வெள்ளிக்கிழமை, ஜூலை 24
Shadow

politics

ஜனவரி 26-ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம்: நடிகர் கமல்ஹாசன் அறிவிப்பு

ஜனவரி 26-ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம்: நடிகர் கமல்ஹாசன் அறிவிப்பு

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
ஜனவரி 26-ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம்: நடிகர் கமல்ஹாசன் அறிவிப்பு சென்னையில் நடைபெற்ற விழாவில் பங்கேற்ற நடிகர் கமல்ஹாசன், தமிழகம் முழுவதும் ஜனவரி 26-ம் தேதி முதல் சுற்றுப்பயணம் செய்ய உள்ளேன் என அறிவித்துள்ளார். கமல்ஹாசன் தீவிர அரசியலில் ஈடுபடுவதில் உறுதியாக இருக்கிறார். புதிய அரசியல் கட்சி தொடங்குவது குறித்து கமல்ஹாசன் பல்வேறு அரசியல் பிரமுகர்கள், மூத்த தலைவர்களுடன் ஆலோசனை பெற்று வருகிறார். இதுதொடர்பாக அவர் கேரள முதல் மந்திரி பிரணாயி விஜயன், டெல்லி முதல் மந்திரி கெஜ்ரிவால் ஆகியோரிடம் ஆலோசனை நடத்தினார். மேலும், கொல்கத்தா சென்ற கமல், மேற்குவங்க மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜியை சந்தித்து, தனது அரசியல் பிரவேசம் குறித்து ஆலோசனை செய்ததாக கூறப்படுகிறது. கடந்த மாதம் 7-ம் தேதி கமல்ஹாசன் தனது பிறந்த நாளையொட்டி, பொதுமக்கள் கருத்தை அறிவதற்காக ‘செல்போன் செயலி’ ஒன்றை தொட...
ஆண்டாள் சர்ச்சை… வைரமுத்து மீது ராஜபாளையம் போலீசார் 3 பிரிவுகளில் வழக்கு பதிவு..!

ஆண்டாள் சர்ச்சை… வைரமுத்து மீது ராஜபாளையம் போலீசார் 3 பிரிவுகளில் வழக்கு பதிவு..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள்
ஆண்டாள் சர்ச்சை... வைரமுத்து மீது ராஜபாளையம் போலீசார் 3 பிரிவுகளில் வழக்கு பதிவு..! ராஜபாளையத்தில் ஆண்டாள் குறித்து அவதூறாக பேசியதாக கவிஞர் வைரமுத்து மீது ராஜபாளையம் தெற்கு காவல் நிலையத்தில் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுசெய்யபட்டுள்ளது. கவிஞர் வைரமுத்து ‘தமிழை ஆண்டாள்’ என்ற கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார். அதில் “ஆண்டாள் பெரியாழ்வார்க்குப் பிறந்த பெண் இல்லை ஆதலாலும், அவள் பிறப்பு குறித்த ஏதும் பெறப்படாததாலும், ஓர் அந்தணரே வளர்த்திருந்தாலும், குலமறியாத ஒருத்தியைக் குலமகளாய்க் கொள்ள சாதிக் கட்டுமானமுள்ள சமூகம் தயங்கியிருக்கலாம் என்பதனாலும், சமூகம் வழங்காத பாலியல் சொல் விடுதலையை ஆண்டாளே ஆவேசமாய் அடைந்துவிட்டதாலும், கோயிலுக்குப் பெண்ணைக் காணிக்கையாக்குவதை அரசும் சமூகமும் அங்கீகரித்ததாலும் கலாசார அதிர்ச்சி தரத்தக்க முடிவுக்குச் சில ஆய்வாளர்கள் ஆட்படுகிறார்கள்.” என்றும் ஒரு இடத்தில் எ...
உலகின் மிக வயதான மனிதர் 147 வயதில் மரணம்: நீண்ட ஆயுளின் ரகசியம்

உலகின் மிக வயதான மனிதர் 147 வயதில் மரணம்: நீண்ட ஆயுளின் ரகசியம்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
சவுதியின் வயதான மனிதர் 147 வயதில் மரணம்: நீண்ட ஆயுளின் ரகசியம் சவுதியின் வயதான நபர் தனது 147 வயதில் உயிரிழந்துள்ள நிலையில், இத்தனை ஆண்டுகள் அவர் ஆரோக்கியமாக வாழ்ந்ததற்கான காரணம் தெரியவந்துள்ளது. நாட்டின் அப்ஹா நகரை சேர்ந்தவர் ஷேக் அலி அல் அலாக்மி. 147 வயதான இவர் கடந்த வாரம் மூளை பக்கவாதத்தால் உயிரிழந்துள்ளார். யாருக்கும் சாத்தியமில்லாத அளவில் இவ்வளவு ஆண்டுகள் ஷேக் எப்படி வாழ்ந்தார் என்பது குறித்து அவரின் குடும்பத்தார் விளக்கமளித்துள்ளனர். அவர்கள் கூறுகையில், இயற்கை உணவுகளை தான் ஷேக் சாப்பிடுவார். எப்போதாவது மட்டுமே காரில் பயணிக்கும் அவர் அதிகளவில் நடப்பதையே விரும்புவார். ஒரு சமயம் அப்ஹாலிருந்து மெக்காவுக்கு (600 கிலோ மீட்டருக்கு மேல்) நடந்தே ஹஜ் பயணம் சென்றார். தனது நிலத்தில் விளையும் கரிம தானியங்கள், கோதுமை, மக்காச்சோளம், பார்லி மற்றும் தேனை தான் ஷேக் சாப்பிடுவார்.அவரின் பண்ணை வ...
சீர்குலைந்த நீதித்துறை நிர்வாகம்…தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மீது பரபரப்பு குற்றம் சாட்டி நீதிபதிகள் பகீர் பேட்டி

சீர்குலைந்த நீதித்துறை நிர்வாகம்…தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மீது பரபரப்பு குற்றம் சாட்டி நீதிபதிகள் பகீர் பேட்டி

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
உச்சநீதிமன்ற நீதிபதிகள் மோதல்: நீதிபதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த 7 பேர் குழு அமைப்பு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகாய், மதன் பிலோகூர், குரியன், ஜோசப் ஆகியோர் நேற்று முதல் முறையாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மீது பரபரப்பு குற்றம் சாட்டினார்கள். சுப்ரீம் கோர்ட்டில் நீதித்துறை நிர்வாகம் சீர்குலைந்து விட்டதாகவும், பல்வேறு விரும்பத்தகாத சம்பவங்கள் நடைபெறுவதாகவும் தெரிவித்தனர். இந்திய நீதித்துறை வரலாற்றில் இது போன்று நீதிபதிகள் வெளிப்படையாக குற்றம்சாட்டுவது இதுவே முதல் முறையாகும். இதையடுத்து பிரதமர் மோடி மத்திய சட்ட மந்திரி ரவிசங்கர் பிரசாத்துடன் அவசர ஆலோசனை நடத்தினார். அதில் நீதிபதிகளின் குற்றச்சாட்டுகள் குறித்த இருவரும் ஆலோசனை நடத்தினார்கள். இந்நிலையில், உச்சநீதிமன்ற நீதிபதிகள் மோதல் குறித்து இந்திய பார் கவுன்சில் டெல்லியில்...
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார்

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: முதல்வர் எடப்பாடி பழனிசாமி வரும் 16ம் தேதி தொடங்கி வைக்கிறார் பொங்கல் திருநாளையொட்டி மதுரை மாவட்டம், அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு உலகப் பிரசித்தி பெற்றவை. அவனியாபுரத்தில் நாளையும் (14-ந்தேதி), பாலமேட்டில் 15-ந் தேதியும், அலங்காநல்லூரில் 16-ந் தேதியும் ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது. அலங்காநல்லூரில் நடக்கும் ஜல்லிக்கட்டுப் போட்டியை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் தொடங்கி வைக்கிறார்கள். இதற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 14-ந்தேதி சேலத்தில் பொங்கல் விழாவை கொண்டாடி விட்டு அங்கிருந்து 15-ந் தேதி மாலை காரில் மதுரை வருகிறார். மதுரை அரசு சுற்றுலா விடுதியில் தங்கும் எடப்பாடி பழனிசாமி 16-ந்தேதி காலை அலங்காநல்லூர் புறப்பட்டுச் செல்கிறார். காலை 8 மணிக்கு ஜல்லி...
அவனியாபுரத்தில் காலை 8 மணிக்கு ஜல்லிக்கட்டு திறக்கும் வாடிவாசல்..!

அவனியாபுரத்தில் காலை 8 மணிக்கு ஜல்லிக்கட்டு திறக்கும் வாடிவாசல்..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
அவனியாபுரத்தில் காலை 8 மணிக்கு ஜல்லிக்கட்டு திறக்கும் வாடிவாசல்..! ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்பதற்காக வீரர்கள், காளைகள் பதிவு நடைபெற்றது. இன்று காலையுடன் அது நிறைவு பெற்றது. தற்போது காளைகள் சோதனை செய்யப்பட்டு போட்டிக்கான டோக்கன் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும் ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகளுக்கு பயிற்சி, காளைகளை அடக்கும் இளைஞர்களுக்கு பயிற்சி என மதுரை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பொங்கல் பண்டிகை களை கட்டியுள்ளது. உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் இந்த ஆண்டு 1000-க்கும் மேற்பட்ட காளைகள் சீறிப்பாய தயாராகி வருகிறது. 1200-க்கும் மேற்பட்ட வீரர்கள் பதிவு செய்துள்ளனர். காளைகள் அவிழ்த்து விடப்படும் வாடிவாசல் மற்றும் பார்வையாளர்களுக்கான கேலரி, அடிப்படை வசதிகள் ஆகியவை விறுவிறுப்பாக செய்யப்பட்டு வருகிறது. அவனியாபுரத்தில் நாளை காலை 8 மணிக்கு ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடங்...
நடிகர்கள் பார்த்திபன், விஜய் சேதுபதி உள்ளிட்ட 11 பேருக்கு பெரியார் விருது..!

நடிகர்கள் பார்த்திபன், விஜய் சேதுபதி உள்ளிட்ட 11 பேருக்கு பெரியார் விருது..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
நடிகர்கள் பார்த்திபன், விஜய் சேதுபதி உள்ளிட்ட 11 பேருக்கு பெரியார் விருது - தி.க. தலைவர் வீரமணி அறிவிப்பு 1995ஆம் ஆண்டு முதல் 24 ஆண்டுகளாக தந்தை பெரியார் முத்தமிழ் மன்றம் சார்பில் ‘பெரியார் விருது’ வழங்கப்படுகிறது. இயல், இசை, நாடகம் ஆகிய துறைகளில் சிறந்து விளங்கும் கலைஞர்களுக்கு பொங்கல் திருநாளையொட்டி இந்த விருது வழங்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான ‘பெரியார் விருது’ நடிகர்கள் பார்த்திபன், விஜய் சேதுபதி, கவிஞர் செவ்வியன், திரைப்பட இயக்குநர் கோபி நயினார், பறையிசைக் கலைஞர் வேலு ஆசான், ஓவியர் ஹாசிப்கான், சென்னை முன்னாள் மேயரும், மராத்தான் வீரருமான சைதை மா.சுப்பிரமணியன் எம்.எல்.ஏ, இன்னிசை ஏந்தல் திருபுவனம் ஆத்மநாதன், இயக்குநர் ஒளிப்பதிவாளர் செழியன், கவிஞர் சல்மா, ஓவியர் அபராஜிதன் ஆகிய 11 பேருக்கு 2018-ம் ஆண்டிற்கான ‘பெரியார் விருது’ அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருதுகளை தி.க. தலைவர் வீரமணி அ...
உச்ச நீதிமன்ற நிர்வாகம் சரியில்லை: இந்திய வரலாற்றில் முதல் முறையாக நீதிபதிகள் குற்றச்சாட்டு

உச்ச நீதிமன்ற நிர்வாகம் சரியில்லை: இந்திய வரலாற்றில் முதல் முறையாக நீதிபதிகள் குற்றச்சாட்டு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
உச்ச நீதிமன்ற நிர்வாகம் சரியில்லை: இந்திய வரலாற்றில் முதல் முறையாக நீதிபதிகள் குற்றச்சாட்டு இந்திய நீதித்துறை வரலாற்றில் முதல் முறையாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இன்று செய்தியாளர்களை சந்தித்தனர். நீதிபதிகள் செல்லமேஸ்வர், குரியன் ஜோசப், ரஞ்சன்கோகாய், மதன் லோகூர் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்து பேசினர். அப்போது, அவர்கள் கூறுகையில், உச்ச நீதிமன்ற நிர்வாகம் சரியில்லை என்று குற்றம் சாட்டினர். “உச்ச நீதிமன்ற வரலாற்றில் அசாதாரண நிகழ்வாக முதல் முறையாக நீதிபதிகள் செய்தியாளர்களை சந்திக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற நிர்வாகத்தில் கடந்த சில மாதங்களாக நடக்கும் நிகழ்வுகள் வருத்தம் அளிக்கின்றன. நீதித்துறையில் சில விதிகள் முறைப்படி பின்பற்றப்படுவதில்லை. இதே நிலை நீடித்தால் ஜனநாயகம் நிலைக்காது. இன்று காலை தலைமை நீதிபதியை சந்தித்து எங்கள் குறைகளை முறையிட்டோம்’ என்றும் நீதிபதிகள்...
பாஸ்போர்ட்டில் வருகிறது அதிரடி மாற்றங்கள்..!

பாஸ்போர்ட்டில் வருகிறது அதிரடி மாற்றங்கள்..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
பாஸ்போர்ட்டில் வருகிறது அதிரடி மாற்றங்கள்..! 2012-ம் ஆண்டுக்கு பின்னர் வெளியிடப்பட்ட பாஸ்போர்ட்டுகளின் தகவல்கள் அரசு கணினியில் தரவாக பதிவு செய்யப்பட்டு உள்ளது, இதனால் சோதனையின் போது பார்கோர்டை ஸ்கேன் செய்கையில் எளிதாக விபரங்களை தெரிந்துக் கொள்ள முடியும் எனவே, குடிமக்களின் விபரங்களை பாதுகாக்கும் முயற்சியாக வெளியுறவுத்துறை பாஸ்போர்ட்டில் முகவரி அடங்கிய இறுதி பக்கத்தை நீக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. முகவரி அடங்கிய பக்கத்தை நீக்கும் பட்சத்தில் அதனை இனி முகவரி சான்றாக பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும். பழைய பாஸ்போர்ட்டுகளில் முகவரி பக்கம் அடங்கியிருந்தாலும், அதன் ஆயுட்காலம் முடிந்து புதுப்பிக்கும் போது, முகவரி பக்கம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, இந்திய அரசு தரப்பில் மூன்று நிறங்களில் பாஸ்போர்ட்டு வழங்கப்பட்டு வருகிறது. அரசு பணி அதிகாரிகள் மற்றும் வெளிநாடுகளுக்க...
சுயநலத்துக்காக வைரமுத்து மீது தாக்குதல் தொடுப்பதை ஏற்க முடியாது: மு.க.ஸ்டாலின்

சுயநலத்துக்காக வைரமுத்து மீது தாக்குதல் தொடுப்பதை ஏற்க முடியாது: மு.க.ஸ்டாலின்

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள்
சுயநலத்துக்காக வைரமுத்து மீது தாக்குதல் தொடுப்பதை ஏற்க முடியாது: மு.க.ஸ்டாலின் சில நாட்களுக்கு முன்னர் நாளிதழ் ஒன்றில் கவிஞர் வைரமுத்து ஆண்டாள் குறித்து எழுதிய கட்டுரையில், அமெரிக்க ஆய்வாளர் ஒருவரின் கருத்தை மேற்கோள் காட்டியிருந்தார். இதற்கு பா.ஜ.க தலைவர் எச் ராஜா வைரமுத்துவை தரம் தாழ்ந்த வகையில் விமர்சித்து எதிர்வினையாற்றியிருந்தார். மேலும், அவருக்கு பல்வேறு இந்துத்துவ இயக்கங்களும் கண்டனங்களும், மிரட்டல்களும் விடுத்து வருகின்றன. இந்நிலையில், இது தொடர்பாக தி.மு.க செயல் தலைவர் மு.க ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:- “தமிழை ஆண்டாள்” என்ற தலைப்பில் பாரம்பரியமிக்க "தினமணி" நாளிதழில் கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் எழுதிய கட்டுரையில், ஆண்டாள் குறித்து அமெரிக்க ஆய்வாளர் ஒருவரின் கருத்தை மேற்கோள் காட்டியிருந்ததற்கு எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, கவிஞர் வைரமுத்து அவர்கள் எவ்வ...