செவ்வாய்க்கிழமை, ஜூன் 2
Shadow

MOVIES

சினிமாவில் ரசிகர்கள் எதிர்பார்ப்பது எது..? விஜய்சேதுபதி சொன்ன ரகசியம்

சினிமாவில் ரசிகர்கள் எதிர்பார்ப்பது எது..? விஜய்சேதுபதி சொன்ன ரகசியம்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  பஞ்ச் டயலாக்கை ரசிகர்கள் தான் தேர்ந்தெடுக்கிறார்கள் என்று ஜுங்கா படத்தின் இசை வெளியிட்டு விழாவின் போது நடிகரும், தயாரிப்பாளருமான மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தெரிவித்திருக்கிறார். விஜய் சேதுபதி புரொடக்சன் தயாரிப்பில், ஏ அண்ட் பி குரூப்ஸ் சார்பில் நடிகர் அருண் பாண்டியன் வழங்கும் விஜய் சேதுபதி நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் ‘ஜுங்கா ’ படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் பிரபல தயாரிப்பாளர்கள் ஆர் பி சௌத்ரி, ஏ எம் ரத்னம், நந்தகோபால், கதிரேசன், டி. சிவா, காரகட்ட பிரசாத், சி வி குமார், கருணாமூர்த்தி, இயக்குநர்கள் சீனு ராமசாமி, அறிவழகன், சாய் ரமணி,பிரேம், பாலாஜி தரணிதரன், ஜனநாதன், விநியோகஸ்தர்கள் திருப்பூர் சுப்ரமணியன், அருள்பதி, நடிகர்கள் நாசர் உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்களுடன், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, நடிகை சயீஷா, நடிகை சர...
மீண்டும் ஹாரர் படத்தில் நயன்தாரா 63…!

மீண்டும் ஹாரர் படத்தில் நயன்தாரா 63…!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகைகள்
தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் ஆக உருவாகி உள்ள  நயன்தாரா, கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் மூன்றாவது தயாரிப்பில் மிகவும் தனித்துவமான, சவாலான ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். பொதுவாக நடிகைகள் தங்களுடைய நட்சத்திர அந்தஸ்தை ஒரு சில ஆண்டுகள் தக்க வைத்துக் கொள்ளவே போராடும் இந்த காலத்தில், 15 ஆண்டுகளுக்கும் மேலாக உச்ச நடிகையாக இருந்து வருகிறார் நயன்தாரா. மக்கள் மனதையும், விமர்சகர்களையும் ஒரு சேர வென்று இருக்கிறார். 2017ல் அவர் நடித்த அறம் பல்வேறு பாராட்டுக்களையும், விருதுகளையும் பெற்றுத் தந்திருக்கிறது. #Nayan63 அறிவிக்கப்பட்ட ஒரு மணி நேரத்தில் சமூக வலைத்தளங்கள் முழுக்க இதை பற்றிய ட்வீட், ஷேர், கமெண்ட்ஸ் என பரவி இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் சாதனை படைத்தது. இதுவே மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் அவருடைய இடத்தை உணர்த்தியது. தயாரிப்பாளர் கோட்டபாடி ஜெ ராஜேஷ், நயன்தாரா இணைந்து கொடு...
தொடர்ந்து 60 மணி நேரம் ஷூட்டிங்கில் கலந்து கொண்ட கார்த்திக்

தொடர்ந்து 60 மணி நேரம் ஷூட்டிங்கில் கலந்து கொண்ட கார்த்திக்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  பீச்சாங்கை வெற்றியை தொடர்ந்து நடிகர் பீச்சாங்கை கார்த்திக் அரை டஜன் படங்களை கைவசம் வைத்துள்ளார். அவர் நடிக்கும் படத்திற்கு. ஷூட்டிங் ஸ்பாட்க்கு சரியான நேரத்திற்கு வராத சில நடிகர்கள் மத்தியில் நடிகர் பீச்சாங்கை கார்த்திக் படப்பிடிப்பு தளத்திலேயே மாறி மாறி நடித்துக் கொண்டிருக்கிறாராம். புதிய இயக்குனர் மிலன் இயக்கும் கமர்ச்சியல் படத்தில் அதிகாலை 6 மணிக்கு படப்பிடிப்பு ஆரம்பித்து இரவு 3 மணி வரைக்கும் படப்பிடிப்பு நடைபெற்றது , அதைத்தொடர்ந்து திருவள்ளூர் சென்று  விளம்பர படம் ஓன்றில் இன்று அதிகாலை 6:30 மணிக்கு படப்பிடிப்பு தொடங்கி இரவு 7 மணிக்கு நிறைவடைகிறது. அங்கிருந்து புறப்பட்டு  நேசன் மற்றும் சிம்புதேவன் போன்ற பெரிய இயக்குனருடன் உதவி இயக்குனராக பனி புரிந்த  டீ.ஆர்.பாலா டுவீலர் பந்தயத்தை மையமாக வைத்து புதிய படம் ஒன்றை இயக்குகிறார் இந்த படத்தின் படப்பிடிப்பு மறுநாள்  அதிகால...
காரைக்காலில் பூஜையுடன் தொடங்கிய ஜீவாவின் ஜிப்சி..!

காரைக்காலில் பூஜையுடன் தொடங்கிய ஜீவாவின் ஜிப்சி..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், முன்னோட்டம்
  காரைக்காலில் தொடங்கிய ‘ஜிப்ஸி’யின் பயணம் ராஜு முருகனின் இயக்கத்தில் ஜீவா நடிக்கும் ‘ஜிப்ஸி’ படத்தின் படபிடிப்பு இன்று காரைக்காலில் தொடங்கியது. ஒலிம்பியா மூவீஸ் என்ற பட நிறுவனத்தின் சார்பில்  S.அம்பேத்குமார் தயாரிக்கும் படம்‘ஜிப்ஸி ’. இதில் ஜீவா நாயகனாக நடிக்கிறார். இதற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் ராஜு முருகன். குக்கூ, ஜோக்கர் ஆகிய வெற்றிப்படங்களைத் தொடர்ந்து இவர் இயக்கும் ‘ஜிப்ஸி ’படத்தின் படபிடிப்பு இன்று காரைக்காலில் தொடங்கியது. இதில் ஜீவா, இமாசல பிரதேச அழகி நடாசா சிங் நாயகன் நாயகியாக நடிக்கிறார்கள். இதன் முதற்கட்ட படபிடிப்பு காரைக்காலில் இன்று தொடங்கியது. இதில் படக்குழுவினருடன் பாடலாசிரியர் யுகபாரதி கலந்து கொண்டார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இந்த படத்திற்கு யுகபாரதி பாடல்களை எழுதுகிறார். எஸ் கே செல்வகுமார் ஒளிப்பதிவை கவனிக்க, ‘அருவி’ படத...
மீண்டும் யானையை வைத்து “கும்கி2” எடுக்கும் பிரபு சாலமன்

மீண்டும் யானையை வைத்து “கும்கி2” எடுக்கும் பிரபு சாலமன்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
  2012 ம் ஆண்டு டிசம்பர் 14ம் தேதி பிரபு சாலமன் இயக்கத்தில், லிங்குசாமி தயாரிப்பில், விக்ரம் பிரபு –லஷ்மிமேனன் புதுமுகங்களாக அறிமுகமான “ கும்கி “ படம் வெளியாகி வசூல் சாதனை படைத்தது. தமிழகம் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் இந்த படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது.   ஆறு ஆண்டுகளுக்கு பிறகு பிரபுசாலமன் இயக்கத்தில் உருவாகும்“ கும்கி 2  “ படத்தின் இரண்டு கட்ட படப்பிடிப்பு நிறைவுற்றது, மூன்றாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது. நிறைய படங்களில் முதல் பாகத்தின் கதை தொடர்ச்சியாகத்தான் இரண்டாம் பாகம் உருவாக்கப் பட்டிருக்கிறது. ஆனால் கும்கி படத்திற்கும்,  கும்கி 2 படத்திற்கும் கதையளவில் எந்த சம்மந்தமும் இல்லை. யானை சம்மந்தப் பட்ட கதை என்பதால் இதற்கும் கும்கி என்ற தலைப்பை தொடவேண்டி இருக்கிறது என்கிறார் பிரபுசாலமன்.   நாயகனாக மதியழகன் அறிமுகமாகிறார். நாயகி இன்னு...
முதல் பாகத்தை விட 2ம் பாகம் விறுவிறுப்பாக இருக்கும் – கோலிசோடா இயக்குனர் தகவல்

முதல் பாகத்தை விட 2ம் பாகம் விறுவிறுப்பாக இருக்கும் – கோலிசோடா இயக்குனர் தகவல்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
ரஃப் நோட் ப்ரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் விஜய் மில்டன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் கோலி சோடா 2. சமுத்திரகனி, பரத் சீனி, வினோத், எசக்கி பரத், சுபிக்‌ஷா, கிரிஷா குரூப் நடித்துள்ள இந்த படத்துக்கு அச்சு இசையமைத்திருக்கிறார். வரும் ஜூன் 14ஆம் தேதி வெளியாகும் இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. எடிட்டிங், ஸ்டண்ட் பெரிய அளவில் பேசப்பட்ட படம் கோலி சோடா. கடுகு படத்தில் ஒரு சிறு வாய்ப்பு கிடைத்தது. கோலி சோடா 2 படத்துக்கு முழு எடிட்டிங் வாய்ப்பு எனக்கு கிடைத்தது என்றார் எடிட்டர் தீபக். அனுபவம் வாய்ந்த இயக்குனர்கள், நடிகர்கள் இந்த படத்தில் நடித்திருக்கிறார்கள். அவர்களுடன் வேலை பார்த்தது எங்கள் கேரியரில் உதவும். இது ஒரு டீம் ஒர்க் என்றார் பரத் சீனி. சமுத்திரகனி சார் படப்பிடிப்பில் மிகவும் ஆதரவாக இருந்தார். விஜய் மில்டன் சார், படப்பிடிப்பில் தான் வசனங்களையே கொடுப்ப...
சத்யா நடிப்பில் என்னோடு நீ இருந்தால்…!

சத்யா நடிப்பில் என்னோடு நீ இருந்தால்…!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
சைட்டோ பிலிம் கார்ப்பரேசன் எஸ்.யசோதா தயாரிக்கும் படத்திற்கு “ என்னோடு நீ இருந்தால் என்று பெயரிட்டுள்ளனர். இந்த படத்தில் மு.ரா.சத்யா கதாநாயகனாக நடிக்கிறார். நாயகியாக மானசா நாயர் நடிக்கிறார். மற்றும் வெ.ஆ.மூர்த்தி, ரோகினி,அஜய்ரத்னம், வையாபுரி,பிளாக்பாண்டி, அழகு,மீரா கிருஷ்ணன், சஞ்சய், சாந்தி ஆனந்தராஜ், பயில்வான் ரங்கநாதன், நெல்லைசிவா ஆகியோர் நடிக்கிறார்கள். படத்தின் இயக்குனர் மு.ரா.சத்யாவிடம் படம் பற்றி கேட்ட போது.. லவ் மற்றும் ரொமாண்டிக் திரில்லராக படம் உருவாகி உள்ளது . யாரிடமும் உதவியாளராக பணி புரியவில்லை, படங்களை பார்த்தது, புத்தகங்கள் எழுதும் அனுபவத்தை வைத்தே இந்த படத்தை இயக்கியிருக்கிறேன். இந்த படம் வெளிவந்த பிறகு பார்த்த அனைவருக்கும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். நாம் அனைவரும் இந்த சமூதாயத்தால் ஒரு முக்கியமான விஷயத்தால் நமக்கு தெரியாமலே பாதிக்கப்பட்டு வருகிறோம். அந்த பாதிப்பு என்ன...
காவிரி ஆணையம் வேண்டாம் என ரஜினி கூறினால் காலா படம் ரிலீஸ் – கர்நாடக திரைப்பட வர்த்தக சபை

காவிரி ஆணையம் வேண்டாம் என ரஜினி கூறினால் காலா படம் ரிலீஸ் – கர்நாடக திரைப்பட வர்த்தக சபை

CINI NEWS, HOME SLIDER, MOVIES, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு ஆதரவாக ரஜினிகாந்த் கருத்து தெரிவித்திருந்தார். இதனால், அவரது படம் கர்நாடகாவில் வெளியிடக்கூடாது என கன்னட அமைப்புகள் போர்க்கொடி தூக்கின. காலா படம் நாளை மறுநாள் உலகம் முழுவதும் வெளியாக உள்ள நிலையில், கர்நாடகாவில் காலா வெளியாக கர்நாடக திரைப்பட வர்த்தக சபை தடை விதித்தது. காலா படத்தை ரிலீஸ் செய்வது குறித்து, கர்நாடக வர்த்தக சபையுடன், தேசிய திரைப்பட அமைப்பு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்த நிலையில், கர்நாடகாவில் ‘காலா திரைப்படம் வெளியாகும் திரையரங்குகளுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் படத்தின் தயாரிப்பாளர் தனுஷ், ஐஸ்வர்யா தனுஷ் சார்பில் நேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது. இன்று இந்த வழக்கை விசாரித்த கர்நாடக உயர்நீதிமன்றம், படத்தை ரிலீஸ் செய்ய அரசுக்கு உத்தரவிட முடியாது என தீர்ப்பு வழங்கியது. அதேநேரத்தில் படம் வெளியாகும் பட்சத்தில் கர...
விக்ரம் ரசிகர்களுடன் மோதலில் ஈடுபட்ட கஸ்தூரி

விக்ரம் ரசிகர்களுடன் மோதலில் ஈடுபட்ட கஸ்தூரி

CINI NEWS, HOME SLIDER, MOVIES, Uncategorized, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
விக்ரம்-திரிஷா நடித்து 15 வருடங்களுக்கு முன்பு வெளியாகி வசூல் குவித்த ‘சாமி’ படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. இதில் விக்ரம்-கீர்த்தி சுரேஷ் ஜோடியாக நடிக்கின்றனர். ஹரி இயக்குகிறார். இந்த படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது. இதில் போலீஸ் அதிகாரியாக வரும் விக்ரம் ஆவேசமாக பேசும் வசனங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த டிரெய்லரை நடிகை கஸ்தூரி டுவிட்டரில் கேலி செய்தார். “முந்தா நாள் வந்த டீஸரில் கலாய்த்திருந்த அத்தனை சீன்களையும் ஒன்று சேர்த்து ஒரு டிரெய்லர் ஸ்ஸப்பா..” என்று அவர் பதிவிட்டார். கஸ்தூரி முந்தா நாள் வந்த டீஸர் என்று குறிப்பிட்டது. சிவா நடித்துள்ள தமிழ் படம்-2 டிரெய்லரைத்தான். அதில் நிறைய படங்களை கேலி செய்யும் காட்சிகள் இருந்தன. கஸ்தூரி அதில் கவர்ச்சி நடனம் ஆடி இருந்தார். சாமி-2 படத்தின் டிரெய்லரை கஸ்தூரி விமர்சித்தது விக்ரம் ரசிகர்களுக்கு கோபத்தை ஏற்படுத்த “உன் பேரன் பேத்திகள் ட...
பிரியா பவானி சங்கர், இந்துஜாவுடன் ஜோடி சேர முடியாமல் போன உதயநிதி

பிரியா பவானி சங்கர், இந்துஜாவுடன் ஜோடி சேர முடியாமல் போன உதயநிதி

CINI NEWS, HOME SLIDER, MOVIES, Uncategorized, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் கடைசியாக வெளியான படம் நிமிர். யதார்த்தமான கதையாக உருவாகி இருந்த இந்த படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. உதயநிதியின் நடிப்புக்கும் பாராட்டு கிடைத்தது. அத்துடன் உதயநிதி சினிமா வரலாற்றில் நிமிர் முக்கிய படமாக அமைந்தது. இப்படத்தை அடுத்து உதயநிதி, சீனு ராமசாமி இயக்கத்தில் நடித்த ‘கண்ணே கலைமானே’ படத்தில் நடித்தார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக தமன்னா நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது. உதயநிதி அடுத்ததாக அட்லியிடம் இணை இயக்குனராக பணியாற்றிய எனாக் இயக்கத்தில் நடிக்க இருந்தார். இந்த படத்தில் உதயநிதி ஜோடியாக மேயாத மான் படத்தில் நடித்த பிரியா பவானி சங்கரும், இந்துஜாவும் ஒப்பந்தமாகினார்கள். தற்போது இந்த புதிய படம் சில காரணங்களால் கைவிடப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது....