புதன்கிழமை, மே 27
Shadow

HOME SLIDER

தினகரன் ஆதரவாளர்கள் 46 பேர் அதிரடி நீக்கம்: எடப்பாடி பழனிசாமி- ஓ.பி.எஸ். நடவடிக்கை

தினகரன் ஆதரவாளர்கள் 46 பேர் அதிரடி நீக்கம்: எடப்பாடி பழனிசாமி- ஓ.பி.எஸ். நடவடிக்கை

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- அ.தி.மு.க. கொள்கை- குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழக கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும், அவப்பெயரும் உண்டாக்கும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும் அ.தி.மு.க. வில் இருந்து அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்கள். முன்னாள் எம்.எல்.ஏ. ஆர்.சாமி (மேலூர் தொகுதி பொதுக்குழு உறுப்பினர்), துரை.தனராஜன் (உசிலம்பட்டி தொகுதி பொதுக்குழு உறுப்பினர், சேடபட்டி ஒன்றிய எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர்) மகேஸ்வரி ரவி (பொதுக் குழு உறுப்பினர், திருமங...
எம்ஜிஆர் பட டீசரை ஜனவரியில் பிரதமர் மோடி வெளியிட கோரிக்கை..!

எம்ஜிஆர் பட டீசரை ஜனவரியில் பிரதமர் மோடி வெளியிட கோரிக்கை..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள்
காமராஜ் திரைப்படத்தை தயாரித்த ரமணா கம்யூனிகேஷன்ஸ் சார்பாக மறைந்த தமிழக முதலவர் எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாறு “ எம்.ஜி.ஆர் “ என்ற பெயரில் திரைப்படமாகத் தயாரிக்கப்படுகிறது. 1967 ஆம் ஆண்டு தமிழகத்தை அதிர்ச்சியிலும், கொந்தளிப்பிலும் ஆழ்த்திய நிகழ்வு எம்.ஜி.ஆர், எம்.ஆர். ராதாவால் சுடப்பட்ட சம்பவம். எம்.ஜி.ஆர் திரைப்படத்திற்காக அந்த சம்பவம் தத்ரூபமாகப் படமாக்கப்பட்டது. மேலும் எம்.ஜி.ஆரின் மூத்த சகோதரர் எம்.ஜி.சக்கரபாணி, அன்றைய திரைப்பட இயக்குனர்கள் பி.ஆர்.பந்துலு, கே.சங்கர் ஆகியோர் சம்மந்தப்பட்ட காட்சிகளும் படமாக்கப்பட்டன. இத்திரைப்படத்தில் எம்.ஜி.ஆராக சதீஷ், எம்.ஆர்.ராதாவாக பாலாசிங், பி.ஆர்.பந்துளுவாக Y.G.மகேந்திரன், ஜானகி அம்மாவாக ரித்விகா, எம்.ஜி.சக்கரபாணியாக மலையாள நடிகர் ரகு, மற்றும் வையாபுரி ஆகியோர் நடிக்கின்றனர். ஏ.எம்.எட்வின் சகாய் ஒளிப்பதிவு செய்ய, செம்பூர் ஜெயராஜ் திரைக்கதை,...
தென்மாவட்டங்களில் இருந்து வந்த ரசிகர்களுக்கு கிடா வெட்டி கறி சோறு போட ஆசை ஆனால் சைவ மண்டபம் என்பதால் முடியவில்லை – ரஜினி

தென்மாவட்டங்களில் இருந்து வந்த ரசிகர்களுக்கு கிடா வெட்டி கறி சோறு போட ஆசை ஆனால் சைவ மண்டபம் என்பதால் முடியவில்லை – ரஜினி

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் 3-வது நாளாக நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களை சந்தித்து வருகிறார். இன்று மதுரை, விருதுநகர், சேலம், நாமக்கல் மாவட்ட ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்கிறார். அதற்கு முன்னதாக ரசிகர்கள் முன்பு பேசிய ரஜினி, மதுரை என்றால் வீரத்திற்கு அடையாளம். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வந்திருந்த போது அர்ச்சகர் தன்னிடம் என்ன நட்சத்திரம் என்று கேட்டார். அப்போது எனக்கு  பிறந்தநாள், நட்சத்திரம், கோத்திரம் என எதுவுமே தெரியாது. அதையடுத்து எனக்கு அருகில் இருந்தவர் பெருமாள் நட்சத்திரத்திற்கு அர்ச்சனை செய்து விடுங்கள் என்று கூறினார். பிறகு தான் தெரிந்தது எனது நட்சத்திரம் பெருமாள் நட்சத்திரம் தான். மதுரை, சேலம் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இருந்து வந்துள்ள உங்களுக்கு கிடா வெட்டி கறி சோறு படைக்க வேண்டும் என்று எனக்கு ஆசையாக இருக்கிறது. ஆனால் ரா...
பொங்கல் ரேசில் களமிறங்கும் விஷாலின் ‘சண்டக்கோழி-2’

பொங்கல் ரேசில் களமிறங்கும் விஷாலின் ‘சண்டக்கோழி-2’

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
 பி.எஸ்.மிஸ்ரன் இயக்கத்தில் `இரும்புத்திரை' படத்திலும், லிங்குசாமி இயக்கத்தில் `சண்டக்கோழி-2' படத்திலும் விஷால்  நடித்து வருகிறார். இதில் `இரும்புத்திரை' படம் வருகிற ஜனவரி 26-ஆம் தேதி ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இரும்புத்திரை' படத்தின் டீசர் வெளியீட்டு விழா நேற்று நடந்தது. அதில் `சண்டக்கோழி-2' படத்தின் ரிலீஸ் தேதியை விஷால் அறிவித்தார். விஷால் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பாக்டரி மூலம் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். விஷாலின் 25-வது படமாக இந்த படம் உருவாகிறது. `சண்டக்கோழி-2' படம் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஜனவரி 14-ஆம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. லிங்குசாமி இயக்கும் இந்த படத்தில் விஷால் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். வரலட...
`குலேபகாவலி’ டிரைலர் நாளை வெளியீடு..!

`குலேபகாவலி’ டிரைலர் நாளை வெளியீடு..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள்
கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் தயாரிப்பில் காமெடி படமாக உருவாகி வரும் படம் ‘குலேபகாவலி’.     புதுமுக இயக்குநர் எஸ்.கல்யாண் இயக்கி இருக்கும் இந்த படத்தில் பிரபுதேவா - ஹன்சிகா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ரேவதி, ஆனந்த்ராஜ், மன்சூர் அலி கான், சந்தியா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். முழுக்க முழுக்க காமெடி படமாக உருவாகி இருக்கும் இந்த படத்தை `அறம்' படத்தை தயாரித்த கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ்  தயாரித்துள்ளது. மேலும் எம்.ஜி.ஆர் நடிப்பில் கடந்த 1955-ஆம் ஆண்டு வெளியான `குலேபகாவலி' படத்தின் தொடர்ச்சியாக இந்த படம் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. விவேக் - மெர்வின் இசையில், பாடல்கள் வெளியாகி வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில், படத்தின் டிரைலர் புத்தாண்டை முன்னிட்டு வருகிற டிசம்பர் 29-ஆம் தேதி (நாளை) மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்...
பெங்களூரு சிறையில் சசிகலாவை டி.டி.வி.தினகரன் இன்று சந்திக்கிறார்

பெங்களூரு சிறையில் சசிகலாவை டி.டி.வி.தினகரன் இன்று சந்திக்கிறார்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்ட டி.டி.வி.தினகரன் 89 ஆயிரத்து 13 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் மதுசூதனனை தவிர மற்ற அனைத்து வேட்பாளர்களும் இந்த தேர்தலில் ‘டெபாசிட்’ இழந்தனர். ஆளுங்கட்சியின் சார்பில் நிறுத்தப்பட்ட வேட்பாளரை விட 40 ஆயிரத்து 707 வாக்குகள் அதிகமாக பெற்ற டி.டி.வி.தினகரனுடைய இந்த வெற்றி பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தி இருக்கிறது. டி.டி.வி.தினகரனுக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதை தொடர்ந்து, டி.டி.வி.தினகரன், சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவை சந்திக்க இருப்பதாக ஏற்கனவே தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் சசிகலாவை சந்திப்பதற்காக சென்னை அடையாரில் உள்ள தன்னுடைய...
சன்னி லியோன் நடிக்கும்  ‘வீரமாதேவி’

சன்னி லியோன் நடிக்கும் ‘வீரமாதேவி’

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகைகள்
பாலிவுட்டில் பல படங்களில் கலக்கி வரும் சன்னி லியோன், தற்போது நடிக்க இருக்கும் தமிழ் படத்தின் தலைப்பு வெளியாகி இருக்கிறது. பாலிவுட்டில் கலக்கி வரும் சன்னி லியோன் தமிழில் கதாநாயகியாக நடிக்க இருக்கிறார். சரித்திர பின்னணியில் பிரம்மாண்டமாக உருவாக இருக்கும் இப்படத்தை வி.சி.வடிவுடையான் இயக்குகிறார். ஸ்டீவ்ஸ் கார்னர் நிறுவனத்திற்காக பொன்சே ஸ்டீபன் தயாரிக்கின்றார். இந்த படத்தில் பல முன்னணி தொழில்நுட்ப கலைஞர்கள் அசத்தவுள்ளனர். இவர்கள் பற்றிய அறிவிப்பு ஒவ்வொன்றாக வெளியிடப்படும் என கூறப்படுகிறது. சமீபத்தில் இப்படத்தின் இசையமைப்பாளர் அம்ரிஷ் கணேஷ் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், இப்படத்தின் தலைப்பு வெளியாகி இருக்கிறது. முன்னதாக, இப்படத்தின் தலைப்பை கண்டு பிடிப்பதற்காக நேற்று முதல் சமூக வலைத்தளங்களில் இப்படத்தின் தலைப்பில் கடைசி எழுத்தை மட்டும் வெளிட்டார்கள். இதற்கு ரசிகர்கள் பல கோணத...
காதலருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ஸ்ருதிஹாசன்

காதலருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ஸ்ருதிஹாசன்

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
தமிழ், தெலுங்கு, இந்தி என பிசியாக நடித்து வந்தவர் ஸ்ருதிஹாசன். இவர் தற்போது கமல்ஹாசன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘சபாஷ் நாயுடு’ படத்தில் நடித்து வருகிறார். மேலும் ஒரு இந்தி படத்திலும் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். இதற்கிடையில் ஸ்ருதிஹாசனுக்கும், லண்டனை சேர்ந்த நடிகர் மைக்கேல் கோர்சலுக்கும் நெருக்கமான நட்பு மலர்ந்தது. இருவரும் ஒன்றாக ஒருக்கும் புகைப்படங்கள் சமீபத்தில் வெளிவந்தன. இந்நிலையில் புதிய படங்களை ஒப்புக் கொள்ளாமல் அமைதி காத்து வருகிறார் ஸ்ருதிஹாசன். சில மாதங்களுக்கு முன் தந்தை கமல்ஹாசனுக்கு மைக்கேல் கோர்சலை அறிமுகப்படுத்திய ஸ்ருதி, சமீபத்தில் தாய் சரிகாவுக்கும் தனது காதலரை அறிமுகப்படுத்தியிருந்தார். அதேபோல் ஆதவ் கண்ணாதாசனின் திருமணத்தில் மைக்கேல் கோர்சலுடன் நடிகை ஸ்ருதிஹாசன் கலந்து கொண்டார். கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது தனது காதலருடன் நெருக்கமாக கட்டி...
2 ஜி வழக்கின் தீர்ப்பு  சட்டசபை தேர்தலில் எதிரொலிக்கும்: ஆ.ராசா

2 ஜி வழக்கின் தீர்ப்பு சட்டசபை தேர்தலில் எதிரொலிக்கும்: ஆ.ராசா

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
2 ஜி வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்ட முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா கோவை வந்தார். விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. விமான நிலையத்தில் தொண்டர்களிடையே தள்ளு முள்ளு உருவானது. அதன் பின்னர்ஆ. ராசா கோவில்பாளையம் வழியாக காரில் அன்னூர் சென்றார். கோவில்பாளையத்தில் திரண்டு இருந்த தொண்டர்கள் மத்தியில் அவர் பேசும் போது, 2 ஜி வழக்கில் நான் குற்றவாளி இல்லை என தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. இதில் ஊழல் இல்லை என நிரூபணமாகி இருக்கிறது. நீதி வென்றுள்ளது. இந்த தீர்ப்பின் மூலம் மக்கள் உண்மை தன்மையை புரிந்துள்ளனர் என பேசினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும் போது, 2 ஜி வழக்கின் தீர்ப்பை மக்கள் புரிந்து கொண்டுள்ளனர். இதனால் தான் பிரமாண்ட வரவேற்பு அளித்துள்ளனர். இந்த தீர்ப்பு சட்டசபை தேர்தலில் எதிரொலிக்கும் என்றார்....
புறப்படும்போது திடீர் கோளாறு – லக்னோ விமான நிலைய ஓடுபாதையில் சிக்கிகொண்ட சவுதி விமானம்

புறப்படும்போது திடீர் கோளாறு – லக்னோ விமான நிலைய ஓடுபாதையில் சிக்கிகொண்ட சவுதி விமானம்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
லக்னோவில் இருந்து சவுதி அரேபியா நாட்டு விமானம் இன்று மாலை புறப்பட்டு செல்லும்போது ஏற்பட்ட திடீர் கோளாறினால் ஓடுபாதையில் ஸ்தம்பித்து நின்றது. இதனால், 9 விமானங்களின் வருகை - புறப்பாட்டில் தாமதம் ஏற்பட்டது. சவுதி அரேபியா நாட்டுக்கு சொந்தமான சவுதி ஏர்லைன்ஸ் விமானம் இன்று மாலை சுமார் 5.30 மணியளவில் உத்தரப்பிரதேசம் மாநில தலைநகர் லக்னோவில் இருந்து ரியாத் நகருக்கு புறப்பட்டு சென்றது. ஓடுபாதையில் மெல்ல ஊர்ந்து சென்று உயரக் கிளம்பும் முன் விமானி திடீரென்று ‘பிரேக்’ போட்டார். இதனால், விமானத்தின் மூக்கு பகுதியில் உள்ள முன் சக்கரம் ஸ்தம்பித்தது. அந்த விமானம் ஓடுபாதையின் குறுக்கே நின்றது. இந்த சம்பவத்தினால் விமானத்தில் இருந்த சுமார் 300 பயணிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என தெரியவந்துள்ளது. எனினும், ஓடுபாதையின் குறுக்கே சவுதி விமானம் நின்றதால் லக்னோவில் தரையிறங்க வேண்டிய 6 விமானங்கள் டெல...