பள்ளிப்பருவத்திலே படத்தால் ஊர்வசிக்கு தேசியவிருது நிச்சயம் – இயக்குனர் வாசு பாஸ்கர் நம்பிக்கை
வி.கே.பி.டி கிரியேசன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக D.வேலு தயாரிக்கும் படத்திற்கு “பள்ளிப்பருவத்திலே “ என்று பெயரிட்டுள்ளனர்.
இந்த படத்தில் பிரபல இசையமைப்பாளர் சிற்பியின் மகன் நந்தன்ராம் நாயகனாக அறிமுகமாகிறார்.
நாயகியாக வெண்பா அறிமுகமாகிறார். முக்கிய கதாப்பாத்திரத்தில் கே.எஸ்.ரவிகுமார், ஊர்வசி நடிக்கிறார்கள். தம்பிராமையா ,கஞ்சாகருப்பு இருவரும் கலகலப்பான காமெடி வேடத்தில் நடிக்கிறார்கள்.மற்றும் பொன்வண்ணன்,ஆர்.கே.சுரேஷ்,பேராசிரியர் ஞானசம்மந்தம்,பருத்திவீரன் சுஜாதா,வேல்முருகன், பூவிதா, E.ராம்தாஸ், புவனா, வைஷாலி ஆகியோர் நடிக்கிறார்கள்.
கதை, திரைக்கதை, வசனம்,இயக்கம் - வாசுதேவ் பாஸ்கர்.
ஆரம்ப கால கட்டத்தில் இருந்தே நமக்கு சொல்லித் தரப்பட்ட ஒரு விஷயம் மாதா, பிதா, குரு, தெய்வம். அப்படிப்பட்ட மாதா பிதாவுக்கு அடுத்து குருவைத்தான் சொல்லிருக்காங்க அதுக்கு அடுத்து தான...








