வெள்ளிக்கிழமை, மே 22
Shadow

HOME SLIDER

“டிக் டிக் டிக்” படத்தின் புதிய அப்டேட்

“டிக் டிக் டிக்” படத்தின் புதிய அப்டேட்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள்
ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி வரும் இந்தியாவின் முதல் விண்வெளி படமான உருவாகும் `டிக் டிக் டிக்' படத்தின் சிங்கள் வரும் டிசம்பர் 11-ம் வெளியாகிறது. ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி வரும் இந்தியாவின் முதல் விண்வெளி படமான உருவாகும் `டிக் டிக் டிக்' படத்தின் சிங்கள் வரும் டிசம்பர் 11-ம் வெளியாகிறது. சக்தி செளந்தர்ராஜன் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயம் ரவி, நிவேதா பெத்துராஜ், ஆரோன் அஜீஸ் ஆகியோர் நடித்து வருகிறார்கள். இந்த படத்தில் ஜெயம் ரவி மகன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஜபக் தயாரித்துள்ள இப்படத்துக்கு இமான் இசையமைத்து வருகிறார். இப்படத்தின் டீஸர் மற்றும் டிரைலர் ரசிகர்களிடையே நல்லவரவெற்பை பெற்றது. தற்போது இப்படத்தின் சிங்கள் வரும் டிசம்பர் 11-ம் வெளியாக இருப்பதாக இசையமைப்பாளர் இமான் அவர்கள் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.  ...
பீட்டா-வுகாக நிர்வாண போஸ் கொடுத்த சன்னி லியோன்!

பீட்டா-வுகாக நிர்வாண போஸ் கொடுத்த சன்னி லியோன்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள்
விலங்குகள் நல பாதுகாப்பு அமைப்பான பீட்டா-வின் விளம்பரம் ஒன்றிற்கு பிரபல பாலிவுட் நடிகை சன்னி லியோன் மற்றும் அவரது கணவர் டேனியல் நிர்வாணமாக காட்சியளித்துள்ளனர். இந்த விளம்பரத்தில் ‘Ink, Not Mink! Be Comfortable in Your Own Skin, and Let Animals Keep Theirs.’ எனும் வாசகம் குறிக்கப்பட்டுள்ளது. அதாவது, மனிதரின் தோலைப் போல் மிருகங்களின் தோலும் மதிப்புமிக்கது, நாம் நிம்மதியாக வாழ விரும்புவது போல் அவற்றையும் வாழ விடுங்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்த விழிப்புணர்வு வீடியோ ஒன்றினையும் அவருடன் இணைந்து பீட்டா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. முன்னதாக அசைவத்தினை கடைப்பிடிக்க வேண்டும் என அரைநிர்வாணமாக புகைப்படம் ஒன்றில் சன்னிலியோன் தோன்றியது குறிப்பிடத்தக்கது!...
டிரம்ப் மகளுக்கு சமந்தா ஸ்பெஷல் பரிசு

டிரம்ப் மகளுக்கு சமந்தா ஸ்பெஷல் பரிசு

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள்
  சர்வதேச தொழில் முனைவோர் மாநாடு தெலங்கானாவில் நேற்று நடந்தது. இதில் பங்கேற்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மகள் இவாங்கா நேரில் வந்திருந்தார். அவருக்கு சமந்தா சேலை பரிசளித்தார். தெலங்கானா மாநில கைவினை பொருட்கள் விளம்பர தூதராக இருக்கிறார் சமந்தா. தனது மாநிலத்துக்கு வரும் டிரம்ப் மகளுக்கு பரிசளிக்க எண்ணினார். அதற்கு பொருத்தமான பரிசு பற்றி ஆலோசித்தவர் இறுதியாக கோல்லம்பமா சேலைகளை வழங்க முடிவு செய்தார். கைத்தறியில் இது நெய்யப்படுகிறது. அவரது தேர்வை அரசு அங்கீகரித்ததுடன் தனது பங்காகவும் அதே வகையில் உருவாக்கப்பட்ட பல்வேறு டிசைன் சேலைகளையும் இவாங்காவுக்கு வழங்கியது. இதையடுத்து இவாங்காவுடன் பாரம்பரியமான கோல்லம்பமா சேலைகளும் வெள்ளை மாளிகைக்கு செல்கிறது. நடிப்பு, இல்லற வாழ்க்கையில் சமந்தா கவனம் செலுத்தி வந்தபோதும் கைத்தறி ஆடைகளை விளம்பரப்படுத்தும் தூதராகவும் தனது பங்களிப்பை செய்...
இந்தியா வரும் ஒபாமா பிரதமர் மோடியை சந்தித்து பேசுகிறார்…!

இந்தியா வரும் ஒபாமா பிரதமர் மோடியை சந்தித்து பேசுகிறார்…!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா இந்தியா, சீனா, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக நாளை இந்தியா வரும் ஒபாமா நாளை பிரதமர் மோடியை சந்தித்து பேசுகிறார். ஒபாமா பவுண்டேஷன் ஏற்பாடு செய்துள்ள டவுன் ஹால் கூட்டத்தில் பங்கேற்கிறார். நாடு முழுவதிலும் இருந்து வரும் மாணவ பிரதிநிதிகளுடன் கலந்துரையாடுகிறார். கடந்த 2014  முதல் 2016 வரை பிரதமர் மோடியும் அமெரிக்க அதிபர் ஒபாமாவும் 8 முறை சந்தித்து பேசி உள்ளனர்.  ஒபாமா பதவிக்காலம் முடிந்த பின் பிரதமர் மோடியுடன் ஒபாமா சந்தித்து பேசுவது இதுவே முதல் முறை ஆகும். ஒபாமா இந்தியாவிற்கு கடைசியாக கடந்த 2015-ம் ஆண்டு குடியரசு தினவிழாவில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது....
தொழில் நுட்பத்தை விட ஐதராபாத் பிரியாணி தான் உலகபுகழ் பெற்றது – இவான்கா டிரம்ப்

தொழில் நுட்பத்தை விட ஐதராபாத் பிரியாணி தான் உலகபுகழ் பெற்றது – இவான்கா டிரம்ப்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  8-வது உலக தொழில் முனைவோர் மாநாடு தெலுங்கானா தலைநகர் ஐதராபாத்தில்  தொடங்கியது. 3 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் 127 நாடுகளை சேர்ந்த 1,200-க்கும் மேற்பட்ட இளம் தொழில் முனைவோர்களும், 300 முதலீட்டாளர்களும் பங்கேற்றுள்ளனர். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் மகளும், அதிபரின் ஆலோ சகருமான  இவான்கா டிரம்ப் இந்த மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். அவரோடு குழு ஒன்றும் வந்தது. பிரதமர் நரேந்திர மோடி இந்த மாநாட்டை தொடங்கி வைத்தார். இந்த மாநாடு தொடங்குவதற்கு முன்பும், மாநாட்டின் இடையேயும் மோடி- இவான்கா சந்திப்பு நடந்தது. இந்த மாநாட்டில் கலந்து கொண்ட இவான்கா டிரம்புக்கு புகழ்பெற்ற ஐதராபாத் பிரியாணி வழங்கப்பட்டது. இதை சாப்பிட்ட அவருக்கு அதன் ருசி மிகவும் பிடித்து இருந்தது. இதுகுறித்து இவான்கா கூறியதாவது:- பழமை வாய்ந்த ஐதராபாத் நகரம்   தற்போது தொழில் நுட்பத்தால் மிகவும்...
6 மாதத்தில் அனைத்து மணல் குவாரிகளையும் மூட வேண்டும் மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவு

6 மாதத்தில் அனைத்து மணல் குவாரிகளையும் மூட வேண்டும் மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  புதுக்கோடடை மாவட் டம் ஆவுடையார் கோவிலை சேர்ந்தவர் ராமையா.இவர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:- மத்திய அரசின் முறையான அனுமதியுடன் ஏற்றுமதி, இறக்குமதி தொழில் ஈடுபட்டு வருகிறோம். இந்த நிலையில் மலேசியாவில் இருந்து மணலை இறக்குமதி செய்தோம். இந்த மணல் தூத்துக்குடி துறைமுகத்தில் வைக்கப்பட்டுள்ள நிலையில் அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்து விடுவிக்க மறுக்கின்றனர். எனவே மணலை வாடிக்கையாளர்களுக்கு விநியோகிக்க அனுமதிக்கவும், 6 லாரிகளுடன் பறிமுதல் செய்யப்பட்ட மணலை எங்களிடம் ஒப்படைக்கவும் உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் கூறியிருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி  மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மணலை கொண்டு செல்ல அனுமதிக்கலாம். தமிழகத்தில் உள்ள அனைத்து மணல் குவாரிகளை இன்று முதல் 6 மாதங்களுக்குள் முழுவதுமாக...
இந்தியாவில் 10 மருந்துகளில் ஒன்று போலியானது – உலக சுகாதார அமைப்பு அதிர்ச்சி தகவல்

இந்தியாவில் 10 மருந்துகளில் ஒன்று போலியானது – உலக சுகாதார அமைப்பு அதிர்ச்சி தகவல்

HOME SLIDER, NEWS, செய்திகள்
  இந்தியா போன்ற குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் உள்ள நாடுகளில்  10 மருந்துகளில் ஒன்று குறைபாடு உள்ளது அல்லது போலியானது என  உலக சுகாதார அமைப்பு (WHO) கூறி உள்ளது  அதாவது இந்த நாடுகளில் விற்பனை செய்யப்படும்  மருந்துகளில் 10.5 சதவீதமருந்துகள் போலியானவையாகும். உலக சுகாதார அமைப்பில் ஆய்வு அறிக்கை படி  இந்த மருந்துகள் நோய்களை குணப்படுத்தவோ அல்லது தடுக்கவோ தவறி விடுகின்றன.ஆனால் ஒவ்வொரு ஆண்டும் மலேரியா மற்றும் நிமோனியா போன்ற நோய்களிலிருந்து பல்லாயிரக்கணக்கான குழந்தைகளின் இறப்புகளுக்கு பொறுப்பாகவும் உள்ளது. தரக்குறைவான மற்றும் தவறான மருந்துகள் குறிப்பாக மிகவும் பாதிக்கப்பட்ட சமூகங்களை பாதிக்கின்றன,  என உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் டெட்ரோஸ் அத்னோம் கெபிரேயஸ் கூறி உள்ளார். 2013 ஆம் ஆண்டிலிருந்துஉலக சுகாதார அமைப்பு தரக்குறைவான அல்லது போலியான  தயாரிப்புகள் குறித்த  1,500 அறிக்கை...
நடிகை தீபிகா படுகோனே தலைக்கு ரூ 10 கோடி அறிவித்த பா.ஜ. பிரமுகர் பதவி ராஜினாமா

நடிகை தீபிகா படுகோனே தலைக்கு ரூ 10 கோடி அறிவித்த பா.ஜ. பிரமுகர் பதவி ராஜினாமா

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள்
  ராஜஸ்தான் மாநிலம் சித்தூரை ஆண்ட ராணி பத்மினி வாழ்க்கையை மையமாக வைத்து தயாராகி உள்ள பத்மாவதி படத்தில் தீபிகா படுகோனே பத்மினி வேடத்திலும் ரன்வீர் சிங் அலாவுதீன் கில்ஜியாகவும் நடித்துள்ளனர்.இந்த படத்துக்கு வடமாநிலங்களில் எதிர்ப்பு கிளம்பியதால் டிசம்பர் 1–ந்தேதி திட்டமிட்டபடி படத்தை திரைக்கு கொண்டு வராமல் தள்ளிவைத்து விட்டனர். பத்மாவதி படம் வெளியானால் திரையிடப்படும் தியேட்டர் தீ வைத்து கொளுத்தப்படும் என அரியானா மாநில பாரதீய ஜனதா செய்தி தொடர்பாளர் சுராஜ் பால்  அமு கூறி இருந்தார்.  தீபிகா படுகோனே, படத்தின் டைரக்டர் சஞ்சய் லீலா பன்சாலி ஆகியோர் தலைகளுக்கு ரூ.10 கோடி பரிசும் அறிவித்தார் சுராஜ் பால்  அமு. பா.ஜ.க. ஊடகத் தலைவரின் இந்த கருத்துக்கள் சர்ச்சையை கிளப்பியது. இது குறித்து  குர்கானில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலையில் சுராஜ் பால் அமு தனது பாரதீய ஜனதா செய்தி தொட...
கார்த்தி படத்தின் சர்ச்சை காட்சிகள் நீக்கம் மன்னிப்பு கேட்ட படக்குழு..!

கார்த்தி படத்தின் சர்ச்சை காட்சிகள் நீக்கம் மன்னிப்பு கேட்ட படக்குழு..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள்
  கார்த்தி-ரகுல்பிரீத்சிங் ஜோடியாக நடித்துள்ள ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படம் திரைக்கு வந்து ஓடிக்கொண்டு இருக்கிறது. வடநாட்டில் இருந்து வந்து கொலை-கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு சென்னை புறநகர் பகுதிகளை கதிகலங்க வைத்த பவாரியா கொள்ளையர்கள் பற்றிய உண்மை சம்பவங்களை மையமாக வைத்து இந்த படம் தயாராகி உள்ளது. வினோத் டைரக்டு செய்துள்ளார். இந்த படத்தில் குற்றப்பரம்பரை என்ற வார்த்தை இடம்பெற்று உள்ளது. இது குறிப்பிட்ட சமூகத்தினரை இழிவுபடுத்துவதுபோல் உள்ளது என்று எதிர்ப்புகள் கிளம்பின. அந்த வார்த்தையை நீக்க வேண்டும் என்றும் வற் புறுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து சர்ச்சையை ஏற் படுத்திய காட்சிகள் நீக்கப்பட்டு உள்ளன.   இதுகுறித்து படக்குழுவினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- “இந்தியாவில் பல மாநிலங்களில் நடந்த கொள்ளை சம்பவங்களை வைத்து மட்டுமே இந்த படம் எடுக்கப்பட்டு உள்ளது. எந...
நீதிமன்றம் செல்லும் மருமகள்… கோபத்தில் சிவகுமார்…!

நீதிமன்றம் செல்லும் மருமகள்… கோபத்தில் சிவகுமார்…!

CINI NEWS, HOME SLIDER, NEWS, Trailer, சினி நிகழ்வுகள், செய்திகள், டிரைலர்கள், வீடியோ
  கரூர் நாச்சியார் பட விவகாரம் தொடர்பாக நடிகை ஜோதிகா, டைரக்டர் பாலா ஆகியோர் மீது கரூர் கோர்ட்டில் இன்று மேலும் ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது. டைரக்டர் பாலாவின் நாச்சியார் திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது. இந்த ட்ரைலரின் நடிகை ஜோதிகா கெட்ட வார்த்தை பேசிய காட்சி இடம்பெற்றது. https://youtu.be/bg3hJuBtE-8 இதற்கு சமூகவலைதளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதுதொடர்பாக மேட்டுப்பாளையத்தை சேர்ந்த ராஜன் மேட்டுப்பாளையம் ஜூடிஷியல் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில் கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் நடிகை ஜோதிகா, இயக்குனர் பாலா மீது மேலும் ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை இந்திய குடியரசு கட்சியின் மாநில அமைப்பாளர் தலித் பாண்டியன் தொடர்ந்துள்ளார். இது தொடர்பாக அவர் தாக்கல் செய்த மனுவில், நாச்சியார் படத்தில் நடிகை ஜோதிகா அவதூறாகவு...