HOME SLIDER
உணவு, செக்ஸ் இரண்டில் எது முக்கியம்..! கேள்வி கேட்டவரை தெறிக்கவிட்ட சமந்தா
உணவு, செக்ஸ் இரண்டில் எது முக்கியம்..!
கேள்வி கேட்டவரை தெறிக்கவிட்ட சமந்தா
தமிழ் தெலுங்கு என இரு மொழிகளிலும் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தாவுக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளது,
அமலாவின் மகன் நாகசைதன்யாவை காதலித்து கரம்பிடிக்க இருக்கிறார். சமீபத்தில்தான் பிரமாண்டமாக நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
விரைவில் திருமணம் நடைபெற உள்ளதான் கைவசம் உள்ள படங்களை வேக வேகமாக முடித்து வருகிறார். இந்த சூழலில், சமந்தா அளித்த ஒரு பேட்டியில் அவர் சொன்ன பதில் பெரும் அதிர்ச்சியையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியிருக்கிறது. அதேநேரம் அவரின் துணிச்சலையும் ஒருசாரார் பாராட்டுகிறார்கள்.
அப்படி என்ன கேள்வி என்ன பதில் என்கிறீர்களா...
உணவு, செக்ஸ் இது இரண்டில் உங்களுக்கு எது முக்கியம் என்று கருதுகிறீர்கள் என்று கேட்டிருக்கிறார்கள்...
அதற்கு சமந்தா ‘இது சிக்கலான கேள்விதான் ஆனாலும், என்னால் உணவு இல்லாம...
காவியன் பட மோஷன் போஸ்டரை வெளியிட்டார் ராகவா லாரன்ஸ்
நடிகர் ஷாம் தற்போது “ 2M cinemas ” K.V. சபரீஷ் தயாரிப்பில்,சாரதி இயக்கத்தில் தமிழ்,தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகும் ஒரு பிரம்மாண்ட படத்தில் நடித்துள்ளார். ரோட் திரில்லர் ஜானரில் உருவாகும் இப்படத்துக்கு தமிழில் “ காவியன் “ என்றும் தெலுங்கில் “ வாடு ஒஸ்தாடு “ என்றும் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
ஷாம் ஜோடியாக ஆத்மியா நடிக்கும் இப்படத்தில் ஸ்ரீதேவி குமார், ஸ்ரீ நாத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கோலிவுட் நடிகர் ஜெஸ்டின் விகாஸ் இந்த படத்தின் வில்லனாக நடித்திருக்கிறார்.
ஒளிப்பதிவு - N.S.ராஜேஷ் குமார்
இசை - ஷ்யாம் மோகன்
பாடல்கள் - மோகன்ராஜ்
கலை - T.N கபிலன்
நடனம் - விஷ்ணுதேவா
எடிட்டிங் ...
விதார்த் விஜய் வசந்த் நடிக்கும். “சீமத்தண்ணி”
கிரேட் எம்பரர் புரொடக்ஷன்ஸ் சி.பிரேம்குமார் தயாரிப்பில் விதார்த் விஜய் வசந்த் நடிக்கும்.
"சீமத்தண்ணி"
கிரேட் எம்பரர் புரொடக்ஷன்ஸ் எனும் புதிய படநிறுவனம் சார்பில் சி.பிரேம்குமார் மிகுந்த பொருட்ச்செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கும் படம் சீமத்தண்ணி...
பல முன்னனி இயக்குனர்களிடம் 25க்கும் மேற்ப்பட்ட படங்களில் துணை,இணை இயக்குனராக பணியாற்றிய விஜய்மோகன்..இப்படத்தின் கதை,திரைக்கதை,வசனம் எழுதி.இயக்குனராக அறிமுகமாகிறார்..
விதார்த்,விஜய் வசந்த கதாநாயகர்களாக நடிக்க,கதாநாயகிகளாக சாந்தினி மற்றும் சுபிக்ஷா நடிக்கின்றனர்..இவர்களுடன் யோகிபாபு,ஹலோ கந்தசாமி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்..
ரேஷன் கடையே தாய் வீடாக நினைத்து வாழும் 2 அநாதை நண்பர்கள் ,10க்கும் மேற்ப்பட்ட வீடுகளில் வேலை பார்க்கும் "தங்கமாரி" எனும் கதாபாத்திரத்திற்க்கும் நடக்கும் வாழ்க்கை பதிவுகளை அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில்...
பாலியல், போதைபொருள் கடத்தல்… அதிர்ச்சியில் திரையுலகம்..! விசாரணை வளையத்தில் பிரபலங்கள்
போதை பொருள் கடத்தல் வழக்கில் சிக்கிய முன்னணி நடிகர் - நடிகைகளுக்கு நோட்டீஸ்
திரையுலகினருக்கு இப்போது ஏழரை நடக்கிறது போலும்... மலையாள திரையுலகில் நடிகை பாவனாவை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்தாக முன்னணி நடிகர் திலீப் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அந்த பரபரப்பு அடங்குவதற்குள் போதை பொருள் கும்பலோடு தொடர்பு என்று தெலுங்கில் உள்ள முன்னணி நடிகர், நடிகைகளுக்கு போலீசார் நோட்டீஸ் அனுப்பி விசாரணைக்கு அழைத்திருக்கிறார்கள். இந்த சம்பவம் தெலுங்கு பட உலகில் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
தெலுங்கில் போதை கடத்தல் கும்பலோடு தொடர்பில் உள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள நடிகர் நடிகைகள் பலர் தமிழிலும் பல படங்களில் நடித்திருக்கிறார்கள். இதன் காரணமாக தமிழ் திரையுலகிலும் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டிருக்கிறது.
போதை பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு இருப்ப...
கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதால் பிரதமருக்கு சத்யராஜ் மகள் கடிதம்..!
தமிழின் முக்கிய நடிகர்களுள் ஒருவர் சத்யராஜ். அவரது மகள் திவ்யா சத்யராஜ். ஊட்டச்சத்து மருத்துவரான இவர் சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வருகிறார். தந்தையை போலவே, தமிழ் மீது அதீத ஈடுபாடு உடைய திவ்யா, சமீபத்தில் தமிழ் அகதிகளுக்காக இலவச சிறப்பு மருத்துவ நேர்க்காணல் ஒன்றை நடத்தியிருந்தார்.
கடந்த வாரம் சில வெளிநாட்டு மருத்துவ நிறுவனங்கள் திவ்யா சத்யராஜ் தவறான மருந்தை பிரயோகிக்க மறுத்ததை தொடர்ந்து அவருக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதும், அதை தொடர்ந்து அவருக்கு கொலை மிரட்டல் செய்ததும் அறிந்ததே.
இதை தொடர்ந்து திவ்யா சத்யராஜ், பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அதில் அவர் கூறியிருந்ததாவது,
"அங்கீகரிக்கப்படாத, அபாயகரமான மருந்துகளை தடை செய்யுமாறு பிரதமர் மோடியிடம் கேட்டுக் கொண்டிருக்கிறார். மேலும் நீட் நுழைவு தேர்வினால் வரும் விளைவை பற்றியும், மருத்துவ உலகில் பெர...
பெற்றோரை திருத்த வரும் ‘ஓவியா’..!
இமாலயன் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பாக காண்டீபன் ரங்கநாதன் தயாரிப்பில் உருவாகிவரும் படம் தான் ‘ஓவியா’. புதுமுக இயக்குனர் கஜன் சண்முகநாதன் என்பவர் இயக்கிவரும் இந்தப்படத்திற்கு பத்மஜன் இசையமைக்கிறார். நிஷாந்தன் மற்றும் விபின் சந்திரன் ஆகியோர் ஒளிப்பதிவு செய்கிறார்கள். விஜய் டிவி புகழ் அனீஸ் ரஹ்மான் நடனம் அமைக்கிறார்.
காண்டீபன் கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக இலங்கையை சேர்ந்த நடிகை மிதுனா நடிக்கிறார். சுவிக்சா ஜெயரத்னம் எனும் குழந்தை நட்சத்திரம் ‘ஓவியா’வாக நடிக்கிறார் .இன்றைய எந்திரமயமான, அதேசமயம் வேகமாகிப்போன வாழ்க்கை சூழலில் பெரும்பாலான கணவன்-மனைவியர்க்கிடையே சரியான புரிதல் இல்லாத நிலைதான் இருக்கிறது. அதுவே இவர்கள் பெற்றோர்களாக மாறியபின்பும் இந்த புரிதல் இல்லாமை தொடர்வதால், பாதிக்கப்படுவது பெரும்பாலும் அவர்களது குழந்தைகள் தான்.
அப்படி ஒரு தம்பதியின் குழந்தை ஒன்று...
ஜனாதிபதி தேர்தல்: முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி – மு.க.ஸ்டாலின் வாக்களித்தனர்
ஜனாதிபதி தேர்தலில் எம்.எல்.ஏ.க்கள் ஓட்டு போடுவதற்காக அந்தந்த மாநில சட்டசபையில் தனி வாக்குசாவடி உருவாக்கப்பட்டிருந்தது.
தமிழக எம்.எல்.ஏ.க்கள் வாக்களிப்பதற்காக சென்னை கோட்டையில் ஓட்டுச் சாவடி அமைக்கப்பட்டு விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. ஓட்டுச்சாவடி அறைக்கு வெளியில் எப்படி வாக்களிப்பது என்ற விபரம் நோட்டிசாக ஒட்டப்பட்டிருந்தது.
காலை 10 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கியது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி முதல் நபராக சென்று தனது வாக்கைப் பதிவு செய்தார்.
அவரைத் தொடர்ந்து சபாநாயகர் தனபால், எதிர்க் கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், அ.தி.மு.க. புரட்சித் தலைவி அம்மா அணி தலைவர் ஓ.பன்னீர் செல்வம், கேரளா மாநில எம்.எல்.ஏ. பரக்கல் அப்துல்லா வாக்களித்தனர். பிறகு அ.தி.மு.க., தி.மு.க. எம். எல்.ஏ.க்கள் ஒவ்வொருவராக வந்து ஓட்டு போட்டு சென்றனர்.மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் சென்னையில் வாக்களிப்பத...
உதயநிதி ஸ்டாலின் ரிலீஸ் செய்யும் ‘ஒரு குப்பை கதை’
ஃபிலிம் பாக்ஸ் நிறுவனம் சார்பாக இயக்குநர் அஸ்லம் தயாரிப்பில், காளி ரங்கசாமி இயக்கத்தில் நடன இயக்குநர் தினேஷ் அறிமுகமாகும் 'ஒரு குப்பை கதை'! ரெட் ஜெயண்ட் மூவிஸ் உதய நிதி ஸ்டாலின் வெளியிடுகிறார்.
கோடம்பாக்கத்தில் கோலோச்சும் ஒரு சில நடன இயக்குநர்களில் முதல் வரிசையில் நிற்பவர். எல்லா முன்னணி கதாநாயகர்களுக்கும் மிகப் பிடித்தமான நடன இயக்குநர். தேசிய விருது உட்பட பல விருதுகளைக் குவித்தவர்.
ஒரு குப்பை கதை படத்தின் நாயகன் இவர்தான். முதல் முறையாக இந்தப் படம் மூலம் நடிகராக அறிமுகமாகிறார்.
தன் உதவி இயக்குநர் காளி ரங்கசாமியை இந்தப் படத்தில் இயக்குநராக அறிமுகமாக்கியுள்ள அஸ்லம், அவருக்காக தயாரிப்பாளராகவும் மாறியுள்ளார்.
நல்ல கதைக்கு 'ஒரு குப்பை கதை' எனப் பெயரிட்டு களமிறங்கியுள்ளனர் இருவரும். ஆரம்பத்தில் என்ன குப்பை கதையா? என முகம் சுழித்தவர்கள் பின் கதையைக் காது கொடுத்துக் கேட்டவுடன் இ...
அரசியல் சர்ச்சைகளை உருவாக்குமா ‘ சிவா மனசுல புஷ்பா’
ஸ்ரீவாராகி அம்மன் பிலிம்ஸ் சார்பில் வாராகி கதை எழுதி, இயக்கி தயாரித்து வரும் படம் ‘சிவா மனசுல புஷ்பா’. இது முழுக்க முழுக்க அரசியல் படம். சமீப காலமாக மக்கள் அன்றாடம் பார்த்த, கேட்ட அரசியல் விவகாரங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட கதையாம். இந்த படத்தில் நாயகனாக வாராகி-யே நடிக்கிறார். அவருடன் புதுமுகங்கள் ஷிவானி, நதியாஸ்ரீ, சுதா, டி சிவா, தவசி ராஜ் உள்பட பலர் நடிக்கின்றனர்.
இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடும் விழா சென்னை, தி.நகரில் உள்ள தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே அலுவலகத்தில் நடைபெற்றது. படத்தின் போஸ்டரை நடிகரும் முன்னாள் எம்பியுமான ஜே கே ரித்திஷ் வெளியிட அதை தயாரிப்பாளர் ஜே எஸ் கே பெற்றுக் கொண்டார். தயாரிப்பாளர்கள் சுரேஷ் காமாட்சி, கே ராஜன் உடனிருந்தனர்.
பின்னர் இப் படத்தைப் பற்றி பத்திரிக்கையாளர்களிடம் பேசிய இயக்குநரும் ஹீரோவுமான வாராகி , “பல அரசியல் சர்ச்சைகளை நி...

