும் 16ல் தீர்ப்பு..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்திற்கு சுப்ரீம் கோர்ட் லுக்அவுட் நோட்டீஸ் வழங்கி உள்ளது. இந்நிலையில் கடந்த கார்த்தி சிதம்பரத்திற்கு எதிரான வழக்குகள் சென்னை ஐகோர்ட்டிற்கு மாற்றப்பட்டது. இதனையடுத்து தன்மீதான லுக்அவுட் நோட்டீசை ரத்து செய்ய வேண்டும் எனவும், தான் வெளிநாடு செல்ல அனுமதி அளிக்க வேண்டும் எனவும் சென்னை ஐகோர்ட்டில் கார்த்தி சிதம்பரம் மனுத்தாக்கல் செய்திருந்தார். இவ்வழக்கில் தொடர்பாக இன்று நேரில் ஆஜராக கார்த்தி சிதம்பரத்திற்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட இந்த வழக்கில் பிப்ரவரி 16 ல் தீர்ப்பு வழங்கப்பட உள்ளதாக சென்னை ஐகோர்ட் அறிவித்துள்ளது.  ...
தமிழக சட்டப்பேரவையில் ஜெயலலிதா உருவப்படத்தை சபாநாயகர் தனபால் திறந்து வைத்தார்

தமிழக சட்டப்பேரவையில் ஜெயலலிதா உருவப்படத்தை சபாநாயகர் தனபால் திறந்து வைத்தார்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  தமிழக சட்டப்பேரவையில் ஜெயலலிதா படதிறப்பு விழா நிகழ்ச்சி இன்று காலை தொடங்கியது.  இந்த நிகழ்ச்சியில், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தமிழக சட்டப்பேரவையில் மறைந்த முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் படம் இன்று திறக்கப்பட்டது.  இதற்காக நடந்த நிகழ்ச்சியில் முதல் அமைச்சர் பழனிசாமி மற்றும் துணை முதல் அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் முன்னிலையில் சபாநாயகர் தனபால் திறந்து வைத்துள்ளார். இந்த உருவப்படம் 7 அடி உயரம் மற்றும் 5 அடி அகலம் கொண்டது.  பச்சை நிற சேலையுடன் அவர் நிற்பது போன்று உருவப்படம் வரையப்பட்டு உள்ளது.  சட்டப்பேரவையில் 11வது தலைவராக ஜெயலலிதாவின் படம் வைக்கப்பட்டு உள்ளது. திருவள்ளுவர், காந்தி, ராஜாஜி, காமராஜர், பெரியார், அண்ணா, காயிதே மில்லத், முத்துராமலிங்க தேவர், எம்.ஜி.ஆர். மற்றும் அம்பேத்கர் ஆகியோரது உருவப்படங்கள் அவ...
அமெரிக்காவில் தமிழ் பாரம்பரிய உடையான வேட்டியில் அசத்திய கமல்ஹாசன்

அமெரிக்காவில் தமிழ் பாரம்பரிய உடையான வேட்டியில் அசத்திய கமல்ஹாசன்

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  அமெரிக்கா சென்றுள்ள கமல்ஹாசன் அங்கு ஹார்வர்டு பிசினஸ் பள்ளி நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அங்கு தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி கட்டி வந்து அசத்தினார். அமெரிக்க பயணம் என்றாலே ‘கோட்-சூட்’ அணிந்து செல்பவர்கள் மத்தியில், வேட்டியில் கமல்ஹாசனை பார்த்த அமெரிக்க வாழ் தமிழர்களும், அமெரிக்கர்களும் வியந்து பாராட்டினார்கள். வேட்டி கட்டி மிடுக்காக கமல்ஹாசன் நடந்து வந்த போது பார்வையாளர்கள் கரகோ‌ஷம் எழுப்பி வரவேற்றனர். பின்னர் நிருபர்கள் அவரை பேட்டி கண்டனர். ரஜினியுடன் கூட்டணி சேருவீர்களா? என்று கேட்டதற்கு கமல்ஹாசன் பதில் அளிக்கையில் அரசியலில் ரஜினியுடன் கூட்டணி சேரும் வாய்ப்பு இல்லை என்று சூசகமாக தெரிவித்தார். நானும் ரஜினிகாந்தும் சிறந்த நண்பர்கள். ஆனால் நட்பு வேறு. அரசியல் என்பது வேறு. எங்களுடைய நோக்கங்கள் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதா...
ஊழல் புகாரால் மண்ணைக்  கவ்வப்போகும் விஷால் பாண்டவர் அணி

ஊழல் புகாரால் மண்ணைக் கவ்வப்போகும் விஷால் பாண்டவர் அணி

CINI NEWS, HOME SLIDER, MOVIES, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
விஷாலுக்கு ரித்திஷ் பகிரங்க சவால்..! நடிகர் வாராகி நடித்து இயக்கி தயாரித்திருக்கிற படம் சிவா மனசுல புஷ்பா. இந்த படத்தின் ஆடியோ வெளியீடு சமீபத்தில் சென்னையில் நடந்தது. இந்த விழாவில் நடிகர்கள் எஸ்.வி.சேகர், ஜே.கே.ரித்திஷ், தருண், இயக்குனர் எஸ்.ஏ.சி. உட்பட பலர் கலந்து கொண்டனர். விழாவின் ஹய்லைட் ஆக நடிகர் சங்கத்தின் மலேசியா நிகழ்ச்சி நடத்தி தருவதற்கு நடிகர் சங்க செயலாளர் விஷாலுக்கு லஞ்சமாக பலகோடிகள் பேரம்பேசும் வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. விழாவில் ஜே.கே.ரித்திஷ் பேசியதாவது: நான் என் நண்பர்களோடு பேசிக் கொண்டிருந்த வீடியோவை எனக்கு தெரியாமலேயே எடுத்திருக்கிறார். அந்த வீடியோவைதான் நீங்கள் பார்க்கப்போகிறீர்கள். விஷாலை இதுவரைக்கும் என் நண்பன் என்றுதான் நான் சொல்லியிருக்கிறேன். விஷால் ஊழல் பண்ணார்னு வாராகி அண்ணே கேஸ்போட்டப்ப கூட நான் சொல்லுவேன் அண்ணே யாரையும் அப்படி சொல்லாதீங...
ஜெ.தீபா வீட்டிற்கு சோதனை நடத்த வந்த போலி வருமான வரி அதிகாரி தப்பி ஓட்டம்

ஜெ.தீபா வீட்டிற்கு சோதனை நடத்த வந்த போலி வருமான வரி அதிகாரி தப்பி ஓட்டம்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா. ஜெயலிலிதா மறைவுக்குப் பிறகு கட்சி பிளவுபட்டபோது, அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்த நிர்வாகிகள் ஆதரவுடன் ‘எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை’ என்ற அமைப்பை தொடங்கி நடத்தி வரும் தீபா, தன்னை ஜெயலலிதாவின் அரசியல் வாரிசு என்று கூறி வருகிறார். இந்நிலையில் சென்னை தி.நகரில் உள்ள ஜெ.தீபாவின் வீட்டிற்கு இன்று ஒரு நபர் வந்துள்ளார். குடியிருப்பு காவலாளியிடம் தன்னை வருமான வரித்துறை அதிகாரி மித்தேஷ் குமார் என்றும், சோதனை நடத்த வந்திருப்பதாகவும் கூறியுள்ளார். மற்ற அதிகாரிகள் வந்ததும் சோதனையை தொடங்க உள்ளதாக கூறி அடையாள அட்டையை காட்டியதால், அவரை தீபாவின் கணவர் உள்ளே அனுமதித்து உட்கார வைத்துள்ளார். இதற்கிடையே, வருமான வரித்துறை அதிகாரி சோதனை நடத்த வந்திருப்பதாக ஜெ. தீபாவின் வழக்கறிஞருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் வந்து, அந்த நபரிடம் விசாரித்தபோது முன்...
நீதிபதி லோயா மரணம்: ராகுல் தலைமையில் எம்.பி.க்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கை

நீதிபதி லோயா மரணம்: ராகுல் தலைமையில் எம்.பி.க்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கை

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
ஷராபுதீன் போலி என்கவுண்டர் வழக்கை விசாரித்த நீதிபதி லோயா மரணமடைந்ததில், சிறப்பு விசாரணை வேண்டும் என ராகுல் காந்தி தலைமையில் எம்.பி.க்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். பா.ஜ.க தேசிய தலைவர் அமித்ஷா குஜராத் மாநில உள்துறை மந்திரியாக இருந்தபோது போலி என்கவுண்டர் புகார் எழுந்தது. இவ்வழக்கை மும்பை சி.பி.ஐ நீதிபதி லோயா விசாரித்து வந்த நிலையில், அவர் திடீரென மாரடைப்பால் மரணமடைந்தார். இதன் பின்னர், அவ்வழக்கை வேறு நீதிபதி விசாரித்து அமித்ஷாவை வழக்கில் இருந்து விடுதலை செய்தார். தற்போது, நீதிபதி லோயா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பல்வேறு தரப்பில் இருந்து புகார் எழுந்தது. அவர் மரணத்தில் உள்ள சந்தேகத்தை விசாரிக்க உத்தரவிட வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டு, தற்போது அந்த வழக்கு விசாரணையில் உள்ளது. இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் கபில் சிபில், குலா...