ஜெர்மனியில் மீண்டும் ஜனவரி 10 வரை கொரோனா ஊரடங்கு!
ஜெர்மனியில் அதி தீவிரம் அடைந்துவரும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஜனவரி மாதம் முழுவதும் கடைகள், வர்த்தக நிறுவனங்களை அடைக்க உத்தரவு.
கொரோனா வைரசால் மிகவும் அதிக பாதிக்கப்பட்ட ஐரோப்பிய நாடுகளில் ஜெர்மனியும் ஒன்று. இங்கு நாளுக்கு நாள் பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது. அதுமட்டுமில்லாமல் கொரோனா பரவல் இரண்டாம் அலை வீச தொடங்கியுள்ளது. நேற்றுவரை ஜெர்மனியில் 13,36,101 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 21,900 பேர் இறந்துள்ளனர்.
இதனால் மீண்டும் ஜெர்மனியில் ஊரடங்கை அமல்படுத்த அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. அதுவும் இந்த ஊரடங்கை மிகவும் கடுமையாக பின்பற்ற போவதாக கூறப்படுகிறது. அதன்படி வரும் புதன் கிழமை முதல் அடுத்த ஆண்டு ஜனவரி 10-ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்று தெரிவித்துள்ளனர்.
இந்த புதிய கட்டுப்பாடுகளின்படி, சூப்பர் மார்க்கெட்டுகள், மருந்தகங்கள், வங்கிகள...









