வெள்ளிக்கிழமை, மே 22
Shadow

HOME SLIDER

நடிகர் அரவிந்த்சாமி தலைமை விருந்தினராக  பங்கேற்க்கும் 15வது சென்னை சர்வதேச திரைப்பட விழா துவக்க விழா

நடிகர் அரவிந்த்சாமி தலைமை விருந்தினராக பங்கேற்க்கும் 15வது சென்னை சர்வதேச திரைப்பட விழா துவக்க விழா

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள்
  சினி அப்ரிசியேஷன் ஃபவுண்டேஷன் வழங்கும் 15-வது சர்வதேச சென்னை திரைப்படவிழா வரும் டிசம்பர் 14 முதல் (வியாழன்) 21 (வியாழன்) வரை நடக்கவுள்ளது. 15-வது சர்வதேச சென்னை திரைப்படவிழாவின் துவக்கவிழா டிசம்பர் 14ம் தேதி 2017, அன்று மாலை 6.15 மணிக்குச் சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் சூழ கலைவாணர் அரங்கத்தில் நடைபெறவுள்ளது. இந்தத் துவக்க விழாவில் நடிகர் அரவிந்த்சாமி தலைமை விருந்தினராக பங்கேற்கிறார். சென்னையில் உள்ள தேவி, தேவி பாலா, சத்யம், கேசினோ, அண்ணா, தாகூர் பிலிம் செண்டர், ரஷ்யன் செண்டர் ஆப் சயின்ஸ் & கல்சர் ஆகிய திரையரங்குகளில் திரையிடப்படுகிறது. இந்த வருடத்தின் சிறந்த படத்திற்காகப் போட்டியிடும் 12 தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. 1. 8 தோட்டாக்கள் 2. அறம் 3. கடுகு 4. குரங்கு பொம்மை 5. மாநகரம் 6. மகளிர் மட்டும் 7. மனுசங்கடா 8. ஒரு கிடாயின் க...
கட்டிப்பிடிக்க கத்துக்கொடுத்த ரம்யா நம்பீசன் –   புதுமுகம் சித்தார்த்தா சங்கர்

கட்டிப்பிடிக்க கத்துக்கொடுத்த ரம்யா நம்பீசன் –   புதுமுகம் சித்தார்த்தா சங்கர்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  கட்டிப்பிடிக்க கத்துக்கொடுத்த ரம்யா நம்பீசன்    புதுமுகம் சித்தார்த்தா சங்கர் சமீபத்தில் வெளிவந்து ஓடிக் கொண்டிருக்கும் படம்  சத்யா. இந்த படத்தில் சிபி ராஜிற்கு வில்லனாகா வந்து மிரட்டல் கொடுக்கும் சித்தார்த்தா சங்கர் நடிப்புக்கு ஏகப்பட்ட ரெஸ்பான்ஸ்.  இவர் நடிப்பின் மீது உள்ள ஆசையால் டாக்டர் படிப்பை பாதியில் விட்டு வந்திருக்கிறார். இந்த அனுபவம் குரித்து சித்தார் சங்கரிடம் கேட்டபோது.. நான் மலேசியாவில் பொறந்து வளர்ந்தவன். அப்பா வேலூர் அம்மா மலேசியா  அங்கேயே டாக்டருக்கு படித்துக்கொண்டிருந்தேன். எனக்கு நடிக்க ஆசை ஆனால் அம்மா ரொம்பவும் கண்டிப்பாக படிப்புதன் முக்கியம் என்று சொல்லி விட்டார்கள். ஆனாலும் பிடிவாதமாக நடிக்க வந்து விட்டேன். வந்ததும் நாசர் சரிடம் முறையாக நடிப்பை கத்துக்கிட்டேன். நான் போகும் ஜிம்முக்கு விஜய் ஆண்டனி வருவார். அவரிடம் வாய்ப்பு கேட்டு வைத்திருந்தேன். சைத்தான...
ஜெயம் ரவி நடிக்கும் மியூஸிக்கல் ஆக்‌ஷன் த்ரில்லர்

ஜெயம் ரவி நடிக்கும் மியூஸிக்கல் ஆக்‌ஷன் த்ரில்லர்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள்
சக்தி செளந்தர்ராஜன் இயக்கத்தில் ‘டிக் டிக் டிக்’ என்ற படத்தில் நடித்துள்ளார் ஜெயம் ரவி. ‘மிருதன்’ படத்தைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக இருவரும் இணைந்துள்ளனர். இந்தப் படத்தில் நிவேதா பெத்துராஜ் ஹீரோயினாக நடித்துள்ளார். ஜெயம் ரவி மகன் ஆரவ், முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். இந்தப் படத்தைத் தொடர்ந்து, அறிமுக இயக்குநர் கார்த்திக் தங்கவேல் இயக்கும் புதிய படத்தில் நடிக்கிறார் ஜெயம் ரவி. இன்னும் பெயரிடப்படாத இந்தப் படம், மியூஸிக்கல் ஆக்‌ஷன் த்ரில்லர் படமாக உருவாக இருக்கிறது. இந்தப் படத்தில் ஜெயம் ரவி ஜோடியாக ராஷி கண்ணா நடிக்கிறார். ஹோம் மூவி மேக்கர்ஸ் சார்பில் சுஜாதா விஜயகுமார் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.  ...
கேரளாவில் ஆயுர்வேத கிசிச்சை எடுக்கும் அனுஷ்கா

கேரளாவில் ஆயுர்வேத கிசிச்சை எடுக்கும் அனுஷ்கா

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், முன்னோட்டம்
  உடல் எடை குறைந்து ஸ்லிம்மான அனுஷ்கா, கேரளாவில் ஆயுர்வேத சிகிச்சை எடுத்து வருகிறார் என்கிறார்கள். ‘இஞ்சி இடுப்பழகி’ படத்துக்காக தன்னுடைய உடல் எடையை வெகுவாக அதிகரித்தார் அனுஷ்கா. ஆனால், அம்மா இடுப்பில்  ஏறிய குழந்தை போல. ஏறிய இடை இறங்குவேனா என அடம்பிடித்தது. இதனால், சில வருடங்கள் மிகவும் அவதிப்பட்டு  வந்தார் அனுஷ்கா. ‘பாகுபலி 2’ படத்தில் கூட அப்படியே தான் நடித்தார். கிராஃபிக்ஸ் மூலம் அவருடைய உடலை அழகாகக் காட்டினார்கள். உடல் எடை குறையாததால், வேறெந்த படத்திலும் கமிட்டாகாமல் தவிர்த்து வந்தார் அனுஷ்கா. இத்தனைக்கும் அவர் யோகா  டீச்சர் வேறு. ஒருவழியாக தீவிர முயற்சிக்குப் பின் உடல் எடையைக் குறைத்துள்ளார் அனுஷ்கா. அவர் ஸ்லிம்மாக இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியிருக்கிறது. இந்நிலையில், நீண்ட நாட்களாக முதுகுவலி பிரச்னையால்  அவதிப்பட்டு வரும் அனுஷ்கா, கேரள...
‘வேலைக்காரன்’ பெற்ற ‘யு’ சான்றிதழ்..!

‘வேலைக்காரன்’ பெற்ற ‘யு’ சான்றிதழ்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், முன்னோட்டம்
‘ரெமோ’ படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடித்துவரும் புதிய படம் ‘வேலைக்காரன்’. இப்படத்தை மோகன் ராஜா இயக்கி வருகிறார். சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மலையாள நடிகர் பஹத் பாசில், பிரகாஷ் ராஜ், சினேகா, தம்பி ராமையா, விஜய் வசந்த், ஆர்.ஜே.பாலாஜி, ரோபா சங்கர் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைக்கும் இப்படத்தை 24AM ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் ஆர்.டி.ராஜா தயாரித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்புகள் சமீபத்தில் நடந்து முடிந்தது. இதையடுத்து பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வந்தது. தற்போது அனைத்து பணிகளும் முடிந்து படத்தை தணிக்கை குழுவிற்கு அனுப்பியிருக்கின்றனர். படத்தை பார்த்த தணிக்கை குழுவினர், ‘யு’ சான்றிதழ் வழங்கியுள்ளனர். இதையடுத்து, டிசம்பர் 22ம் தேதி படம் வெளியாவதற்கான பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்....
தமிழ் ராக்கர்ஸ் பட ரிலீஸ் தேதி வெளியிட்ட `தமிழ்படம் 2.0′ கலாட்டா..!

தமிழ் ராக்கர்ஸ் பட ரிலீஸ் தேதி வெளியிட்ட `தமிழ்படம் 2.0′ கலாட்டா..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், முன்னோட்டம்
  சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் கடந்த 2010-ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் `தமிழ் படம்'. தமிழ் சினிமாவில் காலங்காலமாக நடந்து வரும் அட்ராசிட்டிகளை கிண்டல் செய்து உருவாகியிருக்கும் இப்படத்தில் நாயகனாக மிர்ச்சி சிவா நடித்திருந்தார். பல தமிழ் படங்களை கிண்டல் செய்து உருவாகியதால் பல்வேறு போராட்டங்களுக்கு இடையே படம் ரிலீசாகியது. இந்நிலையில், `தமிழ்படம் 2.0' என்ற பெயரில் தமிழ் படத்தின் அடுத்த பாகம் உருவாக இருப்ப இருக்கிறது. அதற்கான பூஜை சமீபத்தில் நடந்த நிலையில், படத்தின் போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. டிசம்பர் 11-ஆம் தேதி படப்பிடிப்பு தொடங்குவதாகவும், வருகிற 25.05.2018 அன்று படம் ரிலீசாகும் என்றும் கூறப்பட்டுள்ளது. அதற்கு அடுத்த நாளே 26.05.2018 ஆம் தேதி தமிழ் ராக்கர்ஸில் படம் ரிலீஸ் ஆகும் என்றும் படக்குழு கலாய்த்து போஸ்டர் வெளியிட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல், அத...
திகிலான குற்றச் சம்பவத்தை மையப்படுத்தி உருவாகும் ‘சுட்டுப் பிடிக்க உத்தரவு’

திகிலான குற்றச் சம்பவத்தை மையப்படுத்தி உருவாகும் ‘சுட்டுப் பிடிக்க உத்தரவு’

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், முன்னோட்டம்
  தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்கள் மிஷ்கின், சுசீந்திரன். அதே போல் வளர்ந்து வரும் நடிகர் விக்ராந்த். இந்த மூன்று பிரபலங்களுக்கும் இணைந்து புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கின்றனர். கல்பதரு பிக்சர்ஸ் சார்பில் பி.கே.ராம் மோகன் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்திற்கு ‘சுட்டுப் பிடிக்க உத்தரவு’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும் படத்தை இயக்கிய ராம்பிரகாஷ் ராயப்பா இந்த படத்தை இயக்குகிறார். இந்நிலையில், படம் குறித்து இயக்குனர் ராம் பிரகாஷ் ராயப்பா பேசுகையில், '' விக்ராந்த் மற்றும் சுசீந்திரன் ஆகிய இருவரும் ஒரு தனியார் செக்யூரிட்டி நிறுவனத்தில் வேலை செய்பவர்கள். ஒரு நாள் அவர்கள் பணியில் இருக்கும் போது ஒரு திகிலான குற்றச் சம்பவம் ஒன்று நடக்கிறது. இதனை விசாரிக்கும் போலீஸ் அதிகாரியாக மிஸ்கின் நடிக்கின்றார். இதற்கு பிறகு என்ன ஆனது என்பதே படத்தின்...
குஜராத் முதல்கட்ட தேர்தலில் 68 சதவீதம் வாக்குப்பதிவு

குஜராத் முதல்கட்ட தேர்தலில் 68 சதவீதம் வாக்குப்பதிவு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  182 தொகுதிகளைக் கொண்ட குஜராத் சட்டசபைக்கு டிசம்பர் 9 மற்றும் 14-ம் தேதிகளில் இரு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறுகிறது. முதல்கட்டமாக 89 தொகுதிகளில் இன்றுகாலை வாக்குப்பதிவு தொடங்கியது. ஆரம்பத்தில் மந்தநிலையில் இருந்த வாக்குப்பதிவு பிறபகல் வாக்கில் சூடு பிடிக்க தொடங்கியது. சில இடங்களில் பழுதான வாக்குப்பதிவு இயந்திரங்களால் வாக்குப்பதிவு சிறிது நேரம் தடைப்பட்டது. மாலை 5 மணியளவில் நிறைவடைந்த இன்றைய தேர்தலில் சுமார்  68 சதவீதம் வாக்குகள் பதிவானதாக அம்மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மீதமுள்ள 93 தொகுதிகளில் 14-ம் தேதி நடைபெறும் இரண்டாம்கட்ட தேர்தலுக்கு பின்னர் டிசம்பர் 18-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அன்று பிற்பகலில் முடிவுகள் அறிவிக்கப்படும்....
பள்ளிப்பருவத்திலே படத்தால் ஊர்வசிக்கு தேசியவிருது நிச்சயம் – இயக்குனர் வாசு பாஸ்கர் நம்பிக்கை

பள்ளிப்பருவத்திலே படத்தால் ஊர்வசிக்கு தேசியவிருது நிச்சயம் – இயக்குனர் வாசு பாஸ்கர் நம்பிக்கை

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், முன்னோட்டம்
  வி.கே.பி.டி கிரியேசன்ஸ் என்ற பட  நிறுவனம் சார்பாக D.வேலு தயாரிக்கும் படத்திற்கு   “பள்ளிப்பருவத்திலே “ என்று பெயரிட்டுள்ளனர்.  இந்த படத்தில் பிரபல இசையமைப்பாளர் சிற்பியின் மகன் நந்தன்ராம்  நாயகனாக அறிமுகமாகிறார்.          நாயகியாக வெண்பா அறிமுகமாகிறார். முக்கிய கதாப்பாத்திரத்தில் கே.எஸ்.ரவிகுமார், ஊர்வசி நடிக்கிறார்கள். தம்பிராமையா ,கஞ்சாகருப்பு இருவரும் கலகலப்பான காமெடி வேடத்தில் நடிக்கிறார்கள்.மற்றும் பொன்வண்ணன்,ஆர்.கே.சுரேஷ்,பேராசிரியர் ஞானசம்மந்தம்,பருத்திவீரன் சுஜாதா,வேல்முருகன், பூவிதா, E.ராம்தாஸ், புவனா, வைஷாலி ஆகியோர் நடிக்கிறார்கள்.     கதை, திரைக்கதை, வசனம்,இயக்கம்  - வாசுதேவ் பாஸ்கர்.  ஆரம்ப கால கட்டத்தில் இருந்தே நமக்கு சொல்லித் தரப்பட்ட ஒரு விஷயம் மாதா, பிதா, குரு, தெய்வம். அப்படிப்பட்ட மாதா பிதாவுக்கு அடுத்து குருவைத்தான்  சொல்லிருக்காங்க அதுக்கு அடுத்து தான...
வீரத்தேவன் பெயரைப்போலவே ஆக்‌ஷன் படம் – இயக்குனர் பேட்டி

வீரத்தேவன் பெயரைப்போலவே ஆக்‌ஷன் படம் – இயக்குனர் பேட்டி

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், முன்னோட்டம்
  வீரமற்ற விவேகம் கோழைத்தனம் , விவேகமற்ற வீரம் முரட்டுத் தனம் “ என்ற பொன்மொழியை மையமாக கொண்டு உருவாகும் திரைப்படம்தான்  “ வீரத்தேவன் “ இந்த படத்தில் கௌசிக் என்ற புதுமுகம் நாயகனாக நடிக்கிறார். இவர் அகில இந்திய அளவில் கார்த்தே சாம்பியன் விருது பெற்றவர். கராத்தேவில் எல்லா விதமான பயிற்சியையும் கற்றுத் தேர்ந்தவர். இவர் நாயகனாகும் முதல் படம் இது. நாயகியாக மீனலோஷினி அறிமுகமாகிறார். இவர் மதுரை மாவட்டத்தை சேர்ந்த தமிழ்ப் பெண். அந்த மாவட்ட கதைக்களம்..அதற்கேற்ற தமிழ் பேசத் தெரிந்த நாயகி. அந்த வட்டார பழக்க வழங்கங்களை அறிந்தவர் என்பதால் அவரை நாயகியாக அறிமுகப் படுத்தினோம் என்கிறார் இயக்குனர். மற்றும் கராத்தே கோபாலன், வீரன்செல்வராசு, எம்.ஜி.சிவகுமார், மெய்ராஜன், ஜவஹர் ஆகியோர் நடிக்கிறார்கள். படத்தை பற்றி இயக்குனரிடம் கேட்டோம்..                                                                ...