வியாழக்கிழமை, ஜூன் 4
Shadow

திரைப்படங்கள்

‘இரும்புத்திரை’  கதையை கேட்டு முடித்ததும் எனக்கு என்னுடைய போனை தொடவே பயமாக இருந்தது – சமந்தா

‘இரும்புத்திரை’ கதையை கேட்டு முடித்ததும் எனக்கு என்னுடைய போனை தொடவே பயமாக இருந்தது – சமந்தா

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
விஷால்-சமந்தா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘இரும்புத்திரை’.   இப்படத்தை மித்ரன் இயக்கியுள்ளார். இப்படத்தில் நடித்தது குறித்து சமந்தா கூறும்போது, ‘இரும்புத்திரை படத்தின் கதையை கேட்கும் போது எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. நாம் வாழும் இந்த சமூகத்தில் நமக்கு தெரியாமல் இவ்வளவு பிரச்சனைகள் இன்டர்நெட் மீடியம் மூலமாக நம்மை சுற்றி நடக்கிறதா என்று பதைபதைக்க வைத்தது. படத்தின் கதையை கேட்டு முடித்ததும் எனக்கு என்னுடைய போனை தொடவே பயமாக இருந்தது. இந்த படம் இன்டர்நெட் மூலமாக நமக்கு என்னவெல்லாம் பிரச்சனைகள் உள்ளது, அது நமக்கு எப்படியெல்லாம் தீங்கு விளைவிக்கும் என்று மிக தெளிவாக வெளிச்சம் போட்டு காட்டும். நமது பிரைவசி எப்படி வெளியே கசிகிறது என்பதை பற்றியும் இப்படம் பேசும். எனக்கு புதுமுக இயக்குனர்களோடு இணைந்து பணியாற்றுவதில் சிறிது தயக்கம் தான். ஆனால் இயக்குனர் மித்ரன் ஒரு போதும் என்ன...
காதல் கந்தாஸ் ஒரு நம்பிக்கை துரோகி – கொந்தளிக்கும் ‘யாளி’ பட பெண் இயக்குனர்

காதல் கந்தாஸ் ஒரு நம்பிக்கை துரோகி – கொந்தளிக்கும் ‘யாளி’ பட பெண் இயக்குனர்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
காதல் கந்தாஸ் ஒரு நம்பிக்கை துரோகி கொந்தளிக்கும் ‘யாளி’ பட பெண் இயக்குனர் அக்ஷயா ‘கலாப காதலன்’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நடிகையாக அறிமுகம் ஆன அக்ஷயா அந்த படத்தில் நெகட்டிவ் கேரக்டரில் நடித்து அசத்தியிருந்தார். திறமையான நடிகையாக ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென சினிமாவில் இருந்தே ஒதுங்கியிருந்தார். நல்ல பாடகி, நடிகை என பன்முக திறமையோடு இருந்த அக்ஷயா நீண்ட இடைவெளிக்கு பிறகு ‘யாளி’ படத்தின் மூலம் இயக்குனராக அவதாரம் எடுக்கிறார். தான் இயக்குனர் ஆவதற்கு முன்பு பல தடைகளை தாண்டவேண்டியிருந்தது பல ஏமாற்றங்களையும், துரோகங்களையும் தாண்டித்தான் இந்த நிலைக்கு வர முடிந்தது என்று கூறிய பெண் இயக்குனர் அக்ஷயா ‘கோடங்கி’ இணையத்தில் தன் மனக்குமுறலை கொட்டியிருக்கிறார்... ஓவர் டூ அக்ஷயா.... நான் நடிகையாக அறிமுகம் ஆனபோது நான் யார் என்றே தெரியாமல் என்னையும் என...
காலா படவிழாவில் முக்கிய அறிவிப்பை வெளியிடும் ரஜினிகாந்த்

காலா படவிழாவில் முக்கிய அறிவிப்பை வெளியிடும் ரஜினிகாந்த்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
ரஜினி நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘காலா’ . தனுஷ் தனது வுண்டர்பார் நிறுவனம் மூலம் தயாரித்திருக்கும் இப்படத்தை பா.இரஞ்சித் இயக்கி இருக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் வருகிற 9-ந் தேதி நடக்கிறது. இவ்விழாவில் படக்குழுவினர் சிறப்பு விருந்தினர்கள் பலர் கலந்துக் கொள்ள இருக்கிறார்கள். இந்நிகழ்ச்சியில் சந்தோஷ் நாராயணன் தனது இசைக்குழுவினருடன் சேர்ந்து இசை நிகழ்ச்சியை நடத்த உள்ளார். தனுசின் ‘வுண்டர்பார் நிறுவனம், ‘காலா’ படத்தின் பாடல்களையும், இசை நிகழ்ச்சியையும் நேரடியாக இணையதளங்களில் வெளியிடுகிறது. இன்றைய தினத்தில் தனது கட்சி பற்றிய முக்கிய அறிவிப்பை வெளியிட இருக்கிறார் ரஜினிகாந்த். இந்த படத்தில் கதாநாயகியாக இந்தி நடிகை ஹீமாகுரோசி நடித்துள்ளார். இந்தி நடிகர் நானாபடேகர், சமுத்திரக்க...
நடிகையாக இருந்து இயக்குனர் அவதாரம் எடுத்த அக்‌ஷயா..!

நடிகையாக இருந்து இயக்குனர் அவதாரம் எடுத்த அக்‌ஷயா..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
AB கிரியேசன்ஸ் பட நிறுவனம் சார்பில் பாலச்சந்தர்.T தயாரித்திருக்கும் படம் “ யாளி “ இந்த படத்தில் தமன் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக நடித்து இயக்கியிருக்கிறார் அக்ஷயா. மற்றும் ஊர்வசி, மனோபாலா இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் அர்ஜுன் என்ற புதுமுகம்  நடித்திருக்கிறார். படம் பற்றி இயக்குனரும், நாயகியுமான அக்ஷயா கூறியதாவது.. பெண் இயக்குனர்களுக்கு தமிழ் சினிமாவில் எப்போது நல்ல வரவேற்பு இருக்கும் அந்த வரிசையில் நான் இணைந்துள்ளேன்.  இது ஒரு ரொமான்டிக், திரில்லர் படமாக உருவாக்கி இருக்கிறோம். மும்பை பின்னணியில் நடக்கும் கதை.                                      முக்கியமான மூன்று கதாபாத்திரங்களை சுற்றி திரைக்கதை நகரும். நாயகி ஜனனி ( அக்ஷயா ),நாயகன்(தமன் )இருவரும் காதலிக்கிறார்கள். ஆனால் இவர்களுக்கு தொடர்பு இல்லாத பாலா ( அர்ஜுன் ) என்ற கதாபாத்திரம் ஜனனியை பின்தொடர்கிறார். யார் அவர் எதற்கா...
ரெஜினாவுக்கு MR.சந்திரமெளலி தான் முதல் முறையாம்..!

ரெஜினாவுக்கு MR.சந்திரமெளலி தான் முதல் முறையாம்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
திரு இயக்கத்தில் கவுதம் கார்த்திக் - ரெஜினா கசாண்ட்ரா இணைந்து நடித்துள்ள படம் `மிஸ்டர்.சந்திரமௌலி'. கார்த்திக்கும், கவுதம் கார்த்திக்கும் முதல்முறையாக இணைந்து நடித்திருக்கும் இந்த படத்தை கிரியேட்டிவ் எண்டர்டெய்னர்ஸ் அன்ட் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் நிறுவனம் சார்பில் தனஞ்செயன் இந்த படத்தை தயாரித்துள்ளார். வரலட்சுமி சரத்குமார், சதீஷ், மகேந்திரன், அகத்தியன், விஜய் சந்திரசேகர் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கவுதம் கார்த்திக் இந்த படத்தில் பாக்ஸராக நடித்துள்ளார். படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் மும்முரமாக நடந்து வரும் நிலையில், நடிகை ரெஜினா அவரது காட்சிகளுக்கு டப்பிங் பேசி முடித்துள்ளார். ரெஜினா டப்பிங் பேசிய முதல் தமிழ் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது...
ஸ்ருதியின் படபிடிப்பு தளத்திற்கு வருகை தந்த சரிகா

ஸ்ருதியின் படபிடிப்பு தளத்திற்கு வருகை தந்த சரிகா

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
நடிகை ஸ்ருதிஹாசன் தற்போது தேசிய விருது பெற்ற இயக்குநர் மகேஷ் மஞ்சரேக்கர் இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். கேங்ஸ்டர்களின் உலகத்தைப் பற்றிய இந்த படத்தில் ஸ்ருதிஹாசனின் பற்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து காட்சிகளை அமைத்திருக்கிறாராம் இயக்குநர் மகேஷ் மஞ்சரேக்கர். இதன் படபிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது அங்கு ஸ்ருதிஹாசனின் அம்மாவும், நடிகையுமான சரிகா வருகை தந்து, மகளின் நடிப்பை பார்வையிட்டிருக்கிறார். இதைப் பற்றி படக்குழுவினர்களிடம் விசாரித்தபோது, ‘‘மகேஷ் மஞ்சரேக்கர் போன்ற திறமையான கதை சொல்லிகளின் படைப்பில் உருவாகும் படத்தில் நடிக்க ஸ்ருதி ஒப்புக்கொண்டதை கேள்விப்பட்ட சரிகா உண்மையிலேயே சந்தோஷமடைந்தார். இயக்குநரின் வழிகாட்டலை ஸ்ருதி பின்பற்றினால் அவரின் திறமை மேலும் பளிச்சிடும் என்றார். அத்துடன் ஸ்ருதியை இது போன்ற தேசிய விருது பெற்...
டிக் டிக் டிக் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு

டிக் டிக் டிக் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
நேமிசந்த் ஜபக் புரொடக்ஷன்ஸ் சார்பில் இந்தியாவின் முதல் விண்வெளி படமாக பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் படம் `டிக் டிக் டிக்'. சக்தி சவுந்தர் ராஜன் இயக்கியிருக்கும் இந்த படத்தில் ஜெயம் ரவி - நிவேதா பெத்துராஜ் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சிங்கப்பூரை சேர்ந்த ஆரோன் ஆசிஸ் வில்லனாக நடித்திருக்கிறார். ஜெயப்பிரகாஷ், ரமேஷ் திலக், வின்சென்ட் அசோகன், அர்ஜுனன், ஜெயம் ரவி மகன் ஆரவ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த படம் ஜனவரியில் ரிலீசாக இருந்தது. தவிர்க்க முடியாத சில காரணங்களால் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போன நிலையில், தற்போது படத்தின் புதிய ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளர். அதன்படி படம் வருகிற ஜூன் 22-ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்திருக்கிறார். `டிக் டிக் டிக்' இமானின் 100-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது...
அதர்வாவின் செம போத ஆகாதே – ரிலீஸ் தேதி அறிவிப்பு

அதர்வாவின் செம போத ஆகாதே – ரிலீஸ் தேதி அறிவிப்பு

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களுள் ஒருவர் அதர்வா. அவரது நடிப்பில் `செம போத ஆகாதே' மற்றும் `இமைக்கா நொடிகள்' உள்ளிட்ட படங்கள் ரிலீசுக்கு தயாராகி இருக்கின்றன. இதில் `செம போத ஆகாதே' படம் வருகிற மே 18-ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பத்ரி வெங்கடேஷ் இயக்கியிருக்கும் இந்த படத்தில் அதர்வா ஜோடியாக மிஷ்டி, அனைகா சோதி நடித்துள்ளனர். அர்ஜய், ஜான் விஜய், கருணாகரன், எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா, பிரின்ஸ் நிதிக் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையில், கோபி அமர்நாத் ஒளிப்பதிவில் உருவாகி இருக்கும் இந்த படத்தை கிக்கஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்திருக்கிறது. `பானா காத்தாடி' படத்திற்கு பிறகு பத்ரி வெங்கடேஷ் - அதர்வா மீண்டும் இணைந்திருப்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஸ்ரீ தேனாண்டாள் ஸ்டூடியோ லிமிடெட் இந்த பட...
‘அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார்’- ரூ.5 ஆயிரம் கோடி வசூல்

‘அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார்’- ரூ.5 ஆயிரம் கோடி வசூல்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
உலக சினிமா ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த ‘அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார்’ ஹாலிவுட் படம் கடந்த வெள்ளியன்று திரைக்கு வந்து ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படம் உலக அளவில் பெரிய வசூல் சாதனை நிகழ்த்தி உள்ளது. கடந்த 5 நாட்களில் ரூ.5 ஆயிரம் கோடிக்கு மேல் வசூலித்து இருக்கிறது. இந்தியாவில் முதல் நாளில் ரூ.40.13 கோடியும், இரண்டாவது நாளில் ரூ.39.1 கோடியும், 3-வது நாளில் ரூ.46.67 கோடியும் வசூலித்து இருந்தது. 5 நாட்களில் மொத்த வசூல் ரூ.150 கோடியை தாண்டி இருப்பதாக கூறப்படுகிறது. ‘அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார்’ ஹாலிவுட் சூப்பர் ஹீரோக்களின் மிரட்டலான அதிரடி சாகசங்கள் நிரம்பிய படமாக வந்துள்ளது. இதில் ராபர்ட் டவுனி, கிறிஸ் கெம்ஸ்வொர்த், பார்க் ரூபலா, கிறிஸ் வெனஸ், ஸ்கேர்லட் ஜான்சன், டாம் ஹாலன்ட், எலிசபெத் ஆல்சன் உள்பட பலர் நடித்துள்ளனர். ஆன்டனி ரஸோ, ஜோ ரஸோ ஆகியோர் டைரக்டு செய்துள்ளனர்....