திரைப்படங்கள்
தந்தையுடன் இணைந்து நடிக்கும் வரலட்சுமி
‘மகாபிரபு, ஏய், சாணக்யா, சண்டமாருதம்’ போன்ற படங்களில் இணைந்து பணியாற்றிய சரத்குமார் – இயக்குனர் ஏ.வெங்கடேஷ், மீண்டும் ‘பாம்பன்’ என்ற படத்திற்காக கூட்டணி அமைத்துள்ளனர். இதில் சரத்குமார் வித்தியாசமான வேடத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியிடப்பட்டது.
இந்த போஸ்டர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி இருக்கிறது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரிக்கச் செய்துள்ளது. இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கும் நிலையில், இந்த கூட்டணியில் வரலட்சுமி சரத்குமார் இணைந்திருக்கிறார்.
அப்பாவுடன் இணைந்து நடிப்பது மிகவும் உற்சாகமாவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது என்றும், படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள் என்றும் வரலட்சுமி சரத்குமார் கூறியிருக்கிறார்.
எஸ்.எஸ்.கே.புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் எஸ்.எஸ்.கே.சங்கரலிங்கம் ‘பா...
விநாயகர் சதுர்த்தியில் ரிலீஸ் ஆகும் சிவகார்த்திகேயனின் சீமராஜா..!
‘வேலைக்காரன்’ படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் தற்போது பொன்ராம் இயக்கத்தில் நடித்து வருகிறார். சிவகார்த்திகேயனின் பிறந்தநாளுக்கு சர்ப்ரைஸ் அளிக்கும் விதமாக இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு இன்று வெளியிட்டது. `சீமராஜா' என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
துள்ளும் குதிரையில் உட்கார்ந்தபடி சிவகார்த்திகேயன் தனது கையில் ஒரு கொடியுடன் இருப்பது போல அந்த போஸ்டர் இருக்கிறது.
இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக சமந்தா நடிக்கிறார். சிவகார்த்திகேயனின் தந்தையாக நெப்போலியனும், முதல்முறையாக வில்லியாக சிம்ரனும் நடிக்கிறார்கள். சூரி, லால், மொட்டை ராஜேந்திரன், யோகி பாபு, மனோபாலா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
24 ஏ.எம். ஸ்டூடியோஸ் சார்பில் ஆர்.டி.ராஜா தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்ப...
‘நானும் ஆன்மீகவாதி தான்’ இசை விழாவில் பாரதிராஜா பரபரப்பான பேச்சு
"காசு மேலே காசு" இசை வெளியீட்டு விழாவில் நானும் ஆன்மீகவாதி தான் பாரதிராஜா பரபரப்பான பேச்சு.
பிரசாத் லேப் தியேட்டரில் "காசு மேலே காசு" இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. விழாவில் இயக்குனர்கள் பாரதிராஜா, பாக்யராஜ், பார்த்திபன், P.வாசு, பாண்டியராஜன், தரணி, நடிகர் விவேக், மயில்சாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
விழாவில் இயக்குனர் இமயம் பாரதிராஜா பேசியதாவது..
ஒரு படத்தில் ஹீரோவாக நடிப்பது ஈஸி ஆனால் காமெடியனாக நடிப்பதற்கு ஹார்சிய உணர்வு நிறைய வேண்டும். ஹார்சிய உணர்வு அதிகம் மிக்கவன் மயில்சாமி அதைவிட இதயம் சுத்தமானவன். மக்களை மகிழ்விப்பதில் மன்னன். எனக்கு ஹார்சிய உணர்வு கொஞ்சம் கூட இல்லை. ஆனால் இந்த படத்தின் அழைப்பிதழ் பார்த்ததும் விழுந்து விழுந்து சிரிச்சேன். இந்தப்படத்தின் பாடல்களை பார்த்தேன் நிச்சயம் இந்தப்படம் வெற்றிப்படமாக அமையும்.
நம் நிலம் களவாடப்படுகிறது, மொழி களவாடப்படுகிறது, கொஞ்...
இது கொப்புறான் சத்தியமா பாலா படமில்லீங்கோ…-கோடங்கி விமர்சனம்
இது கொப்புறான் சத்தியமா பாலா படமில்லீங்கோ... நல்ல படம் நாச்சியார்
கோடங்கி விமர்சனம்
விடலை கற்பழிப்பு வழக்குகளில் வில்லங்கம் விவகாரம்... பணபலம்... அதிகார திமிர் எல்லாம் நிறைந்திருக்கும் குப்பை மேடில் வசிக்கிறவன் கோயிலில் உள்ள கருவறை சாமியை போலவும், கோயில் என்று சொல்லிக் கொண்டு வசிக்கும் கோபுரவாசியின் நடத்தை குப்பை மேட்டைவிடவும் கேவலமானது நெற்றிப்பொட்டில் பளீச்சென அடித்து தெறிக்கவிட்டிருக்கிறார் இயக்குனர் பாலா.
வழக்கமாக இயக்குனர் பாலா படங்கள் என்றாலே குரூரம், கோமாளித்தனம், சைக்கோத்தனம் அபத்தம் என அனைத்தும் நிறைந்திருக்கும்... தான் என்கிற ஆணவம் பல இடங்களில் எட்டிப்பார்க்கும்... ஆனால், நாச்சியார் அப்படியில்லை... ‘நரம்பை’ கட் பண்ணியதால்தான் இது பாலா படம் என்றே நம்மால் நம்ப முடிகிறது.
சைக்கோத்தனம் எங்கும் இல்லை... குரூரம் கொஞ்சமும் இல்லை... கதைக்கும் காட்சிக்கும் எந்த அளவு அழுத்தம் வேண...
கமிஷனர் அலுவலகத்தில் ஜோதிகா மீது புகார்
ஜோதிகா நடிப்பில் பாலா இயக்கத்தில் வெளியாகி இருக்கும் படம் ‘நாச்சியார்’. இதில் ஜோதிகா போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இப்படத்தில் ஜோதிகா பேசும் வசனம் ஒன்று ஏற்கனவே சர்ச்சை ஏற்படுத்திய நிலையில், இன்று மற்றொரு வசனம் சர்ச்சையை ஏற்படுத்தி இருப்பதாக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்து மக்கள் கட்சியின் பிரசார அணி தலைவர் காளிகுமார், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இன்று அளித்த புகார் மனுவில் கூறி இருப்பதாவது:-
பாலா இயக்கியுள்ள நாச்சியார் திரைப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள நடிகை ஜோதிகா ஒரு காட்சியில் பேசும் வசனத்தில் கோவிலாக இருந்தாலும், குப்பை மேடாக இருந்தாலும் எங்களுக்கு ஒன்றுதான் என்று கூறுகிறார்.
இந்த வசனம் இந்து ஆலயங்களை அவமதிக்கும் விதத்திலும், இந்துக்களின் மனதை புண்படுத்தும் விதத்திலும் அமைந்துள்ளது.
இதுபோன்ற சர்ச்சைக்குரிய வசனத்தை உடன...
ஹார்ட்வேர்ட் பல்கலைக்கழக அரங்கில் எதிரொலித்த “நீ தான் தமிழன்” பாடல்
ஹார்ட்வேர்ட் பல்கலைக்கழக அரங்கில் எதிரொலித்த "நீ தான் தமிழன்" பாடல்
கடந்த ஆண்டு ஜனவரி 1, புத்தாண்டு தொடங்கியபோது கூட, யாரும் இதை எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ஆனால், இன்று ஓராண்டு தாண்டிய சரித்திரம் அது. தமிழர்களின் தன்மானம் காக்கும் மறவர்களாக, இளைஞர்கள் சென்னை மெரினாவில் களம் இறங்கி தொடங்கி வைத்த அறவழி போராட்டம் ஈட்டிய வெற்றி, பொன் எழுத்துகளில் பொறிக்க வேண்டிய வரலாறு அல்லாமல் வேறு என்ன?!
அந்த வரலாற்றுக் கதையைப் பின்னணியாகக் கொண்டு அஹிம்சா புரொடக்ஷன்ஸ் சார்பில், உருவாகியிருக்கும் "ஜல்லிக்கட்டு 5-23, 2017" திரைப்படத்தின் 2வது பாடல், சிறப்பு மிக்க ஹார்ட்வேர்ட் பல்கலைக்கழகத்தில் வெளியிடப்பட்டது. அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் அமைந்துள்ள கலைமகளின் அந்த தலைக்கோவிலில் - அல்ட்ரிச் ஹாலில், "நீ தான் தமிழன்" எனத் தொடங்கிய அப்பாடல் வெளியிடப்பட்டது.
https://youtu.be/LYoTUbp9sD0
தமிழகத்தில...
NEETHAN TAMIZHAN Song Release at Harvard University..!
It truly proves that the Jallikattu uprising in Jan 2017 was definitely of global significance. The film makers of the Tamil feature film Jallikattu 5-23rd Jan 2017 have launched Song #2 aptly titled NEETHAN TAMIZHAN at the prestigious Harvard University Boston USA.
The second track reflects the spirit of being a Tamizhan was launched amidst an August gathering at the Aldrich Hall .
The song was formally launched by MR Karthikeyan Sivasenapathy, founder of the Kangayam Cattle research Foundation and one of the pioneers for the Jallikattu uprising in Tamil Nadu.
The track was formally received by Deputy Chief Minister New Delhi, MR Manish Sisodia and eminent fashion designer Sabyasachi Mukherjee along with the co Producer Guruu Saravanan and the team was joined by the director of t...



