வெள்ளிக்கிழமை, மே 22
Shadow

HOME SLIDER

அன்புசெழியன் போன்றவர்கள் இல்லையென்றால் சினிமா எடுக்க முடியாது – சீமான்

அன்புசெழியன் போன்றவர்கள் இல்லையென்றால் சினிமா எடுக்க முடியாது – சீமான்

CINI NEWS, HOME SLIDER, NEWS, செய்திகள்
அன்புசெழியன் போன்றவர்கள் இல்லையென்றால் சினிமா எடுக்க முடியாது - சீமான் சினிமா தயாரிப்பாளர் அசோக்குமார் தற்கொலை தவிர்த்து இருக்க வேண்டிய மரணம். அதனை தடுத்திருக்க வேண்டும் இனி வரும் காலங்களில் இதுபோன்ற துயரம் தொடரக்கூடாது. யாரையும் குறை சொல்ல முடியாது. பைனான்சியர் அன்புசெழியன் போன்றவர்கள் இல்லையென்றால் யாரும் சினிமா எடுக்க முடியாது. தன்னிடம் வந்து பணம் வாங்குங்கள் என்று அவர் கூறுவதில்லை. நாம் தான் விரும்பி பணம் வாங்குகிறோம், சாதாரண சாமானியர்களை நம்பி பல கோடி ரூபாய் கொடுக்கிறார். அரசு வங்கிகளே கடன் கொடுத்து விட்டு திருப்பி செலுத்தாதவர்களை கட்டி வைத்து அடிக்கவில்லையா?, போலீசார் அடித்தது இல்லையா?. இதுபோல் தான் கடனை கொடுத்து விட்டு அதனை கேட்கும் முறையில் கடுமை காட்டும்போது அது தன்மான இழப்பாகிறது. உயிரிழப்பு ஏற்படுகிறது. பணம் கொடுப்பவர்கள் சிலர் தான் உள்ளனர். இவர்கள் எல்லாம் பணம் கொடுப்ப...
தனுஷ் வெளியிடும் சிம்பு பட பாடல்கள்..!

தனுஷ் வெளியிடும் சிம்பு பட பாடல்கள்..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, Trailer, சினி நிகழ்வுகள், செய்திகள், டிரைலர்கள், திரைப்படங்கள்
கோலிவுட் திரையுலகில் சிம்புவும் தனுஷூம் நண்பர்கள் என்று கூறி கொண்டாலும் இருவரும் போட்டி நடிகர்களாகவே பார்க்கப்பட்டு வருகின்றனர். இருதரப்பு ரசிகர்களும் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் மோதி கொள்வதும் அடிக்கடி நடக்கும் நிகழ்வுகள்தான்இந்த நிலையில் தொழில் அளவில் போட்டியாளர்களாக இருந்தாலும் தாங்கள் உண்மையான நண்பர்கள் என்பதை தற்போது நிரூபித்துள்ளனர். ஆம், சிம்பு இசையமைப்பாளராக அறிமுகமாகும் ‘சக்க போடு போடு ராஜா’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் டிசம்பர் 6ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளது.இந்த படத்தின் பாடல்களை வெளியிட நடிகர் தனுஷ் சம்மதித்துள்ளார். இந்த தகவலை இந்த படத்தின் ஹீரோ சந்தானம் தனது டுவிட்டரில் ஒரு வீடியோ செய்தி மூலம் உறுதி செய்துள்ளார்.ஒரே படத்தில் சிம்பு, தனுஷ் இணைவது கோலிவுட் திரையுலகில் ஆச்சரியத்தை வரவழைப்பது மட்டுமின்றி இருதரப்பு ரசிகர்களுக்கும் உற்சாகத்தை கொடுத்...
டிசம்பர் 7ஆம் தேதி வெளியாகிறது சசிகுமாரின் ‘கொடி வீரன்’

டிசம்பர் 7ஆம் தேதி வெளியாகிறது சசிகுமாரின் ‘கொடி வீரன்’

CINI NEWS, HOME SLIDER, NEWS, Trailer, சினி நிகழ்வுகள், செய்திகள், டிரைலர்கள், திரைப்படங்கள், முன்னோட்டம்
  சசிகுமார் நடித்துள்ள ‘கொடி வீரன்’ படம், 7ஆம் தேதி ரிலீஸாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முத்தையா இயக்கத்தில் சசிகுமார் நடித்துள்ள படம் ‘கொடி வீரன்’. பூர்ணா, மகிமா நம்பியார், சனுஷா என மூன்று ஹீரோயின்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். சசிகுமார், தன்னுடைய கம்பெனி புரொடக்ஷன்ஸ் சார்பில் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.தீபாவளிக்கு ரிலீஸாவதாக அறிவிக்கப்பட்ட இந்தப் படம், போதுமான தியேட்டர்கள் கிடைக்காததால் வருகிற 30ஆம் தேதி ரிலீஸாவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், சசிகுமாரின் அத்தை மகனும், கம்பெனி புரொடக்ஷன்ஸ் நிர்வாகியுமான அசோக் குமார், கடந்த வாரம் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அன்புச்செழியனிடம் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த முடியாததால் தற்கொலை செய்து கொள்வதாக கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். இதைத் தொடர்ந்து , அன்புச்செழியன் தலை மறைவானார். அவர்  மீது வழக்குப்பதிவு செய...
விவேக்கின் ஜாஸ் சினிமா முறைகேடு: சத்யம் சினிமா தியேட்டர்கள் உள்பட 33 இடங்களில் வருமானவரி வேட்டை

விவேக்கின் ஜாஸ் சினிமா முறைகேடு: சத்யம் சினிமா தியேட்டர்கள் உள்பட 33 இடங்களில் வருமானவரி வேட்டை

CINI NEWS, HOME SLIDER, NEWS, செய்திகள்
  சசிகலா மற்றும் அவரது உறவினர்கள் வீடுகளை குறிவைத்து வருமானவரி துறையினர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அதிரடி சோதனை நடத்தினர். சசிகலாவின் அண்ணன் மகனான விவேக் ஜெயா தொலைக்காட்சியின் தலைமை நிர்வாக அதிகாரியாக உள்ளார். ஜாஸ் சினிமா என்கிற நிறுவனத்தையும் அவர் நடத்தி வருகிறார். சசிகலா உறவினர்கள், நண்பர்களின் வீடுகளில் நடந்த சோதனையின் போது நுங்கம்பாக்கத்தில் உள்ள விவேக்கின் வீடும் தப்பவில்லை. வேளச்சேரியில் உள்ள ஜாஸ் சினிமா நிறுவனத்திலும் சோதனை நடந்தது. சத்யம் குழுமத்திடமிருந்து ஜாஸ் சினிமா நிறுவனத்தை விவேக் வாங்கி இருந்தார். அதற்கு முன்னர் லக்ஸ் சினிமா என்ற பெயரில் இயங்கி வந்த அந்த நிறுவனத்தின் பெயர் விவேக்கிற்கு கைமாறிய பின்னரே ஜாஸ் சினிமா என்று மாற்றப்பட்டது. இதனை வாங்கியதில் முறைகேடுகள் நடந்திருப்பதாக கூறப்பட்டது. இது தொடர்பாக அப்போது நடத்தப்பட்ட சோதனையில் ஆவணங்கள் சிக்கி இருப்ப...
மணிரத்னம் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ்

மணிரத்னம் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ்

CINI NEWS, HOME SLIDER, NEWS, செய்திகள், திரைப்படங்கள், நடிகைகள்
  ஐஸ்வர்யா ராஜேஷ் ‘காக்கா முட்டை’ படத்தில் பிரபலமானார். இப்போது முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். அவர் தற்போது வடசென்னை, துருவ நட்சத்திரம், லக்‌ஷ்மி, இது வேதாளம் சொல்லும் கதை உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். அவர் தனது சினிமா அனுபவம் பற்றி அளித்த பேட்டி.... “எனக்கு கனவு கதாபாத்திரம் என்று எதுவும் இல்லை. எனக்கு அமையும் பாத்திரங்கள் அனைத்தையும் கனவு பாத்திரங்களாகவே நினைக்கிறேன். புது படங்களை ஒப்புக்கொண்டு முதலில் சில நாட்கள் நடிக்கச் செல்லும் போது எனக்கு பயம் ஏற்படும். தேவையான முகபாவங்களை கொடுக்க முடியுமா என்ற எண்ணம் தான் அதற்கு காரணம். என்றாலும் சில நாட்கள் நடித்த பிறகு அந்த பயம் போய்விடும். மணிரத்னம் சார் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்பது எனது ஆசை. விரைவில் அது நிறைவேற இருக்கிறது. அதை நினைத்தால் மகிழ்ச்சியாக உள்ளது. இந்தி பட உலகில் கரன்ஜோஹர் இயக்கத்தில் நடிக்க...
ஆர்.கே.நகர் தொகுதியில் தினகரன் 2-ந்தேதி மனு தாக்கல்

ஆர்.கே.நகர் தொகுதியில் தினகரன் 2-ந்தேதி மனு தாக்கல்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  ஆர்.கே.நகர் தொகுதிக்கு டிசம்பர் 21-ந்தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. அ.தி.மு.க.வுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்பட்ட நிலையில் இந்த தேர்தலில் டி.டி.வி. தினகரன் சுயேச்சை சின்னத்தில் போட்டியிட உள்ளார். ஆர்.கே.நகர் தொகுதியில் தினகரன் போட்டியிடுவது உறுதி என்று அவரது ஆதரவாளரும், தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.வுமான தங்க தமிழ்ச்செல்வன் ஏற்கனவே கூறினார். ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக தினகரன் நேற்று தனது இல்லத்தில் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். ஆர்.கே.நகர் தொகுதியில் பிரசாரத்தை எப்படி எதிர்கொள்வது எப்போது வேட்பு மனு தாக்கல் செய்வது என்பது பற்றி ஆலோசிக்கப்பட்டது. இந்த நிலையில் தினகரன் அணி மாவட்ட செயலாளர் கள் கூட்டம் இன்று மாலை திருச்சியில் நடக்கிறது. இதில் பங்கேற்பதற்காக தினகரன் இன்று காலை சென்னையில் இருந்து புறப்பட்டார். சென்னையை அடுத்துள்ள சிங்கபெருமாள் ...
அ.தி.மு.க ஆட்சி மன்றக் குழு மாற்றியமைப்பு: முதல்வர் பழனிசாமி, முனுசாமிக்கு இடம்

அ.தி.மு.க ஆட்சி மன்றக் குழு மாற்றியமைப்பு: முதல்வர் பழனிசாமி, முனுசாமிக்கு இடம்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  அ.தி.மு.க.வில் பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர், அந்த பதவி நீக்கப்பட்டு ஒருங்கினைப்பாளர் மற்றும் இணை ஒருங்கினைப்பாளர் என்ற புதிய பதவிகள் கொண்டு வரப்பட்டது. இந்நிலையில், கட்சியில் வேட்பாளர்களை தேர்வு செய்வது உள்ளிட்ட முக்கிய முடிவுகளை எடுக்கும் ஆட்சி மன்றக் குழு தலைவராக ஜெயலலிதா இருந்து வந்தார். இந்நிலையில், இன்று கூடிய அக்கட்சியின் கூட்டத்தில் ஆட்சி மன்றக் குழு மாற்றியமைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கே.பி முனுசாமி மற்றும் வைத்திலிங்கம் ஆகியோர் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும், ஏற்கனெவே குழுவில் இருந்த துணை முதல்வர் ஓ,பன்னீர் செல்வம், மதுசூதனன், தமிழ்மகன் உசைன், பா.வளர்மதி, ஜஸ்டின் செல்வராஜ் மற்றும் டாக்டர் வேணுகோபால் ஆகியோரின் பெயர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளது...
குஜராத் தேர்தல்: வெளியானது காங்கிரஸ் வாக்காளர் பட்டியல்!

குஜராத் தேர்தல்: வெளியானது காங்கிரஸ் வாக்காளர் பட்டியல்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  182 தொகுதிகளைக் கொண்ட குஜராத் சட்டசபை தேர்தல் வரும் டிசம்பர் 9 மற்றும் 14-ம் தேதிகளில் இரு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறுகிறது. முதல்கட்டமாக 89 தொகுதிகளுக்கும் இரண்டாம் கட்டமாக 93 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. டிசம்பர் 18-ம் தேதி எண்ணப்பட்டு அன்று பிற்பகலில் முடிவுகள் அறிவிக்கப்படும். ஆட்சியை தக்கவைத்து கொள்ள பா.ஜ.க. குஜராத்தில் தீவிரமாக பிரசாரம் செய்து வரும் நிலையில், பா.ஜ.க.வை வீழ்த்த காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் உச்சகட்ட உத்திகளை கையாண்டு வருகின்றன. இதனையடுத்து கடந்த 20-ம் தேதி காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் 77 வேட்பாளர்கள் பெயர் கொண்ட முதல் பட்டியல்  வெளியானது. பின்னர் 21-ஆம் தேதி 13 வேட்பாளர் பெயர் கொண்ட இரண்டாவது பட்டியல் மற்றும் 76 தொகுதிகளுக்கான மூன்றாவது வேட்பாளர் பட்டியல் ஆகியவற்றை டெல்லியில் இன்று காலை உள்ள காங்கிரஸ் வெளியிட்டது.  ...
விரைவில் திருப்பதி லட்டு விலை உயர்கிறது!!

விரைவில் திருப்பதி லட்டு விலை உயர்கிறது!!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  திருப்பதியில் லட்டுவின் விலையை உயர்த்த திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. திருப்பதி கோயிலுக்கு தினசரி லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். அந்த வகையில் வரும் பக்தர்களுக்கு லட்டு பிரசாதமாக வழக்கப்பட்டு வருகிறது. இலவச தரிசனத்தில் வரும் பக்தர்களுக்கு ரூ.10க்கு 2 லட்டுகளும், மலைபாதையில் வரும் பக்தர்களுக்கு ரூ. 10க்கு 2 லட்டுகளும், கூடுதலாக ரூ.25க்கு 1 லட்டு என வழங்கப்படுகின்றன. மேலும் ரூ.50, ரூ.300 ஆகிய கட்டணங்களில் சுவாமி தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு 2 மற்றும் 3 லட்டுகள் இலவசமாக வழங்கப்படுகின்றன. இந்நிலையில் ஒரு லட்டை தயார் செய்ய தேவஸ்தானம் ரூ.37 செலவு செய்கிறது. மேலும் ஆண்டுக்கு ரூ.200 கோடி கூடுதல் செலவாகிறது எனவும் தேவஸ்தானம் கூறியுள்ளது. இந்நிலையில் இதை கட்டுபடுத்த லட்டு விலையை உயர்த்...
கமல் எங்களுடன் கைகோர்த்தால் வரவேற்போம்: தமிழிசை

கமல் எங்களுடன் கைகோர்த்தால் வரவேற்போம்: தமிழிசை

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது:- ஆர்.கே.நகர் தேர்தலில் மாற்றத்தை கொண்டு வருவதற்கு கமல் மட்டும் அல்ல, யார் தங்களுடன் கைகோர்த்தாலும் பா.ஜ.க. வரவேற்கும்.