செவ்வாய்க்கிழமை, மே 19
Shadow

politics

இந்திய கடலோரக் காவல்படையில் 30 ஆண்டுகள் சேவையாற்றிய வருணா கப்பல்; இலங்கைக்கு இலவசமாக தாரை வார்ப்பு

இந்திய கடலோரக் காவல்படையில் 30 ஆண்டுகள் சேவையாற்றிய வருணா கப்பல்; இலங்கைக்கு இலவசமாக தாரை வார்ப்பு

HOME SLIDER, NEWS, politics
இந்திய கடலோரக் காவல்படையில் 30 ஆண்டுகள் சேவையாற்றிய வருணா ரோந்துக் கப்பலை இலங்கை கடற்படைக்கு இலவசமாக வழங்குவதற்கு தமிழக மீனவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்தியாவின் பல்லாயிரக்கணக்கான கிலோ மீட்டர் கடற்கரையைப் பாதுகாக்கும் பணியில் கடலோரக் காவல் படையினர் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக சுமார் 20 ரோந்துக் கப்பல்கள் வரையிலும் அன்றாட பணியில் ஈடுபட்டு வருகின்றன. இதில் 1984-ம் ஆண்டு தயாராகி 1988-ம் ஆண்டு கடலோரக் காவல் படையில் இணைக்கப்பட்ட வருணா கப்பலானது சுமார் 30 ஆண்டுகள் சிறப்பான சேவையாற்றி கடந்த ஆகஸ்ட் மாதம் ஓய்வு பெற்றது. இந்தியப் பெருங்கடல் மற்றும் வங்காள விரிகுடா பகுதிகளில் கடல்சார் குற்றங்களைத் தடுக்கும் நடவடிக்கையில் இலங்கை காட்டிவரும் ஈடுபாட்டிற்காக இலங்கைக் கடற்படைக்கு 30 ஆண்டுகள் சேவையாற்றி வந்த இந்திய கடலோர காவல்படையின் வருணா ரோந்துக் கப்பலை இலங்கைக்கு அளிக்கப்பட உள்ளத...
ஜெ.,அக்டோபர் மாதமே மரணம்: திமுகவைச் சார்ந்த டாக்டர் சரவணன் நீதிபதியிடம் புகார்

ஜெ.,அக்டோபர் மாதமே மரணம்: திமுகவைச் சார்ந்த டாக்டர் சரவணன் நீதிபதியிடம் புகார்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
ஜெயலலிதா டிச.5-க்கு முன்பே அக்டோபர் மாதமே மரணமடைந்துவிட்டார், அவரது கைரேகை அவர் மரணமடைந்த பின்னரே எடுக்கப்பட்டது. ஆகவே அதில் நீரோட்டம் இல்லை என திருப்பரங்குன்றம் திமுக வேட்பாளர் டாக்டர் சரவணன் விசாரணை ஆணைய நீதிபதி ஆறுமுகசாமியிடம் புகார் அளித்துள்ளார். தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக கடந்த டிச.5 அன்று மரணம்டைந்தார். அவர் மரணத்தில் மர்மம் இருப்பதாக ஜெ.தீபா, ஓபிஎஸ் மற்றும் எதிர்க்கட்சித்தலைவர்கள் பலர் புகார் அளித்திருந்த நிலையில் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் இந்த ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. அவர் விசாரணையை தொடங்கி உள்ளார். ஜெயலலிதா மரணம் குறித்த ஆவணங்களை நேரிலோ, பதிவு தபாலிலோ தன்னிடம் அளிக்கலாம் என்று ஏற்கெனவே அறிவித்திருந்தார். இந்நிலையில் நேற்று ஜெ.தீபாவின் கணவர் மாதவன் சில ஆவணங்...
37 ஆண்டுகால சர்வாதிகார ஆட்சி முடிவு: ஜிம்பாப்வே அதிபர் முகாபே ராஜினாமா

37 ஆண்டுகால சர்வாதிகார ஆட்சி முடிவு: ஜிம்பாப்வே அதிபர் முகாபே ராஜினாமா

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  ஜிம்பாப்வே அதிபர் முகாபே ராஜினாமா செய்ததையடுத்து அவரது 37 ஆண்டுகால சர்வாதிகார ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது. ஜிம்பாப்வேக்கு 1980-ல் சுதந்திரம் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து 1980-ம் ஆண்டில் ஜிம்பாப்வே ஆப்பிரிக்க தேசிய கூட்டமைப்பு (இசட்.ஏ.என்.யு) கட்சியை ராபர்ட் முகாபே தொடங்கினார். கடந்த 1987-ல் ஜிம்பாப்வே ஆப்பிரிக்க மக்கள் கூட்டமைப்பு (இசட்.ஏ.பி.யு) கட்சி முகாபே கட்சியுடன் இணைந்தது. சுமார் 37 ஆண்டுகள் ஜிம்பாப்வே நாட்டை ஆண்ட முகாபே, துணை அதிபர் எம்மர்சனை அண்மையில் பதவி நீக்கம் செய்துவிட்டு தனது மனைவி கிரேஸை (52) அடுத்த அதிபராக்க முயற்சி செய்தார். இதற்கு ராணுவ தளபதி கான்ஸ்டன்டினோ சிவெங்கா கடும் எதிர்ப்பு தெரிவித்தார். கடந்த 15-ம் தேதி ஆட்சி, அதிகாரத்தை ராணுவம் கைப்பற்றியது. 93 வயதாகும் அதிபர் முகாபே வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். ஜிம்பாப்வே நாட்டில் வறுமை, வேலைவாய்ப்பின்மை அத...
ராகவேந்திரா மடத்துக்கு ரூ.10 கோடி நன்கொடை வழங்கிய ரஜினி

ராகவேந்திரா மடத்துக்கு ரூ.10 கோடி நன்கொடை வழங்கிய ரஜினி

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
நடிகர் ரஜினிகாந்த் ராக வேந்திரராவின் தீவிர பக்தர். இந்த நிலையில், ரஜினிகாந்த் நேற்று கர்நாடகா - ஆந்திர எல்லையில் உள்ள மந்திராலயம் ஸ்ரீராக வேந்திரர் சாமி கோவிலுக்கு சென்றார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் சால்வை அணிவித்து வர வேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் கோவிலில் நடந்த சிறப்பு பூஜையில் பங்கேற்று ராகவேந்திரர் சாமியை பயபக்தியுடன் வழிபட்டார். அங்கு சிறிது நேரம் அமைதியாக இருந்து தியானம் செய்தார். பின்னர் ராகவேந்திரர் கோவில் மடாதிபதி சுபதேந்திர தீர்த்தசாமிகளை சந்தித்து ஆசி பெற்றார். அங்கும் ரஜினிக்கு மடம் சார்பில் பொன்னாடை அணிவிக்கப்பட்டது. மடாதிபதியுடன் ரஜினி சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது ராகவேந்திரர் கோவில் மிகவும் பழமையாகிவிட்டது பற்றியும், பக்தர்கள் தங்க விடுதிகள் தேவை என்பது பற்றியும் கேட்டு அறிந்தார். இதையடுத்து ரஜினிகாந்த் மந்திராலயம் ராகவேந்திரர் கோவிலு...
ஜெயலலிதா மரணம்: அரசு மருத்துவர்கள் நாளை ஆஜராக சம்மன் அனுப்பியது விசாரணை ஆணையம்

ஜெயலலிதா மரணம்: அரசு மருத்துவர்கள் நாளை ஆஜராக சம்மன் அனுப்பியது விசாரணை ஆணையம்

HOME SLIDER, NEWS, politics
மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது. ஜெயலலிதா மரணம் குறித்து ஏதாவது தகவல் இருந்தால் சம்பந்தப்பட்ட நபர்கள் அதுகுறித்த விவரத்தை பிரமாண பத்திரமாகவோ அல்லது புகார் மனுவோ ஆணையத்தில் தாக்கல் செய்யலாம் என்று ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி தி.மு.க. மருத்துவர் அணி துணைத்தலைவரும், திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட வேட்பாளருமான டாக்டர் சரவணன், அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. ஆனூர் ஜெகதீசன், ஜெ.தீபாவின் கணவர் மாதவன் உள்பட 70 பேர் நேரடியாகவும், தபால் மூலமாகவும் பிரமாண பத்திரத்தை ஆணையத்துக்கு அளித்துள்ளனர். இதற்கிடையே, ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் அலுவலகத்தில் இன்று காலை விசாரணை தொடங்கியது. தி.மு.க. மருத்துவர் அணி துணை தலைவர் டா...
தமிழகத்தில் இப்போது நடக்கும் வருமானவரி ரெய்டு அரசியல் உள் நோக்கம் கொண்டது – ஜி.ராமகிருஷ்ணன் கண்டனம்

தமிழகத்தில் இப்போது நடக்கும் வருமானவரி ரெய்டு அரசியல் உள் நோக்கம் கொண்டது – ஜி.ராமகிருஷ்ணன் கண்டனம்

HOME SLIDER, politics, செய்திகள்
  வருமான வரி சோதனையின் நோக்கம் நேர்மையற்றது - அரசியல் உள்நோக்கமுடையது-மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விமர்சனம் தமிழகத்தில் சசிகலா, டி.டி.வி.தினகரன் குடும்பத்தினரின் வசிப்பிடங்கள், அலுவலகங்கள் ஆகியவற்றில் நேற்று காலை முதல் வருமானவரித்துறை சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. வரி ஏய்ப்போர், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்ப்போர் யாராக இருந்தாலும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்பது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைபாடு. ஆனால் 187 இடங்கள், 1800 அதிகாரிகள், 20,000 காவலர்கள் என ஒரு படையெடுப்பை போல இப்போது நடந்து கொண்டிருக்கும் இந்த வருமான வரிச்சோதனைகளின் நோக்கம் நிச்சயமாக நேர்மையான நோக்கத்திற்கு அப்பாற்பட்டது என்று சொல்ல முடியும். கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது 3 கண்டெய்னர்களில் பிடிக்கப்பட்ட பணம் பல நாட்கள் யாருடையது என்று தெரியாமல், திடீரென்று ஒருநாள் நீதிமன்றத்தில் ‘ஸ...
பாஜ. எதிர்ப்பு மாநில முதல்வர்களை அடுத்தடுத்து சந்திக்கும் கமல்… இன்று மம்தா பானர்ஜியை சந்திக்கிறார்..!

பாஜ. எதிர்ப்பு மாநில முதல்வர்களை அடுத்தடுத்து சந்திக்கும் கமல்… இன்று மம்தா பானர்ஜியை சந்திக்கிறார்..!

HOME SLIDER, politics, செய்திகள்
அரசியலுக்கு வரப்போகும் கமல்ஹாசன் முதலில் கேரள முதல்வர் பிரனாய் விஜயனை சந்தித்தார். டில்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் சென்னையில் கமலை சந்தித்தார். இன்று கொல்கத்தா சென்று மேற்கு வங்க முதல்வர் மம்தாவை சந்திக்கிறார் கமல். பாஜ எதிர்ப்பு அணி உருவாக்கமா... இன்று கொல்கத்தாவில் நடக்கும் திரைப்பட விழா முடிவில் முதல்வர மம்தா பானர்ஜி நடிகர் கமல் ஹாசன் சந்திப்பு நடக்கும். தமிழகத்தில் ஏற்பட்ட அரசியல் வெற்றிடத்தை நிரப்புவதற்கு கமல் ஹாசன் முயற்சிக்கிறார்.  ...
எந்த ரெய்டுக்கும்  எனக்கு பயம் கிடையாது நானும், சசிகலாவும் அரசியலுக்கு வரக்கூடாது என சதி நடக்கிறது – தினகரன் ஆவேசம்

எந்த ரெய்டுக்கும் எனக்கு பயம் கிடையாது நானும், சசிகலாவும் அரசியலுக்கு வரக்கூடாது என சதி நடக்கிறது – தினகரன் ஆவேசம்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  அடையாறில் உள்ள தனது இல்லத்தில் வருமான வரிசோதனை நடைபெறவில்லை - டிடிவி தினகரன் பேட்டியின் முழு விவரங்கள் : எனக்கு பயம் கிடையாது நானும், சசிகலாவும் அரசியலுக்கு வரக்கூடாது என சதி நடக்கிறது.   வருமானவரித்துறை சோதனைக்கு பின்னால் மத்திய அரசு உள்ளது என்பது வெளிப்படையாக தெரிகிறது. 33 ஆண்டுகளாக சோதனைகளை சந்தித்து வருகிறோம் 20 ஆண்டுகள் சிறை தண்டனை அளித்தாலும் மீண்டும் வந்து அரசியலில் ஈடுபடுவேன். வருமான வரித்துறை சோதனை திட்டமிட்டு நடைபெற்று வருகிறது சிறையில் அடைத்தாலும் பின்னர் வெளியே வந்து பதிலடி கொடுப்போம். ஜெயா டிவியில் என் பேட்டியை சோதனை நடைபெறும் போது போடக்கூடாது என வருமான வரித்துறை கூறியது கண்டிக்கத்தக்கது. பச்சை முத்து வீட்டில் ரெய்டு நடக்கும் போது அவரது தொலைக்காட்சியில் ஒளிபரப்பப் பட்டது. என் பேட்டியை ஏன் ? ஜெயா டிவியில் போடக்கூடாது ? மத்திய அர...
சென்னைக்கு பெரிய அளவில் தொற்று நோய் ஆபத்து: தமிழக அரசுக்கு ராமதாஸ் எச்சரிக்கை

சென்னைக்கு பெரிய அளவில் தொற்று நோய் ஆபத்து: தமிழக அரசுக்கு ராமதாஸ் எச்சரிக்கை

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:  வட கிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பே மழைநீர் கால்வாய்களை தூர்வாருதல் உள்ளிட்ட வெள்ளத்தடுப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வழங்கிய அறிவுரைகளை தமிழக அரசு புறந்தள்ளியதன் பாதிப்புகளை சென்னை புறநகர் பகுதி மக்கள் அனுபவித்து வருகின்றனர். கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமையிலிருந்தே சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெருமழை பெய்து வருகிறது. 8 நாட்களுக்கும் மேலாக மழைநீர் தேங்கிக் கிடப்பதால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.  பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் வீடுகளைப் பூட்டி விட்டு வெளியேறி விட்டனர். கோவிலம்பாக்கம், வேளச்சேரி, வடசென்னை மற்றும் சென்னையின் மைய பகுதிகளில் பல இடங்களில் மழை நீருடன் கழிவு நீரும் கலந்துவிட்டதால் மிக மோசமான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.  பல நாட்களாக தேங்கியுள்ள தண்ணீரிலிருந்து கடுமையான த...
2ஜி வழக்கின் தீர்ப்பு தேதி இன்று அறிவிப்பு… திமுக திக்… திக்…!

2ஜி வழக்கின் தீர்ப்பு தேதி இன்று அறிவிப்பு… திமுக திக்… திக்…!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  '2ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கின் தீர்ப்பு தேதி இன்று ( 7.11.17) அறிவிப்பு திக்... திக்... படபடப்பில் அறிவாலயம்..! காங்கிரஸ் தலைமையிலான, முந்தைய, ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது, '2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த ஊழல் தொடர்பான வழக்கின் தீர்ப்பு தேதி, இன்று அறிவிக்கப்பட உள்ளது. 'இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு, கடந்த விசாரணையின்போது ஆஜராகாத, கரீம் மொரானி, சஞ்சய் சந்திரா மற்றும், தி.மு.க.,வைச் சேர்ந்த, ராஜா, கனிமொழி ஆகியோர் உட்பட, அனைவரும் இன்று ஆஜராக வேண்டும்' என, நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இதனால், 10 ஆண்டுகளுக்கு முன், ஊழல் செய்தவர்கள், அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். மத்தியில், காங்., தலைமையிலான, ஐ.மு., கூட்டணி ஆட்சியின்போது, 2007 - 2009 வரை, மத்திய தொலை தொடர்புத் துறை அமைச்சராக, தி.மு.க.,வைச் சேர்ந்த, ராஜா இருந்தார். அப்போது, மொபைல் போன் சேவைகளுக்கான, ...