செவ்வாய்க்கிழமை, ஜூன் 9
Shadow

சினி நிகழ்வுகள்

லண்டனில் முதன்முறையாக பிரம்மாண்டமான இசை நிகழ்ச்சி நடத்தும் அனிரூத்

லண்டனில் முதன்முறையாக பிரம்மாண்டமான இசை நிகழ்ச்சி நடத்தும் அனிரூத்

CINI NEWS, சினி நிகழ்வுகள்
தமிழ் திரையிசை உலகின் இளம் இசையமைப்பாளரான அனிரூத் முதன்முறையாக இலண்டனில் பிரம்மாண்டாமான முறையில் இசை நிகழ்ச்சி நடத்தவிருக்கிறார்.  ஜுன் 16 மற்றும் 17 ஆம் தேதியில் இலண்டன் மற்றும் பாரீஸில் பிரம்மாண்டமான முறையில் இசை நிகழ்ச்சியை இசையமைப்பாளர் அனிரூத் முதன்முறையாக நடத்துகிறார். இதற்கான ஏற்பாடுகளை ஹம்சினி எண்டர்டெயின்மெண்ட் என்ற நிறுவனமும், ஹியூபாக்ஸ் ஸ்டூடியோஸ் என்ற நிறுவனமும் இணைந்து செய்து வருகிறது. இது தொடர்பாக இந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது... ஜுன் 16 ஆம் தேதியில் இலண்டனில் உள்ள S S E Wembly Arena என்னுமிடத்தில் இந்த இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதற்கான டிக்கெட் விற்பனை இன்று முதல் இசை நிகழ்ச்சி நடைபெறும் கலையரங்கத்தின் இணையதளத்தில் தொடங்கப்பட்டிருக்கிறது. அத்துடன் இந்த இசை நிகழ்ச்சிக்கான டிக்கெட்டை பிரபல இணையதளங்களிலும் ( டிக்கெட் மாஸ்டர்) இன...
புலிகளின் தலைவர் பிரபாகரன் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது!

புலிகளின் தலைவர் பிரபாகரன் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது!

CINI NEWS, சினி நிகழ்வுகள்
விடுதலை புலிகள் இயக்கத்தின் தலைவரான வேலுப்பிள்ளை பிரபாகரனின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகவிருக்கிறது. இலங்கையில் தமிழ் ஈழம் அமைவதற்காக அரும்பாடுபட்ட விடுதலை புலிகள் இயக்கத்தினை உருவாக்கியவர் பிரபாகரன். இலங்கையில் கடந்த 2009ம் ஆண்டு நடந்த இறுதிக்கட்ட போரில் பிரபாகரன் மற்றும் அவரது குடும்பத்தினர் இலங்கை அரசால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்நிலையில், பிரபாகரனின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்க இயக்குநர் வெங்கடேஷ் குமார் முன்வந்துள்ளார். இப்படத்தினை வெங்கடேஷ் தனது சொந்த நிறுவனமான ‘ஸ்டூடியோ 18’ நிறுவனத்தின் மூலம் தயாரிக்கவிருக்கிறார். இவர் ‘நீலம்’, ‘உனக்குள் நான்’, ‘லைட்மேன்’ உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்திற்கான நடிகர்கள் தேர்வு நடைபெற்று வருவதாகவும், விரைவில் அது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது...
திறமை, அழகு மற்றும் நேர்த்தியான பண்பால் வசியப்படுத்தும் ஆளுமை அம்ரிதா !

திறமை, அழகு மற்றும் நேர்த்தியான பண்பால் வசியப்படுத்தும் ஆளுமை அம்ரிதா !

CINI NEWS, சினி நிகழ்வுகள்
திறமை மற்றும் ஆற்றல் வளத்தை தாண்டி கவர்ந்து இழுக்கும் ஆளுமை எல்லோரையும் தன் வசம் வசியப்படுத்தும். அந்த மாதிரி உதாரணங்கள் மிகவும் அரிது, அதில் ஒருவர் தான் அம்ரிதா. படை வீரன் படத்தில் அவரின் நம்பிக்கை அளிக்கக்கூடிய திரை ஆளுமை மற்றும் பாராட்டை குவிக்கக் கூடிய நடிப்பை பார்த்தவுடன் அவர் கலைக்குடும்ப பின்னணியில் இருந்து வந்திருப்பார் அல்லது நடிப்பு பயிற்சி பெற்றவராக இருப்பார் என எல்லோரும் நினைத்தனர். ஆனால், "நான் பி காம் பட்டதாரி, என்னுடைய குடும்பத்தில் இருந்து சினிமாவுக்கு வந்த முதல் ஆள் நான் தான். எந்த நாடக பின்னணியும் இல்லை, சில குறும்படங்கள், விளம்பர படங்கள், இசை ஆல்பங்களில் நடித்திருக்கிறேன், அது தான் எனக்கு படை வீரன் பட வாய்ப்பை பெற்று தந்தது" என சர்ப்ரைஸ் கொடுக்கிறார் அம்ரிதா. மேலும் விரைவில் வெளியாக இருக்கும் காளி படத்தில் விஜய் ஆண்டனியுடன் இணைந்து நடித்த மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளும...
திரைத்துறையின் வேலை நிறுத்தம் தொடரும்: நடிகர் விஷால்

திரைத்துறையின் வேலை நிறுத்தம் தொடரும்: நடிகர் விஷால்

CINI NEWS, சினி நிகழ்வுகள்
தயாரிப்பாளர்கள் சங்கத்தின் வேலை நிறுத்தம் தொடரும் என தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் நடிகர் விஷால் அறிவித்துள்ளார். திரையரங்குளில் டிஜிட்டல் ஒளிபரப்புக்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதற்கு எதிராக கடந்த மார்ச் 1-ம் தேதியில் இருந்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் வேலை நிறுத்தத்தில் ஈடுப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் புதிய படங்கள் ஏதும் வெளியாகமால் இருந்து வருகிறது.வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர தயாரிப்பாளர்கள் சங்கம் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது. இது தொடர்பாக நேற்று தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள், திரையரங்க உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் சங்க நிர்வாகிகள் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து நேற்று செய்தியாளர்களிடம் பேசிய விஷால்  பேச்சு வார்த்தை சரியான முறையில் நடக்கிறது. இன்னு 2-3 நாட்களில் வேலை நிறுத்தம் முடிவுக்கு வரும் அறிவித்து இருந்தார்...
நரகாசூரன் படத்தில் லாபம் கேட்டேனா? – கெளதம் மேனன் விளக்கம்

நரகாசூரன் படத்தில் லாபம் கேட்டேனா? – கெளதம் மேனன் விளக்கம்

CINI NEWS, சினி நிகழ்வுகள்
துருவங்கள் 16 திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான கார்த்திக் நரேன், தற்போது நரகாசூரன் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இத்திரைப்படத்தில், அரவிந்த் சாமி, ஸ்ரேயா சரண் ஆகியோர் நடிக்கின்றனர். இத்திரைப்படத்தின் தயாரிப்பாளர்களுள் இயக்குநர் கௌதம் மேனனும் ஒருவர். இந்நிலையில், நரகாசூரன் திரைப்படத்தின் தயாரிப்பு விவகாரம் தொடர்பாக கார்த்திக் நரேனுக்கும், கௌதம் மேனனுக்கும் மோதல் உருவாகியுள்ளது. கார்த்திக் நரேன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கடந்த செவ்வாய் கிழமை பதிவிட்ட பதிவொன்றில், “சில நேரங்களில் தவறான நம்பிக்கை உங்களைக் கொன்றுவிடும். ஒருவர் மீது நம்பிக்கை வைப்பதற்கு முன், ஒன்றுக்கு இரண்டு முறை சிந்தியுங்கள். அப்படி தவறான நம்பிக்கை வைத்தால், உங்கள் கனவு எல்லாத் திசைகளில் இருந்தும் சிதைந்து போவதை நீங்கள் கண்ணால் காண நேரிடும்” என பதிவிட்டார். இது கௌதம் மேனனை குறிப்பிட்டு சொன்னதுபோல் இருந்த...
டாக்டராக ஆசைப்பட்டு டான்ஸ் மாஸ்டரான நடன இயக்குனர் பாரதி

டாக்டராக ஆசைப்பட்டு டான்ஸ் மாஸ்டரான நடன இயக்குனர் பாரதி

CINI NEWS, சினி நிகழ்வுகள்
நடன இயக்குனர் பாரதி கடந்த 17 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் டான்சராக சுமார் 1000 பாடல்களுக்கு  நடனமாடி இருக்கிறார். இவர் பிருந்தா, கல்யாண், ராபர்ட் ஆகிய மாஸ்டர்களிடம் உதவியாளராக பணியாற்றி உள்ளார். தற்போது பிக்பாஸ் புகழ் ஓவியா நடிப்பில் உருவாகியுள்ள “ ஓவியாவ விட்டா யாரு “ என்ற படத்தின் மூலம் நடன இயக்குனராக அறிமுகமாகி தொடர்ந்து வீரதேவன், பவித்ரன் இயக்கத்தில் தாராவி, ஏ.வெங்கடேஷ் இயக்கத்தில் நேத்ரா, பா.விஜய் இயக்கத்தில் ஆருத்ரா, தம்பிராமைய்யா இயக்கத்தில் அவரது மகன் நடிக்கும் “ உலகம் விலைக்கு வருது “ மற்றும் எழில், லிங்குசாமி, பூபதிபாண்டியன், ஆர்.கண்ணன், பன்னீர்செல்வம் போன்ற பிரபல இயக்குனர்களின் படங்களிலும், தெலுங்கில் இயக்குனர் கிரண், இயக்குனர் பரத் ஆகியோரின் படங்களிலும் தற்போது நடன இயக்குனராக பணியாற்றி வருகிறார். ஏ.வெங்கடேஷ் இயக்கத்தில் உருவாகி உள்ள “ நேத்ரா “ படத்தில் நடன இயக்குனராக பணியாற்ற...
“கிளாப்போர்ட் புரொடக்ஷனி“ன்  “ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது “  பட  ஷூட்டிங் 45 நாட்களில் நிறைவு!

“கிளாப்போர்ட் புரொடக்ஷனி“ன் “ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது “ பட ஷூட்டிங் 45 நாட்களில் நிறைவு!

CINI NEWS, சினி நிகழ்வுகள்
தரமான கதை களமும்,  சிறந்த பொழுது போக்கு அம்சங்களும் தான் ஒரு நல்ல திரைப்படத்திற்கு ஆணி வேர். அதை மிக துல்லியமாக உள் வாங்கி கொண்டு, தரமான திரைப்படங்களை மட்டுமே தமிழ் ரசிகர்களுக்கு வழங்கி வருகிறார் 'கிளாப்போர்ட் புரொடக்ஷன்'நிறுவனத்தின் நிறுவனரும் - நடிகருமான வி சத்தியமூர்த்தி. இவரது தயாரிப்பில் தற்போது உருவாகி வரும்  'ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது'  படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவு பெற்றுள்ளது. வி சத்யமூர்த்தி தயாரித்து நடிக்கும் 'ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது'  திரைப் படத்தை, அறிமுக இயக்குநர் - 'எருமசாணி' புகழ் ரமேஷ் வெங்கட் இயக்கி இருக்கிறார்.  'மெட்ராஸ் சென்ட்ரல்' புகழ் கோபி - சுதாகர், 'எரும சாணி' புகழ்  விஜய் - ஹரிஜா,  'புட் சட்னி' புகழ் அகஸ்டின்,  'டெம்பில் மங்கிஸ்' புகழ் ஷா ரா - அப்துல் மற்றும்  'BEHIND WOODS' புகழ் வி ஜே ஆஷிக்  ஆகியோர் மிக முக்கிய கதாபத்திரங்களில் ...
கோலிவுட்டிலிருந்து டோலிவுட்டுக்கு(ம்) போன தன்ஷிகா!

கோலிவுட்டிலிருந்து டோலிவுட்டுக்கு(ம்) போன தன்ஷிகா!

CINI NEWS, சினி நிகழ்வுகள்
சினம்’ என்ற குறும்படத்தில் நடித்திருந்தார் நடிகை சாய் தன்ஷிகா. இந்த குறும்படம் கொல்கத்தாவில் நடைபெற்ற கல்ட் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. அப்போது சிறந்த நடிகைக்கான விருது உள்பட எட்டு விருதுகள் ‘சினம் ’ குறும்படத்திற்கு கிடைத்தது. மேலும் நார்வே திரைப்படவிழாக்களிலும் சிறந்த நடிகைக்கான விருதையும், கலிஃபோர்னியாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்படவிழாவிலும் திரையிடப்பட்டு விருதினை வென்றிருக்கிறது ‘சினம்’. சிறந்த நடிகைக்கான விருதினை வென்றிருந்த மகிழ்ச்சியில் இருந்த நடிகை சாய்தன்ஷிகாவை  சந்தித்து வாழ்த்து சொல்லிவிட்டு உரையாடத் தொடங்கினோம். ‘நான் தற்போது மகிழ்ச்சியாக இருக்கிறேன். ஒரு கதாசிரியர்கள் தங்களின் மனதில் ஒரு நடிகையை வைத்து திரைக்கதையை உருவாக்குகிறார்களோ அந்த தருணம் தான் அனைத்து நடிகைகளுக்கும் சந்தோஷமான தருணம். எனக்கு அப்படி ஒரு அனுபவம் அண்மையில் ஏற்பட்டது. தெலுங்கு திரையுலகில...
உறுமீன் படத்தின் இயக்குநரின் நாய் அட்வெஞ்சர் ஹீரோவாகும் படம்!

உறுமீன் படத்தின் இயக்குநரின் நாய் அட்வெஞ்சர் ஹீரோவாகும் படம்!

CINI NEWS, சினி நிகழ்வுகள்
உறுமீன் படத்தின் இயக்குநர் சக்திவேல் பெருமாள் சாமி அடுத்ததாக நாயை கதாபாத்திரமாகக் கொண்டு அட்வெஞ்சர் பாணியில் திரைப்படம் ஒன்றை உருவாக்கவிருக்கிறார். பாபி சிம்ஹா, கலையரசன், ரேஷ்மி மேனன் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் உறுமீன். சிறிய முதலீட்டில் உருவாக்கப்பட்ட படம் என்றாலும் நல்ல வரவேற்பையும் இயக்குநருக்கு பாராட்டையும் பெற்றுத் தந்தது. இந்தப் படத்திற்குப் பிறகு தற்போது வித்தியாசமான முயற்சியில் இறங்கியுள்ளார் இயக்குநர் சக்திவேல் பெருமாள் சாமி. இந்தியாவில் நாய்களை மையமாக வைத்து எவ்வளவோ படங்கள் வந்தாலும், அவை முழுக்க நாய்களின் வாழ்வியலைப் பேசக்கூடிய அட்வெஞ்சர் படங்களாக இல்லை. இந்த நிலையில் நாயை மையமாக வைத்து முழுமையான அட்வெஞ்சர் திரைப்படம் ஒன்றை உருவாக்கவிருப்பதாக இயக்குநர் சக்திவேல் பெருமாள் சாமி அறிவித்து அதன் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார். இந்த படத்திற்காக 8 மாதங்கள் ஆராய்ச்சி ...
தியேட்டர் உரிமையாளர்கள் ஸ்டிரைக் வாபஸ்! – ஆனால் புது படம் ரிலீஸில்லை!

தியேட்டர் உரிமையாளர்கள் ஸ்டிரைக் வாபஸ்! – ஆனால் புது படம் ரிலீஸில்லை!

CINI NEWS, சினி நிகழ்வுகள்
தமிழ்நாடு தியேட்டர் உரிமையாளர்கள் நடத்தி வந்த போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளனர். நாளை(வெள்ளி) முதல் தியேட்டர்கள் இயங்கும் என அபிராமி ராமநாதன் தெரிவித்துள்ளார்.ஸ்டிரைக்கேளிக்கை வரி முற்றிலும் நீக்கம், லைசென்ஸ் புதுப்பித்தல் மூன்றாண்டுகளுக்கு ஒரு மாற்றுதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தியேட்டர் உரிமையாளர்கள், கடந்த மார்ச் 16-ம் தேதி படங்களை வெளியிடாமல் ஸ்டிரைக்கில் ஈடுபட்டு வந்தனர். சென்னையில் உள்ள தியேட்டர்கள் மட்டும் இந்தப்போராட்டத்தில் பங்கேற்கவில்லை.முதல்வருடன் சந்திப்புஇப்பிரச்னை தொடர்பாக இரு தினங்களுக்கு முன்னர் முதல்வர் பழனிசாமியை தியேட்டர் நிர்வாகிகள் சந்தித்தனர். அப்போது இரண்டுநாளில் தனது கருத்தை சொல்வதாக முதல்வர் தெரிவித்ததாக ரோகினி பன்னீர் செல்வம் தெரிவித்திருந்தார்.இந்நிலையில், சென்னையில் உள்ள தியேட்டர் உரிமையாளர்கள் சங்க தலைவர் அபிராமி ராமநாதன் தலைமையிலான நிர்வாகிகள் சென்னை ...