செவ்வாய்க்கிழமை, மே 14
Shadow

விஜயை பார்த்து அதிமுகவுக்கு பயமா..? அமைச்சர் மாபா பாண்டியராஜன் பதில்

நடிகர் விஜய் – முருகதாஸ் கூட்டணியில் உருவாகியுள்ள படம் சர்கார். சன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் இந்தப் படம் தீபாவளிக்கு வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது. நடிகர் பிரசன்னா தொகுத்து வழங்கிய இந்த இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய், ஏ.ஆர்.முருகதாஸ். தயாரிப்பாளர் கலாநிதிமாறன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

இசை வெளியீட்டு விழாவில்  பேசிய  நடிகர் விஜய்,

 சர்கார் படத்தில் நான் முதலமைச்சராக நடிக்கவில்லை. நிஜத்தில் முதலமைச்சரானால் நடிக்க மாட்டேன். நான் முதலமைச்சரானால் லஞ்சம், ஊழலை ஒழிப்பேன்.
மாநிலத்திற்கு நல்ல தலைவர்கள் தேவை. மேலிருக்கும் அதிகாரிகள், அமைச்சர்கள் நல்லவர்களாக இருந்தால் மாநிலம் நல்லதாகவே இருக்கும்.
மெர்சல் திரைப்படத்தில் கொஞ்சம் அரசியல் இருந்தது. ஆனால் சர்கார் படத்தில் அர்சியலிலேயே மெர்சல் பண்ணியிருக்கோம்.
எல்லாம் அரசியலில் நின்று ஜெயித்து சர்கார் அமைப்பாங்க. ஆனால் நாங்க சர்கார் அமைத்துவிட்டு தேர்தலில் நிற்க போகிறோம். ரசிகர்களின் ஆரவாரம் அரங்கில் ஓய்ந்தவுடன் படத்தை வெளியிடுவது பற்றி கூறினேன் என்று கூறினார்.


இந்நிலையில் சென்னை அடையாறில் தனியார் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அமைச்சர் மாஃபா பாண்டியராஜனிடம், விஜயின் அரசியல் பேச்சு குறித்து கேட்கபட்டபோது “புதிய வரவுகளுக்கெல்லாம் அச்சப்படும் நிலையில் அதிமுக இல்லை. அரசியலுக்கு வருவதற்கு விஜய்க்கு உரிமை உள்ளது. ஆனால் அவரை பார்த்து அதிமுகவிற்கு பயம் கிடையாது” என்று கூறினார்

328 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன