தினகரன் ஆதரவாளர்கள் 46 பேர் அதிரடி நீக்கம்: எடப்பாடி பழனிசாமி- ஓ.பி.எஸ். நடவடிக்கை
அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
அ.தி.மு.க. கொள்கை- குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழக கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும், அவப்பெயரும் உண்டாக்கும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும் அ.தி.மு.க. வில் இருந்து அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்கள்.
முன்னாள் எம்.எல்.ஏ. ஆர்.சாமி (மேலூர் தொகுதி பொதுக்குழு உறுப்பினர்), துரை.தனராஜன் (உசிலம்பட்டி தொகுதி பொதுக்குழு உறுப்பினர், சேடபட்டி ஒன்றிய எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர்)
மகேஸ்வரி ரவி (பொதுக் குழு உறுப்பினர், திருமங...









