திங்கட்கிழமை, மே 25
Shadow

HOME SLIDER

தீபிகா-ரன்வீர் கை கூடிய காதல்… விரைவில் கல்யாணம்..!

தீபிகா-ரன்வீர் கை கூடிய காதல்… விரைவில் கல்யாணம்..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள், நடிகைகள்
தீபிகா படுகோனேவுக்கும், இந்தி நடிகர் ரன்வீர் சிங்குக்கும் காதல் மலர்ந்துள்ளது. இருவரும் ஏற்கனவே பல படங்களில் ஜோடியாக நடித்துள்ளனர். தற்போது சர்ச்சையில் சிக்கி உள்ள பத்மாவத் படத்திலும் இணைந்து நடித்து இருக்கிறார்கள். இதில் தீபிகா படுகோனே சித்தூர் ராணி பத்மினியாகவும் அவர் மீது காதல்கொண்டு படையெடுத்து வரும் மன்னன் அலாவுதீன் கில்ஜியாக ரன்வீர் சிங்கும் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு எதிர்ப்பு கிளம்பியதால் ‘பத்மாவத்’ என்று பெயரை மாற்றியும், சர்ச்சை காட்சிகளை நீக்கியும் தணிக்கை குழு அனுமதி வழங்கி உள்ளது. இந்த மாத இறுதியில் படம் திரைக்கு வருகிறது. இந்த நிலையில் தீபிகா படுகோனேவும், ரன்வீர் சிங்கும் விரைவில் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தீபிகா படுகோனே தனது 32–வது பிறந்த நாளை மாலத்தீவில் கொண்டாடினார். இதில் ரன்வீர் சிங்கும் அவரது பெற்றோருடன் கலந்து கொண்ட...
தல, தளபதி ரசிகர்களை மகிழ்விக்க வரும் விசிறி..!

தல, தளபதி ரசிகர்களை மகிழ்விக்க வரும் விசிறி..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
ஜெ.சா.புரொடக்சன்ஸ் சார்பில் ஏ.ஜமால் சாஹிப் கி.ஜாபர் சாதிக் ஆகியோருடன் இணைந்து, வெற்றி மகாலிங்கம் தயாரிக்கும் படம் ‘விசிறி’. இதில் ராம்சரவணா, ராஜ், சூர்யா ஆகியோர் நாயகர்களாக நடித்துள்ளனர். ரெமோனா ஸ்டெபனி கதாநாயகியாக அறிமுகமாகிறார். இவர்களுடன் பி.டி.அரசகுமார் உள்பட பலர் நடிக்கிறார்கள். தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார்கள் ஆகிய “தியாகராஜ பாகவதர் - பி.யூ.சின்னப்பா ரசிகர்களிடம் தொடங்கிய மோதல், “எம்.ஜி.ஆர். -சிவாஜி, ‘ரஜினி -கமல்’ என்று தொடர்ந்தது. அந்த வரிசையில் ‘தல-தளபதி’ ரசிகர்களின் மோதல் மிக முக்கியமானது மட்டுமல்ல, சுவாரஸ்ய மானதும் கூட. அதை மையக்கருவாக வைத்து விசிறி படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் வெற்றி மகாலிங்கம்....
பாஸ்போர்ட்டில் வருகிறது அதிரடி மாற்றங்கள்..!

பாஸ்போர்ட்டில் வருகிறது அதிரடி மாற்றங்கள்..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
பாஸ்போர்ட்டில் வருகிறது அதிரடி மாற்றங்கள்..! 2012-ம் ஆண்டுக்கு பின்னர் வெளியிடப்பட்ட பாஸ்போர்ட்டுகளின் தகவல்கள் அரசு கணினியில் தரவாக பதிவு செய்யப்பட்டு உள்ளது, இதனால் சோதனையின் போது பார்கோர்டை ஸ்கேன் செய்கையில் எளிதாக விபரங்களை தெரிந்துக் கொள்ள முடியும் எனவே, குடிமக்களின் விபரங்களை பாதுகாக்கும் முயற்சியாக வெளியுறவுத்துறை பாஸ்போர்ட்டில் முகவரி அடங்கிய இறுதி பக்கத்தை நீக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. முகவரி அடங்கிய பக்கத்தை நீக்கும் பட்சத்தில் அதனை இனி முகவரி சான்றாக பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும். பழைய பாஸ்போர்ட்டுகளில் முகவரி பக்கம் அடங்கியிருந்தாலும், அதன் ஆயுட்காலம் முடிந்து புதுப்பிக்கும் போது, முகவரி பக்கம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, இந்திய அரசு தரப்பில் மூன்று நிறங்களில் பாஸ்போர்ட்டு வழங்கப்பட்டு வருகிறது. அரசு பணி அதிகாரிகள் மற்றும் வெளிநாடுகளுக்க...
சுயநலத்துக்காக வைரமுத்து மீது தாக்குதல் தொடுப்பதை ஏற்க முடியாது: மு.க.ஸ்டாலின்

சுயநலத்துக்காக வைரமுத்து மீது தாக்குதல் தொடுப்பதை ஏற்க முடியாது: மு.க.ஸ்டாலின்

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள்
சுயநலத்துக்காக வைரமுத்து மீது தாக்குதல் தொடுப்பதை ஏற்க முடியாது: மு.க.ஸ்டாலின் சில நாட்களுக்கு முன்னர் நாளிதழ் ஒன்றில் கவிஞர் வைரமுத்து ஆண்டாள் குறித்து எழுதிய கட்டுரையில், அமெரிக்க ஆய்வாளர் ஒருவரின் கருத்தை மேற்கோள் காட்டியிருந்தார். இதற்கு பா.ஜ.க தலைவர் எச் ராஜா வைரமுத்துவை தரம் தாழ்ந்த வகையில் விமர்சித்து எதிர்வினையாற்றியிருந்தார். மேலும், அவருக்கு பல்வேறு இந்துத்துவ இயக்கங்களும் கண்டனங்களும், மிரட்டல்களும் விடுத்து வருகின்றன. இந்நிலையில், இது தொடர்பாக தி.மு.க செயல் தலைவர் மு.க ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:- “தமிழை ஆண்டாள்” என்ற தலைப்பில் பாரம்பரியமிக்க "தினமணி" நாளிதழில் கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் எழுதிய கட்டுரையில், ஆண்டாள் குறித்து அமெரிக்க ஆய்வாளர் ஒருவரின் கருத்தை மேற்கோள் காட்டியிருந்ததற்கு எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, கவிஞர் வைரமுத்து அவர்கள் எவ்வ...
ஜெயலலிதா மரணம்… விசாரணை ஆணைய கெடு: 2 பெட்டிகளில் வந்த அப்பல்லோ ஆவணங்கள்..!

ஜெயலலிதா மரணம்… விசாரணை ஆணைய கெடு: 2 பெட்டிகளில் வந்த அப்பல்லோ ஆவணங்கள்..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
ஜெயலலிதா மரணம்... விசாரணை ஆணைய கெடு: 2 பெட்டிகளில் வந்த அப்பல்லோ ஆவணங்கள்..! ஜெயலலிதா மரணம் தொடர்பாக எழுந்துள்ள பல்வேறு சந்தேகங்களை போக்கி உண்மை நிலையை வெளிப்படுத்துவதற்காக, ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது ஜெயலலிதா மரணம் தொடர்பாக சந்தேகம் எழுப்பியவர்கள், புகாருக்கு உள்ளானவர்கள், ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம், டாக்டர்கள் என அனைத்து தரப்பினரிடமும் நீதிபதி ஆறுமுகசாமி விசாரித்து வாக்குமூலங்களை பதிவு செய்து வருகிறார். அவ்வகையில், ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட மருத்துவ சிகிச்சை தொடர்பான ஆவணங்களை விசாரணை ஆணையத்தில் தாக்கல் செய்ய வேண்டு என சென்னை அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகத்திற்கு நீதிபதி ஆறுமுகசாமி உத்தரவிட்டிருந்தார். ஆனால், அப்பல்லோ மருத்துவமனை இதனை சமர்ப்பிக்காமல் காலம் தாழ்த்தி வந்தது. இதை...
‘உத்தமி’ ஆன பிக்பாஸ் ஜூலி..!

‘உத்தமி’ ஆன பிக்பாஸ் ஜூலி..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
‘உத்தமி’ ஆன பிக்பாஸ் ஜூலி..! ஒட்டு மொத்த உலகையும் திரும்பி பார்க்க வைத்த போராட்டங்களில் மிக முக்கியமானது தமிழர்களின் ஜல்லிக்கட்டு போராட்டம். இந்த போராட்டத்தின் மூலம் அனைவரிடமும் 'வீர தமிழச்சி' என பெயர் பெற்றவர் ஜூலி என்கிற ஜூலியானா. பின்னர் இவர் பிரபல தொலைக்காட்சியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பட்டி தொட்டியெங்கும் பிரபலமானார். இதனையடுத்து பிரபல தொலைக்காட்சி ஒன்றில் தொகுப்பாளியாக அறிமுகமானார் ஜூலி. இந்நிலையில் இவர், தற்போது 'கே7 புரொடக்ஷன்ஸ்' நிறுவனம் தயாரிக்கும் ஒரு படத்தில் கதாநாயகியாக நடிக்க உள்ளார். இந்தப் படத்திற்கு ‘உத்தமி’ என்று பெயர் வைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் சமூக சேவகராக நடிக்கிறார் ஜூலி....
மெகா பட்ஜெட்டில் மே மாதத்தில் துவங்கவுள்ள ‘சங்கமித்ரா’ -சுந்தர்.சி

மெகா பட்ஜெட்டில் மே மாதத்தில் துவங்கவுள்ள ‘சங்கமித்ரா’ -சுந்தர்.சி

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
மெகா பட்ஜெட்டில் மே மாதத்தில் துவங்கவுள்ள ‘சங்கமித்ரா’ -சுந்தர்.சி ‘அரண்மனை 2’ படத்திற்கு பிறகு இயக்குநராக சுந்தர்.சி கைவசம் ‘சங்கமித்ரா’ மற்றும் ‘கலகலப்பு 2’ ஆகிய இரண்டு படங்கள் உள்ளது. இதில் ‘கலகலப்பு 2’ படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளது. இந்நிலையில், பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசிய சுந்தர்.சி “அடுத்ததாக ‘சங்கமித்ரா’வின் படப்பிடிப்பை வருகிற ஏப்ரல் அல்லது மே மாதத்தில் துவங்கவுள்ளேன்” என்று தெரிவித்துள்ளார். வரலாறு மற்றும் சரித்திர பின்னணியில் உருவாகும் இப்படத்தில் ‘தோனி’ பட புகழ் தீஷா பதானி நடிக்கவுள்ளார். ஜெயம் ரவி, ஆர்யா இணைந்து முக்கிய வேடங்களில் நடிக்கவுள்ளனர். இதனை ‘தேனாண்டாள் ஸ்டுடியோ லிமிடெட்’ நிறுவனம் மெகா பட்ஜெட்டில் தயாரிக்கவுள்ளது. ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் இரண்டு பாகங்களாக உருவாகவிருக்கும் இதற்கு ஏ.ஆர்...
அமெரிக்கா ‘கிரீன் கார்டு’ ஒதுக்கீடு அதிபர்  டிரம்ப் புது முடிவு..!

அமெரிக்கா ‘கிரீன் கார்டு’ ஒதுக்கீடு அதிபர் டிரம்ப் புது முடிவு..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெறுவதற்கு வழங்கப்படுவது கிரீன் கார்டு. இந்த கிரீன் கார்டு பெறுவதற்கு உலகமெங்கும் உள்ள தகவல் தொழில் நுட்பத்துறையினர், டாக்டர்கள், வக்கீல்கள், தொழில் நுட்ப வல்லுனர்கள் போட்டி போடுகின்றனர். இந்த நிலையில் தகுதியின் அடிப்படையில் குடியேற்ற உரிமை வழங்கவும், வருடாந்திர கிரீன் கார்டு ஒதுக்கீட்டை 45 சதவீத அளவுக்கு அதிகரிக்கவும் அமெரிக்க நாடாளுமன்றத்தின் மக்கள் பிரதிநிதித்துவ சபையில் மசோதா அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறி ஜனாதிபதி டிரம்பால் கையெழுத்திடப்பட்டு சட்டமாகி விட்டால், அது பன்முக விசா திட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும்; குடியேற்ற அளவை தற்போதைய 10 லட்சத்து 5 ஆயிரம் என்பது ஆண்டுக்கு 2 லட்சத்து 60 ஆயிரம் என்ற அளவுக்கு குறைக்கும். அமெரிக்காவின் எதிர்காலத்தை பாதுகாக்கும் சட்ட மசோதா என்று பெயரிடப்பட்டுள்ள இந்த மசோதா, தற்போது ஆண்ட...
விமானத்தை போல் குளுகுளு சொகுசு ரெயில் பெட்டி அறிமுகம்

விமானத்தை போல் குளுகுளு சொகுசு ரெயில் பெட்டி அறிமுகம்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
விமானத்தை போன்று குளுகுளு சொகுசு ரெயில் பெட்டி அறிமுகம் பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் கூடிய புதிய ரெயில் பெட்டிகள் முதல் முறையாக தெற்கு ரெயில்வேயில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன. இந்த ரெயில் பெட்டியில் விமானத்தில் பயணிப்பது போல சொகுசான பயணத்தை பயணிகள் அனுபவிக்கலாம். வசதியாகவும், பாதுகாப்பாகவும் செல்வதற்கு பெரும்பாலானோர் ரெயில் பயணங்களை தேர்வு செய்கிறார்கள். இந்த வகையில் பயணிகளின் வசதிக்கு ஏற்ப பொது வகுப்பு, முதல் வகுப்பு, இரண்டாம் வகுப்பு என பல பிரிவுகளில் ரெயில்வே நிர்வாகம் பெட்டிகளை நிர்ணயித்துள்ளது. இதில் முதல் வகுப்பு பெட்டிகள் அதிக சொகுசு வசதிகள் உடையதாக இருக்கும். முதல் வகுப்பில் பயணிகளுக்கு அதிக முன்னுரிமை வழங்கப்படும். ரெயில் நிலையங்களில் முதல் வகுப்பு பயணிகளுக்கு தனியாக இருக்கை வசதிகள் இருக்கும். இந்த நிலையில் முதல் வகுப்பை விட கூடுதல் வசதிகள் கொண்ட அனுபூதி பெட்டியை ...
ஆண்டாள் விவகாரத்தில் எதிர்வினைக்கு மீண்டும் எதிவினையாற்ற முயற்சிக்க வேண்டாம் – பாரதிராஜாவுக்கு எஸ்.வி.சேகர் பதிலடி

ஆண்டாள் விவகாரத்தில் எதிர்வினைக்கு மீண்டும் எதிவினையாற்ற முயற்சிக்க வேண்டாம் – பாரதிராஜாவுக்கு எஸ்.வி.சேகர் பதிலடி

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
ஆண்டாள் விவகாரத்தில் எதிர்வினைக்கு மீண்டும் எதிவினையாற்ற முயற்சிக்க வேண்டாம் - பாரதிராஜாவுக்கு எஸ்.வி.சேகர் பதிலடி இந்துக்களின் தாயாராக கருதப்படும் ஆண்டாள் குறித்து கவிப்பேரரசு ஒரு கருத்தை பேசியதால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. வைரமுத்துவின் கருத்துக்கு பலர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் பாஜக தேசிய தலைவர் ராஜா ஒருபடி மேலே போய் வைரமுத்துவையும் அவரது தாயாரையும் அவதூறாக பேச இப்போது வைரமுத்துவுக்கு ஆதரவாக பல குரல்கள் எழும்பியது. இந்த நிலையில் நடிகரும், இயக்குனருமான எஸ்.வி.சேகர் இது குறித்து வெளியிட்ட கருத்து: தங்கள் அலுவலகத்தில் பல இந்துக்கடவுள்களின் படங்களை வைத்திருக்கும் திரு பாரதி ராசா அவர்களே தன் ரத்தம் அவமானப்படுவதை தட்டிக்கேட்பதை விட,வியாபாரத்துக்காக மீண்டும் சேர்ந்த நட்புக்கு குரல் கொடுக்க பாய்ந்து வரும் (என்)உயிர்த்தோழன். தவறு செய்தவரே மேலோட்டமாக மன்னிப்பு கேட்டபின் உங்களின்...